05-14-2005, 02:26 PM
விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை எதிர்ப்பதாக கூறவில்லை: இந்தியா விளக்கம்
இலங்கைத் தீவக ஆழிப்பேரலை மீளமைப்பிற்கான பொதுக்கட்டமைப்பில் சிறீலங்கா அரசுக்கு சமநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இடம்பெறுவதை இந்தியா எதிர்க்கிறது என்று வெளியான செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.
சிறீலங்காவிற்கான இந்தியத் தூதரக அதிகாரி நக்மா மாலிக் இதைத் தெரிவித்தார்.
புதடில்லியல் இந்திய வெளியுறவுத் துறைச்; செயலர் சியாம் சரணுக்கும் நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கு இடையே நடந்த பேச்;சுகளின் போது பொதுக்கட்டமைப்பு அமைக்கப்படுவதில் இந்தியா உடன்படுவதாகவும் ஆனால் அதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கைத் தீவில் மேலாதிக்கம் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இச்செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும் நம்கா மாலிக் கூறினார்.
சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகாவின் இந்தியப் பயணத்திற்குப் பிறகே பொதுக்கட்டமைப்பு குறித்த தனது நிலையை இந்திய அரசு தெரிவிக்கும் என்றும் இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: புதினம்
இலங்கைத் தீவக ஆழிப்பேரலை மீளமைப்பிற்கான பொதுக்கட்டமைப்பில் சிறீலங்கா அரசுக்கு சமநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இடம்பெறுவதை இந்தியா எதிர்க்கிறது என்று வெளியான செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.
சிறீலங்காவிற்கான இந்தியத் தூதரக அதிகாரி நக்மா மாலிக் இதைத் தெரிவித்தார்.
புதடில்லியல் இந்திய வெளியுறவுத் துறைச்; செயலர் சியாம் சரணுக்கும் நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கு இடையே நடந்த பேச்;சுகளின் போது பொதுக்கட்டமைப்பு அமைக்கப்படுவதில் இந்தியா உடன்படுவதாகவும் ஆனால் அதன் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கைத் தீவில் மேலாதிக்கம் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இச்செய்திகள் அனைத்தும் தவறானவை என்றும் நம்கா மாலிக் கூறினார்.
சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகாவின் இந்தியப் பயணத்திற்குப் பிறகே பொதுக்கட்டமைப்பு குறித்த தனது நிலையை இந்திய அரசு தெரிவிக்கும் என்றும் இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: புதினம்

