05-07-2005, 02:10 PM
அன்பின் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
இப் பட்டிமன்றத்தில் நானும் எனது கருத்தினை முன்வைத்திட ஆவல் கொண்டேன். இங்கே கருத்துக்களை முன்வைத்த அனத்து கள உறவுகளும் திறம்பட தமது கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களுக்கும் எனது நன்றிகள்.
எனது கருத்தினை அணித்தலைவர் வசம்புவின் அனுமதியோடு முன்வைக்கின்றேன்.
அதாவது திரு சியாம் அவர்களும் அவரின் அணியினரும் முன்வைத்த விடயங்கள் பல நவீன விஞ்ஞானமும் தொளில்னுட்பமும் மனிதனை சீரளிக்கின்றது என்கின்றார்கள். மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனைப்போலவே நவீனவிஞ்ஞானமும் தொளில்நுட்பமும் எதனை செய்தாலும் எதிர்த்தரப்பினருக்கு திருப்தி ஏற்படுவது இல்லை. நண்பர் வியாசன் ஒரு கருத்தினை முன் வைக்கின்றார். அதாவது நவீன விஞ்ஞானத்தின் தாக்கத்தினால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகின்றதாம். அது என்னமோ வேதனையான விடையம்தான். அனால் அந்த ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகின்றதென்பதை கண்டுபிடிக்கப் பயன்பட்டதுவும் ஒரு நவீன தொளில்நுட்ப கருவியே என்பதனை நண்பரைப்போன்ற பலர் அறிந்துகொள்ளல் வேண்டும். முன்னய காலங்களில் பலர் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு அது என்ன நோயென்றே அறியாமல் இறந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று நிலமை அப்படி அல்ல பல கடினமான சத்திர சிகிச்சைகளினைக்கூட நுணுக்கமாக நவீன விஞ்ஞானதொளில்நுட்ப சாதனக்களின் துணையுடன் மேற்கொள்ளப்படுகின்றன. எயிட்ஸ் என்னும் நோய் நவீனவிஞ்ஞானதொளில்னுட்பத்தினால் ஏற்பட்டதொன்றல்ல. அதனையும் கட்டுப்படுத்திட தேவைப்பட்டது விஞ்ஞானத்தின் வளர்ச்சியே என்பதனை எதிர்த்தரப்பினர் தயவுகூர்ந்து புரிதல் வேண்டும். நவீன தொளில்னுட்பங்கள் செயற்பாடுகள் யாவுமே மனிதனின் முன்னேற்றத்திற்கு கைகொடுப்பனவே. அவற்றினை தவறாக பயன்படுத்துவது நவீன தொளில்நுட்பத்தின் பயன்பாடு பற்ரிய அறிவு இல்லாதவரே.
நாம் நெல்லுக்குத்தான் நீரை பாச்சுகின்றோம், என்ன செய்ய அது புல்லுக்கும் அல்லவா போய் செருகின்றது.
இப் பட்டிமன்றத்தில் நானும் எனது கருத்தினை முன்வைத்திட ஆவல் கொண்டேன். இங்கே கருத்துக்களை முன்வைத்த அனத்து கள உறவுகளும் திறம்பட தமது கருத்துக்களை முன்வைத்தனர். அவர்களுக்கும் எனது நன்றிகள்.
எனது கருத்தினை அணித்தலைவர் வசம்புவின் அனுமதியோடு முன்வைக்கின்றேன்.
அதாவது திரு சியாம் அவர்களும் அவரின் அணியினரும் முன்வைத்த விடயங்கள் பல நவீன விஞ்ஞானமும் தொளில்னுட்பமும் மனிதனை சீரளிக்கின்றது என்கின்றார்கள். மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதனைப்போலவே நவீனவிஞ்ஞானமும் தொளில்நுட்பமும் எதனை செய்தாலும் எதிர்த்தரப்பினருக்கு திருப்தி ஏற்படுவது இல்லை. நண்பர் வியாசன் ஒரு கருத்தினை முன் வைக்கின்றார். அதாவது நவீன விஞ்ஞானத்தின் தாக்கத்தினால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகின்றதாம். அது என்னமோ வேதனையான விடையம்தான். அனால் அந்த ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகின்றதென்பதை கண்டுபிடிக்கப் பயன்பட்டதுவும் ஒரு நவீன தொளில்நுட்ப கருவியே என்பதனை நண்பரைப்போன்ற பலர் அறிந்துகொள்ளல் வேண்டும். முன்னய காலங்களில் பலர் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு அது என்ன நோயென்றே அறியாமல் இறந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று நிலமை அப்படி அல்ல பல கடினமான சத்திர சிகிச்சைகளினைக்கூட நுணுக்கமாக நவீன விஞ்ஞானதொளில்நுட்ப சாதனக்களின் துணையுடன் மேற்கொள்ளப்படுகின்றன. எயிட்ஸ் என்னும் நோய் நவீனவிஞ்ஞானதொளில்னுட்பத்தினால் ஏற்பட்டதொன்றல்ல. அதனையும் கட்டுப்படுத்திட தேவைப்பட்டது விஞ்ஞானத்தின் வளர்ச்சியே என்பதனை எதிர்த்தரப்பினர் தயவுகூர்ந்து புரிதல் வேண்டும். நவீன தொளில்னுட்பங்கள் செயற்பாடுகள் யாவுமே மனிதனின் முன்னேற்றத்திற்கு கைகொடுப்பனவே. அவற்றினை தவறாக பயன்படுத்துவது நவீன தொளில்நுட்பத்தின் பயன்பாடு பற்ரிய அறிவு இல்லாதவரே.
நாம் நெல்லுக்குத்தான் நீரை பாச்சுகின்றோம், என்ன செய்ய அது புல்லுக்கும் அல்லவா போய் செருகின்றது.

