04-20-2005, 11:37 AM
Magaathma Wrote:Quote:ஒருவன் தன்னைத்தானே உணரும் போது அன்பு அமைதி இவற்றை வெளிப்படுத்தவும் அடையவும் கற்றுக் கொள்வான்...! மாணவன் ஒருவனால் ஒரு பாடத்தில் எப்படிக் கவனம் செலுத்த முடிகிறது... பாடத்தோடு ஒன்றி அதை விளங்கி சுவாரசியமாக அதை உள்ளெடுக்கும் போது மட்டுமே...! அப்படித்தான் அன்பை அமைதியை தன்னுள் உணர்பவன் மட்டுமே அதை வெளிப்படுத்தவும் அடையவும் முடியும்...ஆÃõÀò¾¢ø À¡¼í¸¨Ç Å¢Çí¸¢Â ´ÕÅ÷ Å¢Çí¸ôÀÎò¾¢ º¢È¢Ð Å¢Çí¸¢Â¾¡§É À¢ý ¾¡§É À¡¼ò¾¢ø Íšú¢ÂÁ¡¸ ®ÎÀ¼ Óʸ¢ÈÐ. «Ð §À¡Ä ¯ñ¨Á «¨Á¾¢ «È¢Â¨Åì¸ «¨¾ ¯½÷ó¾ ´ÕÅ÷ «Åº¢Âõ
Quote:விவேகானந்தர், ராமகிருஷ்ண பரஹம்சர், ரமண மகிரிஷி, கிருபானந்த வாரியார்«Å÷¸û Å¡úó¾ ¸¡Äò¾¢ø þÅ÷¸û ஆ𺢠þø¨Ä§Â..
விளங்கப்படுத்துபவருக்கு விளங்கப்படுத்தும் தகுதி இருக்கா என்பதை விளக்கம் தேடுபவர்கள் விளங்க யார் வழி காட்டுவது...!
கசாப்புக் கடையிலும் மதுபானச்சாலையிலும் ஆன்மீகத் தத்துவம் பேசுபவன் இருக்கிறான் அவனிடமும் மனது இருக்கிறது..அவன் வழிகாட்டலை ஏற்க எத்தனை பேர் இருக்கிறோம்....???! அவன் வெளித் தோற்றம் ஆன்மீகத்துக்கு ஒவ்வாதது என்று எண்ணுவதால்....அப்படி அவர்களை ஆராய்வதால்... ஆனால் ஏன் காவிக்குள் தாடிக்குள் உள்ள போலிகளை அடையாளம் காண தயங்குகிறோம்...! காவிகளும் தாடிகளும் ஆன்மீகத் தோற்றம் என்று வரையறுத்தது யார்.. தாடி வைக்க முடியாத பெண்கள் ஆன்மீகம் அறியாதவர்களா...அவர்களால் அறியவும் முடியாததோ... அவர்களும் மனிதர்கள் தான்...அவர்களால் ஆண் ஆன்மீகவாதிகளைப் போல அனைத்தையும் அறிய முடியும்...அவர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள் அல்ல...! பாடசாலை உடைக்குள் உள்ள மாணவனிடமும்/மாணவியிடத்திலும் ஆன்மீகம் இருக்கிறது...அதை அறிய விளைபவர் எத்தனை பேர்...! ஆன்மீகத்தைப் போதிக்க தகுதியான அறிவும் ஆளுமையும் மன அடக்கமும் உள்ளவர்கள் சமூகத்துக்கு தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டால் அன்றி அருமையான ஆன்மீகம் என்பது அருவருப்பொன்றாவது தவிர்க்க முடியாததாகும்...!
வத்திக்கான் பின்பற்றும் முறையை இந்துக்களும் கொஞ்சம் அவதானிக்கலாமே...??!
அன்பும் அமைதியும் கருணையும் மன்னிப்பும் காலத்தால் மாறுவதில்லை...விவேகானந்தர் காலந்தொட்டு இன்று என்ன நாளையும் அவை மனிதன் நிம்மதியாக சீரிய வழியில் வாழ அவசியம்...! எல்லா ஆன்மீக நெறியும் போதிக்கும் விடையங்களின் அடிப்படை மற்றவனையும் உன் போல் நேசி என்பதுதான்...! பிள்ளை வரம் கொடுக்க ஆன்மீகமோ இல்ல சமய சித்தாந்தங்களோ வழி சொல்லவில்லை.... விபூதி தூவி வேப்பிலை அடித்துப் பேய் விரட்ட எந்த சமயமும் வழி சொல்லவில்லை... சிஷ்யன் சிஷ்யை என்று அடிமைத்தனம் வளர்க்க எந்த ஆன்மீகமும் வழி சொல்லவில்லை... சிவலிங்கமும் மோதிரமும் கொடுக்கச் சொல்லி எந்த ஆன்மீகமும் சொல்லவில்லை.. பெண்களின் கையைக் காலைப் பிடித்து ஆன்மீகம் போதிக்கச் சொல்லி எந்த நாய்க்கும் ஆன்மீகம் போதிக்கவில்லை...!
ஆன்மீகத்தின் தார்ப்பரியம் புரியாத கண்டகண்ட தெரு நாயெல்லாம் ஆன்மீகம் போதிக்க வெளிக்கிட்டு அருமையாக தங்கள் மனதாண்டு ஆன்மீகம் போதித்த விவேகானந்தர் இராமகிருஷ்னர் போன்ற ஆன்மீகவாதிகளையே உலகம் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைத்துவிட்டனர்..!
ஆன்மீகம் என்ற அன்பு வழியில் மனதாளும் வழிமுறைக் கல்வி...இன்று சீரழிந்து இளைய தலைமுறையின் நம்பிக்கை இழந்து கிடக்கிறது...அவர்களும் வேறு வழியில்லாமல்... மனதை அடக்க வழியின்றி அலையவிட்டு உலகியல் மாயைகளுக்குள் சிக்கிச் சீரழிகிறார்கள்...ஆன்மீகம் நம்பிக்கை இழக்கப்பட இந்தத் காவி போர்த்த தாடி வைத்த தெரு நாய்களை சரியாகச் சமூகத்துக்கு அடையாளம் காட்டாமையே முக்கிய காரணம்...! எனியும் அதைத் தொடர்ந்து ஆன்மீகத்தை சீரழிக்க முனைய வேண்டாம்...இயன்றவரை அவர்களின் உண்மைத் தோற்றத்தை வெளிக்காட்டி ஆன்மீகத்தின் உண்மைச் சிறப்புக்காக்க முயற்சி செய்வதும் ஒரு ஆன்மீகப் பணிதான்... இன்றைய இளைஞர்கள் அதைச் செய்ய வேண்டும்...நாளைக்கு இந்த ஆன்மீகம் பாதுகாப்பாக இன்னொரு சந்ததியிடம் ஒரு பொக்கிசமாகக் கையளிக்கப்பட....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

