05-15-2005, 03:04 AM
நன்றி மதுரன் அவர்களே! இறுதி நேரத்தில் வந்து அருமையாக விளக்கங்களை முன்வைத்துள்ளீர்கள்.
மதன் அவர்களின் கூற்றுப்படி விஞ்ஞானத்தின் நன்மை தீமைகளை ஆராயவில்லை... மாறாக, விஞ்ஞானம் எவ்வாறு மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதை தெளிவாகக் கூறியுள்ளோம் என்கிறார் மதுரன் அவர்கள்.
அதுமட்டுமா? ஒரு வேலையிலேயே காலத்தை அழிக்காமல்.. விஞ்ஞானத்தின் உதவியினால் உற்சாகமாகப் பல வேலைகளைச் செய்கிறீர்களே.. இது ஒன்றே விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகிறது என்பதற்குப் போதாதா என்றும் கேட்கிறார்.
சின்னத் தொடர்களைமட்டுமே ஏன் பார்க்கிறீர்கள்.. உங்கள் கண்களுக்கு நல்லனவே தொலைக்காட்சியில் தெரிவதில்லையா? உடனுக்குடன் வரும் செய்திகளைப் பார்ப்பதில்லையா.. தாயக நிகழ்வுகளைப் பார்ப்பதில்லையா.. விபரணங்களைப் பார்ப்பதில்லையா.. சின்னத் திரை சின்னத்திரை என்று கற்பனைக் கதைகளுள் காலத்தைப் போக்கிவிட்டு விஞ்ஞானத்தின் மேல் ஏன் வீண் பழி போடுகிறீர்கள் எனக் கேட்கிறார்?
வித்தை தெரியாதவனுக்கு மண் மண்ணாகத்தான் இருக்கும்.. வித்தை தெரிந்தவனுக்கு மண் பானையாகலாம்.. சிற்பமாகலாம்.. கட்டிடமாகலாம்.. ஆக, சோம்பல் முறித்து வித்தை தெரிந்தவர்களாய் விஞ்ஞானத்தை அணுகினால்.. அது உங்களை உற்சாகப்படுத்தும் என சொல்லாமல் சொல்கிறார் மதுரன் அவர்கள்.
வளிமண்டலத்தில் ஒட்சிசன் குறைகிறது என்பதைக் கூறி, உற்சாகமடையும் வழிவகைகளைக் கண்டுபிடி எனக் கூறுவதும் விஞ்ஞானம்தானே எனக்கூறி தனது கருத்துக்களை நிறைவு செய்து.. ஒத்துழைப்பு நல்கிய மதுரன் அவர்களுக்கு நன்றி.
உற்சாகப்படுத்துகிறது என்ற அணியில் எண்மரும், சோம்பேறியாக்குகிறது என்ற அணியில் எழுவரும் பங்குபற்றியுள்ளார்கள்.
சிம்ரன், நிலவன் ஆகியோர் சோம்பல் காரணமாகவோ, என்னவோ வருவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை.
ஆகவே, இத்துடன் விவாதங்கள் நிறைவுறுகின்றன. எல்லோரும் சிறப்பாக கருத்துகளை முன்வைத்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.
இனி வருவது அணித் தலைவர்களுக்கான நேரம்.
தற்போது தனது நிறைவு கருத்துக்களை.. அல்லது கருத்தின் தொகுப்புகளை அளிப்பதற்காக, 'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது' என்ற அணித் தலைவரான வசம்பு அவர்களை கருத்துகளுடன் எதிர்பார்க்கிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
மதன் அவர்களின் கூற்றுப்படி விஞ்ஞானத்தின் நன்மை தீமைகளை ஆராயவில்லை... மாறாக, விஞ்ஞானம் எவ்வாறு மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதை தெளிவாகக் கூறியுள்ளோம் என்கிறார் மதுரன் அவர்கள்.
அதுமட்டுமா? ஒரு வேலையிலேயே காலத்தை அழிக்காமல்.. விஞ்ஞானத்தின் உதவியினால் உற்சாகமாகப் பல வேலைகளைச் செய்கிறீர்களே.. இது ஒன்றே விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகிறது என்பதற்குப் போதாதா என்றும் கேட்கிறார்.
சின்னத் தொடர்களைமட்டுமே ஏன் பார்க்கிறீர்கள்.. உங்கள் கண்களுக்கு நல்லனவே தொலைக்காட்சியில் தெரிவதில்லையா? உடனுக்குடன் வரும் செய்திகளைப் பார்ப்பதில்லையா.. தாயக நிகழ்வுகளைப் பார்ப்பதில்லையா.. விபரணங்களைப் பார்ப்பதில்லையா.. சின்னத் திரை சின்னத்திரை என்று கற்பனைக் கதைகளுள் காலத்தைப் போக்கிவிட்டு விஞ்ஞானத்தின் மேல் ஏன் வீண் பழி போடுகிறீர்கள் எனக் கேட்கிறார்?
வித்தை தெரியாதவனுக்கு மண் மண்ணாகத்தான் இருக்கும்.. வித்தை தெரிந்தவனுக்கு மண் பானையாகலாம்.. சிற்பமாகலாம்.. கட்டிடமாகலாம்.. ஆக, சோம்பல் முறித்து வித்தை தெரிந்தவர்களாய் விஞ்ஞானத்தை அணுகினால்.. அது உங்களை உற்சாகப்படுத்தும் என சொல்லாமல் சொல்கிறார் மதுரன் அவர்கள்.
வளிமண்டலத்தில் ஒட்சிசன் குறைகிறது என்பதைக் கூறி, உற்சாகமடையும் வழிவகைகளைக் கண்டுபிடி எனக் கூறுவதும் விஞ்ஞானம்தானே எனக்கூறி தனது கருத்துக்களை நிறைவு செய்து.. ஒத்துழைப்பு நல்கிய மதுரன் அவர்களுக்கு நன்றி.
உற்சாகப்படுத்துகிறது என்ற அணியில் எண்மரும், சோம்பேறியாக்குகிறது என்ற அணியில் எழுவரும் பங்குபற்றியுள்ளார்கள்.
சிம்ரன், நிலவன் ஆகியோர் சோம்பல் காரணமாகவோ, என்னவோ வருவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை.
ஆகவே, இத்துடன் விவாதங்கள் நிறைவுறுகின்றன. எல்லோரும் சிறப்பாக கருத்துகளை முன்வைத்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.
இனி வருவது அணித் தலைவர்களுக்கான நேரம்.
தற்போது தனது நிறைவு கருத்துக்களை.. அல்லது கருத்தின் தொகுப்புகளை அளிப்பதற்காக, 'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது' என்ற அணித் தலைவரான வசம்பு அவர்களை கருத்துகளுடன் எதிர்பார்க்கிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.

