05-03-2005, 04:48 AM
அடுத்து நிதர்சன் அவர்கள் வானொலிகளுடன் வருகிறார்... 'கடந்த சில மாதங்களுக்கு முன் புதினம் இணையம் செயல் இழந்த போது எமது வானொலிகள் சிலவற்றில் செய்திகள் நிறுத்தப்பட்டன காரணம் அவர்கள் அந்த செய்திகளை புதினத்தில் இருந்தே பெற்று வெளியிட்டு வந்தனர்.' ஆக, விஞ்ஞானம் ஊடகங்கவியலாளர்களையும் சோம்பேறியாக்குகின்றது என்கிறார்..
நானும் ஒரு வானொலி கேட்டேன்.. செய்தி வாசிக்கும்போது பின்னணி இசை போகிறது.. தலைப்புச் செய்திகள்.. சிறிதுநேரம் இடைவெளி.. ஆனால் பின்னணியில் இசை.. பிறகு ஒவ்வொரு செய்திகள்.. இடையில் வரும் இடைவெளியில் பின்னணி இசை.. பிறகுதான் தெரிந்தது.. புதினம் முன்பக்கத்திலுள்ள செய்திகளை தலைப்பு செய்திகளாக வாசிக்கிறார்கள்.. மெளசால் அதற்குரிய பக்கங்களை அழுத்தி.. விரிவான செய்திகளை வாசிக்க எடுக்கும் நேர தாமத்தை பின்னணி இசையால் நிரவி சமாளிக்கிறார்கள்.. பேப்பரில்லாமல் பேனை இல்லாமல் அலைச்சலில்லாமல்... நல்ல முன்னேற்றம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தொலைபேசி காதலர்களை சோம்பேறியாக்குகிறது.. அருமையாகச் சொன்னார்.. காதலின் மென்மையே முகபாவங்களில்தானே குவிந்திருக்கிறது.. அதை இந்த விஞ்ஞானம் தொலைபேசியால் தொலைத்துவிட்டது.. தென்றல்வீசும் பூங்காவில் பறந்தாடும் கூந்தல் வாசத்தில் கிறங்கிக் கதைபேசும் கணங்களை.. விஞ்ஞானம் தந்த சோம்பேறித்தனம் தூக்கி எறிந்துவிட்டது என்று அனுபவித்தவர்போலச் சொல்கிறார்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அதுமட்டுமா.. சோம்பேறித்தனத்தால் உலகின் சனத்தொகை அதிகரிக்கப் போகிறது என்று ஒரு குண்டையும் தூக்கிப் போடுகிறார்? சோம்பேறிகளால் எதையுமே செய்ய முடியாதே.. எப்படி ஐயா சனத்தொகைமட்டும் அதிகரிக்கும்.. அவரது அணியிலுள்ளவர்கள் விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்ப்போம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலையில்லாதோர் தொகை அதிகரிக்கிறது.. அதேபோல அவர் முன்பு கூறியவாறு சனத்தொகை அதிகரிப்பாலும் வேலையற்றோர்தொகை அதிகரிக்கிறது.. ஆக விஞ்ஞானம் வேலையற்றோர் தொகையை அதிகரிக்கச் செய்து மனிதனைச் சோம்பேறியாக்குகிறது என்கிறார்..
அதுமட்டுமா..
"ஏணியால் நாங்கள் ஏறி விட்டு ஏணி சரியில்லை என்று சொல்ல வில்லை அதற்க்கு முன்னரே நாங்கள் சொல்லி விட்டோம். கேட்காமல் நீங்கள் ஏறி விட்டீர்கள் உங்களை பத்திரமாக இறக்க வேண்டியது எங்கள் கடமையாகி விட்டது... தொழிநுட்ப சாக்கடைக்குள் நீங்கள் நீந்துவதால் அதன் விளைவுகள் உங்களுக்கு இப்பொது புரியப் போவதில்லை காரணம் அதனால் நீங்கள் சோம்பொறியாய் இருக்கின்றீர்கள்."
இதுமட்டுமா?
"இருட்டிலே மனிதன் வாழ்கையிலே மிகவும் உற்சாகமாக நிலவொளியில் வேலை செய்தான் ஆனால் இன்று நிலவொளியை காணமுடியாதபடி உங்கள் மின்னொளிகள் மறைத்து இயற்கையை கொன்று விட்டிருக்கின்றது."
இறுதியாக,
"விமானம் ஏறி மட்டுந்தான் வெளி நாடு வரவேண்டும் என்று எதிர்தரப்பில் குளக்கோட்டன் குதர்கமாக கூறியிருந்தார். ஆனால் அந்த காலத்தில் கப்பலோட்டி தமிழர் பிரித்தானியா வரவில்லையா?" என்றும் கேட்டிருக்கிறார்.
அடுத்து, 'உற்சாகப்படுத்துகிறது' என்ற அணியிலிருந்து என்ன கருத்துகள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இனி கருத்துகளை முன்வைக்க, 'உற்சாகப்படுத்துகிறது' என்ற அணியிலிருந்து ஈஸ்வர், விக்டோர்ப், அம்மு, வசி ஆகிய நான்கு யாழ் கள அன்புறவுகளும்... 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து சிம்ரன்2005, ஈழப்பிரியன், நிலவன், இளைஞன், மதன் ஆகிய ஐந்து யாழ் கள அன்புறவுகளும் உள்ளனர்.
அதைத் தொடர்ந்து அணித்தலைவர்கள் தமது தொகுப்புரையை வழங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.
(விழா அமைப்பாளர் தூயா அவர்கள் அவசரமாக மேடைக்கு அழைக்கப்படுகிறார்.. மேடைக்கு சோடாப் போத்தல்கள் இன்னும் வந்து சேரவில்லை.. அவை வந்தால்தான் வீடீயோவுக்கு வடிவா இருக்கும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> )
நானும் ஒரு வானொலி கேட்டேன்.. செய்தி வாசிக்கும்போது பின்னணி இசை போகிறது.. தலைப்புச் செய்திகள்.. சிறிதுநேரம் இடைவெளி.. ஆனால் பின்னணியில் இசை.. பிறகு ஒவ்வொரு செய்திகள்.. இடையில் வரும் இடைவெளியில் பின்னணி இசை.. பிறகுதான் தெரிந்தது.. புதினம் முன்பக்கத்திலுள்ள செய்திகளை தலைப்பு செய்திகளாக வாசிக்கிறார்கள்.. மெளசால் அதற்குரிய பக்கங்களை அழுத்தி.. விரிவான செய்திகளை வாசிக்க எடுக்கும் நேர தாமத்தை பின்னணி இசையால் நிரவி சமாளிக்கிறார்கள்.. பேப்பரில்லாமல் பேனை இல்லாமல் அலைச்சலில்லாமல்... நல்ல முன்னேற்றம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> தொலைபேசி காதலர்களை சோம்பேறியாக்குகிறது.. அருமையாகச் சொன்னார்.. காதலின் மென்மையே முகபாவங்களில்தானே குவிந்திருக்கிறது.. அதை இந்த விஞ்ஞானம் தொலைபேசியால் தொலைத்துவிட்டது.. தென்றல்வீசும் பூங்காவில் பறந்தாடும் கூந்தல் வாசத்தில் கிறங்கிக் கதைபேசும் கணங்களை.. விஞ்ஞானம் தந்த சோம்பேறித்தனம் தூக்கி எறிந்துவிட்டது என்று அனுபவித்தவர்போலச் சொல்கிறார்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அதுமட்டுமா.. சோம்பேறித்தனத்தால் உலகின் சனத்தொகை அதிகரிக்கப் போகிறது என்று ஒரு குண்டையும் தூக்கிப் போடுகிறார்? சோம்பேறிகளால் எதையுமே செய்ய முடியாதே.. எப்படி ஐயா சனத்தொகைமட்டும் அதிகரிக்கும்.. அவரது அணியிலுள்ளவர்கள் விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்ப்போம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலையில்லாதோர் தொகை அதிகரிக்கிறது.. அதேபோல அவர் முன்பு கூறியவாறு சனத்தொகை அதிகரிப்பாலும் வேலையற்றோர்தொகை அதிகரிக்கிறது.. ஆக விஞ்ஞானம் வேலையற்றோர் தொகையை அதிகரிக்கச் செய்து மனிதனைச் சோம்பேறியாக்குகிறது என்கிறார்..
அதுமட்டுமா..
"ஏணியால் நாங்கள் ஏறி விட்டு ஏணி சரியில்லை என்று சொல்ல வில்லை அதற்க்கு முன்னரே நாங்கள் சொல்லி விட்டோம். கேட்காமல் நீங்கள் ஏறி விட்டீர்கள் உங்களை பத்திரமாக இறக்க வேண்டியது எங்கள் கடமையாகி விட்டது... தொழிநுட்ப சாக்கடைக்குள் நீங்கள் நீந்துவதால் அதன் விளைவுகள் உங்களுக்கு இப்பொது புரியப் போவதில்லை காரணம் அதனால் நீங்கள் சோம்பொறியாய் இருக்கின்றீர்கள்."
இதுமட்டுமா?
"இருட்டிலே மனிதன் வாழ்கையிலே மிகவும் உற்சாகமாக நிலவொளியில் வேலை செய்தான் ஆனால் இன்று நிலவொளியை காணமுடியாதபடி உங்கள் மின்னொளிகள் மறைத்து இயற்கையை கொன்று விட்டிருக்கின்றது."
இறுதியாக,
"விமானம் ஏறி மட்டுந்தான் வெளி நாடு வரவேண்டும் என்று எதிர்தரப்பில் குளக்கோட்டன் குதர்கமாக கூறியிருந்தார். ஆனால் அந்த காலத்தில் கப்பலோட்டி தமிழர் பிரித்தானியா வரவில்லையா?" என்றும் கேட்டிருக்கிறார்.
அடுத்து, 'உற்சாகப்படுத்துகிறது' என்ற அணியிலிருந்து என்ன கருத்துகள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இனி கருத்துகளை முன்வைக்க, 'உற்சாகப்படுத்துகிறது' என்ற அணியிலிருந்து ஈஸ்வர், விக்டோர்ப், அம்மு, வசி ஆகிய நான்கு யாழ் கள அன்புறவுகளும்... 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து சிம்ரன்2005, ஈழப்பிரியன், நிலவன், இளைஞன், மதன் ஆகிய ஐந்து யாழ் கள அன்புறவுகளும் உள்ளனர்.
அதைத் தொடர்ந்து அணித்தலைவர்கள் தமது தொகுப்புரையை வழங்குவார்கள் என எதிர்பார்ப்போம்.
(விழா அமைப்பாளர் தூயா அவர்கள் அவசரமாக மேடைக்கு அழைக்கப்படுகிறார்.. மேடைக்கு சோடாப் போத்தல்கள் இன்னும் வந்து சேரவில்லை.. அவை வந்தால்தான் வீடீயோவுக்கு வடிவா இருக்கும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> )
.

