04-23-2005, 08:50 PM
இலங்கை கொழும்பில் பயங்கரவாதத் தடுப்பு உளவுத் துறையில் பணியாற்றி வந்த அதிகாரி ரி. ஜெயரட்ணம் அவர்களைக் கடந்த இரண்டு நாட்களாகக் காணவில்லை என்று பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த செய்திகள் பற்றி இலங்கை பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ பேசிய போது - பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருடன் இரவு உணவுக்குப் போன அவர் திரும்பி வரவில்லை என்றும், இந்த விஷயம் தொடர்பாக சர்வதேச உதவிகளும் நாடப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
ஜெயரட்ணத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்றும். எந்த ஒரு குழு மீதோ அல்லது தனிப்பட்ட நபர் மீதோ தாங்கள் இப்போது சந்தேகம் கொள்ளவில்லை என்றும், வழக்கம் போல திறந்த கண்ணோட்டத்துடன் அனைத்தையும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
from BBC tamil
இந்த செய்திகள் பற்றி இலங்கை பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ பேசிய போது - பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருடன் இரவு உணவுக்குப் போன அவர் திரும்பி வரவில்லை என்றும், இந்த விஷயம் தொடர்பாக சர்வதேச உதவிகளும் நாடப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
ஜெயரட்ணத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்றும். எந்த ஒரு குழு மீதோ அல்லது தனிப்பட்ட நபர் மீதோ தாங்கள் இப்போது சந்தேகம் கொள்ளவில்லை என்றும், வழக்கம் போல திறந்த கண்ணோட்டத்துடன் அனைத்தையும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
from BBC tamil
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

