04-20-2005, 04:52 PM
tamilini Wrote:Quote:காதலித்து பார்...
கண்கள் குறுடாகும்
காதுகள் செவிடாகும்
காலங்கள் காற்றாகிப் போகும்
நித்திரை கனவாகிப்போகும்
கனவே வாழ்வாகிப் போகும்
காதலித்து பார்.....
பஞ்சுகள் முட்களாய்த் தொன்றும்
சோலைகள் பாலை வனமாயிருக்கும்
இன்பம் துன்பமாயிருக்கும்
செய்யும் தொழிலும்
பாரமாயிரக்கும்
பெற்றவர் கூட மற்றவராய்
தெரியும்
காதலித்து பார்....
காதலி உன்னை நேசிப்பாளே இல்லையோ
நீ அவளை நேசிப்பாய்-அதனால்
மன நோயளியும் ஆகிடுவாய்
கடைசியில் நீ பைத்தியம்
எனப்படுவாய்
காதலித்துப்ப பார்....
சுவர்கம் உன்னை மறுதலிக்கும்
நரகமும் உன்னை ஏற்க மறுக்கம்
நாளும் நீ நாய் வீதியில் அலைவாய்
நகைப்புடன் கன்னியவள்-நல்ல
கணவனுடன் ஊர் கோலம் போவாள்
காதலித்து பார்.....
கடனட்டைகள் காலியாகும்
கடன் வந்த தலையில் ஆடும்
அடுத்தவனிடமும் கடன் வேண்டுவாய்
ஆயிரமாயிரமாய்
ஆனால் அது போதாது காதலுக்கு
காதலித்து பார்....
கடைசியில் நீ ஓர் அர்த்தமற்றவன்
காதலால் நீ ஓர் ஜடம்
கன்னியால் நீ கயவனாவாய்
காதலித்து பார்......
_________________
நேசமுடன் நிதர்சன்
சுப்பர் அண்ணா.. தனியாய் ஒரு தலைப்பில போடுங்களேன்.. நல்லாய் இருக்கும்.. யாரங்க அந்த கோட்டைகள் கட்டிறவை இதை வாசியுங்கோ.. :mrgreen: :mrgreen:
இது குறிப்பிட்ட கவிஞரின் பார்வையில் காதல்... உண்மையாக காதல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழும் ஒரு புனித உணர்வு...ஒருவருடன் மட்டும் உறவாடும்..காதலால் குறைவில்லாது இழக்கப்படுவதும் வாங்கப்படுவதும் அன்புன் நேசமுமே...இது எங்கள் பார்வை..!
காதலிக்கப்படுவது கன்னியும் அல்ல காளையுமல்ல.... இரு பால் மனங்கள்..அவை சார்ந்த உணர்வுகள்...! எதிர்பார்ப்புகள் வைத்த ஆசைகளுக்குப் பெயர் காதல் அல்ல....! குறித்த கவிஞரின் கருத்துச் சொல்வது காதலின் பெயரால் ஆசை வளர்ப்பவர்கள் பற்றியே ஒழிய உண்மையாகக் காதல் கொண்டவர்களுக்கல்ல..!
மனக்கோட்டை என்பது மன உறுதியில்லாதவர்களிடத்தில் தகர்ந்து போகலாம்...உறுதி உள்ள மனத்தில் அதுவே ஆயுட் கால நினைவுக் கோட்டை...! எனவே மனக்கோட்டை கட்டுபவர்களை இழக்காரமா நோக்க வேண்டாம்...அப்படி நோக்குவது உங்கள் மனப்பலவீனத்தையே காட்டும்...!
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

