05-01-2005, 02:27 AM
நான் மைக்கை விடுவதற்கு முன்னரே, மைக்கைப் பறித்து தனது வாதங்களை ஆரம்பித்துவிட்டார் 'உற்சாகப்படுத்துகின்றது' என்ற அணியையின் தலைவர் வசம்பு அவர்கள்.. விஞ்ஞானத்திற்கு உதாரணமாக இணையத்தை எடுத்து அதன் அனுகூலத்தை கூறினார். அடுத்து ஷியாம் அணியிலுள்ளவரை அழைப்பதற்கிடையில் குறக்கிட்ட குறும்பன் அவர்கள், மைக் பிடிப்பது புதுப்பழக்கமாதலால் ஆரம்பத்தில் கோழியான்.. சோழியான் எனத் தடுமாறினாலும்... குரங்கின் கைப் பூமாலையாக இல்லாமல் விஞ்ஞானமானது விளங்கிக் கொண்டவர்களால் பயன்பாடடைகிறது என்றுமட்டுமல்ல.. விஞ்ஞானத்தின் துரித வளர்ச்சியால் வேலையில்லாப் பிரச்சினைகள் தோன்றினாலும், அது நாளடைவில் சரியாகும் எனவும் எதிர்வு கூறினார்.
(சண்முகி பார்வையாளரின் ஏகோபித்த ஆதரவுடன் மேடைக்கு வந்துகொண்டிருக்கிறார்.. பார்வையாளரை விலத்தி வர தாமதமாகிறது போலுள்ளது.. அதை நான் பார்க்க.. வசம்பு அவர்களின் கருத்தால் உணுர்ச்சிவசப்பட்ட நிலையில் ஷியாம் அவர்கள் முந்திக்கொண்டுவிட்டார்.. எனினும் அவரது கருத்துகள் விதிமுறைக்கேற்ப கவனத்தில் எடுக்கப்படமாட்டா.. ஆனால் அதே கருத்தை அவரது அணியிலுள்ள வேறு யாராவது முன்வைக்கலாம்.. அல்லது ஷியாம் அவர்கள் இறுதியில் தனது தொகுப்புரையில் அவற்றை இணைத்துக் கொள்ளலாம்.)
தலைவர்கள் கவனிக்கவும்.. இறுதியில் தங்களுக்கு வரும் சந்தர்ப்பத்தை ஒரு தொகுப்புரையாக.. அதாவது அவரவர் அணியினர் முன்வைத்த கருத்துகளின் தொகுப்பாகவும்.. எதிரணியினரின் கருத்துக்கு முன்வைத்த பதில்களின் தொகுப்பாகவும் பயன்படுத்துங்கள்.. விவாதம் தொடரும்போது ஏற்கெனவே கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு, புதிதாக ஏதாவது கருத்து தோன்றினால்.. அவற்றை அடுத்து கருத்து முன்வைக்கும் அணி சார்ந்தவர்களுக்கு தனிச்செய்தியில்.. அல்லது மெயிலில் முன்வையுங்கள்.
பார்வையாளர்கள் பட்டிமன்றத்தின் போக்கை திசைதிருப்பாதவாறு உற்சாகப்படுத்தும் நோக்கில் கருத்துகளை முன்வைப்பதில் தவறில்லை. அவை பட்டிமன்றத்தில் பங்குபற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் கருத்துகளாகவே கருதப்படும். பட்டிமன்றத்தின் தீர்ப்புக்கு அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
இனி.. விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற அணியில் இருந்து ஒருவரது கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.. பொறுமையாக ஆறுதலாக ஆணித்தரமாக தங்களின் கருத்தை முன்வைக்க வாழ்த்துக்கள்.
(சண்முகி பார்வையாளரின் ஏகோபித்த ஆதரவுடன் மேடைக்கு வந்துகொண்டிருக்கிறார்.. பார்வையாளரை விலத்தி வர தாமதமாகிறது போலுள்ளது.. அதை நான் பார்க்க.. வசம்பு அவர்களின் கருத்தால் உணுர்ச்சிவசப்பட்ட நிலையில் ஷியாம் அவர்கள் முந்திக்கொண்டுவிட்டார்.. எனினும் அவரது கருத்துகள் விதிமுறைக்கேற்ப கவனத்தில் எடுக்கப்படமாட்டா.. ஆனால் அதே கருத்தை அவரது அணியிலுள்ள வேறு யாராவது முன்வைக்கலாம்.. அல்லது ஷியாம் அவர்கள் இறுதியில் தனது தொகுப்புரையில் அவற்றை இணைத்துக் கொள்ளலாம்.)
தலைவர்கள் கவனிக்கவும்.. இறுதியில் தங்களுக்கு வரும் சந்தர்ப்பத்தை ஒரு தொகுப்புரையாக.. அதாவது அவரவர் அணியினர் முன்வைத்த கருத்துகளின் தொகுப்பாகவும்.. எதிரணியினரின் கருத்துக்கு முன்வைத்த பதில்களின் தொகுப்பாகவும் பயன்படுத்துங்கள்.. விவாதம் தொடரும்போது ஏற்கெனவே கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு, புதிதாக ஏதாவது கருத்து தோன்றினால்.. அவற்றை அடுத்து கருத்து முன்வைக்கும் அணி சார்ந்தவர்களுக்கு தனிச்செய்தியில்.. அல்லது மெயிலில் முன்வையுங்கள்.
பார்வையாளர்கள் பட்டிமன்றத்தின் போக்கை திசைதிருப்பாதவாறு உற்சாகப்படுத்தும் நோக்கில் கருத்துகளை முன்வைப்பதில் தவறில்லை. அவை பட்டிமன்றத்தில் பங்குபற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் கருத்துகளாகவே கருதப்படும். பட்டிமன்றத்தின் தீர்ப்புக்கு அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
இனி.. விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற அணியில் இருந்து ஒருவரது கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.. பொறுமையாக ஆறுதலாக ஆணித்தரமாக தங்களின் கருத்தை முன்வைக்க வாழ்த்துக்கள்.
.

