09-17-2003, 10:30 PM
<img src='http://www.yarl.com/forum/files/ajcamera.jpg' border='0' alt='user posted image'>
அழியாத கவிதையில் இலங்கை தமிழ் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ரகுநாதன் அவர்களுடன் நடித்த பெரும்பாலானவர்கள் புது முகங்கள்.
சாஜகான் என்ற நடிகர் மட்டும் இந்திய திரைப்டங்களில் நடித்திருப்பவர்.
இவர் ஏற்கனவே நான் லண்டனில் நடித்திய திரைப்பட பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்.
ஈழத்து திரைக்கலை மன்றம் நடத்திய ஒரு விழாவுக்காக என்னை அழைத்து,அங்கு வைத்துத்தான் பாரிஸ்டர் யோசேப்பு அவர்கள் 3 குறும்படங்களை செய்யும் வேண்டுகோளை முன் வைத்தார்.
கதையொன்றைத் தேர்வு செய்து குறும்படத்தை தொடங்கு முன் நடிகர்களைத் தேடிடலாம் எனும் நம்பிக்கை இருந்தாலும்,நம்மவர்கள் கடைசி நேரத்தில் வராமல் விட்டதும், ஒரு சிலரின் தாமதங்களும் எனக்குள் மகிழ்ச்சியற்ற தன்மையைதான் உருவாக்கியது.ஆனால் எதிர்பாராத புதியவர்கள் உதவியது , பங்கு கொண்டதுதான் படத்தை முடிக்க உதவியது.
பங்குபற்றிய அனைவரது உழைப்புக்கும் ரசிகர்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். எந்த ஒரு படத்தின் வெற்றியும் பார்வையாளனின் ஏற்றுக் கொள்ளலில்தான் தங்கியிருக்கிறது. அதுதான் உண்மையான வெற்றி. நான் இப்போது சொல்வது தவறு...............
பார்வையாளரின் மனதை அறிவது மிகக் கடினம். ஆனால் எதை எப்படிக் கொடுக்க வேண்டுமென்று தோல்விகளைப் பார்த்து கற்றிருக்கிறேன்.
எனவே (இயக்குனரானால்)வேலை செய்யுமுன் எல்லாவற்றிற்கும் காது கொடுப்பேன், கருத்து பரிமாற்றம் மோதலாகக் கூட இருக்கலாம். சரியென்றால் எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். சரிப்பட்டு வராது என்று தெரிந்தால் விட்டுப் போய் விடுவேன். ஆனால் நான் வேலை செய்யத் தொடங்கி விட்டால் எவர் பேச்சையும் கேட்பதுமில்லை,பேச அனுமதிக்கவோ , குறுக்கீடு செய்யவோ விட மாட்டேன்,
காரணம் தோல்விகள் வந்தால் பழி என்னை மட்டுமே சாரும். வெற்றிகள் வந்தால் அது எல்லோருக்கும் உரியதாக மகிழ்வேன். தோல்விகளை எவர் தலையிலும் சுமத்த மாட்டேன்.இதனால் நான் சிலரது வெறுப்புக்கு ஆளாவதுண்டு................. என் மனச்சாட்சிக்கு ஏற்காத எதையும் யாராக இருந்தாலும் செய்ய மாட்டேன்.இது பலருக்கு பிடிப்பதில்லை.அது எனக்குப் பிடிக்கும்...........
சுவிஸ் கலைஞர்களோடு வேலை செய்யும் போது எனக்கு பிரச்சனைகள் வருவதேயில்லை. ஆரம்பத்திலிருந்தே அனைத்தும் திட்டமிடப்படுகிறது. எல்லோரும் ஒருவரை ஒருவர் புரிந்த கொள்ள சந்திப்புகள்-அறிமுகங்கள் இடம் பெறுகின்றன. இவர்கள் தமது வேலையை விட்டு அடுத்தவர் வேலைக்குள் தலை போடுவதில்லை. உதவியென்று வந்தாலும் சொல்வதை மட்டுமே செய்வார்கள். அறப்படித்த வேலைகள் செய்ய மாட்டார்கள். அவரவர் என்ன பொறுப்பு என்பது அவரவருக்குத் தெரியும். பட வேலைகள் முடிந்ததும் சுமுகமாக பழைய நட்பு நிலைக்கு மாறிவிடுவோம். வேலை செய்யும் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை துாக்கித் திரிய மாட்டோம். சபலத்தை இவர்களிடம் பார்க்கவே முடியாது. நமது படைப்பு சிறப்பாகும் எண்ணத்துக்காக எந்த வேதனையையும் தாங்குவதுதான் அவர்களின் சிறப்பு. அதுபோலவே நல்லதை பாராட்டாமல் இருக்கவே மாட்டார்கள்.
நல்லவை எங்கிருந்தாலும் ஏற்றுக்கொள்ளவும்,பாராட்ட வேண்டியவற்றை எதிரியானால் (நாளைய நண்பன்) கூட மனம் திறந்து பாராட்டவும் (ஐஸ் அல்ல)கூடிய மனசு எமக்கு ஏற்பட்டால் அவனே சுயநலமற்ற கலைஞனாக முடியும்.
அன்புடன்
அஜீவன்
vaiyapuri Wrote:அழியாத கவிதையில் முழுக்கவும் புதுமுகங்கள் தானோ?
புலம்பெயர் சினிமாவின் பெரியவரும் நடிப்பதாகக் கேள்விப்பட்டேன்.
உங்கள் இரகசியங்களைத் தவிர சுவையான அனுபவங்கள்,ஈழவர் திரைக்கலை பற்றிய உங்கள் சொந்தக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அழியாத கவிதையில் இலங்கை தமிழ் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ரகுநாதன் அவர்களுடன் நடித்த பெரும்பாலானவர்கள் புது முகங்கள்.
சாஜகான் என்ற நடிகர் மட்டும் இந்திய திரைப்டங்களில் நடித்திருப்பவர்.
இவர் ஏற்கனவே நான் லண்டனில் நடித்திய திரைப்பட பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்.
ஈழத்து திரைக்கலை மன்றம் நடத்திய ஒரு விழாவுக்காக என்னை அழைத்து,அங்கு வைத்துத்தான் பாரிஸ்டர் யோசேப்பு அவர்கள் 3 குறும்படங்களை செய்யும் வேண்டுகோளை முன் வைத்தார்.
கதையொன்றைத் தேர்வு செய்து குறும்படத்தை தொடங்கு முன் நடிகர்களைத் தேடிடலாம் எனும் நம்பிக்கை இருந்தாலும்,நம்மவர்கள் கடைசி நேரத்தில் வராமல் விட்டதும், ஒரு சிலரின் தாமதங்களும் எனக்குள் மகிழ்ச்சியற்ற தன்மையைதான் உருவாக்கியது.ஆனால் எதிர்பாராத புதியவர்கள் உதவியது , பங்கு கொண்டதுதான் படத்தை முடிக்க உதவியது.
பங்குபற்றிய அனைவரது உழைப்புக்கும் ரசிகர்கள்தான் முடிவு சொல்ல வேண்டும். எந்த ஒரு படத்தின் வெற்றியும் பார்வையாளனின் ஏற்றுக் கொள்ளலில்தான் தங்கியிருக்கிறது. அதுதான் உண்மையான வெற்றி. நான் இப்போது சொல்வது தவறு...............
பார்வையாளரின் மனதை அறிவது மிகக் கடினம். ஆனால் எதை எப்படிக் கொடுக்க வேண்டுமென்று தோல்விகளைப் பார்த்து கற்றிருக்கிறேன்.
எனவே (இயக்குனரானால்)வேலை செய்யுமுன் எல்லாவற்றிற்கும் காது கொடுப்பேன், கருத்து பரிமாற்றம் மோதலாகக் கூட இருக்கலாம். சரியென்றால் எவர் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். சரிப்பட்டு வராது என்று தெரிந்தால் விட்டுப் போய் விடுவேன். ஆனால் நான் வேலை செய்யத் தொடங்கி விட்டால் எவர் பேச்சையும் கேட்பதுமில்லை,பேச அனுமதிக்கவோ , குறுக்கீடு செய்யவோ விட மாட்டேன்,
காரணம் தோல்விகள் வந்தால் பழி என்னை மட்டுமே சாரும். வெற்றிகள் வந்தால் அது எல்லோருக்கும் உரியதாக மகிழ்வேன். தோல்விகளை எவர் தலையிலும் சுமத்த மாட்டேன்.இதனால் நான் சிலரது வெறுப்புக்கு ஆளாவதுண்டு................. என் மனச்சாட்சிக்கு ஏற்காத எதையும் யாராக இருந்தாலும் செய்ய மாட்டேன்.இது பலருக்கு பிடிப்பதில்லை.அது எனக்குப் பிடிக்கும்...........
சுவிஸ் கலைஞர்களோடு வேலை செய்யும் போது எனக்கு பிரச்சனைகள் வருவதேயில்லை. ஆரம்பத்திலிருந்தே அனைத்தும் திட்டமிடப்படுகிறது. எல்லோரும் ஒருவரை ஒருவர் புரிந்த கொள்ள சந்திப்புகள்-அறிமுகங்கள் இடம் பெறுகின்றன. இவர்கள் தமது வேலையை விட்டு அடுத்தவர் வேலைக்குள் தலை போடுவதில்லை. உதவியென்று வந்தாலும் சொல்வதை மட்டுமே செய்வார்கள். அறப்படித்த வேலைகள் செய்ய மாட்டார்கள். அவரவர் என்ன பொறுப்பு என்பது அவரவருக்குத் தெரியும். பட வேலைகள் முடிந்ததும் சுமுகமாக பழைய நட்பு நிலைக்கு மாறிவிடுவோம். வேலை செய்யும் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளை துாக்கித் திரிய மாட்டோம். சபலத்தை இவர்களிடம் பார்க்கவே முடியாது. நமது படைப்பு சிறப்பாகும் எண்ணத்துக்காக எந்த வேதனையையும் தாங்குவதுதான் அவர்களின் சிறப்பு. அதுபோலவே நல்லதை பாராட்டாமல் இருக்கவே மாட்டார்கள்.
நல்லவை எங்கிருந்தாலும் ஏற்றுக்கொள்ளவும்,பாராட்ட வேண்டியவற்றை எதிரியானால் (நாளைய நண்பன்) கூட மனம் திறந்து பாராட்டவும் (ஐஸ் அல்ல)கூடிய மனசு எமக்கு ஏற்பட்டால் அவனே சுயநலமற்ற கலைஞனாக முடியும்.
அன்புடன்
அஜீவன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->