04-21-2005, 11:03 AM
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போக்கைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போக்கினை அமெரிக்கா தற்போது கடைப்பிடித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் கிறிஸ்ரினா ரொக்காவின் இலங்கை விஜயத்தின் போது இந்த நிலைப்பாடு தெளிவாக தென்பட்டுள்ளதாக அவாதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலில் இருந்து விடுதலைப்புலிகளை நீக்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாகவும் ஆனால் விடுதலைப் புலிகள் தமது வன்செயல்களை முற்றாக கைவிட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ரொக்கா குறிப்பிட்டுள்ளார்.
முதல் தடவையாக அமெரிக்கா பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்குவதற்கு விரும்புவதாக குறிப்பிட்டுள்ளமை விடுதலைப்புலிகள் தொடர்பான அமெரிக்கா நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சமாதான பேச்சுக்கள் தொடர்பில் அரசாங்கம் ஒரே குரலில் பேச வேண்டும் என ரொக்கா குறிப்பிட்டுள்ளமை சமாதான முயற்ச்சிகள் ஆரம்பிக்கப்படாமைக்கு அரசாங்கமே காரணம் என்பதை மறைமுகாக சுட்டிக்காட்டுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று தமிழ் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் விடுதலைப்புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்புவதற்குரிய ஏற்பாடுகள் உரிய முறையில் அரசாங்க தரப்பால் மேற்கொள்ளப்படவில்லை என்பதை கிறிஸ்ரினா ரொக்கா ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த விடயங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு சாதகமான அம்சங்களாகவே நோக்கப்படுகின்றது.
இலங்கையில் இந்திய புலனாய்வு பிரிவு நேரடியாக தனது செயல்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்க நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இநதியா அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
---------------------- ------------------ --------------------------
அரசியல் பாதையில் தொடர்ந்தால் புலிகளுக்கு உதவவும் தயார்: கிரிஸ்ரினா றொக்கா
விடுதலைப் புலிகள் அரசியல் பாதையைத் தொடர வேணடும் அவ்வாறு அரசியல் பாதையில் அவர்கள் தொடர்ந்தால் அமெரிக்கா புலிகளுக்கு உதவி செய்யவும் தயாராகவிருப்பதாக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜங்கச் செயலர் கிறிஸ்றீனா றொக்கா தம்மிடம் தெரிவித்ததாக - கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்றுக்காலை அமெரிக்கத் தூதரகத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் கிறிஸ்ரீனா றொக்காவை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
இந்தச் சந்திப்புக் குறித்து இரா. சம்பந்தன் கருத்து வெளியிடும் போது தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனநாயக வழிக்குக் கொண்டு வருவதற்கு தற்போதைய பொதுகட்டமைப்பு முறை உதவுமென்று கிறிஸ்னா றொக்கா தெரிவித்தார். ஜே.வி.பி யை பொறுத்தவரையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏற்கனவே மேற்கொண்ட நடவடிக்கைகளை உலகம் அறியும். எனவேää அந்த கட்சிக்கு மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு அருகதை இல்லை எனத் தெரிவித்த சம்பந்தன்.
கடந்த மூன்று வருடங்களாக போர்நிறுத்த உடன்பாட்டுக்குக் கீழ்; செயற்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனநாயக வழிக்குக் கொண்டுவருவதற்கான முனைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென தாம் தெரிவித்த கருத்தை கிறிஸ்ரீனா றொக்கா ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆயுதமேந்திப் போராட வேண்டிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்ட இயக்கம் - யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி அரசியல் ரீதியாக சமாதானமாக ஒரு தீர்வைக் காண்பதற்கு முன்வருகின்ற வேளையில் மற்றைய தரப்பாகிய இலங்கை அரசாங்கம் அந்த முயற்சியை ஊக்குவிப்பதற்கு எதையும் செய்யாமல் இருப்பதுää புலிகளுக்கு மாத்திரமலல் தமிழினத்துக்கே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும் நாங்கள் கூறியபோதுää அவர்கள் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார்.
விடுதலைப்புலிகளை ஊக்குவிக்க கூடிய வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படவில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான ஜே.வி.பி பொதுக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதைத் தீவிரமாக எதிர்த்துவருகின்றது. இதனால் உங்களுடைய செல்வாக்கைப் பயன் படுத்தி இந்த பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
சர்வதேச சமூகம் சமாதானப் பேச்சுக்களில் நல்ல வெற்றியைக் காணவேண்டும் என்று விரும்பினால் பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்திää புலிகளை பங்காளிகளாக்கி சுனாமி சம்பந்தமான கருமங்களை முன்னெடுப்பதற்கு முயற்சியெடுக்கவேண்டும். இனியும் இதை பின் போடக்கூடாது.
சர்வதே உதவிகள் - ஆரம்பத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டன. தற்போது அந்த உதவிகள் வருவது குறைவாக இருக்கின்றது. காரணம் - இந்த பொது கட்டமைப்புஏற்பட்ட பின்னர்தான் எல்லோரும் இந்தக் கருமங்களில் அக்கறை செலுத்தலாம். என கிறிஸ்னா றொக்காவுக்கு எடுத்து கூறியதாகத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அரசியல் பாதையைத் தொடர்வார்களாக இருந்தால் நாங்கள் விடுதலைப் புலிகளளுக்கு உதவி செய்;யத் தயாராக இருக்கிறோம். நீங்களும் முயற்சியெடுத்து பொதுக்கட்டமைப்பை எந்தவிதத்திலும் ஏற்படுத்தி அவர்கள் அரசியல் பாதையில் செல்லக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதைச் சேர்ந்து இதைச் செய்யக்வேண்டும் என றொக்கா தம்மிடம் தெரிவித்தாக கூறிய சம்பந்தன் தொடர்ந்து தெரிவிக்கையில்
அமெரிக்க பிரதி இராஜங்கச் செயலர் தமிழர்களின் நிலைப்பாட்டை கூடுதலாக புரிந்து கொள்ளக் கூடிய தன்மை உருவாக்கியிருப்பதை இந்தச் சந்த்திப்பின் போது அவதானிக்கக்கூடியதாக இருந்ததாகக் தெரிவித்தார்.
நன்றி: சங்கதி
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போக்கினை அமெரிக்கா தற்போது கடைப்பிடித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் கிறிஸ்ரினா ரொக்காவின் இலங்கை விஜயத்தின் போது இந்த நிலைப்பாடு தெளிவாக தென்பட்டுள்ளதாக அவாதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலில் இருந்து விடுதலைப்புலிகளை நீக்குவதற்கு அமெரிக்கா விரும்புவதாகவும் ஆனால் விடுதலைப் புலிகள் தமது வன்செயல்களை முற்றாக கைவிட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ரொக்கா குறிப்பிட்டுள்ளார்.
முதல் தடவையாக அமெரிக்கா பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்குவதற்கு விரும்புவதாக குறிப்பிட்டுள்ளமை விடுதலைப்புலிகள் தொடர்பான அமெரிக்கா நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சமாதான பேச்சுக்கள் தொடர்பில் அரசாங்கம் ஒரே குரலில் பேச வேண்டும் என ரொக்கா குறிப்பிட்டுள்ளமை சமாதான முயற்ச்சிகள் ஆரம்பிக்கப்படாமைக்கு அரசாங்கமே காரணம் என்பதை மறைமுகாக சுட்டிக்காட்டுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று தமிழ் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் விடுதலைப்புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்புவதற்குரிய ஏற்பாடுகள் உரிய முறையில் அரசாங்க தரப்பால் மேற்கொள்ளப்படவில்லை என்பதை கிறிஸ்ரினா ரொக்கா ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த விடயங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு சாதகமான அம்சங்களாகவே நோக்கப்படுகின்றது.
இலங்கையில் இந்திய புலனாய்வு பிரிவு நேரடியாக தனது செயல்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில் அமெரிக்க நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இநதியா அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
---------------------- ------------------ --------------------------
அரசியல் பாதையில் தொடர்ந்தால் புலிகளுக்கு உதவவும் தயார்: கிரிஸ்ரினா றொக்கா
விடுதலைப் புலிகள் அரசியல் பாதையைத் தொடர வேணடும் அவ்வாறு அரசியல் பாதையில் அவர்கள் தொடர்ந்தால் அமெரிக்கா புலிகளுக்கு உதவி செய்யவும் தயாராகவிருப்பதாக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜங்கச் செயலர் கிறிஸ்றீனா றொக்கா தம்மிடம் தெரிவித்ததாக - கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்றுக்காலை அமெரிக்கத் தூதரகத்தில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் கிறிஸ்ரீனா றொக்காவை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
இந்தச் சந்திப்புக் குறித்து இரா. சம்பந்தன் கருத்து வெளியிடும் போது தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனநாயக வழிக்குக் கொண்டு வருவதற்கு தற்போதைய பொதுகட்டமைப்பு முறை உதவுமென்று கிறிஸ்னா றொக்கா தெரிவித்தார். ஜே.வி.பி யை பொறுத்தவரையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏற்கனவே மேற்கொண்ட நடவடிக்கைகளை உலகம் அறியும். எனவேää அந்த கட்சிக்கு மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்கு அருகதை இல்லை எனத் தெரிவித்த சம்பந்தன்.
கடந்த மூன்று வருடங்களாக போர்நிறுத்த உடன்பாட்டுக்குக் கீழ்; செயற்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஜனநாயக வழிக்குக் கொண்டுவருவதற்கான முனைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென தாம் தெரிவித்த கருத்தை கிறிஸ்ரீனா றொக்கா ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
ஆயுதமேந்திப் போராட வேண்டிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்ட இயக்கம் - யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி அரசியல் ரீதியாக சமாதானமாக ஒரு தீர்வைக் காண்பதற்கு முன்வருகின்ற வேளையில் மற்றைய தரப்பாகிய இலங்கை அரசாங்கம் அந்த முயற்சியை ஊக்குவிப்பதற்கு எதையும் செய்யாமல் இருப்பதுää புலிகளுக்கு மாத்திரமலல் தமிழினத்துக்கே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும் நாங்கள் கூறியபோதுää அவர்கள் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார்.
விடுதலைப்புலிகளை ஊக்குவிக்க கூடிய வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படவில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான ஜே.வி.பி பொதுக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதைத் தீவிரமாக எதிர்த்துவருகின்றது. இதனால் உங்களுடைய செல்வாக்கைப் பயன் படுத்தி இந்த பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
சர்வதேச சமூகம் சமாதானப் பேச்சுக்களில் நல்ல வெற்றியைக் காணவேண்டும் என்று விரும்பினால் பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்திää புலிகளை பங்காளிகளாக்கி சுனாமி சம்பந்தமான கருமங்களை முன்னெடுப்பதற்கு முயற்சியெடுக்கவேண்டும். இனியும் இதை பின் போடக்கூடாது.
சர்வதே உதவிகள் - ஆரம்பத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டன. தற்போது அந்த உதவிகள் வருவது குறைவாக இருக்கின்றது. காரணம் - இந்த பொது கட்டமைப்புஏற்பட்ட பின்னர்தான் எல்லோரும் இந்தக் கருமங்களில் அக்கறை செலுத்தலாம். என கிறிஸ்னா றொக்காவுக்கு எடுத்து கூறியதாகத் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அரசியல் பாதையைத் தொடர்வார்களாக இருந்தால் நாங்கள் விடுதலைப் புலிகளளுக்கு உதவி செய்;யத் தயாராக இருக்கிறோம். நீங்களும் முயற்சியெடுத்து பொதுக்கட்டமைப்பை எந்தவிதத்திலும் ஏற்படுத்தி அவர்கள் அரசியல் பாதையில் செல்லக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதைச் சேர்ந்து இதைச் செய்யக்வேண்டும் என றொக்கா தம்மிடம் தெரிவித்தாக கூறிய சம்பந்தன் தொடர்ந்து தெரிவிக்கையில்
அமெரிக்க பிரதி இராஜங்கச் செயலர் தமிழர்களின் நிலைப்பாட்டை கூடுதலாக புரிந்து கொள்ளக் கூடிய தன்மை உருவாக்கியிருப்பதை இந்தச் சந்த்திப்பின் போது அவதானிக்கக்கூடியதாக இருந்ததாகக் தெரிவித்தார்.
நன்றி: சங்கதி

