05-03-2005, 04:17 AM
ஆடத்து குளக்காட்டான் கருத்துக்களை அள்ளிக்கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்.. விஞ்ஞானம் தந்த விமானத்தில் புலம் வந்து.. (ம்.. பலர் விமானத்தால் மட்டுமா வந்தார்கள்.. கையால் விசா கீறி.. படம் ஒட்டியும் வந்தார்கள்) இணையத்தில் பட்டிமன்றம் நடாத்திக்கொண்டு சோம்பேறியாக்குகிறது என்றால் என்னையா அர்த்தம் என்று ஆரம்பிக்கிறார்.. தொலைபேசியைப் பற்றி சொன்னார்.. விவசாய உற்பத்திப் பெருக்கத்தைப்பற்றி விபரித்தார்... நோய்களால் ஏற்படும் இழப்புகளின் குறைப்பை சுட்டிக்காட்டினார்... விஞ்ஞானம் வசதிகளைத் தந்திருக்கிறது.. அதற்காக மனிதன் புலம்பெயர்கிறான்.. விஞ்ஞானத்தின் விளைவுகளால் மனிதனின் தேடல் அதிகரிக்கிறது.. தேடல் மனிதனை உற்சாகப்படுத்துகிறதே ஒழிய சோம்பேறியாக்கவில்லை என்று ஆணித்தரமாக கருத்தை முன்வைத்த குளக்காட்டானுக்கு நன்றிகள்.. இதற்கு அடுத்த அணியிலிருந்து என்ன கருத்து வருகிறது என்று பார்க்கலாம்.
.

