09-20-2003, 10:57 AM
<b>''கிளு கிளு இல்லாமல் சினிமாவா?</b> இயக்குனர் செல்வராகவன்
<img src='http://www.yarl.com/forum/files/selvaragavan.jpeg' border='0' alt='user posted image'>
'பாய்ஸ்' படம் பரபரப்பான சர்ச்சைகளைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் அதற்கு ஆரம்ப விதை ஊன்றியது 'துள்ளுவதோ இளமை' படம்தான். அதன் இயக்குநர் செல்வராகவன் 'பாய்ஸ்' பற்றி என்ன நினைக்கிறார்?
''நான் பாய்ஸ் படம் பார்த்தேன். படம் ரொம்ப நல்லா இருந்தது. பிரமாதமான படம் பார்த்த திருப்தி என்றவர், சூடாக பேச ஆரம்பித்தார். ''உலகம் எங்கேயோ போய்ட்டிருக்கு. இன்னமும் மரத்தைச் சுத்தி ஆடச் சொல்றீங்களா..? இப்போதான் தமிழ் சினிமா அதோட பாதையிலே சரியா பயணிச்சிட்டிருக்கு. ஊர்ல என்ன நடக்குதுனு அப்டேட் பண்ணி படம் எடுத்தா, ஏதோ இல்லாததைக் காட்டிட்ட மாதிரி மிரள்றாங்க. நாங்க ஒண்ணும் ஃப்ளூ பிலிம் எடுத்துடலையே. சென்ஸார் போர்டுங்கிற அரசாங்க அமைப்பைத் தாண்டி, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதானே எங்க படங்கள் வருது. பேச, எழுத கருத்து சுதந்திரம் இருக்கிற மாதிரி படம் எடுக்கவும் சுதந்திரம் இருக்கே... அப்புறம் எதுக்கு பாய்ஸ் படம் ஓடற தியேட்டருக்கு முன்னால போய் ஆர்ப்பாட்ட மெல்லாம் பண்ணணும்? இதெல்லாம் அநாவசியமான வேலை. இவங்க எதிர்ப்பார்க்கிற மாதிரியெல்லாம் படம் எடுக்க ஆரம்பிச்சா, ஜவஹர்லால் நேரு, காந்தி படங்கள்தான் எடுக்க முடியும். இது சினிமாவுக்கு உள்ள சுதந்திரம். இதிலே தலையிடாதீங்க.
''சினிமா வசனங்களிலே வக்கிரமும், காட்சிகளில் விரசமும் இருப்பதில் தப்பில்லேங்கறீங்களா?
''வலியத் திணிச்சாத்தான் தப்பு. கதையோட இயல்பிலே வந்தா அது எப்படித் தப்பாகும்? 'பாய்ஸ்' படத்திலே வர்ற மாதிரியான காட்சிகள் நாட்டிலே நடக்காமலா இருக்கு? தமிழ்நாட்ல விபச்சாரமே இல்லியா? சினிமாங்கறது ஒரு பொழுதுபோக்கு. மாய உலகம். அது ஒரு போதை. கிளுகிளு இல்லாம சினிமா எப்படி பண்ண முடியும்? நீதிக்கதை சொல்லணும்னாகூட, அநீதியைக் காட்டித்தான் சொல்லணும். தவிரஇ இன்னிக்கு பசங்களுக்கு செக்ஸ் அறிவு வளர்றது நல்லதுதானே! இளைஞர்களோட இயல்பைஇ ரசிக்கிற மாதிரி காட்சியாக்கறோம். அது எப்படி குற்றமாகும்?''
''இந்த கலாசாரத்தை இப்போதைய சினிமால ஆரம்பிச்சது நீங்க தானே... அதனாலதான் இந்த அளவு சப்போர்ட் பண்றீங்கனு சொல்லலாமா?
''இதிலே என்ன கிரெடிட் வேண்டி யிருக்கு.. தப்பான பழக்கங்களெல்லாம் இருந்த பசங்க, கடைசில நாசமாப் போய்ட்டாங்கனு யாரும் படம் எடுக்கலையே! அப்படி இப்படி இருந்த பசங்க கடைசியில பக்குவப்பட்டு, சொந்தக் கால்ல நின்னு, வாழ்க்கையிலே ஜெயிச்சுக் காட்டறாங்கன்றதுதானே மெசேஜ். பசங்களுக்கு உத்வேகம் தர்ற படம்தான் இது.
ஒரு கதையைப் படமா பண்றப்போ சில உண்மைகளையும் சொல்ல வேண்டி இருக்கு. அது சிலருக்கு அதிர்ச்சியா இருக்கு. ஆனா, பலருக்குப் பிடிச்சிருக்கு. அமெரிக்காவிலே இதெல்லாம் சர்வ சாதாரணம். எதையும் மூடி மறைக்காம வெளிச்சம் போட்டுக் காட்டிடறதாலதான் அங்கே கற்பழிப்பும், எய்ட்ஸ் பிரச்னைகளும் குறைவு. இங்கே எல்லாத்தையும் மறைச்சு மறைச்சே மொத்த சமுதாயத்தையும் கெடுத்து வெச்சிருக்கோம்.''
''தப்பான விஷயத்துக்கு வக்காலத்து வாங்கற மாதிரி இருக்கே?
''என்னைப் பொறுத்தவரை இதிலே தப்பேதுமில்லே. எதிர்ப்பு வரும்னு தெரிஞ்சேதான் நானும் 'துள்ளுவதோ இளமை' எடுத்தேன். விவரம் புரியாத விடலைப் பசங்க பற்றிய கதை அது. நல்லது கெட்டது தெரியாத பக்குவமில்லாத பசங்க. உடம்பும் மனசும் முழிச்சுக்கற பருவம். அவங்களோட உலகம் பற்றி பேச ஆசைப் பட்டோம். நாம எல்லோரும் கடந்து வந்த வயசு அது. அதை எனக்குள்ள நேர்மையுடனும் தைரியத்துடனும் அணுகினேன்... ஜெயிச்சேன்.
மரத்தடியிலே உட்கார்ந்து வெத்தலை போட்டபடியே தீர்ப்பு சொல்றதும்இ பக்கம் பக்கமா டயலாக் விடறதும் இனிமே சினிமால பண்ண முடியாது. துரத்திடுவாங்க. பல கோடி ரூபாய் செலவு பண்ணிஇ ஹாலிவுட் தரத்துக்குப் படம் பண்ற நாம ஆஸ்கர் வரைக்கும் போகணும் சார்.''
''ஏ.எம். ரத்னத்துக்கு அடுத்த படம் பண்றதாலதான் இவ்வளவு ஸ்ட்ராங்கா பேசறீங்களோ?''
''அவருக்குப் படம் பண்ணலேன்னாலும் நான் இதேதான் சொல்வேன். ஏன்னா, இதுதான் எப்பவும் என் கருத்து. அதைச் சொல்றதுக்கான உரிமை எனக்கு இருக்கு.''
- எஸ்.பி. அண்ணாமலை
படங்கள்: என்.விவேக்
[u]அட சீ என்று சொன்ன அதே ஆனந்த விகடனில்
கவர் பரிமாறப்பட்டிகும் போல கிடக்குதே?
பிள்ளையை கிள்ளிவிட்டு,தொட்டில் ஆட்டப்படுகிறதே சார்!
முழு விபரங்கள்:-
http://www.vikatan.com/av/2003/sep/2109200...03/av0503.shtml
SUN தொலைக் காட்சியில் திரைப்படம் முடிந்து வெளியேறும் ரசிகர்கள் சொல்லும் கருத்துகளை மட்டும் விளம்பரமாக காட்டுகிறார்கள்.
சில சமயம் Boys லேட் பிக்கப் எனப்படும் விதத்தில் களைக் கட்டலாம். உதாரணமாக கரகாட்டக்காரன், ஒரு தலை ராகம் , அழியாத கோலம் , பாடும் பறவைகள் ,...............(ஏத்தனையோ) போன்றவை லேட் பிக்கப் படங்கள்.
நல்லதை நினைப்போம்.நல்லவை நடக்கும்
AJeevan
<img src='http://www.yarl.com/forum/files/selvaragavan.jpeg' border='0' alt='user posted image'>
'பாய்ஸ்' படம் பரபரப்பான சர்ச்சைகளைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் அதற்கு ஆரம்ப விதை ஊன்றியது 'துள்ளுவதோ இளமை' படம்தான். அதன் இயக்குநர் செல்வராகவன் 'பாய்ஸ்' பற்றி என்ன நினைக்கிறார்?
''நான் பாய்ஸ் படம் பார்த்தேன். படம் ரொம்ப நல்லா இருந்தது. பிரமாதமான படம் பார்த்த திருப்தி என்றவர், சூடாக பேச ஆரம்பித்தார். ''உலகம் எங்கேயோ போய்ட்டிருக்கு. இன்னமும் மரத்தைச் சுத்தி ஆடச் சொல்றீங்களா..? இப்போதான் தமிழ் சினிமா அதோட பாதையிலே சரியா பயணிச்சிட்டிருக்கு. ஊர்ல என்ன நடக்குதுனு அப்டேட் பண்ணி படம் எடுத்தா, ஏதோ இல்லாததைக் காட்டிட்ட மாதிரி மிரள்றாங்க. நாங்க ஒண்ணும் ஃப்ளூ பிலிம் எடுத்துடலையே. சென்ஸார் போர்டுங்கிற அரசாங்க அமைப்பைத் தாண்டி, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதானே எங்க படங்கள் வருது. பேச, எழுத கருத்து சுதந்திரம் இருக்கிற மாதிரி படம் எடுக்கவும் சுதந்திரம் இருக்கே... அப்புறம் எதுக்கு பாய்ஸ் படம் ஓடற தியேட்டருக்கு முன்னால போய் ஆர்ப்பாட்ட மெல்லாம் பண்ணணும்? இதெல்லாம் அநாவசியமான வேலை. இவங்க எதிர்ப்பார்க்கிற மாதிரியெல்லாம் படம் எடுக்க ஆரம்பிச்சா, ஜவஹர்லால் நேரு, காந்தி படங்கள்தான் எடுக்க முடியும். இது சினிமாவுக்கு உள்ள சுதந்திரம். இதிலே தலையிடாதீங்க.
''சினிமா வசனங்களிலே வக்கிரமும், காட்சிகளில் விரசமும் இருப்பதில் தப்பில்லேங்கறீங்களா?
''வலியத் திணிச்சாத்தான் தப்பு. கதையோட இயல்பிலே வந்தா அது எப்படித் தப்பாகும்? 'பாய்ஸ்' படத்திலே வர்ற மாதிரியான காட்சிகள் நாட்டிலே நடக்காமலா இருக்கு? தமிழ்நாட்ல விபச்சாரமே இல்லியா? சினிமாங்கறது ஒரு பொழுதுபோக்கு. மாய உலகம். அது ஒரு போதை. கிளுகிளு இல்லாம சினிமா எப்படி பண்ண முடியும்? நீதிக்கதை சொல்லணும்னாகூட, அநீதியைக் காட்டித்தான் சொல்லணும். தவிரஇ இன்னிக்கு பசங்களுக்கு செக்ஸ் அறிவு வளர்றது நல்லதுதானே! இளைஞர்களோட இயல்பைஇ ரசிக்கிற மாதிரி காட்சியாக்கறோம். அது எப்படி குற்றமாகும்?''
''இந்த கலாசாரத்தை இப்போதைய சினிமால ஆரம்பிச்சது நீங்க தானே... அதனாலதான் இந்த அளவு சப்போர்ட் பண்றீங்கனு சொல்லலாமா?
''இதிலே என்ன கிரெடிட் வேண்டி யிருக்கு.. தப்பான பழக்கங்களெல்லாம் இருந்த பசங்க, கடைசில நாசமாப் போய்ட்டாங்கனு யாரும் படம் எடுக்கலையே! அப்படி இப்படி இருந்த பசங்க கடைசியில பக்குவப்பட்டு, சொந்தக் கால்ல நின்னு, வாழ்க்கையிலே ஜெயிச்சுக் காட்டறாங்கன்றதுதானே மெசேஜ். பசங்களுக்கு உத்வேகம் தர்ற படம்தான் இது.
ஒரு கதையைப் படமா பண்றப்போ சில உண்மைகளையும் சொல்ல வேண்டி இருக்கு. அது சிலருக்கு அதிர்ச்சியா இருக்கு. ஆனா, பலருக்குப் பிடிச்சிருக்கு. அமெரிக்காவிலே இதெல்லாம் சர்வ சாதாரணம். எதையும் மூடி மறைக்காம வெளிச்சம் போட்டுக் காட்டிடறதாலதான் அங்கே கற்பழிப்பும், எய்ட்ஸ் பிரச்னைகளும் குறைவு. இங்கே எல்லாத்தையும் மறைச்சு மறைச்சே மொத்த சமுதாயத்தையும் கெடுத்து வெச்சிருக்கோம்.''
''தப்பான விஷயத்துக்கு வக்காலத்து வாங்கற மாதிரி இருக்கே?
''என்னைப் பொறுத்தவரை இதிலே தப்பேதுமில்லே. எதிர்ப்பு வரும்னு தெரிஞ்சேதான் நானும் 'துள்ளுவதோ இளமை' எடுத்தேன். விவரம் புரியாத விடலைப் பசங்க பற்றிய கதை அது. நல்லது கெட்டது தெரியாத பக்குவமில்லாத பசங்க. உடம்பும் மனசும் முழிச்சுக்கற பருவம். அவங்களோட உலகம் பற்றி பேச ஆசைப் பட்டோம். நாம எல்லோரும் கடந்து வந்த வயசு அது. அதை எனக்குள்ள நேர்மையுடனும் தைரியத்துடனும் அணுகினேன்... ஜெயிச்சேன்.
மரத்தடியிலே உட்கார்ந்து வெத்தலை போட்டபடியே தீர்ப்பு சொல்றதும்இ பக்கம் பக்கமா டயலாக் விடறதும் இனிமே சினிமால பண்ண முடியாது. துரத்திடுவாங்க. பல கோடி ரூபாய் செலவு பண்ணிஇ ஹாலிவுட் தரத்துக்குப் படம் பண்ற நாம ஆஸ்கர் வரைக்கும் போகணும் சார்.''
''ஏ.எம். ரத்னத்துக்கு அடுத்த படம் பண்றதாலதான் இவ்வளவு ஸ்ட்ராங்கா பேசறீங்களோ?''
''அவருக்குப் படம் பண்ணலேன்னாலும் நான் இதேதான் சொல்வேன். ஏன்னா, இதுதான் எப்பவும் என் கருத்து. அதைச் சொல்றதுக்கான உரிமை எனக்கு இருக்கு.''
- எஸ்.பி. அண்ணாமலை
படங்கள்: என்.விவேக்
[u]அட சீ என்று சொன்ன அதே ஆனந்த விகடனில்
கவர் பரிமாறப்பட்டிகும் போல கிடக்குதே?
பிள்ளையை கிள்ளிவிட்டு,தொட்டில் ஆட்டப்படுகிறதே சார்!
முழு விபரங்கள்:-
http://www.vikatan.com/av/2003/sep/2109200...03/av0503.shtml
SUN தொலைக் காட்சியில் திரைப்படம் முடிந்து வெளியேறும் ரசிகர்கள் சொல்லும் கருத்துகளை மட்டும் விளம்பரமாக காட்டுகிறார்கள்.
சில சமயம் Boys லேட் பிக்கப் எனப்படும் விதத்தில் களைக் கட்டலாம். உதாரணமாக கரகாட்டக்காரன், ஒரு தலை ராகம் , அழியாத கோலம் , பாடும் பறவைகள் ,...............(ஏத்தனையோ) போன்றவை லேட் பிக்கப் படங்கள்.
நல்லதை நினைப்போம்.நல்லவை நடக்கும்
AJeevan

