05-03-2005, 02:18 PM
எங்கும் எதிலும் எப்பவும் நீதி தவறாத நடுவர்(கள்) அவர்களே ! மௌனமாக இருந்தாலும் விழிப்பாகவும் உற்சாகமாகவும் பட்டிமன்றத்தை ரசித்துக் கொண்டிருக்கும் கள அன்பர்களே ஆதரவாளர்களே.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்பார்கள். உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்கள். ஊரறிந்த உண்மைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தேவையில்லை என்பதுதான் உலக நியதி.
உங்களெல்லோருக்கும் தெரிந்த உண்மை எதிரணியினர்க்கு மட்டும் தெரியாமல் போன மர்மம் என்ன. அல்லது நித்திரை கொள்பவனைப் போல் நடிக்கிறார்களா.
முதலில் எதிரணியினர் தலைப்பை வடிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் தலைப்புக்குள்ளே நின்று பேசவேண்டும்.
பட்டிமன்றத் தலைப்பை அவையோர் எல்லோரும் கவனமாகப் பாருங்கள். ஏனெனில் எதிரணியினர் தலைப்புக்கு சம்பந்தமில்லாத பல விடயங்களை இங்கு கூறி உங்கள் கவனத்தை திசைதிருப்பி விட்டிருக்கிறார்கள்.
நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உங்களை சோம்பேறியாக்குகின்றதா அல்லது உற்சாகப்படுத்துகின்றதா?
நான் இங்கே சோம்பேறியாக்கவில்லை என்பதற்கு சில தரவுகள் தருகிறேன். ஒருவன் சொன்னானாம் சோம்பேறிக்கு ஒரு பாயும் தலையணையும் மட்டுமிருந்தால் போதும் என்று அதற்கு ஒரு சோம்பேறி அவசரமாக இடைமறித்து இல்லையில்லை எனக்கு ஒரு தலையணை மட்டும் இருந்தால் போதும் பாயெல்லாம் யார் சுத்தி வைக்கிறது என்றானாம். இதுதான் உண்மையான சோம்பேறித்தனம்.
இரண்டு தலைமுறைக்கு முற்பட்ட விவசாயி ஒருவன் மண்வெட்டியை மட்டும் நம்பியிருந்த காலத்தில் விடியக்காலை மூன்று மணிக்கு தோட்டத்தில் இறங்கி மாலையில் இருட்டும் மட்டும் வேலைசெய்தான். உழவு இயந்திரம் வைத்திருக்கிற இபபோதைய விவசாயி ஒரு பத்து மணி வாக்கில் தோட்டத்துக்கு போய் அப்பிடியே ஒரு அரை மணித்தியாலத்தில் அந்த நிலத்தை உழுது போட்டு பிறகும் ஒரு அரை மணித்தியாலத்தில் மோட்டர் பம்ப் பாவித்து நீர் இறைத்து விட்டு மிகுதி நேரம் முழுக்க வீட்டில் படுத்து நித்திரை கொண்டிருந்தான் என்றால் நான் எதிரணிக்கு தலை வணங்குகிறேன். மாறாக அவன் இன்னும் பல ஏக்கர்களுக்கு தனது விவசாயத்தை விஸ்தரித்து தனது மூதாதையர் போலவே அதிகாலை எழுந்து தொழிலுக்கு போகிறானே அது ஏன்
அந்தக் காலத்தில் தனது கைப்பட ஒவ்வொரு வரவையும் செலவையும் பதிவுப் புத்தகத்தில் பதிந்துவைத்த ஒரு கணக்காளர் நவீன கணனி வசதிகளைப் பாவித்து மிகக் குறுகிய நேரத்தில் தனது வேலையை முடித்துவிட்டு சுருண்டு படுத்திருப்பாரானால் நான் எதிரணியிடம் எமது தோல்வியை ஒப்புக் கொண்டிருப்பேன். மாறாக அவர் இன்னும் பல கடைகளுக்கும் கணக்கெழுதி தனது வருமானத்தை பெருக்கியிருக்கிறார் இது ஏன்.
ஆகாய விமானத்தில் நாடு விட்டு நாடு சென்று தொழில் வளர்த்த தொழில் அதிபர் இப்போது விமானத்தில் பறப்தில் செலவழித்த தனது பொன்னான நேரத்தை தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் மிச்சம் பிடித்திருக்கிறார்.
எனது அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் முன்னர் கதிர்காமத்திந்கு போவதென்றால் வண்டில் கட்டித்தான் போவார்களாம். சொந்தபந்தமெல்லாம் வந்து கட்டிக்குளறி அழுது வழியனுப்பி வைக்குமாம். ஏனென்றால் வெளிக்கிட்டவih திரும்பி வந்தா கண்டு கொள்ள வேண்டியதுதான். ஆனால் நிலைமை இப்ப அப்படியா இருக்கு.
மேற்குறிப்பிட்ட சில உதாரணங்களில் பொதுவான ஒரு அம்சம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். எல்லா வகையிலும் வீணாகச் செலவழிக்கப் பட்ட நேரம் நவீன தொழில் நுட்பவசதிகளால் மிச்சம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நேரமும் வீணடிக்கப்படவில்லை. இன்னும் தெரியாததைத் தெரிந்து கொள்ளவும் தமது வருமானத்தைப் பெருக்குவதற்குமே பாவிக்கப்படுகிறது.
இதை எதிரணியினர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
எதிரணியில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார் புதிது புதிதாக நோய்கள் வருவதாக. வரும்தானய்யா நீங்கள் பழைய நோய்களைக் குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்க புதிதாக நோய்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். அதற்குப் பெயர்தான் இயற்கைச் சமநிலை. பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது இயற்கையின் விதி. நீங்கள் இறப்புத் தொகையைக் குறைக்க முயன்றால் மனிதர் போவதற்கும் வழி வேண்டுமல்லவா. அல்லது ஒரு சுனாமியோ நிலநடுக்கமோ கொண்டுபோகும் இது நவீன தொழில்நுட்பத்தின் தாக்கமல்ல என்பதை எதிரணியினர் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னுமொருவர் சொன்னார் 10 கிலோவைத் தூக்கிக் கொண்டு 100 மீற்றர் நடக்கக் கஸ்ரப்படுவதாக. அது உண்மைதான் நவீனதொழில் நுட்பத்தின் பின்விளைவு அது. உங்களைப் போன்ற சில சோம்பேறிகளை மேலும் சோம்பேறியாக்கி விட்டிருக்கிறது வேதனைக்குரிய விடயம். ஆனால் நாம் பேசுவது முன்னேறத் துடிக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு நவீன தொழில் நுட்பம் வைக்கும் சோதனையைப் பற்றி.
நவீன தொழில் நுட்பத்தின் தாக்கமாக வேலை வாய்ப்பின்மையைப் பற்றி ஒருவர் சொன்னார். ஆம் அதுதான் எமது வாதமும் நீ சுறுசுறுப்பாக இரு உனக்கு வேலை கிடைக்கும். நீ ஆயிரத்தில் ஒன்றாய் இருக்காதே பத்தில் ஒன்றாய் இரு. உனக்கு வேலை உண்டு. நவீன தொழில் நுட்பத்தோடு போட்டிபோடு. அதற்காக சுறுசுறுப்பாய் இரு வெற்றி உனதே.
இறுதியாக எனக்கு வாய்ப்பளித்த தூயாவுக்கும் சிறந்ததொரு முடிவை அறிவிக்கக் காத்திருக்கும் நடுவர் குழுவுக்கும் பார்வையாளர் சமூகத்திற்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்பார்கள். உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்கள். ஊரறிந்த உண்மைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தேவையில்லை என்பதுதான் உலக நியதி.
உங்களெல்லோருக்கும் தெரிந்த உண்மை எதிரணியினர்க்கு மட்டும் தெரியாமல் போன மர்மம் என்ன. அல்லது நித்திரை கொள்பவனைப் போல் நடிக்கிறார்களா.
முதலில் எதிரணியினர் தலைப்பை வடிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் தலைப்புக்குள்ளே நின்று பேசவேண்டும்.
பட்டிமன்றத் தலைப்பை அவையோர் எல்லோரும் கவனமாகப் பாருங்கள். ஏனெனில் எதிரணியினர் தலைப்புக்கு சம்பந்தமில்லாத பல விடயங்களை இங்கு கூறி உங்கள் கவனத்தை திசைதிருப்பி விட்டிருக்கிறார்கள்.
நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உங்களை சோம்பேறியாக்குகின்றதா அல்லது உற்சாகப்படுத்துகின்றதா?
நான் இங்கே சோம்பேறியாக்கவில்லை என்பதற்கு சில தரவுகள் தருகிறேன். ஒருவன் சொன்னானாம் சோம்பேறிக்கு ஒரு பாயும் தலையணையும் மட்டுமிருந்தால் போதும் என்று அதற்கு ஒரு சோம்பேறி அவசரமாக இடைமறித்து இல்லையில்லை எனக்கு ஒரு தலையணை மட்டும் இருந்தால் போதும் பாயெல்லாம் யார் சுத்தி வைக்கிறது என்றானாம். இதுதான் உண்மையான சோம்பேறித்தனம்.
இரண்டு தலைமுறைக்கு முற்பட்ட விவசாயி ஒருவன் மண்வெட்டியை மட்டும் நம்பியிருந்த காலத்தில் விடியக்காலை மூன்று மணிக்கு தோட்டத்தில் இறங்கி மாலையில் இருட்டும் மட்டும் வேலைசெய்தான். உழவு இயந்திரம் வைத்திருக்கிற இபபோதைய விவசாயி ஒரு பத்து மணி வாக்கில் தோட்டத்துக்கு போய் அப்பிடியே ஒரு அரை மணித்தியாலத்தில் அந்த நிலத்தை உழுது போட்டு பிறகும் ஒரு அரை மணித்தியாலத்தில் மோட்டர் பம்ப் பாவித்து நீர் இறைத்து விட்டு மிகுதி நேரம் முழுக்க வீட்டில் படுத்து நித்திரை கொண்டிருந்தான் என்றால் நான் எதிரணிக்கு தலை வணங்குகிறேன். மாறாக அவன் இன்னும் பல ஏக்கர்களுக்கு தனது விவசாயத்தை விஸ்தரித்து தனது மூதாதையர் போலவே அதிகாலை எழுந்து தொழிலுக்கு போகிறானே அது ஏன்
அந்தக் காலத்தில் தனது கைப்பட ஒவ்வொரு வரவையும் செலவையும் பதிவுப் புத்தகத்தில் பதிந்துவைத்த ஒரு கணக்காளர் நவீன கணனி வசதிகளைப் பாவித்து மிகக் குறுகிய நேரத்தில் தனது வேலையை முடித்துவிட்டு சுருண்டு படுத்திருப்பாரானால் நான் எதிரணியிடம் எமது தோல்வியை ஒப்புக் கொண்டிருப்பேன். மாறாக அவர் இன்னும் பல கடைகளுக்கும் கணக்கெழுதி தனது வருமானத்தை பெருக்கியிருக்கிறார் இது ஏன்.
ஆகாய விமானத்தில் நாடு விட்டு நாடு சென்று தொழில் வளர்த்த தொழில் அதிபர் இப்போது விமானத்தில் பறப்தில் செலவழித்த தனது பொன்னான நேரத்தை தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் மிச்சம் பிடித்திருக்கிறார்.
எனது அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் முன்னர் கதிர்காமத்திந்கு போவதென்றால் வண்டில் கட்டித்தான் போவார்களாம். சொந்தபந்தமெல்லாம் வந்து கட்டிக்குளறி அழுது வழியனுப்பி வைக்குமாம். ஏனென்றால் வெளிக்கிட்டவih திரும்பி வந்தா கண்டு கொள்ள வேண்டியதுதான். ஆனால் நிலைமை இப்ப அப்படியா இருக்கு.
மேற்குறிப்பிட்ட சில உதாரணங்களில் பொதுவான ஒரு அம்சம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். எல்லா வகையிலும் வீணாகச் செலவழிக்கப் பட்ட நேரம் நவீன தொழில் நுட்பவசதிகளால் மிச்சம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நேரமும் வீணடிக்கப்படவில்லை. இன்னும் தெரியாததைத் தெரிந்து கொள்ளவும் தமது வருமானத்தைப் பெருக்குவதற்குமே பாவிக்கப்படுகிறது.
இதை எதிரணியினர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
எதிரணியில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார் புதிது புதிதாக நோய்கள் வருவதாக. வரும்தானய்யா நீங்கள் பழைய நோய்களைக் குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்க புதிதாக நோய்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கும். அதற்குப் பெயர்தான் இயற்கைச் சமநிலை. பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது இயற்கையின் விதி. நீங்கள் இறப்புத் தொகையைக் குறைக்க முயன்றால் மனிதர் போவதற்கும் வழி வேண்டுமல்லவா. அல்லது ஒரு சுனாமியோ நிலநடுக்கமோ கொண்டுபோகும் இது நவீன தொழில்நுட்பத்தின் தாக்கமல்ல என்பதை எதிரணியினர் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னுமொருவர் சொன்னார் 10 கிலோவைத் தூக்கிக் கொண்டு 100 மீற்றர் நடக்கக் கஸ்ரப்படுவதாக. அது உண்மைதான் நவீனதொழில் நுட்பத்தின் பின்விளைவு அது. உங்களைப் போன்ற சில சோம்பேறிகளை மேலும் சோம்பேறியாக்கி விட்டிருக்கிறது வேதனைக்குரிய விடயம். ஆனால் நாம் பேசுவது முன்னேறத் துடிக்கும் இளைஞர் சமுதாயத்திற்கு நவீன தொழில் நுட்பம் வைக்கும் சோதனையைப் பற்றி.
நவீன தொழில் நுட்பத்தின் தாக்கமாக வேலை வாய்ப்பின்மையைப் பற்றி ஒருவர் சொன்னார். ஆம் அதுதான் எமது வாதமும் நீ சுறுசுறுப்பாக இரு உனக்கு வேலை கிடைக்கும். நீ ஆயிரத்தில் ஒன்றாய் இருக்காதே பத்தில் ஒன்றாய் இரு. உனக்கு வேலை உண்டு. நவீன தொழில் நுட்பத்தோடு போட்டிபோடு. அதற்காக சுறுசுறுப்பாய் இரு வெற்றி உனதே.
இறுதியாக எனக்கு வாய்ப்பளித்த தூயாவுக்கும் சிறந்ததொரு முடிவை அறிவிக்கக் காத்திருக்கும் நடுவர் குழுவுக்கும் பார்வையாளர் சமூகத்திற்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
!

