04-29-2005, 08:19 PM
நேசன் Wrote:தமிழ் மக்களின் விடுதலையே உணர்வாக கொண்டு வேறு அமைப்பில் இயங்கி,பின்பு எது சரி என்று உணர்ந்து , விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வே சிங்கள வர்க்கத்தை வெல்ல முடியும் என்ற திடமான நம்பிக்கையோடு ,அதற்கு ஆதரவாக பத்திரிகை மூலம் குரல் கொடுத்த பத்திரிகையாளர் சிவராம் அவர்களூக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை நோர்வே தமிழர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்த் தேசியப்போராட்டத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டேன் என்ற உறுதியுடன் இறக்கும் வரையும் தமிழ்த்தேசியத்துக்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

