05-04-2005, 01:57 AM
போட்டாரே ஒரு போடு! கேட்டாரே ஒரு கேள்வி!!
கணிப்புகளை கணனி வெகுவேகமாக்கி சுலபமாக்குகிறதென்கிறீர்களே.. ஒரு மாதம் மின்சாரம் தடைப்பட்டால் நிலமை என்ன.. விஞ்ஞானத்தை நம்பி, கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தலைப் படிக்காமல்விட்ட நிலையில்.. எவ்வாறு கணக்குப் பார்க்கப் போகிறீர்கள்? அவசரத்தில் அவர் விரிவாகக் கேட்காவிட்டாலும், இப்படியும் கேட்டிருக்கலாம்.. அவர்தான் ஈழப்பிரியன் அவர்கள்!!
இதுதான் பரவாயில்லை என்று பார்த்தால்.. விட்டுக்கொடுப்பு.. முன்னேறவேண்டுமென்ற போட்டிமனப்பான்மை போன்ற உணர்வுகளை அறியாதவர்களாகவே மனிதனை ஆளாக்கி.. அவனது ஆயுளை ஆகக் கூடியது நாற்பது வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் வேலையை விஞ்ஞானமானது வெகுகச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறது எனும் சிந்தனைக்குரிய அரிய கருத்தொன்றையும் தெரிவித்திருக்கிறார் ஈழப்பிரியன் அவர்கள்.
தாயகத்திலே 80களிலே எனது உறவினர் மத்தியிலே 'சலரோகம்' என்ற வியாதி இல்லையென்று கூறுமளவிற்கு வெகு குறைவாகவே இருந்தது.. அதனால் நான் யோசித்ததுண்டு.. அந்த காலநிலையில் சலரோகம் வெகுவிரைவில் வராது என.. ஆனால் சென்ற வருடம் போனபோது.. பெரும்பாலானவர்கள் சலரோகத்துக்கு ஆட்பட்டிருந்தனர்.. அங்கும் விஞ்ஞான சாதனங்களின் பாவனை அதிகரித்திருக்கிறதுதானே.. உதாரணமாக முன்பு சைக்கிள் இருந்த வீடுகளில் எல்லாம் மோட்டார் சைக்கிள்கள்தானே.. ஆக, ஈழப்பிரியனின் கருத்தைப் பார்க்கையில் விஞ்ஞானம் மனிதனைச் சோம்பேறியாக்கி அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது..
இந்த அச்ச உணர்வைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் தற்போது 'எற்சாகப்படுத்துகிறது' என்ற அணியைச் சார்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் என்ன கூறுகிறார்கள் எனப் பார்ப்போம்..
விக்டோர்ப், அம்மு, வசி, குருவி... இவர்களுள் ஒருவரை தற்போது கருத்துகளை முன்வைக்க எதிர்பார்க்கிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கணிப்புகளை கணனி வெகுவேகமாக்கி சுலபமாக்குகிறதென்கிறீர்களே.. ஒரு மாதம் மின்சாரம் தடைப்பட்டால் நிலமை என்ன.. விஞ்ஞானத்தை நம்பி, கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தலைப் படிக்காமல்விட்ட நிலையில்.. எவ்வாறு கணக்குப் பார்க்கப் போகிறீர்கள்? அவசரத்தில் அவர் விரிவாகக் கேட்காவிட்டாலும், இப்படியும் கேட்டிருக்கலாம்.. அவர்தான் ஈழப்பிரியன் அவர்கள்!!
இதுதான் பரவாயில்லை என்று பார்த்தால்.. விட்டுக்கொடுப்பு.. முன்னேறவேண்டுமென்ற போட்டிமனப்பான்மை போன்ற உணர்வுகளை அறியாதவர்களாகவே மனிதனை ஆளாக்கி.. அவனது ஆயுளை ஆகக் கூடியது நாற்பது வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் வேலையை விஞ்ஞானமானது வெகுகச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறது எனும் சிந்தனைக்குரிய அரிய கருத்தொன்றையும் தெரிவித்திருக்கிறார் ஈழப்பிரியன் அவர்கள்.
தாயகத்திலே 80களிலே எனது உறவினர் மத்தியிலே 'சலரோகம்' என்ற வியாதி இல்லையென்று கூறுமளவிற்கு வெகு குறைவாகவே இருந்தது.. அதனால் நான் யோசித்ததுண்டு.. அந்த காலநிலையில் சலரோகம் வெகுவிரைவில் வராது என.. ஆனால் சென்ற வருடம் போனபோது.. பெரும்பாலானவர்கள் சலரோகத்துக்கு ஆட்பட்டிருந்தனர்.. அங்கும் விஞ்ஞான சாதனங்களின் பாவனை அதிகரித்திருக்கிறதுதானே.. உதாரணமாக முன்பு சைக்கிள் இருந்த வீடுகளில் எல்லாம் மோட்டார் சைக்கிள்கள்தானே.. ஆக, ஈழப்பிரியனின் கருத்தைப் பார்க்கையில் விஞ்ஞானம் மனிதனைச் சோம்பேறியாக்கி அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது..
இந்த அச்ச உணர்வைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் தற்போது 'எற்சாகப்படுத்துகிறது' என்ற அணியைச் சார்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் என்ன கூறுகிறார்கள் எனப் பார்ப்போம்..
விக்டோர்ப், அம்மு, வசி, குருவி... இவர்களுள் ஒருவரை தற்போது கருத்துகளை முன்வைக்க எதிர்பார்க்கிறோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.

