Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய கூத்துக்கள் ஆரம்பம் [இந்திய,அமெரிக்க].
#10
புலிகளுடன் பொதுக்கட்டமைப்பு வேண்டாம் இலங்கை அரசை இந்தியா வற்புறுத்துகிறது !

நிலைமையை விளக்க ஜனாதிபதி புதுடில்லி செல்வார்

இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென இந்தியா உத்தியோக பூர்வமாக இலங்கை வெளிநாட்டமைச்சிடம் தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

விடுதலைப் புலிகளுடன் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கை அரசாங்கம் பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்தினால் அது இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் எல்லைப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் இலங்கை வெளிநாட்டமைச்சிற்கு இந்தியா எழுத்து மூலம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதுடில்லியின் இந்த நிலைப்பாட்டை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா ராவ் இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அண்மையில் உத்தியோக பூர்வமாக கையளித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் ஏற்பாடுகளும் இராஜதந்திர ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

நாளை செவ்வாய்க்கிழமை அல்லது இவ்வார இறுதிக்குள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க இந்தியாவுக்கான அவசர விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முக்கியஸ்தர்களை சந்தித்து பொதுக்கட்டமைப்பு தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு கண்டியில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு தொடர்பாகவும் ஜனாதிபதி இந்தியத் தலைவர்களுக்கு விளக்கவுள்ளார்.

இதேநேரம் இந்திய உயர் ஸ்தானிகர் நிருபமா ராவ் டில்லியின் அவசர அழைப்பையேற்று இந்தியா சென்றுள்ளதாகவும் அது இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடாக இருக்கலாமென்றும் தெரியவருகிறது.

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிநாட்டமைச்சின் செயலாளர் ஷியாம் சரண் ஜே.வி.பி.தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான குழுவினரை கொழும்பில் சந்தித்த போது

இந்தியாவைப் போன்று மாநில ஆட்சிமுறைக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் மத்திய அரசாங்கத்திடமே முக்கிய பொறுப்புகள் இருப்பதாலும் அதுவே பகிர்ந்தளிக்கப்படுவதால் இந்த முறையே இலங்கைக்கு ஏற்றதெனவும் அதைவிடுத்து சுயாட்சி முறையை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் ஷியாம் சரண் தெரிவித்ததாகவும் அறிய வருகிறது.
நன்றி: தினக்குரல்.
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 04-21-2005, 12:13 PM
[No subject] - by THAVAM - 04-21-2005, 03:27 PM
[No subject] - by adithadi - 04-22-2005, 06:25 PM
[No subject] - by Jude - 04-23-2005, 08:39 AM
[No subject] - by anpagam - 04-23-2005, 12:57 PM
[No subject] - by Mathan - 04-23-2005, 01:00 PM
[No subject] - by anpagam - 04-24-2005, 12:41 PM
[No subject] - by anpagam - 04-24-2005, 05:10 PM
[No subject] - by anpagam - 05-09-2005, 11:24 AM
[No subject] - by eelapirean - 05-09-2005, 02:53 PM
[No subject] - by anpagam - 05-09-2005, 03:03 PM
[No subject] - by adithadi - 05-09-2005, 04:51 PM
[No subject] - by MEERA - 05-10-2005, 12:55 AM
[No subject] - by selvanNL - 05-10-2005, 01:06 AM
[No subject] - by MEERA - 05-10-2005, 01:14 AM
[No subject] - by anpagam - 05-10-2005, 01:53 AM
[No subject] - by anpagam - 05-10-2005, 10:42 AM
[No subject] - by anpagam - 05-10-2005, 05:17 PM
[No subject] - by eelapirean - 05-10-2005, 05:58 PM
[No subject] - by anpagam - 05-12-2005, 01:15 PM
[No subject] - by anpagam - 05-12-2005, 01:39 PM
[No subject] - by vasisutha - 05-12-2005, 02:08 PM
[No subject] - by Mathuran - 05-12-2005, 04:47 PM
[No subject] - by MUGATHTHAR - 05-12-2005, 05:44 PM
[No subject] - by MEERA - 05-12-2005, 11:15 PM
[No subject] - by anpagam - 05-14-2005, 02:24 PM
[No subject] - by anpagam - 05-14-2005, 02:26 PM
[No subject] - by anpagam - 05-15-2005, 02:51 AM
[No subject] - by Taraki - 05-15-2005, 12:58 PM
[No subject] - by anpagam - 05-28-2005, 11:32 AM
[No subject] - by tamilan - 05-31-2005, 07:53 AM
[No subject] - by anpagam - 06-09-2005, 10:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)