09-17-2003, 01:54 PM
Karavai Paranee Wrote:அம்மன் படங்கள் என எடுக்கப்படும் திரைப்படங்கள் மிக மிக மோசம். அங்கு அம்மன் வருவதைவிட அரைகுறை நடனக்காட்சிகள்தான் முன்னுக்கு வருகின்றன.
இதைவிடவா பாய்ஸ் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
எங்கே பிரச்சனைகள் உருவாகிறது என்பது அநேகருக்கு தெரியாது. ஓரு திரைப்படத்தை தயாரிப்பது வெகு சுலபம்.காரணம் பணமிருந்தால் யாரும் ஒரு திரைப்படமல்ல,100 திரைப்படங்களைத் தயாரித்து விடலாம். ஆனால் அதை வாங்கி தியெட்டர்களில் ஓடும் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்களே அவர்களால்தான் பெரும்பாலும் இப்படியான நிலைக்கு இயக்குனர்களும் , தயாரிப்பாளர்களும் தள்ளப்படுகிறார்கள்.
ஓரு நல்ல படத்தைப் பார்த்து விட்டு அவர்கள் எடுக்கும் முடிவில்தான் பிரச்சனை உருவாகிறது.பிரிவீவ் எனப்படும் பிரத்தியேக காட்சி முடிந்ததும் ஒருவர் இப்படித் தொடங்குவார். இது சரியில்லை சார்,........... ரம்பா,ரம்மியா, யாரையாவது ஒருவாட்டி காட்டினாத்தானே சார் நமக்கு போணியாவும்............நீ போய் என்னவோ புதுமை பண்ணுறே சார்......இதுக்கெல்லாங் நம்ம துட்ட போட்டு தொலைச்சுட்டு பேமாளியாக முடியுமா?................
கிளமாரா (இவர்கள் கிளமர் என்பது செக்ஸாக,கிளாமர்என்பதன் உண்மையான அர்த்தம் கூட இவர்களுக்கு தெரியாது.) ஏதாவது சேத்து போணியாவ வழிய பாப்பியா?............"[/color]
என்று முகத்தில் கரியை வாரி இறைத்து உபதேசித்து விட்டு போய் விடுவார். அடுத்தவர்களை பற்றி இனி நினைக்க வேண்டியதேயில்லை.............
இவர்களால்தான் இது ஆரம்ப அடியாகத் தொடருகிறது. இவர்கள் படத்தை வாங்கா விட்டால் எடுத்தவர் வீட்டில் பெட்டியில் வைத்து சாம்பரானி காட்ட வேண்டியதுதான். இப்படி பல பெரிய இயக்குனர்கள் (பாரதிராஜாவின் ஒரு படமும்) படங்கள் பெட்டிகளுக்குள் கிடக்கின்றன.
சில தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள்,நடிகர்களது படங்கள் மேல் உள்ள நம்பிக்கையால் விநியோகஸ்தர்கள் கண்ணை மூடிக் கொண்டு பட ஆரம்ப விழாவின் போதே அட்வான்ஸ் கொடுத்து வாங்கி விடுவார்கள். சில படங்களால் எதிர்பாராத யோகம்தான்........
சில படங்கள் அதாவது பாபா,அன்பே சிவம் போன்ற படங்கள் தோல்வியடைந்த போது நஸ்டம் தயாரிப்பாளளருக்கோ,இயக்குனருக்கோ,கலைஞர்களுக்கோ அல்ல,விநியோககஸ்தர்களுக்குத்தான்.இதில் திருட்டு VCD,DVD,Video போன்றவற்றால் நிலமை அதைவிட மோசம்.
அதற்குள் விமர்சனம் ஏழுத வேறு கவர் கொடுத்துக் கவனிக்க வேண்டும்.(கவர்=லஞ்சம்) . அவர்களோடு ஏதாவது பழைய பகை அல்லது அரசியல் மோதல்கள்,..............இப்படி ஏதாவது இருந்தால் நல்ல மதிப்பெண் போட்டு கவனித்து விடுவார்கள். இவர்கள் சினிமாவில் லஞ்சத்தை எதிர்த்தாலும் படத்தை ரிலீஸ் செய்ய எத்தனையோ விட்டுக் கொடுப்புகளை,விநியோகஸ்தர்களுக்கான நரபலிகளை (நடிகைகளை) திரை மறைவில் டிஸ்கஸனுக்கு அனுப்ப வேண்டியுள்ளது.
இவற்றை ஆரம்பத்தில் எதிர்போர் இல்லாமலில்லை.ஆனால் பெரும்பாலானவர்கள் காலப் போக்கில் தளர்ந்து விடுகிறார்கள்.(இவர்களுள் விரல் விட்டு எண்ணக்கூடிய நல்லவர்கள் பலரை தனிப்பட எனக்குத் தெரியும்.)
நமது உறவுகள் ஒரு முதலமைச்சரை ஒரு நாட்டிலிருந்து தெரிவு செய்ய முயன்றார்களே...........அவர் புகழ்வாய்ந்த டிஸ்கஸன் மன்னர்களில் ஒருவர்.
ஒரு காலத்தில் திரைப்பட மாணவர்களது வருகைதான் இவர்களுக்கு எமனாகியது..............அதனால் மாணவர்களது படத்தை தடை செய்ய அனைத்து தில்லு முல்லுகளையும் செய்தவர்கள் அன்றைய முதல் தர இயக்குனர்ககள்,தயாரிப்பாளர்கள்,நடிகர்கள்...............
அடித்தவனை விட்டு விட்டு அம்பை நோவதில் என்ன பயன்?
<img src='http://www.yarl.com/forum/files/ajcamera.jpg' border='0' alt='user posted image'>
அன்புடன்
அஜீவன்

