04-22-2005, 01:07 AM
கஞ்சிக்குடிச்சாற்றில் விடுதலைப்புலிகள்- கருணா அணியினர் மோதல்
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில், கங்சிக்குடிச்சாறு என்னுமிடத்தில் விடுதலைப்புலிகளுக்கும், கருணா அணியினருக்கும் இடையில் நடந்த மோதலில் 5 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஆறு அல்லது ஏழு பேர் காயமடைந்ததாகவும் தமக்கு செய்திகள் கிடைத்ததாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறியுள்ளார்.
ஆனால் தமது பகுதிக்குள் வந்த ஆயுத குழு ஒன்றின் மீது தாம் தாக்குதல் நடத்தியதாகவும், அதனையடுத்து அவர்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி தப்பியோடிவிட்டதாகவும் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளர் குயிலின்பன் தெரிவித்துள்ளார்.
அந்த குழுவினரின் பொருட்களை தமது தரப்பினர் கைப்பற்றியதாகவும் அவற்றில் இராணுவத்தினர் பயன்படுத்தும் சில பொருட்களும், அவர்களது தொப்பியும் இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் இந்த மோதலில் தமது தரப்பில் எவரும் பலியாகவில்லை என்று கூறும் குயிலின்பன், இந்த சம்பவங்களுடன் இராணுவத்திற்கு சம்பந்தமுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அந்த சம்பவத்தில் இராணுவத்துக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறுகிறார்.
இதற்கிடையே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் இளைஞர் ஒருவர் அடையாளந் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
BBC தமிழ் செய்தி
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில், கங்சிக்குடிச்சாறு என்னுமிடத்தில் விடுதலைப்புலிகளுக்கும், கருணா அணியினருக்கும் இடையில் நடந்த மோதலில் 5 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஆறு அல்லது ஏழு பேர் காயமடைந்ததாகவும் தமக்கு செய்திகள் கிடைத்ததாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறியுள்ளார்.
ஆனால் தமது பகுதிக்குள் வந்த ஆயுத குழு ஒன்றின் மீது தாம் தாக்குதல் நடத்தியதாகவும், அதனையடுத்து அவர்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி தப்பியோடிவிட்டதாகவும் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளர் குயிலின்பன் தெரிவித்துள்ளார்.
அந்த குழுவினரின் பொருட்களை தமது தரப்பினர் கைப்பற்றியதாகவும் அவற்றில் இராணுவத்தினர் பயன்படுத்தும் சில பொருட்களும், அவர்களது தொப்பியும் இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் இந்த மோதலில் தமது தரப்பில் எவரும் பலியாகவில்லை என்று கூறும் குயிலின்பன், இந்த சம்பவங்களுடன் இராணுவத்திற்கு சம்பந்தமுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அந்த சம்பவத்தில் இராணுவத்துக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறுகிறார்.
இதற்கிடையே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் இளைஞர் ஒருவர் அடையாளந் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
BBC தமிழ் செய்தி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

