Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நன்றி கணையாழி
#1
உங்களுடன் சற்று நேரம்


குடிமகளை வரவேற்போம்

தமிழில் பெண்களுக்குத் தனிச்சொல் இல்லை
ஆனாலும் தமிழை அன்னை என்கிறோம்
தாய்மொழி என்று சொல்கிற தமிழில்
பெண்களுக்கென்று தனிச்சொல் இல்லையா?
சொத்துரிமையும் இட ஒதுக்கீடும்
கொடுக்கப்பட்ட பின்னரும் கூட
மொழியில் அவர்களுக்குத் தனிச்சொல்லை
அவர்களே உருவாக்க வேண்டியிருக்கிறது.

பெண்களும் கூட
குடிமகன் என்றே
உறுதிமொழி எடுத்துக்கொள்ள
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒதுக்கீடு கொடுத்தவர்கள்
உறுதிமொழிக்குச் சொல் தரவில்லை.

ஒதுக்கீட்டையும் கடந்து அரசியலில் பெண்கள்
வென்ற உரிமையின் விளைவுதான்
குடிமகள் என்ற சொல்லாட்சி.

ஆதியில் இருந்ததா? அல்லது
என்றைக்கும் பெண்களுக்குத்
தனிச்சொல் என்பது தமிழில் இல்லையா?
பின்வந்தோர் முன்பு இருந்த
சமத்துவ உரிமையைச் சாகடித்தார்களா?

அடூஉ அறிசொல் மகடூ அறிசொல்
பல்லோர் அறியும் சொல் -
ஆண்பாலுக்கு ஒரு சொல்
பெண்பாலுக்கு ஒரு சொல்
பலர்பாலுக்கு ஒரு சொல்
உயர்திணைக்கு மூன்று சொற்களைத்
தொல்காப்பியம் காட்டுகிறது.
மேலும்
'ன்' இல் முடியும் ஆண்பாற் சொல்
'ள்' இல் முடியும் பெண்பாற்சொல்
ர், ப, மார் என்று முடியும் பலர்பால்சொல் என்று
விளக்கிக் காட்டியது வியப்பைத் தருகிறது.

சமுதாயத்தில் ஆணாதிக்க ஆக்கிரமிப்பு
சொற்களிலும் தலைகாட்டத் தொடங்கின.
அவன் என்பது மட்டுமின்றி
அவர் என்பதும் ஆண்பாலுக்கானது
அப்பா வந்தான் என்று எழுதுவதில்லை
அம்மா வந்தாள் என்று
தி. ஜானகிராமனும் நாவல் எழுதினார்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும்கூட
அப்பாவின் மக்களாகவே அழைக்கப்பட்டனர்.
மதுரைக் கணக்காயர் மகனார்
நக்கீரனார் என்று சங்க காலப் புலவர்களும்
அழைத்துக் கொண்டனர்.
சிலப்பதிகாரக் கோவலன் கூட
மாசாத்து வாணிகன் மகனாகவே
காப்பியத்தில் காட்டப்படுகிறான்.
பெண்கள் என்றால் திருமணத்திற்குமுன் அப்பாவின் மகள்
திருமணத்திற்குப் பின் கணவனின் மனைவி.
கண்ணகி கூட "வாழ்தல் வேண்டி ஊழ்வினை துறப்ப
சூழ்கழல் மன்ன! நின்னகர்ப் புகுந்து
கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி" என்றே
கூறிக் கொண்டதாகச் சிலம்பும் புலம்பும்
ஆனாலும்
இன்னொரு மரபும் இருந்திருக்கிறது.
சீதாராமன் என்றால்
சீதையைக் குறிக்காமல் ராமனைக் குறிக்கும்.
ராதாகிருஷ்ணன் என்றால்
ராதையைக் குறிக்காமல் கிருஷ்ணனைக் குறிக்கும்.

அப்பாவின் பெயர் முன் எழுத்தானபோதும்
பள்ளியில் சேரும்போது அப்பா
திருமணம் ஆனதும் கணவன் என்று
பெண்களின் தலையெழுத்து
இரண்டுமுறை மாறும் இடர்ப்பாட்டிற்காளானது.
அதுமட்டுமின்றி
திருமணத்திற்குப்பின் திருமதி ஆவதும்
பெயருக்குப்பின் பின்னே கணவனைச் சும்ப்பதும்
பெண்களின் பொறுமைக்கு அணிகலன் ஆனது.

மானுடப் பண்பை விளக்குகிறபோது
பிuனீணீஸீவீsனீ என்றே ஆண்வழி கூறல்
ஆங்கில மொழியிலும் மரபாகியிருக்கிறது
ஆண் ஆதிக்க ஆக்கிரப்பு என்பதில்
மொழிகளுக்கு இடையே பேதமுண்டோ!
கேட்டால் சொன்னார்கள்
விணீஸீ வீஸீநீறீuபீமீs ஷ்ஷீனீணீஸீ
பிமீ வீஸீநீறீuபீமீs sலீமீ
ஆனால் உண்மை அப்படியில்லை.
கீளிவிகிழி என்பதில்தான் விகிழி இருக்கிறது
ஷிபிணி என்பதில்தான் பிணி இருக்கிறது.
ஆனாலும் சட்டங்களில் நடைமுறையில்
விணீஸீ வீஸீநீறீuபீமீs ஷ்ஷீனீணீஸீ என்றே
எல்லோரும் இங்கே எடுத்துரைத்தார்கள்
இந்திய விடுதலைப்போரில் கூட
ஆண் பெண் வேறுபாடின்றி
சுதந்திர வேள்விக்குப் பலியானோர் பலர்.
ஆனாலும், வரலாறு என்பது பிவீs ஷிtஷீrஹ் ஆனது
பிமீr ஷிtஷீrஹ் மறைந்து போனது
ஆட்சி உரிமையைப் போராடிப் பெற்றுப்
பதவிக்குப் பெண்கள் வந்தபிறகு
ஆணில் பெண்ணும் அடக்கம் என்பது
கேள்விக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளது.

சிலீணீவீrனீணீஸீ பெண்ணாகும் போது சிலீணீவீrஷ்ஷீனீணீஸீ ஆனது.
சிலீணீவீrஷ்ஷீனீணீஸீ என்பதை ஏற்க முடியாமல்
சிலீணீவீrஜீமீrsஷீஸீ என்ற பொதுச்சொல் வந்தது.
விணீஹ்ஷீr ஆணாக இருக்கும்போது
மாநகரத் தந்தை என்றார்கள்
பெண் மேயர் வரும்போது
மேயரே இருக்கட்டும் என்றார்கள்.

பெண்களுக்கென்று தனிச் சொல் வந்ததும்
பொதுச் சொல்லைக் கண்டுபிடித்துப்
பெண்ணுக்கான தனிச் சொல்லை அழிக்கும்
தந்திர வேலைகள் இயல்பாய் நடந்தன.
அப்படி சிவீtழீzமீஸீ என்பதற்கு சிவீtவீzமீஸீமீss என்பது
பெண்பாற் சொல்லாக இருந்திருக்கிறது.
பெண்களுக்கென்று தனிச்சொல்லா என்று
சிவீtவீzமீஸீமீss சொல்லை மறைத்துவிட்டு
சிவீtவீzமீஸீ என்பதே பொதுச்சொல் என்றார்கள்.

குடிமகன் என்பதைப் பெண்ணுக்கும் சேர்த்துத்
தனிச்சொல் உருவாவதைத் தடுக்கப் பார்த்தார்கள்.
கைம்பெண், விதவை- சொற்களுக்கும்
ஆண்பாற் சொற்கள் இல்லைதான்
குடிமகனுக்குக் குடிமகள் இல்லை என்பதும்
கைம்பெண்ணுக்கு ஆண்பாற் சொல் இல்லை என்பதும்
ஒன்றல்ல என்பதை உலகம் அறியும்.

எந்தெந்தச் சொற்களுக்கு ஆண்பாற் சொல் இல்லை என்பதும்
எந்தெந்தச் சொற்களுக்குப் பெண்பாற்சொல் இல்லை என்பதும்
உள்நோக்கிப் பார்த்தால்தான் உள்நோக்கம் வெளிப்படும்.

மைத்துனிக்கும் மகனுக்கும் மகளுக்கும்
தம்பிக்கும் தங்கைக்கும் அன்னைக்குமாகத்
தமிழக இலக்கிய அரசியல்வாதிகள்
கடிதங்கள் வாயிலாகக் கருத்தைத் தந்தார்கள்
எல்லோர்க்கும் பொதுவாக எடுத்தோத விரும்பிதை
ஒருபால் சொல்லால் அழைக்கலாமோ?
அந்நிலைமாறி
உடன்பிறப்பு, இரத்ததின் ரத்தம், தோழர்கள் என்று
பொதுவாய் இருவரையும் குறிப்பிடும் சொற்களால்
இன்றைய நிலையில் கடிதங்கள் வருகின்றன.

அரசியல் வானில் பெண்கள் பலரும்
ஊராட்சி - தொடங்கி முதலமைச்சர் வரை
பதவிகள் ஏற்றிருக்கும் காலமிது.
இப்போதும் பெண்கள் உறுதிமொழி எடுக்க
ஆண்பாற் சொல்லையே ஏற்க வேண்டும் என்பதையும்

தமிழில் சொற்கள் தனியாக இல்லை என்பதையும்
அண்மையில் முதல்வர் மாற்றியிருக்கிறார்.
இனி குடிமகள் என்றும் உறுதிமொழி எடுக்கலாம்
ஆண் ஆதிக்க ஆக்கிரமிப்பிலிருந்து
மொழியையும் கூட விடுவிக்கலாம்
இருபாலருக்குமான சொற்களை
இனிமேலாவது தமிழில் படைக்கலாம்
தமிழுக்குப் புதிய வரவுகள் வரிசையில்
தற்போது குடிமகள் வரவேற்போம்.

http://www.min-kanaiyazhi.com/ungaludun.htm
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Messages In This Thread
நன்றி கணையாழி - by nalayiny - 09-19-2003, 06:57 PM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 07:43 PM
[No subject] - by nalayiny - 09-19-2003, 08:22 PM
[No subject] - by nalayiny - 09-19-2003, 08:56 PM
[No subject] - by Mullai - 09-19-2003, 09:02 PM
[No subject] - by Mullai - 09-19-2003, 09:20 PM
[No subject] - by Mullai - 09-19-2003, 09:30 PM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 09:34 PM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 09:39 PM
[No subject] - by Mathivathanan - 09-19-2003, 09:39 PM
[No subject] - by nalayiny - 09-19-2003, 09:47 PM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 10:04 PM
[No subject] - by Mullai - 09-19-2003, 10:09 PM
[No subject] - by nalayiny - 09-19-2003, 10:09 PM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 10:14 PM
[No subject] - by nalayiny - 09-19-2003, 10:15 PM
[No subject] - by Mullai - 09-19-2003, 10:15 PM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 10:21 PM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 10:25 PM
[No subject] - by Mathivathanan - 09-19-2003, 10:30 PM
[No subject] - by nalayiny - 09-19-2003, 10:36 PM
[No subject] - by Mullai - 09-19-2003, 10:46 PM
[No subject] - by Mullai - 09-19-2003, 10:59 PM
[No subject] - by kuruvikal - 09-19-2003, 11:06 PM
[No subject] - by nalayiny - 09-19-2003, 11:18 PM
[No subject] - by Mathivathanan - 09-19-2003, 11:22 PM
[No subject] - by sennpagam - 09-20-2003, 12:20 AM
[No subject] - by Mullai - 09-20-2003, 07:08 AM
[No subject] - by Mullai - 09-20-2003, 07:18 AM
[No subject] - by Kanani - 09-20-2003, 08:04 AM
[No subject] - by nalayiny - 09-20-2003, 09:01 AM
[No subject] - by Mullai - 09-20-2003, 10:27 AM
[No subject] - by Mathivathanan - 09-20-2003, 11:01 AM
[No subject] - by kuruvikal - 09-20-2003, 11:41 AM
[No subject] - by kuruvikal - 09-20-2003, 11:54 AM
[No subject] - by kuruvikal - 09-20-2003, 12:02 PM
[No subject] - by Mullai - 09-20-2003, 06:51 PM
[No subject] - by nalayiny - 09-20-2003, 07:06 PM
[No subject] - by Mathivathanan - 09-20-2003, 08:38 PM
[No subject] - by Mathivathanan - 09-20-2003, 09:12 PM
[No subject] - by Mullai - 09-20-2003, 10:10 PM
[No subject] - by sennpagam - 09-20-2003, 11:22 PM
[No subject] - by sennpagam - 09-20-2003, 11:26 PM
[No subject] - by sennpagam - 09-20-2003, 11:28 PM
[No subject] - by sOliyAn - 09-21-2003, 02:39 AM
[No subject] - by sOliyAn - 09-21-2003, 02:40 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)