09-17-2003, 07:21 PM
vaiyapuri Wrote:நவம்பர் மாதத்தில் ஈழவர் குறுந்திரைப்பட விழாவொன்று நடைபெறவிருப்பதாக செய்திகள் அடிபடுகிறது உண்மைதானா அஜீவன் ?
கனடாவில் ஒரு திரைப்பட விழா நடத்துவதற்கான ஒழுங்குகள் நடைபெறுவதாக அறிகிறேன்.முழுமையான விபரங்கள் கிடைத்த பின் எழுதுகிறேன்.
அழியாத கவிதை தயாரிப்பில் இருப்பதால் அது பற்றி எழுதுவது முறையல்ல. நடிக-நடிகையர் கொடுத்த அதிர்ச்சிகள் மிக சுவையானது. எங்கும் சிறு சிறு பிரச்சனைகளை எதிர்நோக்குவது பொதுவான ஒரு விடயம். அவற்றை இனிய அனுபவமாகவே கருதி நண்பர்களுடன் சிரிப்பதுண்டு..................நீங்களும் நண்பர்கள் என்பதால் பகிர்ந்து கொள்ளலாம்..........
கூடிய விரைவில் கடந்து வந்த புலம் பெயர் சினிமா வேதனை சிரிப்புகளை பகிர்ந்து கொள்வேன்.
எனது திரைப்பட ஆசான் சொன்ன ஒரு வாக்கை மறக்கவே முடியாது.அது:-
ஒன்று விசயம் தெரிந்தவர்களோடு வேலை செய். அல்லது விசயம் தெரியாதவர்களோடு வேலை செய்.
விசயம் தெரிந்தவர்களோடு வேலை செய்தால் நீ எதையாவது கற்றுக் கொள்வாய்.
விசயம் தெரியாதவர்களோடு வேலை செய்தால் நீ சொல்வதைக் கேட்டு உன்னோடு வேலை செய்வார்கள். அரை குறைகளோடு வேலை செய்தால் நீ சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.அவர்கள் சொல்வதை உன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பார்.
அது வாக்கல்ல,தேவ வாக்கு.இந்த வசனம் இன்னும் என்னை சினிமாக் கலைக்குள் வைத்திருக்கிறது.

