04-24-2005, 12:41 PM
புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை அமெரிக்க அரசு எதிர்க்கவில்லை!
விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை அமெரிக்கா எதிர்க்கவில்லையென அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்க உதவிச் செயலாளர் கிரிஸ்ரினா றொக்கா தெரிவித்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று முந்தினம் மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நூல்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இத்தகவலை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கடந்த வாரம் அமெரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இத் தகவலை தம்மிடம் வெளியிட்டதாக தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் அமரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா றொக்காவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு சந்தித்தது. யுத்தநிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்று ஆண்டுகளாகின்றன. இக்காலப் பகுதியில் அரசியல்தீர்வு ஒன்றைக் காணும் முயற்சியில் விடுதலைப்புலிகள் உறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால்ää இம்மூன்று வருட காலத்தில் அரசாங்கம் மேற்கொண்டுவந்துள்ள நடவடிக்கைகளோää விடுதலைப் புலிகளை இப்பாதையில் தொடர்ந்து செல்வதை ஊக்குவிப்பதாக அமையவில்லை என்பதை நாம் கிறிஸ்ரினா றொக்காவுக்கு தெரியப்படுத்தினோம். றொக்காவும் அதனை ஏற்றுக்கொண்டார்.
இன்று விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசாங்கத்தைக் கொண்டுவந்தது விடுதலைப் புலிகளின் ஆயுத பலம்தான் என்பதையும் கிறிஸ்ரினா றொக்காவிடம் வலியுறுத்தினோம். அப்போதான் விடுதலைப்புலிகளின் வன்முறையைத்தான் நாம் எதிர்க்கின்றோம். தனிநாட்டுக் கோரிக்கையை அல்ல. அவர்கள் வன்முறையைக் கைவிடுவதாக அறிவித்தால்ää அவர்களுடன் நெருக்கமாக பணிபுரியமுடியும். என்றும் கிறிஸ்ரினா றொக்கா முதல் தடவையாக எம்மிடம் தெரிவித்தார். என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
நன்றி: சங்கதி
விடுதலைப்புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை அமெரிக்கா எதிர்க்கவில்லையென அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்க உதவிச் செயலாளர் கிரிஸ்ரினா றொக்கா தெரிவித்தாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று முந்தினம் மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நூல்வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இத்தகவலை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கடந்த வாரம் அமெரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இத் தகவலை தம்மிடம் வெளியிட்டதாக தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் அமரிக்க பிரதி இராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா றொக்காவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு சந்தித்தது. யுத்தநிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு மூன்று ஆண்டுகளாகின்றன. இக்காலப் பகுதியில் அரசியல்தீர்வு ஒன்றைக் காணும் முயற்சியில் விடுதலைப்புலிகள் உறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால்ää இம்மூன்று வருட காலத்தில் அரசாங்கம் மேற்கொண்டுவந்துள்ள நடவடிக்கைகளோää விடுதலைப் புலிகளை இப்பாதையில் தொடர்ந்து செல்வதை ஊக்குவிப்பதாக அமையவில்லை என்பதை நாம் கிறிஸ்ரினா றொக்காவுக்கு தெரியப்படுத்தினோம். றொக்காவும் அதனை ஏற்றுக்கொண்டார்.
இன்று விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசாங்கத்தைக் கொண்டுவந்தது விடுதலைப் புலிகளின் ஆயுத பலம்தான் என்பதையும் கிறிஸ்ரினா றொக்காவிடம் வலியுறுத்தினோம். அப்போதான் விடுதலைப்புலிகளின் வன்முறையைத்தான் நாம் எதிர்க்கின்றோம். தனிநாட்டுக் கோரிக்கையை அல்ல. அவர்கள் வன்முறையைக் கைவிடுவதாக அறிவித்தால்ää அவர்களுடன் நெருக்கமாக பணிபுரியமுடியும். என்றும் கிறிஸ்ரினா றொக்கா முதல் தடவையாக எம்மிடம் தெரிவித்தார். என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
நன்றி: சங்கதி

