Poll:
This poll is closed.
Total 0 vote(s) 0%
* You voted for this item. [Show Results]

Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்...
#60
வணக்கம் யாழ் உறவுகளே! 'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனைச் சோம்பேறியாக்குகிறதா? உற்சாகப்படுத்துகிறதா?' எனும் பட்டிமன்றமானது, தூயா அவர்களது முயற்சியினால் யாழ்களத்தில் சித்திரை 29ம் திகதியில் ஆரம்பித்து இன்று 20ம் திகதி நிறைவடைய உள்ளது. ஏறக்குறைய ஒரு மாதகாலம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகில் ஒரு பட்டிமன்றத்துக்கு இவ்வளவு நாட்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாததெனினும், ஒவ்வொருவரது சூழ்நிலைகளையும் மனநிலைகளையும் தாமதத்தின் பொருளாகக் கொள்ளலாம். கடல் பிரிக்கும் பல தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் எல்லோரையும் பயணச் செலவுகளோ அல்லது பயண ஒழுங்குக்கான கால தாமதங்களோ இன்றி, யாழ் இணையத்தில் இணைய வைத்து, ஒரு அருமையான பட்டிமன்றத்தை நிகழ்த்த வைத்திருப்பதை நோக்கும்போது ஒரு மாதம் பெரிதாகப் பேசப்படக்கூடிய காலதாமதமல்ல என்பது எனது கருத்தாகும்.

'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனைச் சோம்பேறியாக்குகிறது' என்ற அணியில் வியாசன், ஈழப்பிரியன், நிதர்சன், நிலவன், இளைஞன், நாத்திரி, மதன் ஆகிய எழுவர் ஷியாம் அவர்களின் தலைமையில் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது' என்ற அணியில் குறும்பன், ஈஸ்வர், குளக்காட்டான், மழலை, மதுரன், நடா, குருவிகள் ஆகிய எழுவர் வசம்பு அவர்களின் தலைமையில் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

வாதத்தை ஆரம்பித்த ஷியாம் அவர்கள், 'பத்திரிகை வாங்க கடைக்குச் செல்லும்போது மனிதன் பெற்ற உற்சாகத்தை கணனி கெடுத்து சோம்பேறிழயாக்குகிறது' என்றொரு கருத்தை வைத்தார். அடுத்து வந்த வசம்பு அவர்கள், 'யாழில் நிகழும் ஒரு செய்தியை கொழும்பிலுள்ளவர்கள் அறிய முதலே வெளிநாடுகளிலுள்ளோர் அறிய தொழில்நுட்பம் உதவுகிறது', 'ஒருவரை சந்திக்க இழக்கும் பயண நேரத்தை தொலைபேசியும் கணனியும் மீதப்படுத்துகின்றன', 'ஓரிடத்தில் உள்ள மருத்துவர் நெற் மீட்டிங் மூலம் வேறு நாட்டு மருத்துவரிடம் உதவி பெறமுடியும்' என்று மனிதனை உற்சாகப்படுத்தும் மூன்று கருத்துகளை முன்வைத்தார்.

அடுத்து வசம்பு அவர்களுக்கு ஷியாம் அவர்கள் பதிலளித்தாலும்.. அவரது கருத்துக்கள் பட்டிமன்ற வழமைக்கமைய கவனத்திலெடுக்கப்படவில்லை. மன்னிக்கவும்.

அடுத்து வந்த குறும்பன் அவர்கள், 'ஆகவே நவீன விஞ்ஞான வளர்ச்சி என்பது அதனை சரியாக பயன்படுத்த தெரிந்தவனுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றவர்களுக்கு குரங்கு கையில் பூமாலை போலதான்' என்ற கருத்தின் மூலம் தனது அணிக்கு பலம் சேர்த்தார்.

தொடர்ந்து வந்த வியாசன் அவர்கள்.. 25 வீத நன்மைக்காக 75வீத எதிர்வினையைப் பெறுகிறோம்.. தொலைக்காட்சி மனிதனை சோம்பேறியாக்குகிறது.. மாடிப்படிகள்கூட சோமட்பேறியாக்குகின்றன என அருமையாகக் கருத்துகளைக் கூறினார். அடுத்து வந்த நடா அவர்கள் விஞ்ஞானம் மனிதனுக்குக் காட்டும் உற்சாக வழிகளை அடுக்கிக்கொண்டே போகிறார்.. மலட்டுத்தன்மையை நீக்குகிறது.. மின்சாரத்தை கண்டு பிடித்தான்.. அதன்மூலம் அடுக்கடுக்காக பற்பலதை கண்டுபிடிக்கிறானே.. இது உற்சாகமில்லையா என்று கேட்ட்டார்.. மலேரியா காசநோய்.. ஏன் அம்மைநோய் போன்றன வருமுன்னே தடுப்பதற்கான வழிவகையை இந்த விஞ்ஞானம்தானே தந்தது என்கிறார்.

அடுத்து வந்த சாத்திரி அவர்கள் விஞ்ஞானத்தால் சுத்தம்.. ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம் போய்விட்டனவே என்றார்.. ஆச்சார அனுஷ்டானங்களை உருவாக்கியவனும் மனிதன்.. விஞ்ஞானத்தையும் உருவாக்கியவன் மனிதன்.. ஆக, விஞ்ஞானத்தால் அஞ்ஞானம் சீர்கெட்டு மனிதன் சோர்வடைகிறான் என்றார்.

'விவசாயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.. துலாவுடன் மல்லாடி அல்லாடிய நேரம் போய் உற்பத்தியை அதிகரித்து புதுப்புது பயிர் உற்பத்திக்கு வழிகாட்டுகிறதே விஞ்ஞானம்.. அதனால் நீங்கள் உற்சாகமடையவில்லையா.. பத்து வருடங்களுகஇகு முன் வீட்டிலிருந்து எப்போது கடிதம் வரும் என ஏங்கிநின்ற நாட்கள் எங்கே.. இன்று வேலையால் வந்தவுடன் தாயக உறவுகளின் குரலை மலிந்த விலையில் கேட்குமளவிற்கு விஞ்ஞானம் வசதி செய்து உற்சாகப்படுத்துவது உங்களுக்கு தெரியவில்லையா?' என்று கேட்டார் குளக்காட்டான்.

அடுத்து நிதர்சன் அவர்கள் வானொலிகளுடன் வருகிறார்... 'கடந்த சில மாதங்களுக்கு முன் புதினம் இணையம் செயல் இழந்த போது எமது வானொலிகள் சிலவற்றில் செய்திகள் நிறுத்தப்பட்டன காரணம் அவர்கள் அந்த செய்திகளை புதினத்தில் இருந்தே பெற்று வெளியிட்டு வந்தனர்.' ஆக, விஞ்ஞானம் ஊடகங்கவியலாளர்களையும் சோம்பேறியாக்குகின்றது என்கிறார்..
தொலைபேசி காதலர்களை சோம்பேறியாக்குகிறது.. அதுமட்டுமா.. சோம்பேறித்தனத்தால் உலகின் சனத்தொகை அதிகரிக்கப் போகிறது என்று ஒரு குண்டையும் தூக்கிப் போடுகிறார்? சோம்பேறிகளால் எதையுமே செய்ய முடியாதே.. எப்படி ஐயா சனத்தொகைமட்டும் அதிகரிக்கும்.. அவரது அணியிலுள்ளவர்கள் விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்ப்போம்..
தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலையில்லாதோர் தொகை அதிகரிக்கிறது.. அதேபோல அவர் முன்பு கூறியவாறு சனத்தொகை அதிகரிப்பாலும் வேலையற்றோர்தொகை அதிகரிக்கிறது.. ஆக விஞ்ஞானம் வேலையற்றோர் தொகையை அதிகரிக்கச் செய்து மனிதனைச் சோம்பேறியாக்குகிறது என்கிறார்..

சோம்பேறித்தனத்துக்கு 'ஒருவன் சொன்னானாம் சோம்பேறிக்கு ஒரு பாயும் தலையணையும் மட்டுமிருந்தால் போதும் என்று அதற்கு ஒரு சோம்பேறி அவசரமாக இடைமறித்து இல்லையில்லை எனக்கு ஒரு தலையணை மட்டும் இருந்தால் போதும் பாயெல்லாம் யார் சுத்தி வைக்கிறது என்றானாம். இதுதான் உண்மையான சோம்பேறித்தனம்' என்ற விளக்கத்துடன் வந்தார் ஈஸ்வர். அதுமட்டுமா.. எனது அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் முன்னர் கதிர்காமத்திந்கு போவதென்றால் வண்டில் கட்டித்தான் போவார்களாம். சொந்தபந்தமெல்லாம் வந்து கட்டிக்குளறி அழுது வழியனுப்பி வைக்குமாம். ஏனென்றால் வெளிக்கிட்டவih திரும்பி வந்தா கண்டு கொள்ள வேண்டியதுதான். ஆனால் நிலைமை இப்ப அப்படியா இருக்கு.. என அன்றைய நிலையை தொட்டுக் காட்டினார்.. தனது வாதத்தின் இறுதியில், நவீன தொழில் நுட்பத்தின் தாக்கமாக வேலை வாய்ப்பின்மையைப் பற்றி ஒருவர் சொன்னார். ஆம் அதுதான் எமது வாதமும் நீ சுறுசுறுப்பாக இரு உனக்கு வேலை கிடைக்கும். நீ ஆயிரத்தில் ஒன்றாய் இருக்காதே பத்தில் ஒன்றாய் இரு. உனக்கு வேலை உண்டு. நவீன தொழில் நுட்பத்தோடு போட்டிபோடு. அதற்காக சுறுசுறுப்பாய் இரு வெற்றி உனதே... என அருமையான கருத்தொன்றையும் கூறினார்.

ஈழப்பிரியன் அவர்கள், கணிப்புகளை கணனி வெகுவேகமாக்கி சுலபமாக்குகிறதென்கிறீர்களே.. ஒரு மாதம் மின்சாரம் தடைப்பட்டால் நிலமை என்ன.. விஞ்ஞானத்தை நம்பி, கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தலைப் படிக்காமல்விட்ட நிலையில்.. எவ்வாறு கணக்குப் பார்க்கப் போகிறீர்கள்? அவசரத்தில் அவர் விரிவாகக் கேட்காவிட்டாலும், இப்படியும் கேட்டிருக்கலாம்..

'இந்த விஞ்ஞானத்தின் ஆரம்பப் படைப்பாளி யார் என்று அறியப்படாத போதிலும் புவியில் நவீன விஞ்ஞானத்தின் படைப்பாளி மனிதனே....! அப்படி விஞ்ஞான வழி வந்த மனிதன் நவீன விஞ்ஞானம் வரை அதை ஆராய்ந்து விளங்கி வளர்த்து வந்திருக்கிறான் என்றால் அவன் சோம்பேறியாக சிந்தனை அற்றவனாக உழைப்பை அளிப்பவனல்லனவாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்குமா...???! இல்லை அல்லவா...! எனவே மனிதன் என்பவன் எப்பவுமே ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றானே தவிர சோம்பேறியாக செயலற்று இருக்கவில்லை...என்ற அடிப்படையை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்...!
மனிதன் என்ன எந்த உயிரிக்கும் இயற்கையாக போராடக் கற்றுத்தரப்பட்டுள்ளது...அதைக் கூட செய்ய மறுக்கும் சோம்பேறி நோய் பிடித்தோரே... உங்களுக்கு உங்களைப் போன்ற சக மனிதரின் சமகால அரும் முயற்சியால் உதிக்கும் வளரும் நவீன விஞ்ஞானம் என்ன இயற்கைக் கடன் கழிப்பது கூட உங்களுக்கு அபந்தமாகத்தான் தெரியும்...அது அந்த நோய்த்தாக்கத்தின் விளைவே அன்றி வேறில்லை...! ' என தலைப்புடன் மிகவும் ஒன்றி கருத்துகளை முன்வைத்தார் குருவிகள்.

அடுத்து வந்த இளைஞன் அவர்கள், 'கணனி விளையாட்டு.. இணைய அரட்டை.. இணையக்காதல்.. இன்றைய மருத்துவம் போன்றன பற்றி எடுத்துக்கூறி.. நவீனவிஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாகஇகுகிறது என்ற தலைப்புக்கு வலுச் சேர்த்தார். அத்தோடு, 'உலகத்தில் உள்ள சிறிய பகுதியனர் தான் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். பெரும்பாலானவர்கள் தாம் சுகமாகவும், சொகுசாகவும் எந்த வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே தொழில்நுட்பத்தையும், நவீன விஞ்ஞானத்தையும் அணுகுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை மேலும் மேலும் சோம்பேறியாக்குவதற்கு தொழில்நுட்பமும் நவீன விஞ்ஞானமும் பெரிதும் காரணியாகிறது என்பதே உண்மை. இருந்த இடத்தில் தனக்கு சாப்பாடு வரவேண்டும் என்று நினைக்கிற சோம்பேறித்தனம் நிறைந்த மனித சமூகத்தில் தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அவர்தம் அந்த ஆசைகளை கனவுகளை நிறைவேற்றுகிற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது, பயன்படுத்துகிறது. மின்அடுப்பைக் கண்டுபிடித்தார்கள் - சமையலை இலகுவாக்க - மனித உழைப்பை வீணாக செலவழிக்காதிருக்க! ஆனால் Fast food என்ன செய்கிறது? ரின்னுக்குள்ளும் பக்கற்றுகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட சாப்பாடுகள் தனியே இருந்து படிக்கிற, பலமணிநேரம் வேலைசெய்கிற ஆட்களுக்கு சரி - ஆனால் குடும்பத்தவர்கள் வீட்டில பபுதுசா சமைக்கலாம் தானே?' என எதிர்கருத்துக்கு மாற்று கருத்தையும் கூறினார்.

'அன்று அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதன் உற்சாகமாகக் காட்டும் உற்சாகத்தில் தான் அடங்கியிருக்கிறது....மனித உற்சாகமின்றி விஞ்ஞான வளர்ச்சியேது? மனித உற்சாகத்தினால் உண்டான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மனித உற்சாகத்திற்கு மேலும் ஊட்டச்சத்தாகிறது...மனிதன் உற்சாகம் இன்றியிருந்திருந்தால்; தான் வளர்த்த விஞ்ஞானத்தின் பலனாய் என்றோ மாண்டிருப்பான் மண்ணில்...ஆனால் மனித உற்சாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்காத வண்ணம் வளர்ந்து கொண்டிருக்கிறது' என்றவாரு ஆரம்பிக்கும் மழலை அவர்கள்.. 'நாம் உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடை வரைக்கும் எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் பிறந்தவையே...அப்படி விஞ்ஞானம் செய்திருக்காதுவிட்டால் நாங்கள் இன்று பசி பட்டினியுடன் அலைந்திருப்போம். உதாரணமாக genetically modified foods (GMO) உற்பத்தியாவதால் தான் மனித தொகையின் அளவிற்குரிய உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன...இல்லையேல் மனித சமுதாயமே அழிந்து இருக்கும். குறிப்பிட்ட மனித வளர்ச்சியைத்தான் பூமி தாங்க முடியும் (carrying capacity) விஞ்ஞானம் இருந்திருக்காhவிட்டால் அல்லது விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகம் கொடுத்து தட்டிக் கொடுக்காது விட்டால் எப்படி பூமி தாங்கும் சக்தியையும் மீறி மனித வளர்ச்சியை ஈடு கொடுக்கின்றது? எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகம் தான் மனிதனை தடைகளைத் தாண்டி உழைக்க வைக்கிறது....' போன்ற தனது அணிக்கு பலம்சேர்க்கும் கருத்துகளை முன்வைத்தார்.

அடுத்து வந்த மதன் அவர்களும் தொலைக்காட்சி கணனி போன்றவற்றால் மனிதன் சோம்பலைகிறான் எனக் கூறினார்.. அத்துடன் சூழலில் உற்பத்தி அதிகரிப்பால் ஒட்சிசன் குறைவதால் மனிதன் சோம்பல் நிலைக்கு செல்வதையும் கூறினார்.

அடுத்து வந்த மதுரன் அவர்கள்.. தொழில்நுட்பத்தினால் வேறு வேறு தேசங்களில் வாழும் தொப்புள் கொடி உறவுகள் இறுக்கமாக உற்சாகமாக உள்ளார்கள்.. என்றொரு கருத்தை முன்வைத்தார்.

நிறைவுரை தந்த வசம்பு அவர்கள் விஞ்ஞானம் தரும் உற்சாகத்துக்கு கண்முன்னே காணும் ஒரு சம்பவத்தை அருமையாக முன்வைத்தார். அதுதான், 'இந்தியாவில் ஒரு ஏழைச்சிறுவன் பல நாள் பட்டினி சில நாள் சாப்பாடு. அந்த வறிய நிலையிலும் இந்த நவீன விஞ்ஞானத்தில் தானும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று உற்சாகமாகக் கனவு கண்டான். அவன் உற்சாக கனவு பலித்து நாட்டின் தலைமை விஞ்ஞானியானது மட்டுமல்ல இன்று அந்நாட்டின் முதல்குடிமகனும் அவரே. அவர்தான் மரியாதைக்குரிய அப்துல்கலாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவா வேண்டும். ஆபிரக்காம்லிங்கனை நாம் ஏட்டில்த்தான் படித்தோம். ஆனால் அப்துல்கலாமை நேரிலேயே பார்க்கும்போது எம்மையுமறியாமல் எமக்குள் உற்சாகம் பற்றிக் கொள்கின்றதே.'

ஆக, இந்த சம்பவத்தால் என்ன தெரிகிறது.. ஒரு மனிதனை அவனது மனநிலைதான் சோம்பேறி ஆக்கமுடியுமே தவிர, புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படும் விஞ்ஞான தொழில்நுட்பங்களல்ல.

உதாரணமாக யாழ் இடப்பெயர்வை எடுத்துக் கொள்ளுவோம்.. அன்று எமது உறவுகள் என்ன ஆனார்கள் என அறிய நாம் மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் இன்று எமது ஊடக வளர்ச்சியானது இனிவரும் காலத்தில் அத்தகைய சிரமத்தை தரமாட்டா என நினைக்கிறேன். ஆக, ஊடகங்களைப் பொறுத்தளவில் அதைக் கையாள்பவனைப் பொறுத்தே அதன் பயன்பாடு அவனைப் போய் சேருகிறது. அந்த வகையில்.. செய்திகளை உடனுக்குடன் அறிய முடியும் என்ற நம்பிக்கை மனிதனை நிச்சயமாக உற்சாகப்படுத்தும். நம்பிக்கைதானே வாழ்க்கை.. பூமி அந்தரத்தில் சுழல்கிறது என்றது விஞ்ஞானம்.. அதனால் மனிதன் 'பூமி விழப்போகிறதே' எனப் பயந்து எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாத சோம்பேறி ஆகிவிட்டானா என்ன?!

நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சோம்பேறியாக்குகிறது என்ற அணிக்கு கருத்து வைத்தவர்கள்.. இணையம், தொலைக்காட்சியின் சின்னத்திரை போன்ற சிலவற்றுக்குள்ளேயே நின்றுகொண்டார்கள். ஆனால் நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உற்சாகப்படுத்துகிறது எனும் அணியிலுள்ளவர்கள்.. ஊடகம்.. உற்பத்தி.. தொடாபாடல்.. புதுப்புது தேடல்கள் பலவிடயங்களைத் தொட்டுச் சென்றார்கள்.

ஆகவே.. எல்லோரும் திறமையாகவும் சிறப்பாகவும் கருத்துகளை முன்வைத்தாலும், யதார்த்த நிலைக்கு பொருத்தமான கருத்துகளை முன்வைத்த அணி என்ற வகையில், அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில், 'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறதே' எனக் கூறி இப்பட்டிமன்றத்தை நிறைவுசெய்கிறேன்

இவளவு நாட்களாக இடையில் குறுக்கீடு செய்யாமல் உற்சாகப்படுத்தி ஒத்துழைத்த யாழ் கள உறவுகளுக்கு எனது பணிவான நன்றிகள்.

வணக்கம்.
.


Messages In This Thread
[No subject] - by shiyam - 04-29-2005, 05:36 PM
[No subject] - by தூயா - 04-30-2005, 03:11 PM
[No subject] - by Vasampu - 04-30-2005, 03:54 PM
[No subject] - by sOliyAn - 04-30-2005, 04:03 PM
[No subject] - by shiyam - 04-30-2005, 04:32 PM
[No subject] - by hari - 04-30-2005, 04:44 PM
[No subject] - by Vasampu - 04-30-2005, 05:46 PM
[No subject] - by hari - 04-30-2005, 05:53 PM
[No subject] - by Kurumpan - 04-30-2005, 08:34 PM
[No subject] - by sOliyAn - 05-01-2005, 02:27 AM
[No subject] - by kavithan - 05-01-2005, 05:07 AM
[No subject] - by வியாசன் - 05-01-2005, 10:05 AM
[No subject] - by தூயா - 05-01-2005, 10:38 AM
[No subject] - by வியாசன் - 05-01-2005, 12:33 PM
[No subject] - by sOliyAn - 05-01-2005, 02:36 PM
[No subject] - by Nada - 05-02-2005, 04:39 PM
[No subject] - by sathiri - 05-02-2005, 08:22 PM
[No subject] - by KULAKADDAN - 05-02-2005, 10:03 PM
[No subject] - by shanmuhi - 05-02-2005, 10:07 PM
[No subject] - by Nitharsan - 05-03-2005, 12:29 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 01:45 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 04:06 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 04:17 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 04:48 AM
[No subject] - by Vasampu - 05-03-2005, 09:18 AM
[No subject] - by Eswar - 05-03-2005, 02:18 PM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 03:53 PM
[No subject] - by eelapirean - 05-03-2005, 04:36 PM
[No subject] - by Mathan - 05-03-2005, 07:51 PM
[No subject] - by sOliyAn - 05-04-2005, 01:57 AM
[No subject] - by Mathuran - 05-04-2005, 06:36 PM
[No subject] - by Nitharsan - 05-06-2005, 08:51 AM
[No subject] - by kuruvikal - 05-07-2005, 04:54 AM
[No subject] - by தூயா - 05-07-2005, 05:52 AM
[No subject] - by Mathuran - 05-07-2005, 02:10 PM
[No subject] - by வியாசன் - 05-07-2005, 05:07 PM
[No subject] - by sOliyAn - 05-08-2005, 02:04 AM
[No subject] - by sOliyAn - 05-08-2005, 02:37 AM
[No subject] - by தூயா - 05-09-2005, 03:41 AM
[No subject] - by sOliyAn - 05-10-2005, 03:14 AM
[No subject] - by sOliyAn - 05-10-2005, 03:31 AM
[No subject] - by Malalai - 05-10-2005, 03:34 AM
[No subject] - by sOliyAn - 05-11-2005, 04:50 AM
[No subject] - by Mathan - 05-12-2005, 06:21 PM
[No subject] - by sOliyAn - 05-13-2005, 01:31 AM
[No subject] - by Mathan - 05-13-2005, 03:22 AM
[No subject] - by sOliyAn - 05-13-2005, 04:05 AM
[No subject] - by Mathuran - 05-14-2005, 05:00 PM
[No subject] - by sOliyAn - 05-15-2005, 03:04 AM
[No subject] - by Vasampu - 05-16-2005, 05:37 AM
[No subject] - by Nilavan - 05-16-2005, 04:36 PM
[No subject] - by Nilavan - 05-16-2005, 04:42 PM
[No subject] - by Sooriyakumar - 05-16-2005, 05:34 PM
[No subject] - by sOliyAn - 05-17-2005, 01:59 AM
[No subject] - by sOliyAn - 05-17-2005, 02:39 AM
[No subject] - by sOliyAn - 05-17-2005, 03:51 AM
[No subject] - by shiyam - 05-19-2005, 12:33 AM
[No subject] - by sOliyAn - 05-20-2005, 04:56 AM
[No subject] - by Mathan - 05-20-2005, 09:00 AM

Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)