05-07-2005, 09:52 PM
பால் அரை லிட்டர்
மைதா மாவு 200 கிராம்
சர்க்கரை 500 கிராம்
நெய் 500 கிராம்
குங்குமப்பூ சிறிது
கேசரி பவுடர் கால் தேக்கரண்டி
சோடா உப்பு கால் தேக்கரண்டி
பன்னீர் அரைத்தேக்கரண்டி
சுத்தமான பாத்திரம் அல்லது நன்றாகச் சுத்தம் செய்த எண்ணெய் பிசுக்கு இல்லாத வாணலியில் பாலை விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
பாலைக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். பொங்கி வழியாமல் சுண்டி திரட்டுப் பாலாக வந்ததும் இறக்கி ஒரு சுத்தமான தட்டில் கொட்டவும்.
சூடு ஆறியதும் மைதா மாவு, சோடா இரண்டையும் போட்டு நன்றாகப் பிசைந்து அதனை அப்படியே மூடி வைக்கவும்.
அரை மணிநேரத்திற்குப் பிறகு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
சர்க்கரை கரைந்து இளம் பாகானதும், குங்குமப்பூ, கேசரிப்பவுடர் இரண்டையும் போட்டுக் கலந்து இறக்கி அடுப்புக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியை சுத்தம் செய்து நெய்யை விட்டு அடுப்பில் வைக்கவும்.
பால் மாவை எடுத்து விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் உருண்டைகளாகவோ அல்லது நீள்வடிவ உருளைப் போன்றோ உருட்டிக் கொள்ளவும்.
நெய் காய்ந்ததும் ஒரு பால் மாவு உருண்டையை அதில் போட்டு முழுவதும் சிவந்து வெந்ததும் அதனை எடுத்து நெய் முழுவதையும் வடித்து பாகில் போட்டு அழுத்தவும்.
பாகில் ரோஜா மலர் இதழ்கள் அல்லது பன்னீரை கலக்கவும்.
கால அளவு 60 நிமிடங்கள்
வழங்கியவர் திரு. நாகராஜன், நாகை.
மைதா மாவு 200 கிராம்
சர்க்கரை 500 கிராம்
நெய் 500 கிராம்
குங்குமப்பூ சிறிது
கேசரி பவுடர் கால் தேக்கரண்டி
சோடா உப்பு கால் தேக்கரண்டி
பன்னீர் அரைத்தேக்கரண்டி
சுத்தமான பாத்திரம் அல்லது நன்றாகச் சுத்தம் செய்த எண்ணெய் பிசுக்கு இல்லாத வாணலியில் பாலை விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
பாலைக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். பொங்கி வழியாமல் சுண்டி திரட்டுப் பாலாக வந்ததும் இறக்கி ஒரு சுத்தமான தட்டில் கொட்டவும்.
சூடு ஆறியதும் மைதா மாவு, சோடா இரண்டையும் போட்டு நன்றாகப் பிசைந்து அதனை அப்படியே மூடி வைக்கவும்.
அரை மணிநேரத்திற்குப் பிறகு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
சர்க்கரை கரைந்து இளம் பாகானதும், குங்குமப்பூ, கேசரிப்பவுடர் இரண்டையும் போட்டுக் கலந்து இறக்கி அடுப்புக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியை சுத்தம் செய்து நெய்யை விட்டு அடுப்பில் வைக்கவும்.
பால் மாவை எடுத்து விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் உருண்டைகளாகவோ அல்லது நீள்வடிவ உருளைப் போன்றோ உருட்டிக் கொள்ளவும்.
நெய் காய்ந்ததும் ஒரு பால் மாவு உருண்டையை அதில் போட்டு முழுவதும் சிவந்து வெந்ததும் அதனை எடுத்து நெய் முழுவதையும் வடித்து பாகில் போட்டு அழுத்தவும்.
பாகில் ரோஜா மலர் இதழ்கள் அல்லது பன்னீரை கலக்கவும்.
கால அளவு 60 நிமிடங்கள்
வழங்கியவர் திரு. நாகராஜன், நாகை.

