05-10-2005, 03:34 AM
விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் தொழில்நுட்பத்தின் வேகத்தினாலும் உந்தப்பட்டு இடைவிடாது உற்சாகமாக ஓடிக்கொண்டே இருக்கும் நடுவர் சோழியன் அவர்களே..நவீன விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வேகத்தையும் உற்சாகத்தையும் கண்டு வியந்து வாய்தனைக் கையால் மூடியபடியே அதிர்ச்சியின் விளிம்பிற்கே வந்து நிற்கும் சண்முகி அக்கா அவர்களே..விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் தொழில்நுட்பத்தின் வேகத்தையும் ஈடு கொடுக்க முடியாது சோம்பேறியாகி சோம்பி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சியாம் அவர்களே.. விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் தொழில்நுட்பத்தையும் புரிந்து கொள்ள சோம்பி தேம்பிக் கொண்டு இருக்கும் சோம்பேறிகளாக தங்களைத் தாங்களே உருவாக்கியவர்களே.. விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் வம்பாக நினைப்பவர்களின் வீம்பை தகர்த்தெறியவெனவே உற்சாகமாக வீற்றிருக்கும் என் அணித்தலைவர் வசம்பு அவர்களே.. விஞ்ஞானத்தின் வளர்ச்சி தந்த வேகத்தால் வேகமாகவே கருத்துக்களை உற்சாகமாக தந்துகொண்டிருக்கும் சக தோழர்களே வணக்கம்...
நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதற்குரிய சான்றுகளை நாங்கள் எமது அன்றாட வாழ்க்கையில் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம். அதாவது இன்று விஞ்ஞானம் ஓங்கி வளர்ந்து அண்ட சராசரங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறது என்றால் மனிதன் சோம்பேறியாகியிருந்தால் சாத்தியமா? அன்று அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதன் உற்சாகமாகக் காட்டும் உற்சாகத்தில் தான் அடங்கியிருக்கிறது....மனித உற்சாகமின்றி விஞ்ஞான வளர்ச்சியேது? மனித உற்சாகத்தினால் உண்டான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மனித உற்சாகத்திற்கு மேலும் ஊட்டச்சத்தாகிறது...மனிதன் உற்சாகம் இன்றியிருந்திருந்தால்; தான் வளர்த்த விஞ்ஞானத்தின் பலனாய் என்றோ மாண்டிருப்பான் மண்ணில்...ஆனால் மனித உற்சாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்காத வண்ணம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
அடுத்ததாக அன்றைய மனிதர்கள் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள். ஆனால் நாளைய சந்ததிக்காக இன்றே உற்சாகமாக வித்து இடும் அளவிற்கு இன்றைய மனிதர்கள் வளர்ந்து விட்டார்கள் என்றால் அதற்கு காரணம் எது? விஞ்ஞானம் தொழில்நுட்பமும் தான். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் இன்று நானும் நீங்களும் பட்டிமன்றம் வைக்கவும் விவாதிக்கவும் கூட முடியாத சோம்பேறிகளாகி படுத்திருப்போம். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்பமும் தந்த உற்சாகத்தால் உற்சாகமாகி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்...
மனிதன் சோம்பியிருந்தால் எப்படி நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தோன்றும்? இல்லை.. அன்றை விஞ்ஞானம் தான் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் எவ்வாறு நவீன அதாவது இன்றைய விஞ்ஞானம் வானை முட்டுமளவிற்கு வளர்ந்து நிற்கும்? சோம்பேறிகளாயாக்யிருந்திருந்தால் மண்ணையல்லவா முட்டியிருக்கும் மானிடம்?
அதை விட உலகத்திலே எத்தனையோ எத்தனையோ சாதனைகளைப் புரிந்திருக்கின்றது விஞ்ஞானம். ஆதி காலவாசியாக அலைந்த நாங்கள் இன்று மாபெரும் மனித வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம் எதனால்? அதுவும் விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சியினால் தான்...அன்று வேட்டையாடி உணவு பெறுவதை மட்டும் குறிக்கோளாக வாழ்ந்த மனிதன் இன்று எத்தனை சாதனைகள் புரிந்து இருக்கின்றான் என்றால் அதற்கு விஞ்ஞான வளர்ச்சியும் விஞ்ஞானம் ஊட்டிய உற்சாகம் தான் காரணம்......நாம் உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடை வரைக்கும் எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் பிறந்தவையே...அப்படி விஞ்ஞானம் செய்திருக்காதுவிட்டால் நாங்கள் இன்று பசி பட்டினியுடன் அலைந்திருப்போம். உதாரணமாக genetically modified foods (GMO) உற்பத்தியாவதால் தான் மனித தொகையின் அளவிற்குரிய உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன...இல்லையேல் மனித சமுதாயமே அழிந்து இருக்கும். குறிப்பிட்ட மனித வளர்ச்சியைத்தான் பூமி தாங்க முடியும் (carrying capacity) விஞ்ஞானம் இருந்திருக்காhவிட்டால் அல்லது விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகம் கொடுத்து தட்டிக் கொடுக்காது விட்டால் எப்படி பூமி தாங்கும் சக்தியையும் மீறி மனித வளர்ச்சியை ஈடு கொடுக்கின்றது? எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகம் தான் மனிதனை தடைகளைத் தாண்டி உழைக்க வைக்கிறது....
<b>இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"...ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் <b>நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.."
அலைந்து திரிந்தா எப்படிங்க உற்சாகம் பிறக்கும்?...அலுப்புத்தானே பிறக்கும்...பிறகு வீட்டிற்கு வந்து யப்பா என கட்டிலில் விழத்தான் மனம் சொல்லும்..இதனால் செய்ய வேண்டியிருக்கும் மீத வேலைகளை கூட செய்ய முடியாத நிலை..ஆனால் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் பல வேலைகளை சில மணி நேரத்தில் உடல் அலுப்பின்றி உற்சாகமாகச் செய்ய கூடியதாக இருக்கிறது....
[b]இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"..மனித உணர்வுகளை நேருக்கு நேர் வெளிப்படுத்தி - <b>கைகோர்த்து - காலாற நடந்து - கடக்கப்போகும் எதிர்காலத்தைக் கதைத்து - கண்ணெல்லாம் ஒளிபாய - காதில் தேனினிமையூற - மனதெல்லாம் சுகம்தர - வாழ்வதற்கான உற்சாகத்தைப் பெறுகின்ற காதலர்களையும் சந்தித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்..."
என்னங்க நீங்க இப்படி சொல்லிட்டிங்க...நடக்கப் போற எதிர்காலத்தை பேசிஇ இருக்கிற நிகழ்காலத்தை கவுக்கிற காதல் நடக்கிற கால கட்டத்திலை காலாற நடந்தா என்னங்க நிலமை? இந்தக் கால கட்டத்திலை கைகோர்ப்பு எதுவுமில்லாமல் கணனிலயும் நிஜமாக தூய்மையான காதலை வெளிப்படுத்தலாம்...அன்றை காலத்திலை கண்களால் பேசி காதலை வளர்த்தாங்க "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" அப்ப காதல் வளர்ந்ததுதானே அவங்களுக்குள்...கணனில காதலிச்சா மட்டும் இல்லையா என்ன?...
காலாற நடக்கிற காதல் உற்சாகம் தராது உளைச்சலைத் தான் தரும்....ஆனா விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்றபட்ட கணனியால மானிடர்கள் தப்புக்கள் நடக்காது தப்பிக்கிறார்கள்... அதனால் மன உளைச்சல் இன்றி உற்சாகமாக அன்றாட வாழ்க்கையில் ஈடுபடமுடிகிறது...
[b]
இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"..தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் <b>அந்த சோம்பேறிகளை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கி வைத்துக்கொள்ளவே பயன்படுகிறது...."
தொடக்கித்திலே சோம்பேறித்தனம் இருக்கிறது என ஒத்துக் கொண்டீர்கள் அப்படியானவர்களை விஞ்ஞானம் தான் சோம்பேறியாக்கணும் என்றில்லை...அவங்க சோம்பேறிங்க தான்...அப்படிப்பட்டவர்கள் எப்படி விஞ்ஞான வளர்ச்சியைப் உற்சாகமாகப் பார்ப்பாங்க? அவங்க எப்பவுமே சோம்பேறிங்க தாங்க...
[b] இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"வீதியில் <b>இளம்பெடியங்கள் பெட்டைகள் பின் சுற்றுவதும் - இளம்பெட்டைகள் பெடியங்கள் பின் சுற்றுவதும் - ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்காய் செயல்கள் புரிவதுவும் - உளத்துக்கு எவ்வளவு உற்சாகம் கொடுத்தது?"
இது தாங்க சோம்பேறிங்க செய்ற வேலை...சும்மா சுத்தி சுத்தி சும்மா இருக்கிறவங்களுக்கும் தலையிடி..சமூகத்திற்கும் தலையிடி...விஞ்ஞானத்தால் உற்சாகமானவங்க ரோட்டிலை அலைஞ்சு திரியாமல் வீட்டில் இருந்து மனதிற்கு பிடித்தமானவர்களுடன் பேசிக்கொண்டே பல வேலைகளை செய்து முடிக்கிறார்கள்....
[b] இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
நீங்கள் எங்கள் அணியினரிடம் தலைவணங்கியே ஆகவேண்டும். சுருண்டு படுக்கும் மனிதர் கூட்டம் தான் அதிகம். <b>1 + 1 இற்கு கூட கணனியை எடுக்க வைப்பது எது? சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்லலாம். சரி அந்த சோம்பேறித்தனத்தை மேலும் ஊக்குவிப்பது எது?
கணணி இன்றி 1000000000000 வரும் கணக்குகளை எல்லாம் நீங்க உங்க 10 விரலால் எண்ணிடுவிங்களா? ஆனால விஞ்ஞானத்தின் வளர்ச்சியால அந்தப் பத்து விரலை வைத்தே நான் மேல் கூறி இலக்கங்களை உடைய கணக்குக்களை பார்த்திடலாம்....அப்படியில்லையேல் நீங்க இன்றும் பெட்டிகடைத்தான் வைத்து இருக்கு முடியும்...Multinational Corporation என்று எதுவுமே உருவாகியிருக்காது.....விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதால் தானே விஞ்ஞானமும் வளர்ந்து கொணடிருக்கிறது...
[b]இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"....இருந்த இடத்தில் தனக்கு சாப்பாடு வரவேண்டும் என்று நினைக்கிற சோம்பேறித்தனம் நிறைந்த மனித சமூகத்தில் தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அவர்தம் அந்த ஆசைகளை கனவுகளை நிறைவேற்றுகிற ஒன்றாகவே பார்க்கப்படுகிறதுஇ பயன்படுத்துகிறது. மின்அடுப்பைக் கண்டுபிடித்தார்கள் - சமையலை இலகுவாக்க - மனித உழைப்பை வீணாக செலவழிக்காதிருக்க! ஆனால் குயளவ கழழன என்ன செய்கிறது? ரின்னுக்குள்ளும் பக்கற்றுகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட சாப்பாடுகள் <b>தனியே இருந்து படிக்கிறஇ பலமணிநேரம் வேலைசெய்கிற ஆட்களுக்கு சரி..."
இவர்கள் விஞ்ஞானத்தால் உருவாகிய உற்சாக உழைப்பாளிகள்....துரித உணவுசாலைகள் இருப்பதனால் தான் 24 மணி நேரமும் அடுப்பில் வெந்து சாகாமல் வேறு விடயங்களிலும் கவனம் செலுத்தக் கூடியதாக இருக்கிறது..புதிய புதிய கண்டுபிடிப்புக்ளையும் உற்சாகமாக செய்ய முடிகிறது..அப்படி அடுப்படியில் madame currie வெந்திருந்தால் ரோடியே அக்ரிவ் பற்றி யாரு கண்டு பிடித்து இருப்பாங்க?...
இப்ப ஒத்துக் கொள்றிங்க தானே விஞ்ஞானம் சோம்பேறியாக்காமல் உற்சாக உழைப்பாளிகளையும் படிப்பவர்களையும் மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது என்பதை.....
[b]இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"எதிரணி நண்பர் குழைக்காட்டன் உரு விடயத்தை மறந்துவிட்டார். விஞ்ஞானத்தின் பயனாளர்கள் வேறு, விஞ்ஞானத்தின் படைப்பாளிகள் வேறு ஆனால் பயனார்கள் அப்படியல்ல. பயனாளர்களைப் பொறுத்தவரை சோம்பேறிகளாகவே அவர்களை வைத்திருக்கிறது விஞ்ஞானம்+தொழில்நுட்பம். விழுந்து எழுந்து நடை பயின்றது விஞ்ஞானப் படைப்பாளிகள்."
எப்படிங்க நீங்க விஞ்ஞானத்தின் பயனாளர்களையும் படைப்பாளிகளையும் பிரிக்க முடியும்? விஞ்ஞானத்தின் பயனாளிகள் தான் விஞ்ஞானப் படைப்பாளிகளும்...அன்று ரைட் சகோதரர்கள் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் தான் விமானத்தை உருவாக்கினார்கள்...குளக்காட்டான் சொல்வது போல உங்களை மாதிரி சோம்பேறித்தனமாக இருந்திருந்தால் அவர்கள் ஒரு முறையுடன் தங்கள் கண்டுபிடிப்பிற்கான முயற்சியைக் கைவிட்டு இருப்பார்கள்...ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தார்கள்...ஒவ்வொரு முறை விழும்போது துணிந்து எழுந்தார்கள் விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் அதாவது விஞ்ஞானத்திற்கே சவால் விடும் படி பல முறை முயற்சி செய்து தங்கள் குறிக்கோளை அடைந்தார்கள்...அன்று அவர்கள் சோம்பியிருந்தால இன்று உங்களுக்கு சொகுதுப் பயணம் கிடைத்திருக்குமா?....விஞ்ஞானத்தின் உற்சாகத்தால் மனிதன் மேலும் மேலும் உற்சாகமே அடைகிறான் சோம்பல் அடையவில்லை... நீங்கள் குறிப்பிட்டது போலவே விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் "அதனால் உற்சாகமடைந்தார்கள் - சாதித்தார்கள்"
எனவே நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறன என விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் தொழில்நுட்பத்தின் வேகத்தினாலும் உற்சாகம் அடைந்து விவாத அரங்கை ஓடியோடி உற்சாகமாக கண்காணித்துக் கொண்டு இருக்கும் சோழியன் அவர்களுக்கும்... அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாது இருக்கும் சண்முகி அக்கா அவர்களுக்கும்... உற்சாகமேயின்றி சோகமே உருவாக விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் உருவாகிய சோம்பபேறிகள் தாங்கள் என அடம்பிடித்துக் கொண்டிருக்கும் எதிர் அணியினருக்கும்.. விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் தொழில்நுட்பத்தின் வேகத்தினாலும் உற்சாகமா வென்றிடத் துடிக்கும் என் கட்சியினருக்கும் நான் ஆணித்தரமாக கூறிக்கொண்டு பட்டிமன்றத்தை ஒருங்கிணைத்த "பபா" தூயாவிற்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகளைக் கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்.
நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதற்குரிய சான்றுகளை நாங்கள் எமது அன்றாட வாழ்க்கையில் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம். அதாவது இன்று விஞ்ஞானம் ஓங்கி வளர்ந்து அண்ட சராசரங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறது என்றால் மனிதன் சோம்பேறியாகியிருந்தால் சாத்தியமா? அன்று அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதன் உற்சாகமாகக் காட்டும் உற்சாகத்தில் தான் அடங்கியிருக்கிறது....மனித உற்சாகமின்றி விஞ்ஞான வளர்ச்சியேது? மனித உற்சாகத்தினால் உண்டான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மனித உற்சாகத்திற்கு மேலும் ஊட்டச்சத்தாகிறது...மனிதன் உற்சாகம் இன்றியிருந்திருந்தால்; தான் வளர்த்த விஞ்ஞானத்தின் பலனாய் என்றோ மாண்டிருப்பான் மண்ணில்...ஆனால் மனித உற்சாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்காத வண்ணம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
அடுத்ததாக அன்றைய மனிதர்கள் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள். ஆனால் நாளைய சந்ததிக்காக இன்றே உற்சாகமாக வித்து இடும் அளவிற்கு இன்றைய மனிதர்கள் வளர்ந்து விட்டார்கள் என்றால் அதற்கு காரணம் எது? விஞ்ஞானம் தொழில்நுட்பமும் தான். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் இன்று நானும் நீங்களும் பட்டிமன்றம் வைக்கவும் விவாதிக்கவும் கூட முடியாத சோம்பேறிகளாகி படுத்திருப்போம். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்பமும் தந்த உற்சாகத்தால் உற்சாகமாகி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்...
மனிதன் சோம்பியிருந்தால் எப்படி நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தோன்றும்? இல்லை.. அன்றை விஞ்ஞானம் தான் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் எவ்வாறு நவீன அதாவது இன்றைய விஞ்ஞானம் வானை முட்டுமளவிற்கு வளர்ந்து நிற்கும்? சோம்பேறிகளாயாக்யிருந்திருந்தால் மண்ணையல்லவா முட்டியிருக்கும் மானிடம்?
அதை விட உலகத்திலே எத்தனையோ எத்தனையோ சாதனைகளைப் புரிந்திருக்கின்றது விஞ்ஞானம். ஆதி காலவாசியாக அலைந்த நாங்கள் இன்று மாபெரும் மனித வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம் எதனால்? அதுவும் விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சியினால் தான்...அன்று வேட்டையாடி உணவு பெறுவதை மட்டும் குறிக்கோளாக வாழ்ந்த மனிதன் இன்று எத்தனை சாதனைகள் புரிந்து இருக்கின்றான் என்றால் அதற்கு விஞ்ஞான வளர்ச்சியும் விஞ்ஞானம் ஊட்டிய உற்சாகம் தான் காரணம்......நாம் உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடை வரைக்கும் எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் பிறந்தவையே...அப்படி விஞ்ஞானம் செய்திருக்காதுவிட்டால் நாங்கள் இன்று பசி பட்டினியுடன் அலைந்திருப்போம். உதாரணமாக genetically modified foods (GMO) உற்பத்தியாவதால் தான் மனித தொகையின் அளவிற்குரிய உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன...இல்லையேல் மனித சமுதாயமே அழிந்து இருக்கும். குறிப்பிட்ட மனித வளர்ச்சியைத்தான் பூமி தாங்க முடியும் (carrying capacity) விஞ்ஞானம் இருந்திருக்காhவிட்டால் அல்லது விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகம் கொடுத்து தட்டிக் கொடுக்காது விட்டால் எப்படி பூமி தாங்கும் சக்தியையும் மீறி மனித வளர்ச்சியை ஈடு கொடுக்கின்றது? எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகம் தான் மனிதனை தடைகளைத் தாண்டி உழைக்க வைக்கிறது....
<b>இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"...ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் <b>நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.."
அலைந்து திரிந்தா எப்படிங்க உற்சாகம் பிறக்கும்?...அலுப்புத்தானே பிறக்கும்...பிறகு வீட்டிற்கு வந்து யப்பா என கட்டிலில் விழத்தான் மனம் சொல்லும்..இதனால் செய்ய வேண்டியிருக்கும் மீத வேலைகளை கூட செய்ய முடியாத நிலை..ஆனால் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் பல வேலைகளை சில மணி நேரத்தில் உடல் அலுப்பின்றி உற்சாகமாகச் செய்ய கூடியதாக இருக்கிறது....
[b]இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"..மனித உணர்வுகளை நேருக்கு நேர் வெளிப்படுத்தி - <b>கைகோர்த்து - காலாற நடந்து - கடக்கப்போகும் எதிர்காலத்தைக் கதைத்து - கண்ணெல்லாம் ஒளிபாய - காதில் தேனினிமையூற - மனதெல்லாம் சுகம்தர - வாழ்வதற்கான உற்சாகத்தைப் பெறுகின்ற காதலர்களையும் சந்தித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்..."
என்னங்க நீங்க இப்படி சொல்லிட்டிங்க...நடக்கப் போற எதிர்காலத்தை பேசிஇ இருக்கிற நிகழ்காலத்தை கவுக்கிற காதல் நடக்கிற கால கட்டத்திலை காலாற நடந்தா என்னங்க நிலமை? இந்தக் கால கட்டத்திலை கைகோர்ப்பு எதுவுமில்லாமல் கணனிலயும் நிஜமாக தூய்மையான காதலை வெளிப்படுத்தலாம்...அன்றை காலத்திலை கண்களால் பேசி காதலை வளர்த்தாங்க "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" அப்ப காதல் வளர்ந்ததுதானே அவங்களுக்குள்...கணனில காதலிச்சா மட்டும் இல்லையா என்ன?...
காலாற நடக்கிற காதல் உற்சாகம் தராது உளைச்சலைத் தான் தரும்....ஆனா விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்றபட்ட கணனியால மானிடர்கள் தப்புக்கள் நடக்காது தப்பிக்கிறார்கள்... அதனால் மன உளைச்சல் இன்றி உற்சாகமாக அன்றாட வாழ்க்கையில் ஈடுபடமுடிகிறது...
[b]
இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"..தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் <b>அந்த சோம்பேறிகளை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கி வைத்துக்கொள்ளவே பயன்படுகிறது...."
தொடக்கித்திலே சோம்பேறித்தனம் இருக்கிறது என ஒத்துக் கொண்டீர்கள் அப்படியானவர்களை விஞ்ஞானம் தான் சோம்பேறியாக்கணும் என்றில்லை...அவங்க சோம்பேறிங்க தான்...அப்படிப்பட்டவர்கள் எப்படி விஞ்ஞான வளர்ச்சியைப் உற்சாகமாகப் பார்ப்பாங்க? அவங்க எப்பவுமே சோம்பேறிங்க தாங்க...
[b] இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"வீதியில் <b>இளம்பெடியங்கள் பெட்டைகள் பின் சுற்றுவதும் - இளம்பெட்டைகள் பெடியங்கள் பின் சுற்றுவதும் - ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்காய் செயல்கள் புரிவதுவும் - உளத்துக்கு எவ்வளவு உற்சாகம் கொடுத்தது?"
இது தாங்க சோம்பேறிங்க செய்ற வேலை...சும்மா சுத்தி சுத்தி சும்மா இருக்கிறவங்களுக்கும் தலையிடி..சமூகத்திற்கும் தலையிடி...விஞ்ஞானத்தால் உற்சாகமானவங்க ரோட்டிலை அலைஞ்சு திரியாமல் வீட்டில் இருந்து மனதிற்கு பிடித்தமானவர்களுடன் பேசிக்கொண்டே பல வேலைகளை செய்து முடிக்கிறார்கள்....
[b] இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
நீங்கள் எங்கள் அணியினரிடம் தலைவணங்கியே ஆகவேண்டும். சுருண்டு படுக்கும் மனிதர் கூட்டம் தான் அதிகம். <b>1 + 1 இற்கு கூட கணனியை எடுக்க வைப்பது எது? சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்லலாம். சரி அந்த சோம்பேறித்தனத்தை மேலும் ஊக்குவிப்பது எது?
கணணி இன்றி 1000000000000 வரும் கணக்குகளை எல்லாம் நீங்க உங்க 10 விரலால் எண்ணிடுவிங்களா? ஆனால விஞ்ஞானத்தின் வளர்ச்சியால அந்தப் பத்து விரலை வைத்தே நான் மேல் கூறி இலக்கங்களை உடைய கணக்குக்களை பார்த்திடலாம்....அப்படியில்லையேல் நீங்க இன்றும் பெட்டிகடைத்தான் வைத்து இருக்கு முடியும்...Multinational Corporation என்று எதுவுமே உருவாகியிருக்காது.....விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதால் தானே விஞ்ஞானமும் வளர்ந்து கொணடிருக்கிறது...
[b]இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"....இருந்த இடத்தில் தனக்கு சாப்பாடு வரவேண்டும் என்று நினைக்கிற சோம்பேறித்தனம் நிறைந்த மனித சமூகத்தில் தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அவர்தம் அந்த ஆசைகளை கனவுகளை நிறைவேற்றுகிற ஒன்றாகவே பார்க்கப்படுகிறதுஇ பயன்படுத்துகிறது. மின்அடுப்பைக் கண்டுபிடித்தார்கள் - சமையலை இலகுவாக்க - மனித உழைப்பை வீணாக செலவழிக்காதிருக்க! ஆனால் குயளவ கழழன என்ன செய்கிறது? ரின்னுக்குள்ளும் பக்கற்றுகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட சாப்பாடுகள் <b>தனியே இருந்து படிக்கிறஇ பலமணிநேரம் வேலைசெய்கிற ஆட்களுக்கு சரி..."
இவர்கள் விஞ்ஞானத்தால் உருவாகிய உற்சாக உழைப்பாளிகள்....துரித உணவுசாலைகள் இருப்பதனால் தான் 24 மணி நேரமும் அடுப்பில் வெந்து சாகாமல் வேறு விடயங்களிலும் கவனம் செலுத்தக் கூடியதாக இருக்கிறது..புதிய புதிய கண்டுபிடிப்புக்ளையும் உற்சாகமாக செய்ய முடிகிறது..அப்படி அடுப்படியில் madame currie வெந்திருந்தால் ரோடியே அக்ரிவ் பற்றி யாரு கண்டு பிடித்து இருப்பாங்க?...
இப்ப ஒத்துக் கொள்றிங்க தானே விஞ்ஞானம் சோம்பேறியாக்காமல் உற்சாக உழைப்பாளிகளையும் படிப்பவர்களையும் மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது என்பதை.....
[b]இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>
"எதிரணி நண்பர் குழைக்காட்டன் உரு விடயத்தை மறந்துவிட்டார். விஞ்ஞானத்தின் பயனாளர்கள் வேறு, விஞ்ஞானத்தின் படைப்பாளிகள் வேறு ஆனால் பயனார்கள் அப்படியல்ல. பயனாளர்களைப் பொறுத்தவரை சோம்பேறிகளாகவே அவர்களை வைத்திருக்கிறது விஞ்ஞானம்+தொழில்நுட்பம். விழுந்து எழுந்து நடை பயின்றது விஞ்ஞானப் படைப்பாளிகள்."
எப்படிங்க நீங்க விஞ்ஞானத்தின் பயனாளர்களையும் படைப்பாளிகளையும் பிரிக்க முடியும்? விஞ்ஞானத்தின் பயனாளிகள் தான் விஞ்ஞானப் படைப்பாளிகளும்...அன்று ரைட் சகோதரர்கள் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் தான் விமானத்தை உருவாக்கினார்கள்...குளக்காட்டான் சொல்வது போல உங்களை மாதிரி சோம்பேறித்தனமாக இருந்திருந்தால் அவர்கள் ஒரு முறையுடன் தங்கள் கண்டுபிடிப்பிற்கான முயற்சியைக் கைவிட்டு இருப்பார்கள்...ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தார்கள்...ஒவ்வொரு முறை விழும்போது துணிந்து எழுந்தார்கள் விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் அதாவது விஞ்ஞானத்திற்கே சவால் விடும் படி பல முறை முயற்சி செய்து தங்கள் குறிக்கோளை அடைந்தார்கள்...அன்று அவர்கள் சோம்பியிருந்தால இன்று உங்களுக்கு சொகுதுப் பயணம் கிடைத்திருக்குமா?....விஞ்ஞானத்தின் உற்சாகத்தால் மனிதன் மேலும் மேலும் உற்சாகமே அடைகிறான் சோம்பல் அடையவில்லை... நீங்கள் குறிப்பிட்டது போலவே விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் "அதனால் உற்சாகமடைந்தார்கள் - சாதித்தார்கள்"
எனவே நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறன என விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் தொழில்நுட்பத்தின் வேகத்தினாலும் உற்சாகம் அடைந்து விவாத அரங்கை ஓடியோடி உற்சாகமாக கண்காணித்துக் கொண்டு இருக்கும் சோழியன் அவர்களுக்கும்... அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாது இருக்கும் சண்முகி அக்கா அவர்களுக்கும்... உற்சாகமேயின்றி சோகமே உருவாக விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் உருவாகிய சோம்பபேறிகள் தாங்கள் என அடம்பிடித்துக் கொண்டிருக்கும் எதிர் அணியினருக்கும்.. விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் தொழில்நுட்பத்தின் வேகத்தினாலும் உற்சாகமா வென்றிடத் துடிக்கும் என் கட்சியினருக்கும் நான் ஆணித்தரமாக கூறிக்கொண்டு பட்டிமன்றத்தை ஒருங்கிணைத்த "பபா" தூயாவிற்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகளைக் கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்.
" "
" "
" "

