05-16-2005, 05:37 AM
எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை வணக்கம் !
அருமையான ஒரு பட்டிமன்றத்தின் இறுதிக் கட்டத்தில் நாம் நிற்கின்றோம். உண்மையில் ஒரு மனிதனுக்கு உற்சாகமோ சோம்பேறித்தனமோ உளவியலில் ரீதியாகவே ஏற்படுகின்றது. இதனை எனதருமை சகபாடி குருவிகள் மிக அருமையாக எடுத்துச் சொன்னார். உதாரணமாக புதிதாக ஒரு உணவை நாம் ருசி பார்க்கப் போகின்றோம். அந்த உணவை நாம் பார்க்கும்போது முதலிலேயே எமக்கு அருவருப்பு போல் ஏதாவது தோன்றி விட்டால் அந்த உணவு எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும் அதன் மீது நமக்கு வெறுப்புத்தான் ஏற்படும். இன்னொன்று முன்பு நாம் படித்த நரியும் திராட்சைப் பழமும் கதைதான். சிலருக்கு சில விடயங்கள் இயலாமல் போகும் போது சீ சீ அந்தப் பழம் புளிக்கும் நிலைதான். இந்த நிலையில்த் தான் எதிரத்தரப்பினர் ஏதேதோ எல்லாம் சொல்லிச் சொல்லி சோம்பலாக உட்கார்ந்துள்ளனர்.
நடுவரவர்களே நான் சற்று தலையங்கத்தை விட்டு விலத்திச் சென்றே விளக்கமளிக்க வேண்டிய நிலையிலுள்ளேன். ஏனெனில் வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தால்த்தான் சாப்பிடும் நிலையில் எதிர்த்தரப்பினர் உள்ளனர்.
நாம் எதையாவதொன்றை இளக்காமல் இன்னொன்றை பெறமுடியாது. அதேபோல் புதிய புதிய பல விடயங்கள் நம் வாழ்வில் புகுந்து நாமும் உற்சாகமாக வாழ வேண்டுமென்றால் சில இளப்புக்களையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.
இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தினால் வேலைவாய்ப்புக்கள் குறைந்து மனிதனைச் சோம்பேறி ஆக்கிவிட்டது என்று சொன்னார்கள். மனச்சாட்சியோடு சொல்லுங்கள் வேலைவாய்ப்புக்கள் குறைந்ததற்கு நவீன விஞ்ஞானம் மட்டுமா காரணம் ?? எங்களது தவறான நடவடிக்கைகள் காரணமில்லையா ?? உதாரணமாக ஒருவர் பலசரக்குக் கடை திறந்தால் மற்றவரும் பலசரக்குக் கடைதான் திறப்பார். வித்தியாசமாக வேறு ஏதாவது கடை திறக்கலாமா என சிந்திக்க சோம்பேறித்தனம் விடாது. நன்றாகச் சொன்னார் எதிரணி இளைஞன் நவீன விஞ்ஞானம் சோம்பேறிகளை மேன்மேலும் சோம்பேறிகளாக்குகின்றனவென்று. நாமும் அதைத்தானே சொல்கின்றோம். நவீன விஞ்ஞானம் உற்சாகமானவர்களை மேன்மேலும் உற்சாக்படுத்திக் கொண்டே செல்கின்றது.
இந்த நவீன விஞ்ஞானத்தினால் இன்று பல நோய்கள் ஏற்பட்டு மனிதன் சோம்பேறியாகிவிட்டான் என சிலர் கண்ணீர் வடித்தனர். சிரிப்பதா அழுவதா முன்பு பெரிய மரத்தின் கீழ் இரவு படுத்திருந்த சிலர் இறந்து காணப்பட்டனர். அப்போ ஊரார் பேய் பிசாசு முனி அடித்துவிட்டதாக எண்ணி ஒரு கல்லை வைத்து அந்த மரத்தையே கும்பிட்டதை ( சோம்பேறிகள் சிலர் அங்கு உண்டியல் வைத்து பிழைப்பு நடாத்தியது வேறு கதை ) விஞ்ஞானம்தானே அது பிராணவாயு கிடைக்காமல் கரியமலைவாயு சுவாசித்ததால் ஏற்பட்ட மரணம் என போட்டுடைத்தது. ஏன் வாந்திபேதி போன்றவை ஏற்பட்டபோது ஆத்தாவுக்கு கோபம் வந்திட்டுது என்று ஊரார் நினைக்க இல்லை அதுவும் ஒரு நோய்தான் என எந்த விஞ்ஞானம் எடுத்துச் சொன்னது. ஏன் பல நோய்களே விஞ்ஞான வளர்ச்சியின் பின்தானே கண்டு பிடிக்கப்பட்டது. உண்மை இப்படியிருக்க மக்கள் உற்சாகம் அல்லவா கொண்டிருப்பார்கள். ஆனால் அதையும் சில சாத்திரிகளும் சாமியார்களும் விடவில்லை. தேசிக்காயை வெட்டி உள்ளே சிவப்பாகவிருக்கின்றதைக் காட்டி ஆத்தா கண் சிவந்து விட்டா என்று பயமுறுத்தினார்கள். அந்த தேசிக்காய் வெட்டும்போது உள்ளே எப்படிச் சிவந்தது என்ற உண்மையை விஞ்ஞானம் போட்டுடைக்க பிழைப்புக் கெட்ட சாத்திரிமார் விஞ்ஞானம் சோம்பேறியாக்குகின்றது என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள்
எதிரணியலுள்ள என் அன்புச் சகோதரன் மதனை நினைத்தாலோ பரிதாபமாகவுள்ளது. யாழ் களத்தில் உற்சாகமாக ஓடிவந்து நவீன தொழில்நுட்பங்களைப் பக்கம் பக்கமாக எழுதுபவர் அவர். அவரைப் போய் சோம்பேறியாக்குகின்றது என்று எழுதச் சொன்னால் என்ன செய்வார். அதனால்த்; தான் என்னவோ எழுதாமல் இழுத்தடித்து நாய் வேஷம் போட்டால் குலைக்கத்தானே வேண்டும் என்பதற்காக ஏதோ கொஞ்சம் குலைத்துவிட்டு இல்லையில்லை எழுதிவிட்டுச் சென்றுள்ளார். அவர் கணணியோடிருந்து மரரடித்துக் களைத்து மாலையில் வீடு திரும்புவாராம். அவங்க ஆத்துக்காரி களைப்பை போக்க கஞ்சி காச்சி வைச்சு மாலையில் வரவேற்பாவாம். இந்தக் கஷ்டம் பற்றி பில்கேட்ஸிற்கு ஏன் தெரியாமல் போனது. மாமல்லபுரத்தை பார்க்க மக்கள் நிறைய வருகின்றார்களாம். அதற்காக மாமல்லபுரத்தை என்ன அரும்பொருட்காட்சியகத்திலா கொண்டு போய் வைக்கமுடியும். டிஸ்னிலாண்டையும் பார்க்கத்தான் அதைவிட நிறையச் சனங்கள் வருகின்றார்கள். அதுவும் என்ன பல்லவர் காலத்திலா கட்டப்பட்டது.
ஏன் இந்த நவீன விஞ்ஞானம் தானே ஏழை பணக்காரன் போன்றவற்றையும் சாதிபேதங்களையும் உடைத்தெறிந்து மனித குலத்தை உற்சாகமடையச் செய்திருகின்றது. சமீபத்தில் எமது போராளி ஒருவரின் செவ்வியை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அப்போ அவர் சொன்ன செய்தி முன்பு 100 பேர் கொண்ட படையணி செய்த வேலையை இப்போ 10 பேர் கொண்ட படையணியே செய்து முடிக்க எமக்கு நவீன தொழில் நுட்பங்கள் உதவி செய்கின்றனவென மிகவும் உற்சாகமாக எந்தவித மரணபயமுமின்றிச் சொன்னார்.
இந்தியாவில் ஒரு ஏழைச்சிறுவன் பல நாள் பட்டினி சில நாள் சாப்பாடு. அந்த வறிய நிலையிலும் இந்த நவீன விஞ்ஞானத்தில் தானும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று உற்சாகமாகக் கனவு கண்டான். அவன் உற்சாக கனவு பலித்து நாட்டின் தலைமை விஞ்ஞானியானது மட்டுமல்ல இன்று அந்நாட்டின் முதல்குடிமகனும் அவரே. அவர்தான் மரியாதைக்குரிய அப்துல்கலாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவா வேண்டும். ஆபிரக்காம்லிங்கனை நாம் ஏட்டில்த்தான் படித்தோம். ஆனால் அப்துல்கலாமை நேரிலேயே பார்க்கும்போது எம்மையுமறியாமல் எமக்குள் உற்சாகம் பற்றிக் கொள்கின்றதே.
இணர்டாம் உலகப்போர் முடிந்தபோது யப்பானுக்கு எற்பட்ட அழிவுகள் எல்லோரும் அறிந்ததே. ஏன் உலகமே நினைத்தது யப்பான் அவ்வளவுதானென்று. ஆனால் இன்று உலகத்திலேயே தொழில் நுட்பப்புரட்சியில் முன்னணியிலுள்ளது. இது எப்படி நிகழ்ந்தது. யப்பானியரை பொதுவாக எறும்பிற்கு உதாரணமாகச் சொல்வார்கள். அவ்வளவு சுறுசுறுப்பு. எதிரணியினர் சொன்னது போல் சோம்பறிகளாகவா யப்பானியர்கள் இருக்கின்றார்கள். இதேபோல் சீனா தாய்வான் போன்றவற்றையும் உதாரணம் காட்டி நிறைய எழுதலாம். ஆனால் சோம்பலில்லாமல் எதிரணியினர் முழுவதையும் வாசிப்பார்களா என்பதில் எனக்கும் சந்தேகம். ஆதலால் அவர்களுக்கு ஏற்றவாறு விளக்கமாகவும் முடிந்தவரை சுருக்கமாகவும் எழுதி எமதணியின் சார்பில் உற்சாகமாக கருத்துக்கள் படைத்த என்னருமைச் சகாக்களுக்கும் உற்சாகமாகவே தனது பொறுப்பை சரியாகக் கடைப்பிடிக்கும் சாலமன் சோழியானுக்கும் எண்ணத்திலுதித்ததை நடைமுறைப்படுத்தி வெற்றிநடைபோடும் தூயாவிற்கும் களத்தில் என்னேரமும் விழித்திருந்து சிறப்பாக வழிநடாத்தும் பொறுப்பாளர்கள் மட்டுறுத்தினர்கள்; மற்றும் சிறப்பாக குறைநிறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி எம்மை உற்சாகப்படுத்திய பார்வையாளர்கள் இப்பட்டிமன்றம் சிறப்பாக நிறைவுற ஒத்துழைத்த எதிரணியினருக்கும் எனது உளப்©ர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து விடை பெறுகின்றேன்
அருமையான ஒரு பட்டிமன்றத்தின் இறுதிக் கட்டத்தில் நாம் நிற்கின்றோம். உண்மையில் ஒரு மனிதனுக்கு உற்சாகமோ சோம்பேறித்தனமோ உளவியலில் ரீதியாகவே ஏற்படுகின்றது. இதனை எனதருமை சகபாடி குருவிகள் மிக அருமையாக எடுத்துச் சொன்னார். உதாரணமாக புதிதாக ஒரு உணவை நாம் ருசி பார்க்கப் போகின்றோம். அந்த உணவை நாம் பார்க்கும்போது முதலிலேயே எமக்கு அருவருப்பு போல் ஏதாவது தோன்றி விட்டால் அந்த உணவு எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும் அதன் மீது நமக்கு வெறுப்புத்தான் ஏற்படும். இன்னொன்று முன்பு நாம் படித்த நரியும் திராட்சைப் பழமும் கதைதான். சிலருக்கு சில விடயங்கள் இயலாமல் போகும் போது சீ சீ அந்தப் பழம் புளிக்கும் நிலைதான். இந்த நிலையில்த் தான் எதிரத்தரப்பினர் ஏதேதோ எல்லாம் சொல்லிச் சொல்லி சோம்பலாக உட்கார்ந்துள்ளனர்.
நடுவரவர்களே நான் சற்று தலையங்கத்தை விட்டு விலத்திச் சென்றே விளக்கமளிக்க வேண்டிய நிலையிலுள்ளேன். ஏனெனில் வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தால்த்தான் சாப்பிடும் நிலையில் எதிர்த்தரப்பினர் உள்ளனர்.
நாம் எதையாவதொன்றை இளக்காமல் இன்னொன்றை பெறமுடியாது. அதேபோல் புதிய புதிய பல விடயங்கள் நம் வாழ்வில் புகுந்து நாமும் உற்சாகமாக வாழ வேண்டுமென்றால் சில இளப்புக்களையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.
இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தினால் வேலைவாய்ப்புக்கள் குறைந்து மனிதனைச் சோம்பேறி ஆக்கிவிட்டது என்று சொன்னார்கள். மனச்சாட்சியோடு சொல்லுங்கள் வேலைவாய்ப்புக்கள் குறைந்ததற்கு நவீன விஞ்ஞானம் மட்டுமா காரணம் ?? எங்களது தவறான நடவடிக்கைகள் காரணமில்லையா ?? உதாரணமாக ஒருவர் பலசரக்குக் கடை திறந்தால் மற்றவரும் பலசரக்குக் கடைதான் திறப்பார். வித்தியாசமாக வேறு ஏதாவது கடை திறக்கலாமா என சிந்திக்க சோம்பேறித்தனம் விடாது. நன்றாகச் சொன்னார் எதிரணி இளைஞன் நவீன விஞ்ஞானம் சோம்பேறிகளை மேன்மேலும் சோம்பேறிகளாக்குகின்றனவென்று. நாமும் அதைத்தானே சொல்கின்றோம். நவீன விஞ்ஞானம் உற்சாகமானவர்களை மேன்மேலும் உற்சாக்படுத்திக் கொண்டே செல்கின்றது.
இந்த நவீன விஞ்ஞானத்தினால் இன்று பல நோய்கள் ஏற்பட்டு மனிதன் சோம்பேறியாகிவிட்டான் என சிலர் கண்ணீர் வடித்தனர். சிரிப்பதா அழுவதா முன்பு பெரிய மரத்தின் கீழ் இரவு படுத்திருந்த சிலர் இறந்து காணப்பட்டனர். அப்போ ஊரார் பேய் பிசாசு முனி அடித்துவிட்டதாக எண்ணி ஒரு கல்லை வைத்து அந்த மரத்தையே கும்பிட்டதை ( சோம்பேறிகள் சிலர் அங்கு உண்டியல் வைத்து பிழைப்பு நடாத்தியது வேறு கதை ) விஞ்ஞானம்தானே அது பிராணவாயு கிடைக்காமல் கரியமலைவாயு சுவாசித்ததால் ஏற்பட்ட மரணம் என போட்டுடைத்தது. ஏன் வாந்திபேதி போன்றவை ஏற்பட்டபோது ஆத்தாவுக்கு கோபம் வந்திட்டுது என்று ஊரார் நினைக்க இல்லை அதுவும் ஒரு நோய்தான் என எந்த விஞ்ஞானம் எடுத்துச் சொன்னது. ஏன் பல நோய்களே விஞ்ஞான வளர்ச்சியின் பின்தானே கண்டு பிடிக்கப்பட்டது. உண்மை இப்படியிருக்க மக்கள் உற்சாகம் அல்லவா கொண்டிருப்பார்கள். ஆனால் அதையும் சில சாத்திரிகளும் சாமியார்களும் விடவில்லை. தேசிக்காயை வெட்டி உள்ளே சிவப்பாகவிருக்கின்றதைக் காட்டி ஆத்தா கண் சிவந்து விட்டா என்று பயமுறுத்தினார்கள். அந்த தேசிக்காய் வெட்டும்போது உள்ளே எப்படிச் சிவந்தது என்ற உண்மையை விஞ்ஞானம் போட்டுடைக்க பிழைப்புக் கெட்ட சாத்திரிமார் விஞ்ஞானம் சோம்பேறியாக்குகின்றது என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள்
எதிரணியலுள்ள என் அன்புச் சகோதரன் மதனை நினைத்தாலோ பரிதாபமாகவுள்ளது. யாழ் களத்தில் உற்சாகமாக ஓடிவந்து நவீன தொழில்நுட்பங்களைப் பக்கம் பக்கமாக எழுதுபவர் அவர். அவரைப் போய் சோம்பேறியாக்குகின்றது என்று எழுதச் சொன்னால் என்ன செய்வார். அதனால்த்; தான் என்னவோ எழுதாமல் இழுத்தடித்து நாய் வேஷம் போட்டால் குலைக்கத்தானே வேண்டும் என்பதற்காக ஏதோ கொஞ்சம் குலைத்துவிட்டு இல்லையில்லை எழுதிவிட்டுச் சென்றுள்ளார். அவர் கணணியோடிருந்து மரரடித்துக் களைத்து மாலையில் வீடு திரும்புவாராம். அவங்க ஆத்துக்காரி களைப்பை போக்க கஞ்சி காச்சி வைச்சு மாலையில் வரவேற்பாவாம். இந்தக் கஷ்டம் பற்றி பில்கேட்ஸிற்கு ஏன் தெரியாமல் போனது. மாமல்லபுரத்தை பார்க்க மக்கள் நிறைய வருகின்றார்களாம். அதற்காக மாமல்லபுரத்தை என்ன அரும்பொருட்காட்சியகத்திலா கொண்டு போய் வைக்கமுடியும். டிஸ்னிலாண்டையும் பார்க்கத்தான் அதைவிட நிறையச் சனங்கள் வருகின்றார்கள். அதுவும் என்ன பல்லவர் காலத்திலா கட்டப்பட்டது.
ஏன் இந்த நவீன விஞ்ஞானம் தானே ஏழை பணக்காரன் போன்றவற்றையும் சாதிபேதங்களையும் உடைத்தெறிந்து மனித குலத்தை உற்சாகமடையச் செய்திருகின்றது. சமீபத்தில் எமது போராளி ஒருவரின் செவ்வியை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அப்போ அவர் சொன்ன செய்தி முன்பு 100 பேர் கொண்ட படையணி செய்த வேலையை இப்போ 10 பேர் கொண்ட படையணியே செய்து முடிக்க எமக்கு நவீன தொழில் நுட்பங்கள் உதவி செய்கின்றனவென மிகவும் உற்சாகமாக எந்தவித மரணபயமுமின்றிச் சொன்னார்.
இந்தியாவில் ஒரு ஏழைச்சிறுவன் பல நாள் பட்டினி சில நாள் சாப்பாடு. அந்த வறிய நிலையிலும் இந்த நவீன விஞ்ஞானத்தில் தானும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று உற்சாகமாகக் கனவு கண்டான். அவன் உற்சாக கனவு பலித்து நாட்டின் தலைமை விஞ்ஞானியானது மட்டுமல்ல இன்று அந்நாட்டின் முதல்குடிமகனும் அவரே. அவர்தான் மரியாதைக்குரிய அப்துல்கலாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவா வேண்டும். ஆபிரக்காம்லிங்கனை நாம் ஏட்டில்த்தான் படித்தோம். ஆனால் அப்துல்கலாமை நேரிலேயே பார்க்கும்போது எம்மையுமறியாமல் எமக்குள் உற்சாகம் பற்றிக் கொள்கின்றதே.
இணர்டாம் உலகப்போர் முடிந்தபோது யப்பானுக்கு எற்பட்ட அழிவுகள் எல்லோரும் அறிந்ததே. ஏன் உலகமே நினைத்தது யப்பான் அவ்வளவுதானென்று. ஆனால் இன்று உலகத்திலேயே தொழில் நுட்பப்புரட்சியில் முன்னணியிலுள்ளது. இது எப்படி நிகழ்ந்தது. யப்பானியரை பொதுவாக எறும்பிற்கு உதாரணமாகச் சொல்வார்கள். அவ்வளவு சுறுசுறுப்பு. எதிரணியினர் சொன்னது போல் சோம்பறிகளாகவா யப்பானியர்கள் இருக்கின்றார்கள். இதேபோல் சீனா தாய்வான் போன்றவற்றையும் உதாரணம் காட்டி நிறைய எழுதலாம். ஆனால் சோம்பலில்லாமல் எதிரணியினர் முழுவதையும் வாசிப்பார்களா என்பதில் எனக்கும் சந்தேகம். ஆதலால் அவர்களுக்கு ஏற்றவாறு விளக்கமாகவும் முடிந்தவரை சுருக்கமாகவும் எழுதி எமதணியின் சார்பில் உற்சாகமாக கருத்துக்கள் படைத்த என்னருமைச் சகாக்களுக்கும் உற்சாகமாகவே தனது பொறுப்பை சரியாகக் கடைப்பிடிக்கும் சாலமன் சோழியானுக்கும் எண்ணத்திலுதித்ததை நடைமுறைப்படுத்தி வெற்றிநடைபோடும் தூயாவிற்கும் களத்தில் என்னேரமும் விழித்திருந்து சிறப்பாக வழிநடாத்தும் பொறுப்பாளர்கள் மட்டுறுத்தினர்கள்; மற்றும் சிறப்பாக குறைநிறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி எம்மை உற்சாகப்படுத்திய பார்வையாளர்கள் இப்பட்டிமன்றம் சிறப்பாக நிறைவுற ஒத்துழைத்த எதிரணியினருக்கும் எனது உளப்©ர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து விடை பெறுகின்றேன்

