05-12-2005, 01:15 PM
இலங்கைத் தீவில் விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை விரும்பவில்லை: எரிக் சொல்ஹெய்மிடம் இந்தியா!
இலங்கைத் தீவகத்தில் நோர்வே மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அதே நேரத்தில் இலங்கைத் தீவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் என்றும் அந்நாட்டரசு கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுடில்லியில் தன்னை நேற்று புதன்கிழமை சந்தித்த நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் இந்திய வெளியுறவுத் துறைச்; செயலாளர் சியாம் சரண் இதனைத் தெரிவித்துள்ளார்.
இருவருக்குமிடையேயான சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தன.
சியாம் சரணை சொல்ஹெய்ம் சந்தித்து கலந்துரையாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்;சந்திப்பின் போதுää அமைதி முயற்சிகள் குறித்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்தும் சொல்ஹெய்ம் விளக்கிய போதும்ää விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டதாக இந்திய அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படை பலம் மற்றும் வான்படை பலம் குறித்த தனது அச்;சத்தையும் சொல்ஹெய்மிடம் இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
இலங்கைத் தீவகத்தில் கடந்த வாரம் நான்கு நாட்கள் பயணத்தை இந்திய வெளியுறவுத் துறைச்; செயலர் சியாம் சரண் மேற்கொண்டிருந்தார்.
அப்போதும் சிறீலங்காவின் இறையாண்மையை பாதுகாப்பு குறித்த இந்திய கவலையை அவர் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
:evil: :twisted: :x
நன்றி: புதினம்
இலங்கைத் தீவகத்தில் நோர்வே மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் அதே நேரத்தில் இலங்கைத் தீவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் என்றும் அந்நாட்டரசு கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுடில்லியில் தன்னை நேற்று புதன்கிழமை சந்தித்த நோர்வே விசேட தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் இந்திய வெளியுறவுத் துறைச்; செயலாளர் சியாம் சரண் இதனைத் தெரிவித்துள்ளார்.
இருவருக்குமிடையேயான சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தன.
சியாம் சரணை சொல்ஹெய்ம் சந்தித்து கலந்துரையாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்;சந்திப்பின் போதுää அமைதி முயற்சிகள் குறித்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு குறித்தும் சொல்ஹெய்ம் விளக்கிய போதும்ää விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டதாக இந்திய அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படை பலம் மற்றும் வான்படை பலம் குறித்த தனது அச்;சத்தையும் சொல்ஹெய்மிடம் இந்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
இலங்கைத் தீவகத்தில் கடந்த வாரம் நான்கு நாட்கள் பயணத்தை இந்திய வெளியுறவுத் துறைச்; செயலர் சியாம் சரண் மேற்கொண்டிருந்தார்.
அப்போதும் சிறீலங்காவின் இறையாண்மையை பாதுகாப்பு குறித்த இந்திய கவலையை அவர் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
:evil: :twisted: :x
நன்றி: புதினம்

