04-23-2005, 01:02 PM
இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் கடத்தப்பட்டார் புளொட் இளைஞன் மீது மனைவி சந்தேகம்
கல்கிசை பொலிஸ் நிலைய பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எஸ்.ஜெயரட்ணம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1999 ஆம் ஆண்டின் பின்னர் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டதால் இவர் பொலிஸ் திணைக்களத்தில் மட்டுமல்லாது அதற்கு வெளியேயும் பிரபலமாகியிருந்தார்.
பலத்த பாதுகாப்பின் மத்தியில் கொழும்பு ஹைலெவல் வீதியிலுள்ள பொலிஸ் விடுதியில் தங்கியிருக்கும் இவர், பம்பலப்பிட்டி கள நடவடிக்கை பொலிஸ் பிரிவில் அண்மைக் காலமாக கடமையாற்றி வந்தார்.
கடந்த புதன்கிழமை இரவு, நண்பர்கள் இருவரின் அழைப்பின் பேரில் குடும்பத்தினருடன் கல்கிசை ஹோட்டலுக்கு இரவு உணவருந்தச் சென்ற இவர், அது முடிவடைந்ததும் நள்ளிரவு 11.45 மணியளவில் குடும்பத்தினரை வாகனமொன்றில் அனுப்பி விட்டு பம்பலப்பிட்டியிலுள்ள தனது பொலிஸ் அலுவலகத்திற்குச் செல்வதாகக் கூறி நண்பர்களுடன் சென்றுள்ளார்.
மறு நாள் காலை இவரது மனைவி, இவருடன் அலுவலக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது ஜெயரட்ணம் அங்கு வராதது தெரிய வந்தது.
இதையடுத்து இவர் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாமெனச் சந்தேகித்த பொலிஸார் உடனடியாக உஷாரடைந்த நாடு முழுவதிலுமுள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் உஷார்படுத்தினர்.
இதுபற்றி ஜெயரட்ணத்தின் மனைவி கூறுகையில்,
மனோ என்ற புளொட் உறுப்பினருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், வவுனியாவிலுள்ள காணி ஒன்று தொடர்பாக தொலைபேசி மூலம் உரையாடியதையடுத்து எமக்கு பழக்கம் ஏற்பட்டது.
புளொட் முகாமிலிருந்த அவர், பின்னர் அந்தக் காணி அலுவலை முடித்துத் தந்த பின்னர் அடிக்கடி தொலைபேசியில் கதைப்பார். எனது கணவருடனும் பின்னர் இவர் நண்பரானார்.
தொலைபேசி மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் இவர் எமது வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் அடிக்கடி வருவார்.
கடந்த புதன்கிழமை மாலை வீட்டிற்கு வந்த இவர், லண்டனிலிருந்து நண்பரொருவர் வந்துள்ளதாகவும் அவருக்கு தான் அன்றிரவு இரவு உணவு விருந்தளிப்பதாகவும் அதற்கு எங்களைக் குடும்பத்துடன் வருமாறும் வற்புறுத்தி அழைத்தார்.
பாதுகாப்பு காரணத்தால் வெளியே எங்கும் செல்லாத எனது கணவன், இந்த விருந்துக்குச் செல்ல இணக்கம் தெரிவித்திருந்தார். எனினும், மனோவுடன் வந்திருந்தவர் மீது எனக்கு சிறிது சந்தேகமிருந்ததால் இதனை நான் பெரிதாக விரும்பவில்லை.
எனினும், கணவரின் வற்புறுத்தலால் பிள்ளைகளுடன் இரவு 8 மணியளவில் சென்றோம். நள்ளிரவு 11.45 மணியளவில் விருந்து முடிந்ததும் எம்மை வாடகை வாகனமொன்றில் வீட்டுக்கு அனுப்பியதுடன், தான் பம்பலப்பிட்டி அலுவலகத்திற்கு செல்வதாகக் கூறி மனோவுடனும் அவருடன் வந்தவருடனும் சென்று விட்டார்.
மறுநாள் காலை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதே அவர், முதல் நாள் மாலை வெளியே சென்ற பின்னர் மீண்டும் அங்கு வராதது தெரியவந்தது.
அதேநேரம், மனோவுடனும் தொடர்பும் இல்லாது போய் விட்டது. அவர்தான் எனது கணவனை வேறு ஆட்களுடன் சேர்ந்து கடத்திச் சென்றிருக்க வேண்டுமென்றார்.
இவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளதுடன், வடக்கு, கிழக்கு உட்பட படையினரும் பொலிஸாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தினக்குரல்
கல்கிசை பொலிஸ் நிலைய பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எஸ்.ஜெயரட்ணம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1999 ஆம் ஆண்டின் பின்னர் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டதால் இவர் பொலிஸ் திணைக்களத்தில் மட்டுமல்லாது அதற்கு வெளியேயும் பிரபலமாகியிருந்தார்.
பலத்த பாதுகாப்பின் மத்தியில் கொழும்பு ஹைலெவல் வீதியிலுள்ள பொலிஸ் விடுதியில் தங்கியிருக்கும் இவர், பம்பலப்பிட்டி கள நடவடிக்கை பொலிஸ் பிரிவில் அண்மைக் காலமாக கடமையாற்றி வந்தார்.
கடந்த புதன்கிழமை இரவு, நண்பர்கள் இருவரின் அழைப்பின் பேரில் குடும்பத்தினருடன் கல்கிசை ஹோட்டலுக்கு இரவு உணவருந்தச் சென்ற இவர், அது முடிவடைந்ததும் நள்ளிரவு 11.45 மணியளவில் குடும்பத்தினரை வாகனமொன்றில் அனுப்பி விட்டு பம்பலப்பிட்டியிலுள்ள தனது பொலிஸ் அலுவலகத்திற்குச் செல்வதாகக் கூறி நண்பர்களுடன் சென்றுள்ளார்.
மறு நாள் காலை இவரது மனைவி, இவருடன் அலுவலக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது ஜெயரட்ணம் அங்கு வராதது தெரிய வந்தது.
இதையடுத்து இவர் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாமெனச் சந்தேகித்த பொலிஸார் உடனடியாக உஷாரடைந்த நாடு முழுவதிலுமுள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் உஷார்படுத்தினர்.
இதுபற்றி ஜெயரட்ணத்தின் மனைவி கூறுகையில்,
மனோ என்ற புளொட் உறுப்பினருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், வவுனியாவிலுள்ள காணி ஒன்று தொடர்பாக தொலைபேசி மூலம் உரையாடியதையடுத்து எமக்கு பழக்கம் ஏற்பட்டது.
புளொட் முகாமிலிருந்த அவர், பின்னர் அந்தக் காணி அலுவலை முடித்துத் தந்த பின்னர் அடிக்கடி தொலைபேசியில் கதைப்பார். எனது கணவருடனும் பின்னர் இவர் நண்பரானார்.
தொலைபேசி மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் இவர் எமது வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் அடிக்கடி வருவார்.
கடந்த புதன்கிழமை மாலை வீட்டிற்கு வந்த இவர், லண்டனிலிருந்து நண்பரொருவர் வந்துள்ளதாகவும் அவருக்கு தான் அன்றிரவு இரவு உணவு விருந்தளிப்பதாகவும் அதற்கு எங்களைக் குடும்பத்துடன் வருமாறும் வற்புறுத்தி அழைத்தார்.
பாதுகாப்பு காரணத்தால் வெளியே எங்கும் செல்லாத எனது கணவன், இந்த விருந்துக்குச் செல்ல இணக்கம் தெரிவித்திருந்தார். எனினும், மனோவுடன் வந்திருந்தவர் மீது எனக்கு சிறிது சந்தேகமிருந்ததால் இதனை நான் பெரிதாக விரும்பவில்லை.
எனினும், கணவரின் வற்புறுத்தலால் பிள்ளைகளுடன் இரவு 8 மணியளவில் சென்றோம். நள்ளிரவு 11.45 மணியளவில் விருந்து முடிந்ததும் எம்மை வாடகை வாகனமொன்றில் வீட்டுக்கு அனுப்பியதுடன், தான் பம்பலப்பிட்டி அலுவலகத்திற்கு செல்வதாகக் கூறி மனோவுடனும் அவருடன் வந்தவருடனும் சென்று விட்டார்.
மறுநாள் காலை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதே அவர், முதல் நாள் மாலை வெளியே சென்ற பின்னர் மீண்டும் அங்கு வராதது தெரியவந்தது.
அதேநேரம், மனோவுடனும் தொடர்பும் இல்லாது போய் விட்டது. அவர்தான் எனது கணவனை வேறு ஆட்களுடன் சேர்ந்து கடத்திச் சென்றிருக்க வேண்டுமென்றார்.
இவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளதுடன், வடக்கு, கிழக்கு உட்பட படையினரும் பொலிஸாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

