Poll:
This poll is closed.
Total 0 vote(s) 0%
* You voted for this item. [Show Results]

Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்...
#34
மதிப்புக்குரிய பட்டிமன்ற நடுவர்களே எதிரணி உறவுகளே எமதணிக் கருத்துக் கண்மணிகளே..எல்லோருக்கும் தமிழ் தாயின் பெயெரால் முத்தமிழ் வணக்கங்கள்..!

இப்பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள ஆரம்பத்தில் அழைத்த தமிழினியினதும் துயா பாப்பாவினதும் கோரிக்கைகளை ஏற்கத் தவறியமைக்காக அவர்களிடம் மன்னிக் கேட்பதுடன் எங்கள் கருத்துக்களையும் உள்வாங்க விரும்பிய கருத்துச்சகபாடி வசம்புவுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு எமது பக்க கருத்தைத் தருகின்றோம்...!

முதலில் சோம்பேறித்தனம் என்பதற்கும் விஞ்ஞானத்துக்கும் இங்கு பட்டிமன்றக் கருப்பொருளாக வைக்கப்பட்ட அம்சத்துக்கும் இடையேயான தொடர்பு சரியா...???!

விஞ்ஞானம் என்பது இந்த பிரபஞ்சம் தோன்றிய போதே தோன்றிய ஒன்று....அதை மனிதன் தனது பகுத்தறிவால் நுண்ணறிவால் ஆராய்ந்து விளங்கிக் கொண்டு அதன் வழி தனது வசதிகளுக்கு ஏற்ப விதிகளையும் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் புகுத்தி நவீன விஞ்ஞானத்தின் விளைவுகளைத் தந்து வருகின்றான்...!

மனிதனே ஒரு விஞ்ஞானம்தான்...மனித உயிரியல் விஞ்ஞானம் இதைத் தெளிவாகச் சொல்கிறது...! அப்படிப்பட்ட விஞ்ஞானத்தினை கண்டறிந்து.. விளங்கித் தெளிந்து... புதுபுது வடிவங்களுக்குள் அதைப் புகுத்தி.... வளர்க்க மனிதன் என்பவன் தொடர்ந்து முயற்சித்ததன் பலனே இன்றைய நவீன விஞ்ஞானத்தின் விளைவுகள்...! அவற்றில் சில பாதகங்களும் பல நன்மைகளும் அடங்கும்...அந்த நன்மைகளையும் பாதகங்களையும் கூடச் சொல்வதும் விஞ்ஞானந்தான்...அதே விஞ்ஞானம் தான் பாதகங்களுக்கு விடையும் சொல்கிறது சொல்லிக் கொண்டும் இருக்கிறது....!

இந்த விஞ்ஞானத்தின் ஆரம்பப் படைப்பாளி யார் என்று அறியப்படாத போதிலும் புவியில் நவீன விஞ்ஞானத்தின் படைப்பாளி மனிதனே....! அப்படி விஞ்ஞான வழி வந்த மனிதன் நவீன விஞ்ஞானம் வரை அதை ஆராய்ந்து விளங்கி வளர்த்து வந்திருக்கிறான் என்றால் அவன் சோம்பேறியாக சிந்தனை அற்றவனாக உழைப்பை அளிப்பவனல்லனவாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்குமா...???! இல்லை அல்லவா...! எனவே மனிதன் என்பவன் எப்பவுமே ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றானே தவிர சோம்பேறியாக செயலற்று இருக்கவில்லை...என்ற அடிப்படையை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்...!

<img src='http://img98.echo.cx/img98/9563/acsloth5mw.gif' border='0' alt='user posted image'>

(In fact it is the laziest animal in the world.It sleeps hanging from a tree and hardly even moves)

நமது எதிர்தரப்புவாதிகளையும் விஞ்சிய உலகில் வாழும் மிகவும் சோம்பேறி விலங்கு..!

இதில் என்ன வேடிக்கை என்றால் பாவம் எதிர்தரப்புவாதிகள்... அவர்கள் சிந்தனைக்கும் செயலுக்கும் ஓய்வுகொடுத்துவிட்டு அடங்கிக்கிடக்கும் ஒரு உள உடற் பலவீன நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளார்கள்...அதுதான் சோம்பேறித்தனத்துக்கு ஆளாகி உள்ளனர் போலும்...! அதுதான் எய்தவன் இருக்க அம்பை நோகின்றனர்....!

சோம்பேறித்தனம் என்பது இவர்களைப் போல "மனிதனுக்கு" மட்டுமல்ல...சில உயிரினங்களுக்குள்ளும் இருக்கும் ஒரு வகை உடற்தொழிற்பாடு மற்றும் மனோவியல் சார்ந்த நோய்.. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் அந்த உயிரினங்களுக்கும் சோம்பேறித்தன்மை என்பது... என்ன இவர்களைப் போலவே உலகில் படைக்கப்பட்டுள்ள சக மனிதர்களின் கடும் சிந்தனையாளும் உழைப்பாலும் வளர்ந்த நவீன விஞ்ஞானத்தின் விளைவால் வந்ததா..????! சில பிராணிகள் இரவில் சோம்பேறியாகத் தூங்கி பகலில் சொற்ப நேரம் தொழிற்படுங்கள்...இன்னும் சிலதுகள் மாறியும் செயற்படுங்கள்... இவை அவை அவை தனிப்படக் கொண்டுள்ள உடல், உள நிலை சார்ந்த விடயங்களின் தாக்கமே அன்றி மனிதன் படைத்த நவீன விஞ்ஞானத்தினதல்ல...!

காரணம்...இந்தச் சோம்பேறி மனிதர்களைப் போன்ற மனிதர்களால்தான் விஞ்ஞானமே ஆராய்ந்து அறியப்பட்டு புகுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது வினைத்திறனான விளைவைப் பெறுவதற்காக...! அப்படி ஒரு பகுதி மனிதர்கள் தொழிற்படும் போது இவர்கள் மட்டும் நவீன விஞ்ஞானத்தால் சோம்பேறியாவதாகக் கூறுகின்றனர்...இவர்கள் ஏன் அவர்களைப் போல.. இல்ல அதைவிட அதிகமாக சிந்திக்க்க செயலாற்ற முனையவில்லை...???! கிடைத்ததை வைத்து அனுபவித்துக் கொண்டு மூளைக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுக்க நினைக்கும் ஒருவகை நோய்த்தாக்கத்துக்கு உள்ளானதன் விளைவே இவர்கள் சோம்பேறிகள் என்று தம்மைத் தாமே அடையாளப்படுத்தக் காரணம்...! அது இவர்களின் தனிப்பட்ட உள உடற்குறைபாடுகளே அன்றி...வேறில்லை...! வேண்டும் என்றால் நவீன விஞ்ஞானத்தின் மூலம் இவர்களின் குறைபாடுகளுக்கு தீர்வு எட்ட இப்பவே செயற்பட முனைவோம்...காரணம்...இது இவர்களை மட்டுமல்ல எதிர்காலத்தில் சிந்திக்க விரும்புபவனையும் தவறாக வழிநடத்திச் சோம்பேறி வியாதிக்குள் தள்ளவே வழி செய்யும்...!

துலா மிதத்தல் போன்ற அடிப்படை விஞ்ஞானப் பொறிகளால் உடற்பயிற்சி பெற்றதாகவும் இப்ப அந்த அடிப்படை விஞ்ஞான நெம்புப் பொறிமுறை நவீனத்துவம் பெற்றதால் அந்த பயிற்சியைப் பெற முடியவில்லை என்று ஒரு வாதம் வந்தது.... முன்னர் துலா மிதித்துச் செய்த வேலையை இப்ப நவீன விஞ்ஞானம் புகுத்தப்பட்ட பொறி கொண்டு செய்யும் போது சக்தி, வள மற்றும் நேர விரயம் தவிர்க்கப்பட்டு அது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஊக்கிவிக்கப்படுகிறது..! அதுமட்டுமன்றி தேவைகள் பெருகிவிட்ட உலகில் சக்தியையும் வளத்தையும் நேரத்தையும் மீதப்படுத்துவது இன்றியமையாததாகிறது...! அதற்காக பொறியைப் பாவித்துவிட்டு மூளையை ஓய்வுக்கு விட்டுவிட்டு உறங்கச் சொல்லி நவீன விஞ்ஞானம் சொல்லவில்லை...! அப்படிச் செய்வது உடல் உள நலத்துக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் கூடாது என்று சொல்லித்தான் ஜிம் மற்றும் பலவகை விளையாட்டுக்கள் என்று உடற்பயிற்சி முறைகளையும் சாதனங்களையும் இந்தச் சோம்பேறி மனிதர்களின் பரிதாப நிலைகண்டு சிந்திக்கும் மனிதன் படைக்கின்றான்...! அதைக்கூட செய்யத் தவறும் இந்த சுய சிந்தனையையே சுமையாக எண்ணும் மனிதர்கள் உண்மையில் மனிதர்கள் தானா...??????!

நவீன விஞ்ஞானத்தால்...அதாவது ஒரு பகுதி மனிதனின் சிந்தனையால் பிறந்த விஞ்ஞானத்தால்... பல தீமைகள் என்று சொல்லி தமது சிந்தனைகளைக் குறுக்கி சோம்பேறிகள் ஆகும் மனிதப் பிரிவினரே...அந்தத் தீமைகளுக்கு என்ன பரிகாரம் என்று ஏன் நீங்கள் சிந்திக்கவும் ஆராயவும் கண்டுபிடிக்கவும் அறிமுகப்படுத்தவும் முனையவில்லை..???! அதைச் செய்ய வேண்டாம் என்று என்ன நவீன விஞ்ஞானம் தடையா போடுகிறது...????! அப்படிப் தடைகள் போடப்படுவதாக எண்ணினால் அதை ஏன் உடைக்க முயலாமல்..சோம்பேறியாக்குகிறது என்று உங்களை நீங்களே சிந்தனையாலும் செயலாலும் செயலற்றவர்கள் ஆக்குகிறீர்கள்..???!

மனிதன் என்ன எந்த உயிரிக்கும் இயற்கையாக போராடக் கற்றுத்தரப்பட்டுள்ளது...அதைக் கூட செய்ய மறுக்கும் சோம்பேறி நோய் பிடித்தோரே... உங்களுக்கு உங்களைப் போன்ற சக மனிதரின் சமகால அரும் முயற்சியால் உதிக்கும் வளரும் நவீன விஞ்ஞானம் என்ன இயற்கைக் கடன் கழிப்பது கூட உங்களுக்கு அபந்தமாகத்தான் தெரியும்...அது அந்த நோய்த்தாக்கத்தின் விளைவே அன்றி வேறில்லை...!

எனவே அந்த உள உடல் நோயில் இருந்து வெளியே வர சுய சிந்தனையும் சுய ஆய்வும் அவசியம்...அதைச் செய்யக் கற்றுக் கொண்டு... வெறுமனவே விஞ்ஞானத்தைக் குறை சொல்லிக் கொண்டிராமல் அதை உங்கள் தேவைக்கும் எதிர்கால சந்ததியின் தேவைக்கும் ஏற்ப மாற்றியமைக்க முயலுங்கள்....அதுதான் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இப்போ அவசியம் என்று கூறி எமது வாதத்தை நிறைவு செய்கின்றோம்...!

எம்மைத் தொடரும் எமதணி கருத்துக் கண்மணிகள் எமது அணிக்கு வலுச்சேர்க்க மேலும் கருத்துப்படை நடத்துவர் என்று முழங்கி விடை பெறுகின்றோம்...! எமது அலுவல்கள் காரணமாக எமது கருத்து வரத் தாமதிததற்கு பட்டிமன்றம் சார்ந்த அனைவரிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கின்றோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by shiyam - 04-29-2005, 05:36 PM
[No subject] - by தூயா - 04-30-2005, 03:11 PM
[No subject] - by Vasampu - 04-30-2005, 03:54 PM
[No subject] - by sOliyAn - 04-30-2005, 04:03 PM
[No subject] - by shiyam - 04-30-2005, 04:32 PM
[No subject] - by hari - 04-30-2005, 04:44 PM
[No subject] - by Vasampu - 04-30-2005, 05:46 PM
[No subject] - by hari - 04-30-2005, 05:53 PM
[No subject] - by Kurumpan - 04-30-2005, 08:34 PM
[No subject] - by sOliyAn - 05-01-2005, 02:27 AM
[No subject] - by kavithan - 05-01-2005, 05:07 AM
[No subject] - by வியாசன் - 05-01-2005, 10:05 AM
[No subject] - by தூயா - 05-01-2005, 10:38 AM
[No subject] - by வியாசன் - 05-01-2005, 12:33 PM
[No subject] - by sOliyAn - 05-01-2005, 02:36 PM
[No subject] - by Nada - 05-02-2005, 04:39 PM
[No subject] - by sathiri - 05-02-2005, 08:22 PM
[No subject] - by KULAKADDAN - 05-02-2005, 10:03 PM
[No subject] - by shanmuhi - 05-02-2005, 10:07 PM
[No subject] - by Nitharsan - 05-03-2005, 12:29 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 01:45 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 04:06 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 04:17 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 04:48 AM
[No subject] - by Vasampu - 05-03-2005, 09:18 AM
[No subject] - by Eswar - 05-03-2005, 02:18 PM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 03:53 PM
[No subject] - by eelapirean - 05-03-2005, 04:36 PM
[No subject] - by Mathan - 05-03-2005, 07:51 PM
[No subject] - by sOliyAn - 05-04-2005, 01:57 AM
[No subject] - by Mathuran - 05-04-2005, 06:36 PM
[No subject] - by Nitharsan - 05-06-2005, 08:51 AM
[No subject] - by kuruvikal - 05-07-2005, 04:54 AM
[No subject] - by தூயா - 05-07-2005, 05:52 AM
[No subject] - by Mathuran - 05-07-2005, 02:10 PM
[No subject] - by வியாசன் - 05-07-2005, 05:07 PM
[No subject] - by sOliyAn - 05-08-2005, 02:04 AM
[No subject] - by sOliyAn - 05-08-2005, 02:37 AM
[No subject] - by தூயா - 05-09-2005, 03:41 AM
[No subject] - by sOliyAn - 05-10-2005, 03:14 AM
[No subject] - by sOliyAn - 05-10-2005, 03:31 AM
[No subject] - by Malalai - 05-10-2005, 03:34 AM
[No subject] - by sOliyAn - 05-11-2005, 04:50 AM
[No subject] - by Mathan - 05-12-2005, 06:21 PM
[No subject] - by sOliyAn - 05-13-2005, 01:31 AM
[No subject] - by Mathan - 05-13-2005, 03:22 AM
[No subject] - by sOliyAn - 05-13-2005, 04:05 AM
[No subject] - by Mathuran - 05-14-2005, 05:00 PM
[No subject] - by sOliyAn - 05-15-2005, 03:04 AM
[No subject] - by Vasampu - 05-16-2005, 05:37 AM
[No subject] - by Nilavan - 05-16-2005, 04:36 PM
[No subject] - by Nilavan - 05-16-2005, 04:42 PM
[No subject] - by Sooriyakumar - 05-16-2005, 05:34 PM
[No subject] - by sOliyAn - 05-17-2005, 01:59 AM
[No subject] - by sOliyAn - 05-17-2005, 02:39 AM
[No subject] - by sOliyAn - 05-17-2005, 03:51 AM
[No subject] - by shiyam - 05-19-2005, 12:33 AM
[No subject] - by sOliyAn - 05-20-2005, 04:56 AM
[No subject] - by Mathan - 05-20-2005, 09:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)