05-28-2005, 07:34 PM
<b>பகுதிநேர வேலை...</b>
உனக்காக ஒரு கவிதை எழுதக் கேட்ட போது
உன்னை நினைத்து என்ன எழுதுவது புரியாமலே
உன் பெயரினை எழுதித் தந்த போது அதை
உள்ளன்போடு எற்று பத்திரப்படுத்தினாய்
பாதி உடைந்த வளையல் துண்டுகளை
பாதையோரம் எறிந்த போது அதனையும் எடுத்து
பக்குவமாய் ஒன்றுவிடாமல் தேடி தேடியே
ஆசையாய் பத்திரப்படுத்திக் கொண்டாய்
கூந்தலில் இருந்து விழுந்த மலரினையும் எடுத்து
சூடிய மலரில் வாசம் அதிகம் என்றெண்ணி
ஆவி அதனுள் அடக்கம் என்று அதையும்
தாவும் மனதுடன் பத்திரப்படுத்தினாய்
உன்னை எண்ணி என்ன சொல்வது
மணிக்கணக்கில் நாள்தோறும்
என்னுடன் பழகிக்கொண்டே ஊமையாய்
பகுதிநேர வேலையாக குப்பை பொறுக்கும்
வேலைக்குள் தள்ளப்பட்டிருப்பதை நினைத்தால்
வேதனை ஆகத்தான் இருக்கின்றது
உனக்காக ஒரு கவிதை எழுதக் கேட்ட போது
உன்னை நினைத்து என்ன எழுதுவது புரியாமலே
உன் பெயரினை எழுதித் தந்த போது அதை
உள்ளன்போடு எற்று பத்திரப்படுத்தினாய்
பாதி உடைந்த வளையல் துண்டுகளை
பாதையோரம் எறிந்த போது அதனையும் எடுத்து
பக்குவமாய் ஒன்றுவிடாமல் தேடி தேடியே
ஆசையாய் பத்திரப்படுத்திக் கொண்டாய்
கூந்தலில் இருந்து விழுந்த மலரினையும் எடுத்து
சூடிய மலரில் வாசம் அதிகம் என்றெண்ணி
ஆவி அதனுள் அடக்கம் என்று அதையும்
தாவும் மனதுடன் பத்திரப்படுத்தினாய்
உன்னை எண்ணி என்ன சொல்வது
மணிக்கணக்கில் நாள்தோறும்
என்னுடன் பழகிக்கொண்டே ஊமையாய்
பகுதிநேர வேலையாக குப்பை பொறுக்கும்
வேலைக்குள் தள்ளப்பட்டிருப்பதை நினைத்தால்
வேதனை ஆகத்தான் இருக்கின்றது

