05-14-2005, 02:24 PM
பொதுக்கட்டமைப்புக்கு ஆதரவு: சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அறிவிப்பு
சிறீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே பொதுக்கட்டமைப்பை உருவாக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறீலங்காவிற்காக அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லான்ஸ்டெட் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
பொதுக்கட்டமைப்பின் மூலம் ஆழிப்பேரலை நிவாரண உதவிகள் முழுவீச்சில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
அத்துடன் இடைநிறுத்தத்திற்குள்ளாகியிருக்கும் அமைதிப் பேச்சுகள் சரியான திசையில் செல்ல இந்தக் கட்டமைப்பு உதவக் கூடும். அமைதிப் பேச்சுகளில் ஒருவகையிலான முன்னேற்ற நடவடிக்கையாகவே பொதுக்கட்டமைப்பை நாங்கள் எண்ணுகிறோம்.
கடந்த ஆண்டின் இறுதி வரையில் மொத்தம் 570 மில்லியன் டொலரை இலங்கைத் தீவகத்திற்கு வழங்க அமெரிக்கா முன்வந்தது.
மூன்று மீன்பிடித் துறைமுகங்களை சீரமைக்கவும் 14 தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒரு பாலம் ஆகியவற்றை உருவாக்கவும் அமெரிக்கா முன்வந்தது.
அத்துடன் கடலோர சுற்றுலா விடுதிக் கட்டுமானங்களையும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 விளையாட்டு மைதானங்களையும் உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது என்றார் அவர்.
நன்றி: புதினம்
சிறீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே பொதுக்கட்டமைப்பை உருவாக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய சிறீலங்காவிற்காக அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லான்ஸ்டெட் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
பொதுக்கட்டமைப்பின் மூலம் ஆழிப்பேரலை நிவாரண உதவிகள் முழுவீச்சில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
அத்துடன் இடைநிறுத்தத்திற்குள்ளாகியிருக்கும் அமைதிப் பேச்சுகள் சரியான திசையில் செல்ல இந்தக் கட்டமைப்பு உதவக் கூடும். அமைதிப் பேச்சுகளில் ஒருவகையிலான முன்னேற்ற நடவடிக்கையாகவே பொதுக்கட்டமைப்பை நாங்கள் எண்ணுகிறோம்.
கடந்த ஆண்டின் இறுதி வரையில் மொத்தம் 570 மில்லியன் டொலரை இலங்கைத் தீவகத்திற்கு வழங்க அமெரிக்கா முன்வந்தது.
மூன்று மீன்பிடித் துறைமுகங்களை சீரமைக்கவும் 14 தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒரு பாலம் ஆகியவற்றை உருவாக்கவும் அமெரிக்கா முன்வந்தது.
அத்துடன் கடலோர சுற்றுலா விடுதிக் கட்டுமானங்களையும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 விளையாட்டு மைதானங்களையும் உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது என்றார் அவர்.
நன்றி: புதினம்

