05-09-2005, 08:07 PM
நவீன விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனிதரை உற்சாகப்படுத்துகின்றதா அல்லது சோம்பேறியாக்குகின்றதா என்னும் கருப்பொருளை/விவாதப்பொருளைத் தந்து "யாழ் கருத்துக்களத் தோழர்களை"யெல்லாம் ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமானதும் அறிவுபூர்வமானதுமான ஒரு கருத்தாடலை ஒழுங்கமைத்த அன்புத் தோழி தூயாவிற்கு முதலில் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வணக்கங்களும். பட்டிமன்ற நடுவர்களில் ஒருவராக இருந்து இடையிடையே அனைவரது கருத்துக்களையும் தொகுத்து வழங்கி கருத்தாடலர்களையும் பட்டிமன்றத்தையும் சிறப்பிக்கும் சோழியான் அண்ணாவுக்கும், இன்னொரு நடுவராக அனைத்துக் கருத்துக்களையும் "ஆர்வத்தோடு" பார்த்துக்கொண்டிருக்கும் சண்முகி அக்காவிற்கும் எனது வணக்கங்கள். பட்டிமன்றத்தில் எதிரணியினர் உணர்ச்சிவசப்பட்டு குழப்பம் செய்யாமலும், பார்வையாளர்கள் அழுகிய தக்காளி, முட்டை, கல்லு போன்றவற்றை அவர்கள் மீது வீசாமலும் களத்தின் பின்னணியிலிருந்து கண்காணிக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் குறிப்பாக மோகன் அண்ணா, இராவணன் அண்ணா ஆகியோர்க்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.இறுதியாக தம் சோம்பேறித்தனங்களையெல்லாம் மறைப்பதற்காகவும், தம்மிடம் நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதரை உட்சாகப்படுத்துகிறது என்பதற்குரிய சரியான வாதங்கள் இல்லாத காரணத்தாலும் எம்மணியினரை சோம்பேறிகள் என்று கூறிக் கூறியே அரைவாசி பக்கங்களை வீணடித்துவிட்டு சோம்பேறிகளாய் ஓய்ந்துபோயிருக்கும் எதிரணியினருக்கும் - உற்சாகமாகவும் தம் வாதத்தில் உறுதியோடும் கருத்தெடுத்துரைத்த என் அணித்தோழர்களுக்கும் எம்மையெல்லாம் வழிநடத்திக்கொண்டிருக்கும் எம்மணித் தலைவர் சியாம் அவர்களுக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம் கூறி என் தரப்பு வாதங்களை முன்வைக்கிறேன்.
1. இணையத்தில் பொருட்களை தெரிவுசெய்து, இணையம் மூலமாகவே அவற்றை வாங்கி வீட்டிற்கு தருவித்தல்:
ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து, ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். அதேவேளையில் உடற்செயற்பாட்டுக்கு வழிவகுக்கும். போராட்டங்களின் மத்தியில் பெறப்படுகின்ற ஒன்றே எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உற்சாகம் பிறக்கும். அதைவிடுத்து கணினிக்கு முன்னால் 24 மணிநேரம் அமர்ந்திருந்து, கணினித்திரையை உற்று நோக்குவதால் கண்கள் சோர்வடைகின்றன - கண்கள் சோர்வடைவதால் மூளை சோர்வடைகிறது. கணினித் திரையின் ஒளிக்கதிர்கள் பார்வைச் சக்தியையும் மெதுமெதுவாகக் குறைக்கிறது. இருக்கையில் நீண்டநேரம் அமர்ந்திருப்பதனால் முதுகுநோ போன்றவற்றின் தாக்கத்திற்கு மனிதஉடல் ஆளாகின்றது.
2. கணினி விளையாட்டுக்கள்:
ஓடியாடி - துள்ளிக்குதித்து - சூரியஒளிபட - மெல்லிய காற்று வருடிச் செல்ல - புழுதிமண் உடல் தழுவ விளையாடிய காலம் போய் கணினித் திரைக்கு முன், அறையை இருட்டாக்கி மணிக்கணக்காக அதில் ஈர்க்கப்பட்டு குந்தியிருக்கும் நம் இளைஞர்களின் உடலில் தேவையான அசைவுகள் எப்படி ஏற்படும்? கண்கெடும் - சோர்வுண்டாகும் - உற்சாகம் எப்படிப் பிறக்கும்?
3. இணைய அரட்டை:
தூரத்திலிருப்பவர்களை சந்தித்து கதைத்து மகிழ இணையம் வழிவகுக்கிற போதிலும், இணைய அரட்டையின் மூலம் அருகில் இருக்கும் நண்பர்களை சந்திப்பதை பலர் குறைத்துக் கொள்கிறார்கள்.இணைய அரட்டை பலரை போதைக்குள்ளாக்கி அடிமைப்படுத்தியுள்ளது. வெளியில் சென்று நண்பர்களை சந்தித்து வீதியோரமாய் நடந்து, ஊர்சுற்றி திரிந்தபோது அதில் உளம் களைகட்டும் - உற்சாகம் தன்னில் பிறக்கும். வீதியில் இளம்பெடியங்கள் பெட்டைகள் பின் சுற்றுவதும் - இளம்பெட்டைகள் பெடியங்கள் பின் சுற்றுவதும் - ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்காய் செயல்கள் புரிவதுவும் - உளத்துக்கு எவ்வளவு உற்சாகம் கொடுத்தது? இன்று அப்படியா? கணினித் திரைக்கு முன்னால் இருந்து பொழுது இருள்வதும தெரியாமல் - என்ன செய்கிறோம் என்றும் தெரியாமல் - இருந்த இடத்தைவிட்டு அசையாமல் - உணவுகூட உட்கொள்ளாமல் எத்தனைபேர் இருக்கிறார்கள் தெரியுமா? இப்படி இருந்தால் உடற்பலம் என்னவாகும்? உடல் ஒழுங்காக இயங்கினால் தானே சோம்பேறித்தனம் அற்றிருக்கலாம்.
4. இணையக் காதல்:
காதலிக்கிறோம் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இணைய அரட்டையில் தம் காதலர் பற்றி எதுவுமே அறியாமல் மணிக்கணக்காய் காதலைப் பரிமாறுகிறார்களாம். காதலென்றால் என்னவென்றும் தெரியாது - வாழ்க்கையென்றால் என்னவென்றும் தெரியாது - தான் அரட்டையில் சந்தித்த அந்த "X" எப்படிப்பட்டவர் என்றும் அறியாது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். இணையம் ஊடாக கோப்புக்களை(Files) பரிமாற முடியும், கருத்துக்களைப் பரிமாற முடியும், செய்திகளை பரிமாறமுடியும் ஆனால் மனித உணர்வுகளை , அதன் தன்மைகளையும் எப்படிப் பரிமாறமுடியும்? Smilies போடுவதாலும், Webcam காட்டுவதாலும், Micofon இல் உரையாடுவதாலும் எந்த உணர்வுகளும் உண்மையாகப் போய்ச் சேர்வதில்லை. Digital தொழில்நுட்பம் என்பதே "மாற்றியமைக்கும், திருத்தியமைக்கும்" தன்மை உடையது. அதாவது Webcam மூலமாக உங்கள் முகத்தைக் காட்டும் போது மெருகூட்டி, அழகூட்டி காண்பிக்கலாம். Microfon மூலம் உரையாடும் போது ஆண்குரல் பெண்குரலாகவும், பெண்குரலாகவும் மாற்றப்பட்டு உரையாடலாம். படங்களைக்கூட Grafic மென்பொருள்கொண்டு உருவ அமைப்புக்களை மாற்றியமைக்கலாம். இப்படி உணர்வுகளைக் கூட உண்மையாக வெளிப்படுத்த அல்லது பரிமாற முடியாது போது உற்சாகத்தை இந்த இணைக் காதல் எப்படிப் பிறப்பிக்கும்?
காதல் ஒவ்வொரு மனதருக்குள்ளும் வாழ்வின் அர்த்தத்தைப் புரியவைக்கிறதென்கிறார்கள். காதலித்தால் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் உடலில் உள்ளத்தில் பாயுமென்கிறார்கள் - அதாவது உற்சாகத்தைத் தான் இப்படி சொல்கிறார்கள். வாழ்வியக்கத்தின் சக்தியாகவே அதனைப் பார்க்கிறார்கள். அந்த சக்தி உண்மையாக வெளிப்படும் போதுதானே உளத்தில் உற்சாகம் என்கிற மின்சாரம் பாயும்? இப்படி இணையஊடகம் மூலமாக காதலிக்கிறோம் என்பவர்களையும், நேரில் பழகி - விரும்பிய இடங்களிற்கெல்லாம் சென்று வாழ்வு பற்றிய கனவுகளை, கருத்துக்களைப் பரிமாறி - மனித உணர்வுகளை நேருக்கு நேர் வெளிப்படுத்தி - கைகோர்த்து - காலாற நடந்து - கடக்கப்போகும் எதிர்காலத்தைக் கதைத்து - கண்ணெல்லாம் ஒளிபாய - காதில் தேனினிமையூற - மனதெல்லாம் சுகம்தர - வாழ்வதற்கான உற்சாகத்தைப் பெறுகின்ற காதலர்களையும் சந்தித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.
5. கணினியில் சிறு வேலைகள்:
உடல் உழைப்பின் மூலமும், மூளை உழைப்பின் மூலமும் செய்யக்கூடிய சிறிய சிறிய வேலைகளைக்கூட இன்று கணினி மூலம் செய்கிறார்கள். மனித உழைப்பின் அநாவசியமாக செலவழிக்கிற வேலைகளுக்கு கணினியைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் மனித உழைப்பு பயன்படுத்தக்கூடிய சிறு சிறு வேலைகளைக்கூட இன்று கணினியைப் பயன்படுத்தி செய்கிறார்கள். உழவு செய்த எம் பாட்டனிடம் உற்சாகமிருந்தது - பாடியாடி வேலைசெய்த அவர்கள் மனதில் தெளிவும் தெம்பும் இருந்தது. இன்று உங்களிடம் என்ன இருக்கிறது? தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் உங்களை சோம்பேறிகளாக்குவதற்காகத்தானே பயன்படுத்துகிறீர்கள்?
6. பக்கத்தில் நடந்தோ, ஈருருளி மிதித்தோ சென்று பொருட்கள் வாங்கவேண்டிய கடைக்கு சிற்றுந்தில் பயணிக்கிறார்கள். படிகள் பக்கத்தில் இருக்கும், ஆனால் இயந்திரப்படிகள் தான் இவர்களைக் காவவேண்டும். பல்லுத் தீட்டுறதுக்கு பஞ்சியில இவைக்கு அதற்கும் மினசாரத்தில் இயங்கும் துலக்கி தேவைப்படுகிறது. இப்படி சின்னச் சின்ன வேலைகளுக்கே மின்சாரத்தில் இயங்கும் கருவிகள் தேவைப்படுகிற இவர்களை இன்னும் இன்னும் சொம்பேறிகளாக்குகிறது தொழில்நுட்பம்.
7. இன்றைய மருத்துவம்: கண்டது நிண்டதுக்கெல்லாம் மருந்து. சாப்பாடு உள்ள போறதுக்கும் மருந்து, மலம் போறதுக்கும் மருந்து. ஓடிஆடி உழைத்தால் பசி தன்னால வரும். பசிக்கேற்றதை வேளாவேளைக்கு உட்கொண்டால் உட்கொண்ட உணவு செமிபாடடைய அதற்கேற்ற உழைப்ப உடலுக்குக் கொடுத்தால் அனைத்து செயற்பாடுகளும் ஒழுங்காக நடைபெறும். உடலின் தொழிற்பாடு ஒழுங்காக இருந்தால் தானே உளம் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும்?
8. இதயேன் கேக்குறீங்கள், பிள்ளை பெறுவதற்கும் ஏதோ வழியிருக்காம். பாவம் அங்க பெண்களாவது பிள்ளையை சுமக்கிற உழைப்பை செய்கிறார்கள். ஆனால் பிள்ளை பிறப்பதற்கு முதல் செய்யவேண்டிய உடல்(காம)உழைப்பை செய்யிறதை தடுத்து மனிதரை மேலும் சோம்பேறியாக்குறது நவீன விஞ்ஞானம்.
சுட்டு விரலுக்குள் உலகத்தைக் கொண்டு வந்ததால் சுற்றித் திரிவதற்கு அவசியமில்லாமல் போயிற்று. உலகம் சுருங்கச்சுருங்க மனிதன் சோம்பேறியாகிக்கொண்டே இருக்கிறான். ஓம்... தாய் தந்தையர் காலத்தில் பலவிடயங்களை செய்து முடிப்பதற்கு பல நாட்கள் தேவைப்பட்டனதான். ஆனால் சிறுவேலையை உடனே செய்துமுடிக்கக் கூடிய வேலையை செய்வதற்கு கணினியையும், நேரத்தையும் விரயம் செய்ய மனிதர்களைத் தூண்டுவது எது? தொழில்நுட்பமும் நவீன விஞ்ஞானமும் தானே?
சோம்பேறித்தனம் கூடப்பிறப்பதாகவே இருக்கட்டும். தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அந்த சோம்பேறிகளை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கி வைத்துக்கொள்ளவே பயன்படுகிறது.
ஓம். மேடையில் என்றால் உற்சாகமாக கையை அசைத்து பாவனைகள் செய்து குரலின் நெழிவு சுழிவுகள் மூலம் நாம் எமது கருத்தை/வாதத்தை சொல்கிறோம்.அப்போது நமது உடலும் மூளையும் சமஅளவில் உற்சாகமாக செயற்படுகின்றன. நமது உற்சாகமான கருத்துக்கள் தெளிவாகவும் நேராகவும் மக்களை சென்றடைகிறது. ஆனால் கருத்துக்களத்தில் இப்படி எழுதுவதற்கு கணினித் திரையை உற்றுநோக்கவேண்டியிருக்கிறது - விரல்கள் தொடர்ந்து தட்டச்சு செய்து செய்து கைகளில் நடுக்கம்/தளர்வு ஏற்படுகிறது - கண்களும், விரல்களும் சோர்வடைகின்றன !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எதிரணியில் கருத்தெழுதிய குறும்பன் தன் கருத்தின் மூலமே எமது வாதத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார். எனவே அவருக்கு எமது நன்றிகள். அதாவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சோம்பேறித்தனம் என்பது இருக்கிறது. அந்த சோம்பேறித்தனம் வெளிப்படுவதற்கு தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் வழிசமைக்கிறது. உலகத்தில் உள்ள சிறிய பகுதியனர் தான் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். பெரும்பாலானவர்கள் தாம் சுகமாகவும், சொகுசாகவும் எந்த வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே தொழில்நுட்பத்தையும், நவீன விஞ்ஞானத்தையும் அணுகுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை மேலும் மேலும் சோம்பேறியாக்குவதற்கு தொழில்நுட்பமும் நவீன விஞ்ஞானமும் பெரிதும் காரணியாகிறது என்பதே உண்மை. இருந்த இடத்தில் தனக்கு சாப்பாடு வரவேண்டும் என்று நினைக்கிற சோம்பேறித்தனம் நிறைந்த மனித சமூகத்தில் தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அவர்தம் அந்த ஆசைகளை கனவுகளை நிறைவேற்றுகிற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது, பயன்படுத்துகிறது. மின்அடுப்பைக் கண்டுபிடித்தார்கள் - சமையலை இலகுவாக்க - மனித உழைப்பை வீணாக செலவழிக்காதிருக்க! ஆனால் Fast food என்ன செய்கிறது? ரின்னுக்குள்ளும் பக்கற்றுகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட சாப்பாடுகள் தனியே இருந்து படிக்கிற, பலமணிநேரம் வேலைசெய்கிற ஆட்களுக்கு சரி - ஆனால் குடும்பத்தவர்கள் வீட்டில பபுதுசா சமைக்கலாம் தானே?
மின்சாரம் பெரிய கண்டுபிடிப்புத்தான். நாங்கள் அதை மறுக்கவில்லை. மின்சாரத்தின் மூலம் மனிதனை சோம்பேறியாக்குவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.
சுனாமி வரும் என்பதை அறிவிக்காமல் விட்டது பழமை வாதமல்ல (நாமொன்றும் பழமைவாதிகளும் அல்ல), தொழில்நுட்ப/விஞ்ஞானப் பிரியர்களின் சோம்பேறித்தனமே. விஞ்ஞானத்தாலும் தொழில்நுட்பத்தாலும் சோம்பேறிகளாகிப் போய்விட்ட அவர்கள் உற்சாகத்தோடு செயற்படாததாலேயே இவ்வளவும்.
மருத்துவம் மனித சமூகத்தைக் காத்தது ஒத்துக்கொள்கிறோம். ஆனால், மனித சமூகத்தைக் காத்த அதே மருத்துவமே சோம்பேறியாக்குகிறது என்பதை நான் முன்னர் குறிப்பிட்ட கருத்தில் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளேன். ஒழுங்கான உணவு உட்கொண்டால் - உடலுக்குத் தேவையான உழைப்பைக் கொடுத்தால் இலகுவாக மாறிவிடக்கூடிய சில பலவீனங்களுக்கு - சுகயீனங்களுக்கு எல்லாம் மருந்து கொடுத்து சோம்பேறியாக்குவது எது?
நீங்களே சொல்லிவிட்டீர்களே. நன்றி. மனித மனதை போதைக்குள்ளாக்கி, அடிமைப்படுத்தி சோம்பேறியாக்குகிறது தொழில்நுட்பம் என்பது தெளிவு. அளவுடன் எப்படி உபயோகிப்பது? மனித சமூகத்தில் பெரும்பாலானவர்களை அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்க்க வைப்பது எது? சிறுபிள்ளைகள் அதாவது 3, 4 வயது பிள்ளைகள் தொலைக்காட்சி அதிகம்(ஒளித்திரை சார்ந்தவை) பார்ப்பதனால் 7 வயதில் அதன் பாதிப்பு தெரியவரும் என்பது ஆய்வின் முடிவு. அதாவது தொலைக்காட்சியிலோ, அல்லது திரையரங்குகளிலோ, அல்லது கணினியிலோ ஒளி தனியாகவும் ஓலி தனியாகவும் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகின்றன. அதனால் அக்குழந்தையுடன் ஒருவர் நேரடியாக உரையாடும் போது அந்தக் குழந்தையால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியாமல் போகும்.
உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் உறவுகளோடு உரையாடுகிறீர்கள் சரி. ஆனால் உங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் பலரை அடிமைப்படுத்தி சோம்பேறிகளாக்கி வைத்திருக்கிறதை அறியாமல் விட்டீர்களோ?
எதிரணி நண்பர் குழைக்காட்டன் உரு விடயத்தை மறந்துவிட்டார். விஞ்ஞானத்தின் பயனாளர்கள் வேறு, விஞ்ஞானத்தின் படைப்பாளிகள் வேறு. படைப்பாளிகளும் பயனார்களாக இருக்கலாம். ஆனால் பயனாளர்கள் படைப்பாளிகள் அல்ல. நீங்கள் குறிப்பிட்ட ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்தார்கள் - போராடினார்கள் - கண்டுபிடித்தார்கள்: இங்கு மனித உழைப்பு சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது - அதனால் உற்சாகமடைந்தார்கள் - சாதித்தார்கள். ஆனால் பயனார்கள் அப்படியல்ல. பயனாளர்களைப் பொறுத்தவரை சோம்பேறிகளாகவே அவர்களை வைத்திருக்கிறது விஞ்ஞானம்+தொழில்நுட்பம். விழுந்து எழுந்து நடை பயின்றது விஞ்ஞானப் படைப்பாளிகள். விஞ்ஞானப் பயனாளர்கள் அல்ல!!!!
நீங்கள் எங்கள் அணியினரிடம் தலைவணங்கியே ஆகவேண்டும். சுருண்டு படுக்கும் மனிதர் கூட்டம் தான் அதிகம். 1+1 இற்கு கூட கணனியை எடுக்க வைப்பது எது? சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்லலாம். சரி அந்த சோம்பேறித்தனத்தை மேலும் ஊக்குவிப்பது எது?
நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது - ஓம் ஒத்துக்கொள்கிறோம், ஆனால் மிச்சப்படுத்தப்பட்ட நேரம் தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து அழுவதற்கும், இணையத்திலே அரட்டையடிப்பதற்கும், போர்த்து மூடிக்கொண்டு படுப்பதற்கும் தானே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்பதை எதிரணியினரே உணர்ந்து கொள்ளுங்கள்.
<b>உலகம் தனக்குள் இருப்பதென்பது ஒன்று. உலகம் தனக்கு வெளியில் (அதாவது உலகில் தான்) இருப்பதென்பது ஒன்று. உளமும் உடலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. உடல் உற்சாகமாக இருந்தால் தான் உள்ளம் உற்சாகமாக இருக்கும். உள்ளம் உற்சாகமாக இருந்தால் தான் உடல் உற்சாகமாக செயலாற்றும். உடலுழைப்பு/உடற்செயற்பாடு போதியளவில் நடந்தால் தான் உடல் உற்சாகம் பெறும். எனவே தொழில்நுட்பம் மனித உழைப்பை அளவுக்குமீறிக் குறைப்பதால் உடலுக்கு உற்சாகம் கிடைப்பதில்லை - உளம் சோம்பேறித்தனத்திற்கு ஆளாகிறது. தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் ஒவ்வொரு மனிதனுள்ளும் உள்ள சோம்பேறித்தனத்தைப் பயன்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது - சந்தைப்படுத்திக்கொள்கிறது. இன்றைய விளம்பரங்களை உற்று நோக்குங்கள். அவை மனிதர்களின் சோம்பேறித்தனத்தைத்தான் கருப்பொருளாகக் கொண்டு பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. தொழில்நுட்பத்திலும், விஞ்ஞானத்திலும் தங்கி வாழவேண்டிய சூழ்நிலையை அவை ஏற்படுத்துவதால் சோம்பேறித்தனம் குடியேறிக்கொள்கிறது.</b>
எனவே நவீன விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனிதர்களை சோம்பேறியாக்குகிறது என்கிற எமது அணியின் வாதப்பொருளை மொழிந்து, இதுவரை பொறுமையாக எனது கருத்தை படித்து முடித்த அனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
[size=9]பி.கு.: எல்லாம் பட்டிமன்றத்திற்கான கருத்துக்கள் தான். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவோ, புண்படுத்துவதற்காகவோ எதுவும் எழுதப்படவில்லை. கலகலப்புக்காக சில அழகூட்டல் சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாக/புண்படுத்துவதாக ஏதும் இருந்தால் அதனை அழித்துவிடலாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
1. இணையத்தில் பொருட்களை தெரிவுசெய்து, இணையம் மூலமாகவே அவற்றை வாங்கி வீட்டிற்கு தருவித்தல்:
ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து, ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். அதேவேளையில் உடற்செயற்பாட்டுக்கு வழிவகுக்கும். போராட்டங்களின் மத்தியில் பெறப்படுகின்ற ஒன்றே எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உற்சாகம் பிறக்கும். அதைவிடுத்து கணினிக்கு முன்னால் 24 மணிநேரம் அமர்ந்திருந்து, கணினித்திரையை உற்று நோக்குவதால் கண்கள் சோர்வடைகின்றன - கண்கள் சோர்வடைவதால் மூளை சோர்வடைகிறது. கணினித் திரையின் ஒளிக்கதிர்கள் பார்வைச் சக்தியையும் மெதுமெதுவாகக் குறைக்கிறது. இருக்கையில் நீண்டநேரம் அமர்ந்திருப்பதனால் முதுகுநோ போன்றவற்றின் தாக்கத்திற்கு மனிதஉடல் ஆளாகின்றது.
2. கணினி விளையாட்டுக்கள்:
ஓடியாடி - துள்ளிக்குதித்து - சூரியஒளிபட - மெல்லிய காற்று வருடிச் செல்ல - புழுதிமண் உடல் தழுவ விளையாடிய காலம் போய் கணினித் திரைக்கு முன், அறையை இருட்டாக்கி மணிக்கணக்காக அதில் ஈர்க்கப்பட்டு குந்தியிருக்கும் நம் இளைஞர்களின் உடலில் தேவையான அசைவுகள் எப்படி ஏற்படும்? கண்கெடும் - சோர்வுண்டாகும் - உற்சாகம் எப்படிப் பிறக்கும்?
3. இணைய அரட்டை:
தூரத்திலிருப்பவர்களை சந்தித்து கதைத்து மகிழ இணையம் வழிவகுக்கிற போதிலும், இணைய அரட்டையின் மூலம் அருகில் இருக்கும் நண்பர்களை சந்திப்பதை பலர் குறைத்துக் கொள்கிறார்கள்.இணைய அரட்டை பலரை போதைக்குள்ளாக்கி அடிமைப்படுத்தியுள்ளது. வெளியில் சென்று நண்பர்களை சந்தித்து வீதியோரமாய் நடந்து, ஊர்சுற்றி திரிந்தபோது அதில் உளம் களைகட்டும் - உற்சாகம் தன்னில் பிறக்கும். வீதியில் இளம்பெடியங்கள் பெட்டைகள் பின் சுற்றுவதும் - இளம்பெட்டைகள் பெடியங்கள் பின் சுற்றுவதும் - ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்காய் செயல்கள் புரிவதுவும் - உளத்துக்கு எவ்வளவு உற்சாகம் கொடுத்தது? இன்று அப்படியா? கணினித் திரைக்கு முன்னால் இருந்து பொழுது இருள்வதும தெரியாமல் - என்ன செய்கிறோம் என்றும் தெரியாமல் - இருந்த இடத்தைவிட்டு அசையாமல் - உணவுகூட உட்கொள்ளாமல் எத்தனைபேர் இருக்கிறார்கள் தெரியுமா? இப்படி இருந்தால் உடற்பலம் என்னவாகும்? உடல் ஒழுங்காக இயங்கினால் தானே சோம்பேறித்தனம் அற்றிருக்கலாம்.
4. இணையக் காதல்:
காதலிக்கிறோம் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இணைய அரட்டையில் தம் காதலர் பற்றி எதுவுமே அறியாமல் மணிக்கணக்காய் காதலைப் பரிமாறுகிறார்களாம். காதலென்றால் என்னவென்றும் தெரியாது - வாழ்க்கையென்றால் என்னவென்றும் தெரியாது - தான் அரட்டையில் சந்தித்த அந்த "X" எப்படிப்பட்டவர் என்றும் அறியாது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். இணையம் ஊடாக கோப்புக்களை(Files) பரிமாற முடியும், கருத்துக்களைப் பரிமாற முடியும், செய்திகளை பரிமாறமுடியும் ஆனால் மனித உணர்வுகளை , அதன் தன்மைகளையும் எப்படிப் பரிமாறமுடியும்? Smilies போடுவதாலும், Webcam காட்டுவதாலும், Micofon இல் உரையாடுவதாலும் எந்த உணர்வுகளும் உண்மையாகப் போய்ச் சேர்வதில்லை. Digital தொழில்நுட்பம் என்பதே "மாற்றியமைக்கும், திருத்தியமைக்கும்" தன்மை உடையது. அதாவது Webcam மூலமாக உங்கள் முகத்தைக் காட்டும் போது மெருகூட்டி, அழகூட்டி காண்பிக்கலாம். Microfon மூலம் உரையாடும் போது ஆண்குரல் பெண்குரலாகவும், பெண்குரலாகவும் மாற்றப்பட்டு உரையாடலாம். படங்களைக்கூட Grafic மென்பொருள்கொண்டு உருவ அமைப்புக்களை மாற்றியமைக்கலாம். இப்படி உணர்வுகளைக் கூட உண்மையாக வெளிப்படுத்த அல்லது பரிமாற முடியாது போது உற்சாகத்தை இந்த இணைக் காதல் எப்படிப் பிறப்பிக்கும்?
காதல் ஒவ்வொரு மனதருக்குள்ளும் வாழ்வின் அர்த்தத்தைப் புரியவைக்கிறதென்கிறார்கள். காதலித்தால் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் உடலில் உள்ளத்தில் பாயுமென்கிறார்கள் - அதாவது உற்சாகத்தைத் தான் இப்படி சொல்கிறார்கள். வாழ்வியக்கத்தின் சக்தியாகவே அதனைப் பார்க்கிறார்கள். அந்த சக்தி உண்மையாக வெளிப்படும் போதுதானே உளத்தில் உற்சாகம் என்கிற மின்சாரம் பாயும்? இப்படி இணையஊடகம் மூலமாக காதலிக்கிறோம் என்பவர்களையும், நேரில் பழகி - விரும்பிய இடங்களிற்கெல்லாம் சென்று வாழ்வு பற்றிய கனவுகளை, கருத்துக்களைப் பரிமாறி - மனித உணர்வுகளை நேருக்கு நேர் வெளிப்படுத்தி - கைகோர்த்து - காலாற நடந்து - கடக்கப்போகும் எதிர்காலத்தைக் கதைத்து - கண்ணெல்லாம் ஒளிபாய - காதில் தேனினிமையூற - மனதெல்லாம் சுகம்தர - வாழ்வதற்கான உற்சாகத்தைப் பெறுகின்ற காதலர்களையும் சந்தித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.
5. கணினியில் சிறு வேலைகள்:
உடல் உழைப்பின் மூலமும், மூளை உழைப்பின் மூலமும் செய்யக்கூடிய சிறிய சிறிய வேலைகளைக்கூட இன்று கணினி மூலம் செய்கிறார்கள். மனித உழைப்பின் அநாவசியமாக செலவழிக்கிற வேலைகளுக்கு கணினியைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் மனித உழைப்பு பயன்படுத்தக்கூடிய சிறு சிறு வேலைகளைக்கூட இன்று கணினியைப் பயன்படுத்தி செய்கிறார்கள். உழவு செய்த எம் பாட்டனிடம் உற்சாகமிருந்தது - பாடியாடி வேலைசெய்த அவர்கள் மனதில் தெளிவும் தெம்பும் இருந்தது. இன்று உங்களிடம் என்ன இருக்கிறது? தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் உங்களை சோம்பேறிகளாக்குவதற்காகத்தானே பயன்படுத்துகிறீர்கள்?
6. பக்கத்தில் நடந்தோ, ஈருருளி மிதித்தோ சென்று பொருட்கள் வாங்கவேண்டிய கடைக்கு சிற்றுந்தில் பயணிக்கிறார்கள். படிகள் பக்கத்தில் இருக்கும், ஆனால் இயந்திரப்படிகள் தான் இவர்களைக் காவவேண்டும். பல்லுத் தீட்டுறதுக்கு பஞ்சியில இவைக்கு அதற்கும் மினசாரத்தில் இயங்கும் துலக்கி தேவைப்படுகிறது. இப்படி சின்னச் சின்ன வேலைகளுக்கே மின்சாரத்தில் இயங்கும் கருவிகள் தேவைப்படுகிற இவர்களை இன்னும் இன்னும் சொம்பேறிகளாக்குகிறது தொழில்நுட்பம்.
7. இன்றைய மருத்துவம்: கண்டது நிண்டதுக்கெல்லாம் மருந்து. சாப்பாடு உள்ள போறதுக்கும் மருந்து, மலம் போறதுக்கும் மருந்து. ஓடிஆடி உழைத்தால் பசி தன்னால வரும். பசிக்கேற்றதை வேளாவேளைக்கு உட்கொண்டால் உட்கொண்ட உணவு செமிபாடடைய அதற்கேற்ற உழைப்ப உடலுக்குக் கொடுத்தால் அனைத்து செயற்பாடுகளும் ஒழுங்காக நடைபெறும். உடலின் தொழிற்பாடு ஒழுங்காக இருந்தால் தானே உளம் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும்?
8. இதயேன் கேக்குறீங்கள், பிள்ளை பெறுவதற்கும் ஏதோ வழியிருக்காம். பாவம் அங்க பெண்களாவது பிள்ளையை சுமக்கிற உழைப்பை செய்கிறார்கள். ஆனால் பிள்ளை பிறப்பதற்கு முதல் செய்யவேண்டிய உடல்(காம)உழைப்பை செய்யிறதை தடுத்து மனிதரை மேலும் சோம்பேறியாக்குறது நவீன விஞ்ஞானம்.
Quote:பொதுவாகவே எமது தாய் தந்தையர் காலத்திலே பல விடயங்களை செய்து முடிப்பதற்கே பல நாட்கள் தேவைப் பட்டிருக்கின்றன. ஆனால் தற்போது அதே விடயங்களை ஒரு சில மணித் துணிகளிலேயே முடித்து விட முடிகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விடயம் கொழும்பிலுள்ளவர் அறியும் முன்பே வெளிநாட்டிலுள்ளோர் அறிந்து விடுகின்றனர் என்றால் சுட்டு விரலுக்குள் உலகத்தை கொண்டு வந்த நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் தானே காரணம்.
சுட்டு விரலுக்குள் உலகத்தைக் கொண்டு வந்ததால் சுற்றித் திரிவதற்கு அவசியமில்லாமல் போயிற்று. உலகம் சுருங்கச்சுருங்க மனிதன் சோம்பேறியாகிக்கொண்டே இருக்கிறான். ஓம்... தாய் தந்தையர் காலத்தில் பலவிடயங்களை செய்து முடிப்பதற்கு பல நாட்கள் தேவைப்பட்டனதான். ஆனால் சிறுவேலையை உடனே செய்துமுடிக்கக் கூடிய வேலையை செய்வதற்கு கணினியையும், நேரத்தையும் விரயம் செய்ய மனிதர்களைத் தூண்டுவது எது? தொழில்நுட்பமும் நவீன விஞ்ஞானமும் தானே?
Quote:எதிரணித் தலைவர் கூறியது போல் ஒருவர் தனது காலைக் கடன்களை செய்யாமல் தனது அன்றாட வேலைகளை செய்யத் தொடங்குகின்றாரெனின் அது அவருடன் பிறந்த சோம்பேறித்தனமே தவிர வேறொன்றுமில்லை.
சோம்பேறித்தனம் கூடப்பிறப்பதாகவே இருக்கட்டும். தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அந்த சோம்பேறிகளை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கி வைத்துக்கொள்ளவே பயன்படுகிறது.
Quote:ஏன் மேலதிகமாக இந்தப் பட்டிமன்றமே மேடையின்றி நடைபெறுவதெப்படி??
ஓம். மேடையில் என்றால் உற்சாகமாக கையை அசைத்து பாவனைகள் செய்து குரலின் நெழிவு சுழிவுகள் மூலம் நாம் எமது கருத்தை/வாதத்தை சொல்கிறோம்.அப்போது நமது உடலும் மூளையும் சமஅளவில் உற்சாகமாக செயற்படுகின்றன. நமது உற்சாகமான கருத்துக்கள் தெளிவாகவும் நேராகவும் மக்களை சென்றடைகிறது. ஆனால் கருத்துக்களத்தில் இப்படி எழுதுவதற்கு கணினித் திரையை உற்றுநோக்கவேண்டியிருக்கிறது - விரல்கள் தொடர்ந்து தட்டச்சு செய்து செய்து கைகளில் நடுக்கம்/தளர்வு ஏற்படுகிறது - கண்களும், விரல்களும் சோர்வடைகின்றன !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Quote:அத நான் இல்லையெண்டு சொல்லிங்கோ. எப்பவாவது நவின தொழில் நுட்பம் சொல்லிச்சுதா மனிசனை ஆரோக்கியமில்லாம இருக்கச்சொல்லி.
ஆகவே நவீன விஞ்ஞான வளர்ச்சி என்பது அதனை சரியாக பயன்படுத்த தெரிந்தவனுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றவர்களுக்கு குரங்கு கையில் பூமாலை போலதான்.
எதிரணியில் கருத்தெழுதிய குறும்பன் தன் கருத்தின் மூலமே எமது வாதத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார். எனவே அவருக்கு எமது நன்றிகள். அதாவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சோம்பேறித்தனம் என்பது இருக்கிறது. அந்த சோம்பேறித்தனம் வெளிப்படுவதற்கு தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் வழிசமைக்கிறது. உலகத்தில் உள்ள சிறிய பகுதியனர் தான் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். பெரும்பாலானவர்கள் தாம் சுகமாகவும், சொகுசாகவும் எந்த வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே தொழில்நுட்பத்தையும், நவீன விஞ்ஞானத்தையும் அணுகுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை மேலும் மேலும் சோம்பேறியாக்குவதற்கு தொழில்நுட்பமும் நவீன விஞ்ஞானமும் பெரிதும் காரணியாகிறது என்பதே உண்மை. இருந்த இடத்தில் தனக்கு சாப்பாடு வரவேண்டும் என்று நினைக்கிற சோம்பேறித்தனம் நிறைந்த மனித சமூகத்தில் தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அவர்தம் அந்த ஆசைகளை கனவுகளை நிறைவேற்றுகிற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது, பயன்படுத்துகிறது. மின்அடுப்பைக் கண்டுபிடித்தார்கள் - சமையலை இலகுவாக்க - மனித உழைப்பை வீணாக செலவழிக்காதிருக்க! ஆனால் Fast food என்ன செய்கிறது? ரின்னுக்குள்ளும் பக்கற்றுகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட சாப்பாடுகள் தனியே இருந்து படிக்கிற, பலமணிநேரம் வேலைசெய்கிற ஆட்களுக்கு சரி - ஆனால் குடும்பத்தவர்கள் வீட்டில பபுதுசா சமைக்கலாம் தானே?
Quote:மின்சாரத்தை கண்டு பிடித்தார்கள் அதனால் பெரிய நன்மைதான் அதில் சிறிய தீமையும் இருக்கலாம்..அதற்காக மின்சாரத்தை ஒதுக்கிவிடமுடியாது. இந்த மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதால் மனிதன் சோம்பேறியாகிவிடவில்லை. அதை வைத்து இன்னமும் சாதிக்க வேண்டும் என்று உற்சாகமாக போராடுகிறான்.
மின்சாரம் பெரிய கண்டுபிடிப்புத்தான். நாங்கள் அதை மறுக்கவில்லை. மின்சாரத்தின் மூலம் மனிதனை சோம்பேறியாக்குவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.
Quote:சுனாமி வருவதற்கு முன்னரே விஞ்ஞானத்தினால் கண்டு பிடிக்கமுடிந்திருக்கிறது. அது விஞ்ஞானத்தின் சாதனை. ஆனால் அதை தெரியப்படுத்தாமல் விட்டது உங்கள் பழமை வாதம். அது உடனடியாக தெரியப்படுத்தப்பட்டு உயிழப்புக்கள் இல்லாதிருந்தால் எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்.
சுனாமி வரும் என்பதை அறிவிக்காமல் விட்டது பழமை வாதமல்ல (நாமொன்றும் பழமைவாதிகளும் அல்ல), தொழில்நுட்ப/விஞ்ஞானப் பிரியர்களின் சோம்பேறித்தனமே. விஞ்ஞானத்தாலும் தொழில்நுட்பத்தாலும் சோம்பேறிகளாகிப் போய்விட்ட அவர்கள் உற்சாகத்தோடு செயற்படாததாலேயே இவ்வளவும்.
Quote:வியாசன் குறிப்பிட்டிருந்தார் புதிதுபுதிதாக நோய்கள் உருவாகுவதாக ஐயா வியாசரே நீங்கள் பத்தாம் பசலி கருத்துக்ளை வைத்திருக்கின்றீர்கள். அம்மை மலேரியா காசநோய் போன்ற கொடிய நோய்களை வருவதற்கு முன்னே தடுப்பதற்கான வகைகளை கொடுத்தது இந்த விஞ்ஞானம். நோய்களால் சோர்ந்திருந்த மனிதனை நோய்களிலிருந்து வருமுன்னரே தடுத்துமனிதனை உற்சாகப்படுத்துகின்ற விஞ்ஞானத்தை நீங்கள் குறை கூறுவது கீழேயிருந்து ஏணிமூலம் ஏறி மேலே சென்றுவிட்டு இந்த ஏணி சரியில்லை என்று சொல்வதுபோல இருக்கின்றது.
மருத்துவம் மனித சமூகத்தைக் காத்தது ஒத்துக்கொள்கிறோம். ஆனால், மனித சமூகத்தைக் காத்த அதே மருத்துவமே சோம்பேறியாக்குகிறது என்பதை நான் முன்னர் குறிப்பிட்ட கருத்தில் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளேன். ஒழுங்கான உணவு உட்கொண்டால் - உடலுக்குத் தேவையான உழைப்பைக் கொடுத்தால் இலகுவாக மாறிவிடக்கூடிய சில பலவீனங்களுக்கு - சுகயீனங்களுக்கு எல்லாம் மருந்து கொடுத்து சோம்பேறியாக்குவது எது?
Quote:விஞ்ஞானம் எப்போ தொல்லையாக மாறுகிறது என்றால் அதை அளவுக்கதிகமாக உபயோகிப்பதனால். உதாரணமாக தொலைக்காட்சி அளவுடன் உபயோகித்தால் பிரச்சனை இல்லை அதுவே நாள் முழுவதையும் பிடித்துக்கொண்டால் அதுவே தொல்லை.
நீங்களே சொல்லிவிட்டீர்களே. நன்றி. மனித மனதை போதைக்குள்ளாக்கி, அடிமைப்படுத்தி சோம்பேறியாக்குகிறது தொழில்நுட்பம் என்பது தெளிவு. அளவுடன் எப்படி உபயோகிப்பது? மனித சமூகத்தில் பெரும்பாலானவர்களை அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்க்க வைப்பது எது? சிறுபிள்ளைகள் அதாவது 3, 4 வயது பிள்ளைகள் தொலைக்காட்சி அதிகம்(ஒளித்திரை சார்ந்தவை) பார்ப்பதனால் 7 வயதில் அதன் பாதிப்பு தெரியவரும் என்பது ஆய்வின் முடிவு. அதாவது தொலைக்காட்சியிலோ, அல்லது திரையரங்குகளிலோ, அல்லது கணினியிலோ ஒளி தனியாகவும் ஓலி தனியாகவும் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகின்றன. அதனால் அக்குழந்தையுடன் ஒருவர் நேரடியாக உரையாடும் போது அந்தக் குழந்தையால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியாமல் போகும்.
Quote:இன்று புலத்திலுள்ள பலரும் வேண்டிய நேரத்தில் ஊரில உள்ள உறவுகளுடன் கதைத்து அவர்களது முகத்தையும் பார்க்க உதவுவது எது? இதே 10 வருடங்களுக்கு முன் ஊரில் இருந்து எப்போது கடிதம் வரும் என காத்து கிடந்த நாட்களை எண்ணிபாருங்கள். இன்றோ வேலை முடிந்து வரும் களைப்பும் ஊரிலிருக்கும் உறவினரின் குரலை கேட்டதும் காற்றோடு பறக்க செய்து உற்சாகத்தை தருவது எது இன்றைய விஞ்ஞானம்.
உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் உறவுகளோடு உரையாடுகிறீர்கள் சரி. ஆனால் உங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் பலரை அடிமைப்படுத்தி சோம்பேறிகளாக்கி வைத்திருக்கிறதை அறியாமல் விட்டீர்களோ?
Quote:ரைட் சகோதரர்களின் பறப்பு முயற்சி முதலில் தோல்வியில் தான் முடிந்தது ஆயினும் தொடர்ந்து அது தந்த உற்சாத்தால் பறக்கவில்லையா இன்று அது நவீன இரண்டு மாடி விமானத்தில் வந்து நிக்கிறதே..............விஞ்ஞானம் சோம்பலை வளர்த்திருந்தால் இது நடந்திருக்குமா?
இந்தியா பவ தோல்வினளின் பின் இனறு வெற்றிகரமாக தனது நாட்டிலிருந்து செயற்கை கோளை ஏவுகிறதே விஞ்ஞானம் தந்த சோமபலினாலா உற்சாகத்தாலா? எதிரணி டீசாம்பேறிகளே.
குழந்தை புதிதாக நடைபயிலும் போது விழுந்து எழும்புது இயல்பு தானே..........?
எதிரணி நண்பர் குழைக்காட்டன் உரு விடயத்தை மறந்துவிட்டார். விஞ்ஞானத்தின் பயனாளர்கள் வேறு, விஞ்ஞானத்தின் படைப்பாளிகள் வேறு. படைப்பாளிகளும் பயனார்களாக இருக்கலாம். ஆனால் பயனாளர்கள் படைப்பாளிகள் அல்ல. நீங்கள் குறிப்பிட்ட ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்தார்கள் - போராடினார்கள் - கண்டுபிடித்தார்கள்: இங்கு மனித உழைப்பு சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது - அதனால் உற்சாகமடைந்தார்கள் - சாதித்தார்கள். ஆனால் பயனார்கள் அப்படியல்ல. பயனாளர்களைப் பொறுத்தவரை சோம்பேறிகளாகவே அவர்களை வைத்திருக்கிறது விஞ்ஞானம்+தொழில்நுட்பம். விழுந்து எழுந்து நடை பயின்றது விஞ்ஞானப் படைப்பாளிகள். விஞ்ஞானப் பயனாளர்கள் அல்ல!!!!
Quote:அந்தக் காலத்தில் தனது கைப்பட ஒவ்வொரு வரவையும் செலவையும் பதிவுப் புத்தகத்தில் பதிந்துவைத்த ஒரு கணக்காளர் நவீன கணனி வசதிகளைப் பாவித்து மிகக் குறுகிய நேரத்தில் தனது வேலையை முடித்துவிட்டு சுருண்டு படுத்திருப்பாரானால் நான் எதிரணியிடம் எமது தோல்வியை ஒப்புக் கொண்டிருப்பேன். மாறாக அவர் இன்னும் பல கடைகளுக்கும் கணக்கெழுதி தனது வருமானத்தை பெருக்கியிருக்கிறார் இது ஏன்.
நீங்கள் எங்கள் அணியினரிடம் தலைவணங்கியே ஆகவேண்டும். சுருண்டு படுக்கும் மனிதர் கூட்டம் தான் அதிகம். 1+1 இற்கு கூட கணனியை எடுக்க வைப்பது எது? சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்லலாம். சரி அந்த சோம்பேறித்தனத்தை மேலும் ஊக்குவிப்பது எது?
Quote:மேற்குறிப்பிட்ட சில உதாரணங்களில் பொதுவான ஒரு அம்சம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். எல்லா வகையிலும் வீணாகச் செலவழிக்கப் பட்ட நேரம் நவீன தொழில் நுட்பவசதிகளால் மிச்சம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நேரமும் வீணடிக்கப்படவில்லை. இன்னும் தெரியாததைத் தெரிந்து கொள்ளவும் தமது வருமானத்தைப் பெருக்குவதற்குமே பாவிக்கப்படுகிறது.
நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது - ஓம் ஒத்துக்கொள்கிறோம், ஆனால் மிச்சப்படுத்தப்பட்ட நேரம் தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து அழுவதற்கும், இணையத்திலே அரட்டையடிப்பதற்கும், போர்த்து மூடிக்கொண்டு படுப்பதற்கும் தானே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்பதை எதிரணியினரே உணர்ந்து கொள்ளுங்கள்.
<b>உலகம் தனக்குள் இருப்பதென்பது ஒன்று. உலகம் தனக்கு வெளியில் (அதாவது உலகில் தான்) இருப்பதென்பது ஒன்று. உளமும் உடலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. உடல் உற்சாகமாக இருந்தால் தான் உள்ளம் உற்சாகமாக இருக்கும். உள்ளம் உற்சாகமாக இருந்தால் தான் உடல் உற்சாகமாக செயலாற்றும். உடலுழைப்பு/உடற்செயற்பாடு போதியளவில் நடந்தால் தான் உடல் உற்சாகம் பெறும். எனவே தொழில்நுட்பம் மனித உழைப்பை அளவுக்குமீறிக் குறைப்பதால் உடலுக்கு உற்சாகம் கிடைப்பதில்லை - உளம் சோம்பேறித்தனத்திற்கு ஆளாகிறது. தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் ஒவ்வொரு மனிதனுள்ளும் உள்ள சோம்பேறித்தனத்தைப் பயன்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது - சந்தைப்படுத்திக்கொள்கிறது. இன்றைய விளம்பரங்களை உற்று நோக்குங்கள். அவை மனிதர்களின் சோம்பேறித்தனத்தைத்தான் கருப்பொருளாகக் கொண்டு பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. தொழில்நுட்பத்திலும், விஞ்ஞானத்திலும் தங்கி வாழவேண்டிய சூழ்நிலையை அவை ஏற்படுத்துவதால் சோம்பேறித்தனம் குடியேறிக்கொள்கிறது.</b>
எனவே நவீன விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனிதர்களை சோம்பேறியாக்குகிறது என்கிற எமது அணியின் வாதப்பொருளை மொழிந்து, இதுவரை பொறுமையாக எனது கருத்தை படித்து முடித்த அனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
[size=9]பி.கு.: எல்லாம் பட்டிமன்றத்திற்கான கருத்துக்கள் தான். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவோ, புண்படுத்துவதற்காகவோ எதுவும் எழுதப்படவில்லை. கலகலப்புக்காக சில அழகூட்டல் சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாக/புண்படுத்துவதாக ஏதும் இருந்தால் அதனை அழித்துவிடலாம் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

