05-03-2005, 04:36 PM
நடுவர்கள் சோழியன் மாயமான் சண்முகிக்கும் முகமூடிகளுடன் சென்றிக்கு நிற்கும் கண்காணிப்பு குளுவுக்கும் நிகழ்ச்சியை நன்கு ஒழுங்கு செய்த தூயாவுக்கும் கணனிக்கு முன்னால் சக்கர நாற்காலிகளில் கொறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சி வாதிகளுக்கும் எறும்பை விட சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டிருக்கும் எமது நண்பர்களுக்கும் அமைதியுடன் இருந்து எமது வாதம்களை ரசித்துக் கொண்டிருக்கும் யாழ் கள உறுப்பினருக்கும் வணக்கம்.எதிர் தரப்பு வாதிகள் பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானம் முன்னேறியதால் எல்லோருக்கும் இருந்த இடத்தில் இருந்தே வேலை செய்ய கூடியதாக உள்ளதாக கூறி தமது சோம்பேறித் தனத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நன்றிகள்.நவீன விஞ்ஞானத்தால் சோம்பேறியாகிறோம் என்பதற்கு நிறையவே சொல்லலாம்.நான் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கூறலாம் என்று எண்ணுகிறேன்.அதாவது இப்போது பிறக்கும் பிள்ளைகள் வளர்ந்து நடக்க தொடங்க முதலே கணனியில் விளையாட கற்றுக் கொடுத்துவிடுவார்கள்.அப்படியே வளரும் பிள்ளை சிறு வயதில் பெற்றேர்கள் சொல்லிக் கொடுத்தபடியே வளர்ந்த பின்பும் தொடர்கிறார்கள்.உதாரணத்துக்கு 22 பேருடன் விளையாட வேண்டிய உதைபந்தாட்டத்தை தனித்து ஒருவர் இருந்தபடியே உடம்புக்கு ஒரு கஸ்டமும் இல்லாமல் விளையாடுகிறார். இதனால் அவர் சுத்த சோம்பேறியாவது மட்டும் அல்ல மற்றவர்களுன் சேர்ந்து விளையாடும் போது ஏற்படும் பொறாமை இல்லாமல் இருத்தல் விட்டுக் கொடுப்பு போன்றவை கூட என்னவென்று தெரியாமல் ;வளர்ந்துவிடுவார.அத்துடன் இவர்கள் 40 வயதுக்கு முதலே பலூன் உடைந்த மாதிரி டொப்பு டொப்பு என்று மண்டையைப் போட்டுவிடுவார்கள்.தப்பித் தவறி இருந்தாலும் சட்டைப்பை முட்ட மாத்திரைகளுடன் இருப்பார்.எனவே தான் நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் மனிதர்களை சோம்பேறி ஆக்குவதோடு நின்றுவிடாது மனிதரின் இருப்பையே கேள்விக்குறியாக்குகின்றது.
கடைசியில் ஈஸ்வர் கணனியில் கணக்காய்வாளர் எவ்வளவு குறுகிய நேரத்தில் வேலையை முடிக்கிறார் என்று.உண்மைதான்.ஆனால் ஒரு மாதம் மின்சாரம் நின்றுவிட்டால்அவரின் நிலைமை என்னவாகும் என்பதை எண்ணவில்லையே.நனறி வணக்கம்
இயங்கிக் கொண்டிருக்கும் எமது நண்பர்களுக்கும் அமைதியுடன் இருந்து எமது வாதம்களை ரசித்துக் கொண்டிருக்கும் யாழ் கள உறுப்பினருக்கும் வணக்கம்.எதிர் தரப்பு வாதிகள் பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானம் முன்னேறியதால் எல்லோருக்கும் இருந்த இடத்தில் இருந்தே வேலை செய்ய கூடியதாக உள்ளதாக கூறி தமது சோம்பேறித் தனத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நன்றிகள்.நவீன விஞ்ஞானத்தால் சோம்பேறியாகிறோம் என்பதற்கு நிறையவே சொல்லலாம்.நான் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் கூறலாம் என்று எண்ணுகிறேன்.அதாவது இப்போது பிறக்கும் பிள்ளைகள் வளர்ந்து நடக்க தொடங்க முதலே கணனியில் விளையாட கற்றுக் கொடுத்துவிடுவார்கள்.அப்படியே வளரும் பிள்ளை சிறு வயதில் பெற்றேர்கள் சொல்லிக் கொடுத்தபடியே வளர்ந்த பின்பும் தொடர்கிறார்கள்.உதாரணத்துக்கு 22 பேருடன் விளையாட வேண்டிய உதைபந்தாட்டத்தை தனித்து ஒருவர் இருந்தபடியே உடம்புக்கு ஒரு கஸ்டமும் இல்லாமல் விளையாடுகிறார். இதனால் அவர் சுத்த சோம்பேறியாவது மட்டும் அல்ல மற்றவர்களுன் சேர்ந்து விளையாடும் போது ஏற்படும் பொறாமை இல்லாமல் இருத்தல் விட்டுக் கொடுப்பு போன்றவை கூட என்னவென்று தெரியாமல் ;வளர்ந்துவிடுவார.அத்துடன் இவர்கள் 40 வயதுக்கு முதலே பலூன் உடைந்த மாதிரி டொப்பு டொப்பு என்று மண்டையைப் போட்டுவிடுவார்கள்.தப்பித் தவறி இருந்தாலும் சட்டைப்பை முட்ட மாத்திரைகளுடன் இருப்பார்.எனவே தான் நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் மனிதர்களை சோம்பேறி ஆக்குவதோடு நின்றுவிடாது மனிதரின் இருப்பையே கேள்விக்குறியாக்குகின்றது.
கடைசியில் ஈஸ்வர் கணனியில் கணக்காய்வாளர் எவ்வளவு குறுகிய நேரத்தில் வேலையை முடிக்கிறார் என்று.உண்மைதான்.ஆனால் ஒரு மாதம் மின்சாரம் நின்றுவிட்டால்அவரின் நிலைமை என்னவாகும் என்பதை எண்ணவில்லையே.நனறி வணக்கம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

