05-13-2005, 03:22 AM
காத்திருந்த அனைவருக்கும் நன்றிகள்.
இதில் மழலை நவீன விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகின்றது மனிதன் உற்சாகமாக இருந்ததால் தான் விஞ்ஞான வளர்ச்சி சாத்தியமாயிற்று என்று கூறுகின்றாறே தவிர நவீன விஞ்ஞானம் எப்படி மனிதனை உற்சாகப்படுகின்றது என்பதை கூறவில்லை, மனிதன் உற்சாகமாக இருந்தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் கூட அந்த உற்சாகத்துக்கு வேறு ஏதும் காரணம் இருந்திருக்கலாமல்லவா? ஆக நவீன விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகின்றது என்பதை அது எப்படி சாத்தியம் என்று கூறாதாமையின்னால் இந்த கருத்தை கவனத்தில் எழுக்க தேவையில்லை,
இதில் மனிதர்கள் அடிப்படை தேவைகளை சந்திக்கவே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள் என்றால் என்ன அர்த்தம், அப்போது உற்சாகமாக செயல்ப்பட்டார்கள் என்று தன்னையும் அறியாமல் கூறிவிட்டார் மழலை அவருக்கு எனது நன்றிகள், அடுத்து பட்டிமன்றம் வைப்பதற்கு நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தேவையில்லை இவற்றின் துணையின்றி தானே போர் சூழலில் யாழில் பட்டிமன்றங்கள் நடந்தன? ஆக இந்த கருத்த்தையும் கவனத்தில் எடுக்க தேவையில்லை,
மாமல்லபுரம் மாமல்லபுரம் என்று இந்தியாவில் ஒரு இடம் இருக்கின்றது, அங்குள்ள சிற்பங்களை போய் பாருங்கள், அந்த பல்லவன் மன்னன் கட்டிய கோயில்களை போய் பாருங்கள், ஏன் அருகில் எகிப்தில் உள்ள பிரமிட்டுக்கள் இவையேல்லாம் நவீன விஞ்ஞானமும் தொழிற்நுட்பமும் இல்லாத போது கட்டப்பட்டவை, ஆக நவீன விஞ்ஞானம் இருப்பதால்தான் உற்சாகம் பெற்றோம் வானை முட்டுமளவுக்கு வளர்ந்தோம் என்ற உங்கள் கருத்து அடிபட்டு போகின்றது,
மீண்டும் நவீன விஞ்ஞானம் உற்சாகத்தை ஊட்டியது என்று சொல்கின்றீர்களே தவிர அது எப்படி ஊட்டியது என்பதை குறிப்பிட தவறியதால் கருத்து பயனற்று போகின்றது, அது தவிர உண்ணும் உடைக்கும் உணவிற்கும் நவீன விஞ்ஞானம் தேவையில்லை, அண்மைக்கால நவீன விஞ்ஞானம் வரும்வரை மனிதன் உணவும் உடையும் இன்றியா இருந்தான்? இந்த உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் உணவளிக்க கூடியதாக தான் பூமி இருக்கின்றது, நவீன விஞ்ஞானத்தால் சோர்வடைந்த மக்கள் உணவு உற்பத்தியை மேற்கொள்ளாமையினால் தான் இந்த மரபணுமாற்றங்கள் மூலம் உணவு உற்பத்தி செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, இலங்கை முனபு நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இல்லாத போதே உணவில் தன்னிறைவு பெற்ற நாடாக இருந்துள்ளது இப்போது தான் உணவு பற்றாகக்குறை, ஏன் என்று மீண்டும் சொல்லதேவையில்லை என்று நினைக்கின்றேன்.
உங்களுக்கு தாகமாக இருக்கின்றது, உடனே சமயலறைக்கு சென்று தண்ணிரை எடுத்து குடிக்கின்றீர்கள், மற்றது அப்படி செய்யாமல் அம்மாவை அழைத்து தண்ணீர்க் கொண்டுவரும் படி கேட்டு குடிக்கின்றீர்கள் இதில் எது சோம்பேறித்தனம் உற்சாகமின்மை? சமயலறைக்கு சென்றதால் அலுப்படைந்தேன் என்று சொல்வீர்களா?
சவால்களை வாழ்கையில் புதிய மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்க விரும்பாமல் தன்னம்பிக்கையின்றி கணணியில் காதலிப்பது சோம்பேறித்தனத்தின் முழு வடிவம், அப்படி செய்வது நனைந்து விடுவோமே என்று மழைக்கோட்டு போட்டுக்கொண்டு குளிப்பது போல மனிதர்களை சந்திக்க விருப்பமில்லை என்றால் காதல் ஏன்? இந்த இணைய காதலில் தான் எத்தனை ஏமாற்றங்கள் தன்னம்பிக்கை குறைவு சோர்வுகள் சம்பவங்களை குறிப்பிட்டு எழுத தேவையில்லை என்று நினைக்கின்றேன்,
மழலை அந்த நவீன விஞ்ஞானம் உருவாக்கிய சோம்பேறிகள் அது வளர வளர தாமும் வளர்ச்சியடைகின்றார்கள் சோம்பேறிகளாக ,,, அதைத்தான் இளைஞன் குறிப்பிட்டிருக்கின்றார்,
பெரிய கணக்கு பார்க்க கணணியை உபயோக்கிக்கலாம் ஆனான் சின்ன கணக்கு பார்க்க கணணி ஏன்? யாழில் படித்து வந்த சிறுவனிடம் இரண்டு சிறிய இலக்கங்களை கூட்டினால் என்ன வரும் என்று கேளுங்கள் உடன் பதில் வரும், இதுவே இங்கு படித்த சிறுவனுக்கு கால்குலேட்டர் தேவை, இதுவே நவீன விஞ்ஞானம் உருவாக்கிய சோம்பேறித்தனம்.
இவ்வாறாக மழலையின் அனைத்து கருத்துகளுக்கும் நான்பதில் கூறிக்கொண்டே போகலாம் நேரம் கருதி இத்துடன் பதில் கருத்துக்களை முடித்து கொள்கின்றேன். பட்டிமன்றத்தில் என்னால் ஏற்பட்ட தாமதத்திற்கு மீண்டும் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை சில நல்ல கருத்துக்களை சுட்டிகாட்டிய பெயர் குறிப்பிட முடியாத கருத்துகள நண்பர்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கின்றேன், இறுதியாக நடுவர்கள் இங்கு இருதரப்பிலும் வைக்கப்பட்ட வாதங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் தீர்ப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுகொண்டு விடை பெறுகின்றேன்,
நன்றி வணக்கம்
Quote:இன்று விஞ்ஞானம் ஓங்கி வளர்ந்து அண்ட சராசரங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறது என்றால் மனிதன் சோம்பேறியாகியிருந்தால் சாத்தியமா? அன்று அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதன் உற்சாகமாகக் காட்டும் உற்சாகத்தில் தான் அடங்கியிருக்கிறது....மனித உற்சாகமின்றி விஞ்ஞான வளர்ச்சியேது? மனித உற்சாகத்தினால் உண்டான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மனித உற்சாகத்திற்கு மேலும் ஊட்டச்சத்தாகிறது...மனிதன் உற்சாகம் இன்றியிருந்திருந்தால்; தான் வளர்த்த விஞ்ஞானத்தின் பலனாய் என்றோ மாண்டிருப்பான் மண்ணில்...ஆனால் மனித உற்சாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்காத வண்ணம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இதில் மழலை நவீன விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகின்றது மனிதன் உற்சாகமாக இருந்ததால் தான் விஞ்ஞான வளர்ச்சி சாத்தியமாயிற்று என்று கூறுகின்றாறே தவிர நவீன விஞ்ஞானம் எப்படி மனிதனை உற்சாகப்படுகின்றது என்பதை கூறவில்லை, மனிதன் உற்சாகமாக இருந்தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் கூட அந்த உற்சாகத்துக்கு வேறு ஏதும் காரணம் இருந்திருக்கலாமல்லவா? ஆக நவீன விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகின்றது என்பதை அது எப்படி சாத்தியம் என்று கூறாதாமையின்னால் இந்த கருத்தை கவனத்தில் எழுக்க தேவையில்லை,
Quote:அடுத்ததாக அன்றைய மனிதர்கள் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள். ஆனால் நாளைய சந்ததிக்காக இன்றே உற்சாகமாக வித்து இடும் அளவிற்கு இன்றைய மனிதர்கள் வளர்ந்து விட்டார்கள் என்றால் அதற்கு காரணம் எது? விஞ்ஞானம் தொழில்நுட்பமும் தான். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் இன்று நானும் நீங்களும் பட்டிமன்றம் வைக்கவும் விவாதிக்கவும் கூட முடியாத சோம்பேறிகளாகி படுத்திருப்போம். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்பமும் தந்த உற்சாகத்தால் உற்சாகமாகி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்
இதில் மனிதர்கள் அடிப்படை தேவைகளை சந்திக்கவே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள் என்றால் என்ன அர்த்தம், அப்போது உற்சாகமாக செயல்ப்பட்டார்கள் என்று தன்னையும் அறியாமல் கூறிவிட்டார் மழலை அவருக்கு எனது நன்றிகள், அடுத்து பட்டிமன்றம் வைப்பதற்கு நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தேவையில்லை இவற்றின் துணையின்றி தானே போர் சூழலில் யாழில் பட்டிமன்றங்கள் நடந்தன? ஆக இந்த கருத்த்தையும் கவனத்தில் எடுக்க தேவையில்லை,
Quote:மனிதன் சோம்பியிருந்தால் எப்படி நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தோன்றும்? இல்லை.. அன்றை விஞ்ஞானம் தான் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் எவ்வாறு நவீன அதாவது இன்றைய விஞ்ஞானம் வானை முட்டுமளவிற்கு வளர்ந்து நிற்கும்? சோம்பேறிகளாயாக்யிருந்திருந்தால் மண்ணையல்லவா முட்டியிருக்கும் மானிடம்?
மாமல்லபுரம் மாமல்லபுரம் என்று இந்தியாவில் ஒரு இடம் இருக்கின்றது, அங்குள்ள சிற்பங்களை போய் பாருங்கள், அந்த பல்லவன் மன்னன் கட்டிய கோயில்களை போய் பாருங்கள், ஏன் அருகில் எகிப்தில் உள்ள பிரமிட்டுக்கள் இவையேல்லாம் நவீன விஞ்ஞானமும் தொழிற்நுட்பமும் இல்லாத போது கட்டப்பட்டவை, ஆக நவீன விஞ்ஞானம் இருப்பதால்தான் உற்சாகம் பெற்றோம் வானை முட்டுமளவுக்கு வளர்ந்தோம் என்ற உங்கள் கருத்து அடிபட்டு போகின்றது,
Quote:அதை விட உலகத்திலே எத்தனையோ எத்தனையோ சாதனைகளைப் புரிந்திருக்கின்றது விஞ்ஞானம். ஆதி காலவாசியாக அலைந்த நாங்கள் இன்று மாபெரும் மனித வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம் எதனால்? அதுவும் விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சியினால் தான்...அன்று வேட்டையாடி உணவு பெறுவதை மட்டும் குறிக்கோளாக வாழ்ந்த மனிதன் இன்று எத்தனை சாதனைகள் புரிந்து இருக்கின்றான் என்றால் அதற்கு விஞ்ஞான வளர்ச்சியும் விஞ்ஞானம் ஊட்டிய உற்சாகம் தான் காரணம்......நாம் உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடை வரைக்கும் எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் பிறந்தவையே...அப்படி விஞ்ஞானம் செய்திருக்காதுவிட்டால் நாங்கள் இன்று பசி பட்டினியுடன் அலைந்திருப்போம். உதாரணமாக genetically modified foods (GMO) உற்பத்தியாவதால் தான் மனித தொகையின் அளவிற்குரிய உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன...இல்லையேல் மனித சமுதாயமே அழிந்து இருக்கும். குறிப்பிட்ட மனித வளர்ச்சியைத்தான் பூமி தாங்க முடியும் (carrying capacity) விஞ்ஞானம் இருந்திருக்காhவிட்டால் அல்லது விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகம் கொடுத்து தட்டிக் கொடுக்காது விட்டால் எப்படி பூமி தாங்கும் சக்தியையும் மீறி மனித வளர்ச்சியை ஈடு கொடுக்கின்றது? எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகம் தான் மனிதனை தடைகளைத் தாண்டி உழைக்க வைக்கிறது
மீண்டும் நவீன விஞ்ஞானம் உற்சாகத்தை ஊட்டியது என்று சொல்கின்றீர்களே தவிர அது எப்படி ஊட்டியது என்பதை குறிப்பிட தவறியதால் கருத்து பயனற்று போகின்றது, அது தவிர உண்ணும் உடைக்கும் உணவிற்கும் நவீன விஞ்ஞானம் தேவையில்லை, அண்மைக்கால நவீன விஞ்ஞானம் வரும்வரை மனிதன் உணவும் உடையும் இன்றியா இருந்தான்? இந்த உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் உணவளிக்க கூடியதாக தான் பூமி இருக்கின்றது, நவீன விஞ்ஞானத்தால் சோர்வடைந்த மக்கள் உணவு உற்பத்தியை மேற்கொள்ளாமையினால் தான் இந்த மரபணுமாற்றங்கள் மூலம் உணவு உற்பத்தி செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, இலங்கை முனபு நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இல்லாத போதே உணவில் தன்னிறைவு பெற்ற நாடாக இருந்துள்ளது இப்போது தான் உணவு பற்றாகக்குறை, ஏன் என்று மீண்டும் சொல்லதேவையில்லை என்று நினைக்கின்றேன்.
Quote:இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்:
"...ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.."
அலைந்து திரிந்தா எப்படிங்க உற்சாகம் பிறக்கும்?...அலுப்புத்தானே பிறக்கும்...பிறகு வீட்டிற்கு வந்து யப்பா என கட்டிலில் விழத்தான் மனம் சொல்லும்..இதனால் செய்ய வேண்டியிருக்கும் மீத வேலைகளை கூட செய்ய முடியாத நிலை..ஆனால் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் பல வேலைகளை சில மணி நேரத்தில் உடல் அலுப்பின்றி உற்சாகமாகச் செய்ய கூடியதாக இருக்கிறது....
உங்களுக்கு தாகமாக இருக்கின்றது, உடனே சமயலறைக்கு சென்று தண்ணிரை எடுத்து குடிக்கின்றீர்கள், மற்றது அப்படி செய்யாமல் அம்மாவை அழைத்து தண்ணீர்க் கொண்டுவரும் படி கேட்டு குடிக்கின்றீர்கள் இதில் எது சோம்பேறித்தனம் உற்சாகமின்மை? சமயலறைக்கு சென்றதால் அலுப்படைந்தேன் என்று சொல்வீர்களா?
Quote:இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்:
"..மனித உணர்வுகளை நேருக்கு நேர் வெளிப்படுத்தி - கைகோர்த்து - காலாற நடந்து - கடக்கப்போகும் எதிர்காலத்தைக் கதைத்து - கண்ணெல்லாம் ஒளிபாய - காதில் தேனினிமையூற - மனதெல்லாம் சுகம்தர - வாழ்வதற்கான உற்சாகத்தைப் பெறுகின்ற காதலர்களையும் சந்தித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்..."
என்னங்க நீங்க இப்படி சொல்லிட்டிங்க...நடக்கப் போற எதிர்காலத்தை பேசிஇ இருக்கிற நிகழ்காலத்தை கவுக்கிற காதல் நடக்கிற கால கட்டத்திலை காலாற நடந்தா என்னங்க நிலமை? இந்தக் கால கட்டத்திலை கைகோர்ப்பு எதுவுமில்லாமல் கணனிலயும் நிஜமாக தூய்மையான காதலை வெளிப்படுத்தலாம்...அன்றை காலத்திலை கண்களால் பேசி காதலை வளர்த்தாங்க "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" அப்ப காதல் வளர்ந்ததுதானே அவங்களுக்குள்...கணனில காதலிச்சா மட்டும் இல்லையா என்ன?...
காலாற நடக்கிற காதல் உற்சாகம் தராது உளைச்சலைத் தான் தரும்....ஆனா விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்றபட்ட கணனியால மானிடர்கள் தப்புக்கள் நடக்காது தப்பிக்கிறார்கள்... அதனால் மன உளைச்சல் இன்றி உற்சாகமாக அன்றாட வாழ்க்கையில் ஈடுபடமுடிகிறது...
சவால்களை வாழ்கையில் புதிய மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்க விரும்பாமல் தன்னம்பிக்கையின்றி கணணியில் காதலிப்பது சோம்பேறித்தனத்தின் முழு வடிவம், அப்படி செய்வது நனைந்து விடுவோமே என்று மழைக்கோட்டு போட்டுக்கொண்டு குளிப்பது போல மனிதர்களை சந்திக்க விருப்பமில்லை என்றால் காதல் ஏன்? இந்த இணைய காதலில் தான் எத்தனை ஏமாற்றங்கள் தன்னம்பிக்கை குறைவு சோர்வுகள் சம்பவங்களை குறிப்பிட்டு எழுத தேவையில்லை என்று நினைக்கின்றேன்,
Quote:இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்:
"..தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அந்த சோம்பேறிகளை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கி வைத்துக்கொள்ளவே பயன்படுகிறது...."
தொடக்கித்திலே சோம்பேறித்தனம் இருக்கிறது என ஒத்துக் கொண்டீர்கள் அப்படியானவர்களை விஞ்ஞானம் தான் சோம்பேறியாக்கணும் என்றில்லை...அவங்க சோம்பேறிங்க தான்...அப்படிப்பட்டவர்கள் எப்படி விஞ்ஞான வளர்ச்சியைப் உற்சாகமாகப் பார்ப்பாங்க? அவங்க எப்பவுமே சோம்பேறிங்க தாங்க...
மழலை அந்த நவீன விஞ்ஞானம் உருவாக்கிய சோம்பேறிகள் அது வளர வளர தாமும் வளர்ச்சியடைகின்றார்கள் சோம்பேறிகளாக ,,, அதைத்தான் இளைஞன் குறிப்பிட்டிருக்கின்றார்,
Quote:இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்:
நீங்கள் எங்கள் அணியினரிடம் தலைவணங்கியே ஆகவேண்டும். சுருண்டு படுக்கும் மனிதர் கூட்டம் தான் அதிகம். 1 + 1 இற்கு கூட கணனியை எடுக்க வைப்பது எது? சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்லலாம். சரி அந்த சோம்பேறித்தனத்தை மேலும் ஊக்குவிப்பது எது?
கணணி இன்றி 1000000000000 வரும் கணக்குகளை எல்லாம் நீங்க உங்க 10 விரலால் எண்ணிடுவிங்களா? ஆனால விஞ்ஞானத்தின் வளர்ச்சியால அந்தப் பத்து விரலை வைத்தே நான் மேல் கூறி இலக்கங்களை உடைய கணக்குக்களை பார்த்திடலாம்....அப்படியில்லையேல் நீங்க இன்றும் பெட்டிகடைத்தான் வைத்து இருக்கு முடியும்...Multinational Corporation என்று எதுவுமே உருவாகியிருக்காது.....விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதால் தானே விஞ்ஞானமும் வளர்ந்து கொணடிருக்கிறது...
பெரிய கணக்கு பார்க்க கணணியை உபயோக்கிக்கலாம் ஆனான் சின்ன கணக்கு பார்க்க கணணி ஏன்? யாழில் படித்து வந்த சிறுவனிடம் இரண்டு சிறிய இலக்கங்களை கூட்டினால் என்ன வரும் என்று கேளுங்கள் உடன் பதில் வரும், இதுவே இங்கு படித்த சிறுவனுக்கு கால்குலேட்டர் தேவை, இதுவே நவீன விஞ்ஞானம் உருவாக்கிய சோம்பேறித்தனம்.
இவ்வாறாக மழலையின் அனைத்து கருத்துகளுக்கும் நான்பதில் கூறிக்கொண்டே போகலாம் நேரம் கருதி இத்துடன் பதில் கருத்துக்களை முடித்து கொள்கின்றேன். பட்டிமன்றத்தில் என்னால் ஏற்பட்ட தாமதத்திற்கு மீண்டும் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை சில நல்ல கருத்துக்களை சுட்டிகாட்டிய பெயர் குறிப்பிட முடியாத கருத்துகள நண்பர்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கின்றேன், இறுதியாக நடுவர்கள் இங்கு இருதரப்பிலும் வைக்கப்பட்ட வாதங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் தீர்ப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுகொண்டு விடை பெறுகின்றேன்,
நன்றி வணக்கம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

