04-24-2005, 05:10 PM
தெற்கில் எண்ணெய்க் குதங்கள்
சீன அரசுக்கு குத்தகைக்கு!
இதனால் இந்தியா அதிருப்தி நிலை
அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய்த்தாங்கிகள் சீன அர சுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. இதற் கான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட சீன - இலங்கை அரசுகள் இணக்கம் கண்டுள் ளன.
அம்பாந்தோட்டையில் உள்ள எரிபொருள் தாங்கிகளைப் புனரமைத்து அவற்றில் எரி பொருளை நிரப்பி இந்து சமுத்திரப் பிராந்தியத் தில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருளை நிரப்பும் திட்டத்தை சீன அரசு நடைமுறைப் படுத்தவுள்ளது. சீன அரசின் இந்தத் திட்டம் இந்தியத் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கையால் இந்தியா வுக்குப் பொருளாதார ரீதியான இழப்புகள் ஏற் படும் என்று இந்தியப் பொருளாதார நிபுணர் களால் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை அடுத்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு பாதிப்படையும் வாய்ப்பு உருவாகி இருப் பதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை இலங்கை அரசு ஏற்கனவே இந்தி யாவுக்கு வழங்கியுள்ளது. இது போன்று வெளி நாடுகளுக்கு எண்ணெய்க் குதங்களைக் குத் தகைக்கு வழங்குவதனால் அதுபற்றி இலங்கை அரசு முன் கூட்டியே இந்தியத் தரப்புக்குத் தெரியப் படுத்தியிருக்கவேண்டும். இத்தகைய இணக்கப்பாட்டை மீறும் வகையில் சீனாவு டன் இலங்கை உடன்படிக்கை ஒன்றை எட்டி இருப்பது குறித்து இந்தியா அதிருப்தி அடைந் துள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
நன்றி: உதயன்
சீன அரசுக்கு குத்தகைக்கு!
இதனால் இந்தியா அதிருப்தி நிலை
அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய்த்தாங்கிகள் சீன அர சுக்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன. இதற் கான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட சீன - இலங்கை அரசுகள் இணக்கம் கண்டுள் ளன.
அம்பாந்தோட்டையில் உள்ள எரிபொருள் தாங்கிகளைப் புனரமைத்து அவற்றில் எரி பொருளை நிரப்பி இந்து சமுத்திரப் பிராந்தியத் தில் செல்லும் கப்பல்களுக்கு எரிபொருளை நிரப்பும் திட்டத்தை சீன அரசு நடைமுறைப் படுத்தவுள்ளது. சீன அரசின் இந்தத் திட்டம் இந்தியத் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கையால் இந்தியா வுக்குப் பொருளாதார ரீதியான இழப்புகள் ஏற் படும் என்று இந்தியப் பொருளாதார நிபுணர் களால் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை அடுத்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு பாதிப்படையும் வாய்ப்பு உருவாகி இருப் பதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை இலங்கை அரசு ஏற்கனவே இந்தி யாவுக்கு வழங்கியுள்ளது. இது போன்று வெளி நாடுகளுக்கு எண்ணெய்க் குதங்களைக் குத் தகைக்கு வழங்குவதனால் அதுபற்றி இலங்கை அரசு முன் கூட்டியே இந்தியத் தரப்புக்குத் தெரியப் படுத்தியிருக்கவேண்டும். இத்தகைய இணக்கப்பாட்டை மீறும் வகையில் சீனாவு டன் இலங்கை உடன்படிக்கை ஒன்றை எட்டி இருப்பது குறித்து இந்தியா அதிருப்தி அடைந் துள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
நன்றி: உதயன்

