04-22-2005, 07:18 PM
tamilini Wrote:குருவியாரே.. ஒரு சிசு அழிக்கப்படுது என்றால்.. அங்க இருவருக்கும் தான்.. பொறுப்பு இருக்கு.. வெறுமனவே.. கருவைச்சுமப்பவளை குற்றம் சுமத்த முடியாது. கண்டிப்பா கணவனது தெரிதல் இன்றி.. அந்த கருவை ஒரு பெண் அழிக்கப்போவதில்லை... சோ அதை தடுக்க அல்லது அந்த கரு பற்றி சரியான.. திட்டமிடல் இல்லாமல் இருக்கிற இருவருக்கும் தான். பிழை தந்தையைப் போலத்தானே தாயும். அவரிலும் தப்பிருக்கு.. ஏன் பெண்ணை மட்டும் சாடுறியள். :wink:
கருவழிப்பை ஒரு பெண் நினைத்தால் நிச்சயமாகத் தடுக்கலாம்...அதன் ஆரம்பச் செயன்முறைகளின் போதோ இல்ல கரு உருவாக முன்னோ அவர்கள் செய்யலாம்...இல்லை அக்கருவுக்கு உருக்கொடுத்து வாழ வைக்கலாம்...அதற்கு மனதிடம் வேண்டும்...! பெண்கள் தங்கள் சுயநலத்துக்காகத்தான் கருவழிப்பை அதிகம் செய்கின்றனர்...! எதிர்பார்க்காத கருவென்று சொல்லி இன்று சர்வசாதாரணமாக பெண்களால் கருவழிப்பெனும் மனிதப்படுகொலை அப்பட்டமாகச் செய்யப்படுகிறது...! ஒரு ஆண் ஒரு பெண்ணை வற்புறுத்தி உறவு கொண்டால் அது பாலியல் வல்லுறவு சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்...ஆக இத்தனைக் கருக்கலைப்புக்கள்
நடந்தும் தண்டனை பெறும் ஆண்களின் தொகை மிக மிக மிக குறைவென்றால் பெண்களின் விருப்பத்துக்கு இணங்கத்தான் தவறுகள் நடக்கின்றன..! எனவே இத்தவறுகளால் உருவாகும் சிசுக்களை அழிக்க முனையும் பெண்களே அப்படுகொலைகளுக்கு முழுப் பொறுப்பும்...! அவர்களை எக்காரணம் கொண்டும் மன்னிக்கவே கூடாது... இப்படியான ரகசியப் படுகொலைகளை ஈவிரக்கமில்லாது செய்யும் பெண்களுக்கு எதிர்காலத்தில் கடும் தண்டனைகள் வழங்கவே நாம் பரிந்துரைப்போம்...ஆண்களுக்குத் தண்டனை வழங்கப் பரிந்துறைப்பதைக் காட்டிலும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

