04-23-2005, 08:39 AM
adithadi Wrote:அமெரிக்கா உண்மையிலே ஈழ்த்தமிழ்களின் மேல் அனுதாபம் கொண்டுள்ளாதா?
மற்றவர்களின் அனுதாபத்தையும் உதவியையும் என்றும் எதிர்பார்ப்பவர்களை மற்றவர்கள் மதிப்பது குறைவு. மேலும் அவர்கள் அனுதாபத்தையும் உதவியையும் வழங்கும் போது ஏன் உனக்கு எங்கள் அனுதாபம் தேவை? எங்கள் உதவியின்றி உன்னால் வாழ முடியாதா? நீ இப்படி செய்யவேண்டும் அப்படி செய்யக்கூடாது என்றெல்லாம் கட்டளை இடுவதும் எதிர்பார்க்கப்பட வேண்டியதே. .
adithadi Wrote:அல்லது அரசியல் நோக்கம் கொண்டதா.
எப்படி ஈழத்தமிழர்கள் தமது நாட்டு நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அப்படியே அமெரிக்கர்களும் தமது நாட்டு நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது எதிர்பார்க்கப்பட வேண்டியது. அமெரிக்க நலன்களுக்கு ஈழத்தமிழருடனான உறவு உதவுமானால் அமெரிக்கா அந்த உறவை நாடக்கூடும். அப்படியான உறவு ஈழத்தமிழர்களுக்கும் பயனுள்ளதாக அமையுமானல் அதனை ஏற்று வலுப்படுத்துவது சிறப்பானது.
adithadi Wrote:தற்போதுள்ள யுத்த நிறுத்தம்மூலம் விடுதலைப்புலிகள் இலங்கை அரசின் நிஐமான முகத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆதலால் அமெரிக்கா புலிகளின் மேல் உந்தப்பட்டு வருவதை செய்திகள் மூலம் அறிகிறோம். வல்லரசு நாடுகளின் அழுத்தம் இலங்கை அரசை அசைய வைக்கின்றதா? JVP எனும் துரும்பு மூலம் இலங்கை அரசு நழுவ முயற்சிக்கின்றது, ஆதலால் தனித் தமிழ் ஈழத்தை நோக்கி புலிகள் தள்ளப்படுகிறாகள், இதனை வல்லரசு நாடுகள் நிச்சையம்மாக அங்கீகரப்பார்கள்!
ஒரு புறம் சுதந்திரம் வேண்டும் என்று போராடிக்கொண்டு, மறு புறம் வல்லரசுகளின் அங்கீகாரங்களுக்கும் அழுத்தங்களுக்கும் இடம் கொடுப்பது ஒன்றுக்கொன்று முரணானதாகும்.

