05-10-2005, 10:42 AM
யசூசி அகாசி நாளை வருகிறார்
ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி ஒருவார விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை புதன்கிழமை இலங்கை வரவுள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகள் புனர்வாழ்வு மற்றும் நிர்மானப் பணிகளுக்காக ஜப்பான் அரசினால் விசேட தூதவராக நியமிக்கப்பட்ட பின்னர் அகாசி இலங்கைக்கு மேற்கொள்ளும் பத்தாவது விஜயம் இதுவாகும்.
இலங்கையில் இவர் எதிர்வரும் 18ம் திகதிவரை தங்கி நிற்கையில் ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்திக்கவிருக்கும் அதே நேரம் கிளிநொச்சிக்கும் சென்று விடுதலைப் புலிகளின் உயர்மட்டத்தினரையும் சந்திக்கவுள்ளார்.
இம்முறை தனது விஜயத்தின் போது அகாசி சமாதான முயற்சிகள் மற்றும் பொதுக்கட்டமைப்பு தொடர்பாகவும் சகல தரப்பினருடனும் பேசவுள்ளார்.
ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி ஒருவார விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை புதன்கிழமை இலங்கை வரவுள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகள் புனர்வாழ்வு மற்றும் நிர்மானப் பணிகளுக்காக ஜப்பான் அரசினால் விசேட தூதவராக நியமிக்கப்பட்ட பின்னர் அகாசி இலங்கைக்கு மேற்கொள்ளும் பத்தாவது விஜயம் இதுவாகும்.
இலங்கையில் இவர் எதிர்வரும் 18ம் திகதிவரை தங்கி நிற்கையில் ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்திக்கவிருக்கும் அதே நேரம் கிளிநொச்சிக்கும் சென்று விடுதலைப் புலிகளின் உயர்மட்டத்தினரையும் சந்திக்கவுள்ளார்.
இம்முறை தனது விஜயத்தின் போது அகாசி சமாதான முயற்சிகள் மற்றும் பொதுக்கட்டமைப்பு தொடர்பாகவும் சகல தரப்பினருடனும் பேசவுள்ளார்.

