04-20-2005, 06:26 PM
<b>முறியடிப்போம், காத்திரு!</b>
- <span style='color:green'>தொ. சூசைமிக்கேல் tsmina2000@yahoo.com
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/rajinifans-450.jpg' border='0' alt='user posted image'>
எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை?..
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை?..
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை?..
இன்னொருவன் உருவம்மீது பால்சொரியும் நிந்தனை!..
கண்ணகிக்குச் சிலையெடுத்தான்: அது தமிழன் சாதனை!
கலிங்கம் வரை படையெடுத்தான்: அது தமிழன் போர்முனை!
மன்னுதமிழ்க் குறள்படைத்தான்: அது தமிழன் நூல்வினை!
மாயைகளில் மயங்குகின்றான்.. என்ன இது சோதனை?..
சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ?
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ!...
கடல்கடந்து கலம்செலுத்திக் களங்கள்கண்ட நாட்களும்
கயவர்கட்குக் கண்ணெதிரே விதிவகுத்த வாட்களும்
மடமைகண்ட தமிழனுக்கு மறதியாகி விட்டது!
மானமிக்க தமிழினம், இம் மந்திகளால் கெட்டது!..
காவிரியைத் தாஎன்றால் கைவிரிக்கும் கன்னடன் -
காழ்ப்புடனே தமிழர்தமைச் சதிபுரியும் வஞ்சகன் -
நாவிளங்க நாலுதமிழ்ச் சொல்வழங்காப் பாமரன் -
நாம் அவனைப் பூஜைசெய்தால், எவன் இங்கே திராவிடன்?
நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்..
நல்லதமிழ் படியென்றால், நாணமின்றி முழிக்கிறான்...
கொடிய திரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்..
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்..
திரையுலகம் தமிழினத்தின் வழிபாட்டுத் திருத்தலம் -
சினிமாவின் கணிகையர்க்குக் கோவில்கட்டும் தமிழ்க்குலம் -
திரையுலக நாயகன்தான் தளபதியும் தலைவனும் -
செந்தமிழா! உனக்கெதற்கு, நாகரிகச் சீதனம்?...
விரசமிக்க திரைமடந்தை காலில் வீழும் தமிழனே!
விபரமற்ற விலங்குகூட உனைவிட மேல்: கயவனே!
அரசியலில் நடிகைதனை "அம்மா" வாய்ப் பார்த்தவன் -
ஆறறிவின் ஈறறிவை வயிற்றுக்காய் விற்றவன்!..
பகுத்தறிவுப் பெட்டகங்கள் பிறப்பெடுத்த மண்ணிலே...
பைத்தியங்கள் பாய்ச்சுதுபார் வேலை, வெந்த புண்ணிலே!
வெகுண்டெழுந்து வீணர்தம்மை விரட்டுதற்கு வருமினோ!
வெட்கம் கெட்ட "விசிறி"கட்கும் வெட்கமில்லை, அறிமினோ!
ஈழமண்ணின் சோதரனே! உன்னிதயம் நொந்திடும் -
எத்தரையும் பித்தரையும் எண்ணிமனம் வெந்திடும் -
மூளையற்ற பேதைகட்கும் முடிவுஒன்று வந்திடும்!
முறியடிப்போம், காத்திரு! நம் புனிதகுலம் வென்றிடும்!</span>
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/chandramuki03-400.jpg' border='0' alt='user posted image'>
- <span style='color:green'>தொ. சூசைமிக்கேல் tsmina2000@yahoo.com
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/rajinifans-450.jpg' border='0' alt='user posted image'>
எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை?..
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை?..
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை?..
இன்னொருவன் உருவம்மீது பால்சொரியும் நிந்தனை!..
கண்ணகிக்குச் சிலையெடுத்தான்: அது தமிழன் சாதனை!
கலிங்கம் வரை படையெடுத்தான்: அது தமிழன் போர்முனை!
மன்னுதமிழ்க் குறள்படைத்தான்: அது தமிழன் நூல்வினை!
மாயைகளில் மயங்குகின்றான்.. என்ன இது சோதனை?..
சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ?
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ!...
கடல்கடந்து கலம்செலுத்திக் களங்கள்கண்ட நாட்களும்
கயவர்கட்குக் கண்ணெதிரே விதிவகுத்த வாட்களும்
மடமைகண்ட தமிழனுக்கு மறதியாகி விட்டது!
மானமிக்க தமிழினம், இம் மந்திகளால் கெட்டது!..
காவிரியைத் தாஎன்றால் கைவிரிக்கும் கன்னடன் -
காழ்ப்புடனே தமிழர்தமைச் சதிபுரியும் வஞ்சகன் -
நாவிளங்க நாலுதமிழ்ச் சொல்வழங்காப் பாமரன் -
நாம் அவனைப் பூஜைசெய்தால், எவன் இங்கே திராவிடன்?
நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்..
நல்லதமிழ் படியென்றால், நாணமின்றி முழிக்கிறான்...
கொடிய திரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்..
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்..
திரையுலகம் தமிழினத்தின் வழிபாட்டுத் திருத்தலம் -
சினிமாவின் கணிகையர்க்குக் கோவில்கட்டும் தமிழ்க்குலம் -
திரையுலக நாயகன்தான் தளபதியும் தலைவனும் -
செந்தமிழா! உனக்கெதற்கு, நாகரிகச் சீதனம்?...
விரசமிக்க திரைமடந்தை காலில் வீழும் தமிழனே!
விபரமற்ற விலங்குகூட உனைவிட மேல்: கயவனே!
அரசியலில் நடிகைதனை "அம்மா" வாய்ப் பார்த்தவன் -
ஆறறிவின் ஈறறிவை வயிற்றுக்காய் விற்றவன்!..
பகுத்தறிவுப் பெட்டகங்கள் பிறப்பெடுத்த மண்ணிலே...
பைத்தியங்கள் பாய்ச்சுதுபார் வேலை, வெந்த புண்ணிலே!
வெகுண்டெழுந்து வீணர்தம்மை விரட்டுதற்கு வருமினோ!
வெட்கம் கெட்ட "விசிறி"கட்கும் வெட்கமில்லை, அறிமினோ!
ஈழமண்ணின் சோதரனே! உன்னிதயம் நொந்திடும் -
எத்தரையும் பித்தரையும் எண்ணிமனம் வெந்திடும் -
மூளையற்ற பேதைகட்கும் முடிவுஒன்று வந்திடும்!
முறியடிப்போம், காத்திரு! நம் புனிதகுலம் வென்றிடும்!</span>
<img src='http://thatstamil.indiainfo.com/images27/optimized/chandramuki03-400.jpg' border='0' alt='user posted image'>

