04-30-2005, 04:03 PM
வணக்கம் யாழ் உறவுகளே!
நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? என்ற தலைப்பில் தூயா அவர்கள் இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்குபடுத்தியுள்ளார். அவரது இம்முயற்சிக்கு எல்லோரும் ஒத்துழைத்து, இப்பட்டிமன்றமானது மிகவும் சிறப்பாகவும் தரமாகவும் நிகழ ஆதரவு வழங்குவார்கள் என நம்புகிறேன்.
மேலும், தினமும் விஞ்ஞான ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் மனிதகுல மேம்பாட்டுக்கு சாதனைகளையும்ää கூடவே சோதனைகளையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை எமது வாழ்வில் கண்டுகொண்டு வருகிறோம். அந்த வகையிலே விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உட்சாகப்படுத்துகின்றதா அல்லது சோம்பேறியாக்குகின்றதா என்ற தலைப்பில் இடம்பெறும் தரவுகள் ஒருகணமாவது வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டினால், இப்பட்டிமன்றம் தனது நோக்கத்தில் வெற்றியடைந்தது எனக் கருத இடமுண்டு. அந்தவகையில் இரு அணிகளிடமிருந்தும் காத்திரமான கருத்துகளை விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.
முதலில் கருத்துகளை முன்வைத்த ஷியாம் அவர்கள், பத்திரிகை வாங்க காலை எழுந்து செல்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மையை கணனி தடைசெய்து, மனிதனை சோம்பேறியாக்குகிறது என்று தனது கருத்தை வைத்து, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற தனது வாதத்தை ஆரம்பித்துள்ளார்.
இனி, இதை வெட்டிக் கருத்துக் கூறுவதோடு, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதற்கு வலுச்சேர்க்கும் கருத்துகளை முன்வைக்க, 'உற்சாகப்படுத்துகின்றது' என்ற அணியிலிருந்து வசம்புவை அல்லது அவரது அணியிலிருந்து ஒருவரை அழைக்கிறேன்.
நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? என்ற தலைப்பில் தூயா அவர்கள் இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்குபடுத்தியுள்ளார். அவரது இம்முயற்சிக்கு எல்லோரும் ஒத்துழைத்து, இப்பட்டிமன்றமானது மிகவும் சிறப்பாகவும் தரமாகவும் நிகழ ஆதரவு வழங்குவார்கள் என நம்புகிறேன்.
மேலும், தினமும் விஞ்ஞான ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் மனிதகுல மேம்பாட்டுக்கு சாதனைகளையும்ää கூடவே சோதனைகளையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை எமது வாழ்வில் கண்டுகொண்டு வருகிறோம். அந்த வகையிலே விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உட்சாகப்படுத்துகின்றதா அல்லது சோம்பேறியாக்குகின்றதா என்ற தலைப்பில் இடம்பெறும் தரவுகள் ஒருகணமாவது வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டினால், இப்பட்டிமன்றம் தனது நோக்கத்தில் வெற்றியடைந்தது எனக் கருத இடமுண்டு. அந்தவகையில் இரு அணிகளிடமிருந்தும் காத்திரமான கருத்துகளை விளக்கமாக எதிர்பார்க்கிறேன்.
முதலில் கருத்துகளை முன்வைத்த ஷியாம் அவர்கள், பத்திரிகை வாங்க காலை எழுந்து செல்வதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மையை கணனி தடைசெய்து, மனிதனை சோம்பேறியாக்குகிறது என்று தனது கருத்தை வைத்து, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற தனது வாதத்தை ஆரம்பித்துள்ளார்.
இனி, இதை வெட்டிக் கருத்துக் கூறுவதோடு, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதற்கு வலுச்சேர்க்கும் கருத்துகளை முன்வைக்க, 'உற்சாகப்படுத்துகின்றது' என்ற அணியிலிருந்து வசம்புவை அல்லது அவரது அணியிலிருந்து ஒருவரை அழைக்கிறேன்.
.

