04-17-2005, 10:49 PM
வெள்ளவத்தை நகைக்கடையில் பட்டப்பகலில்
35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை
வெள்ளவத்தையிலுள்ள நகைக் கடையொன்று, இனந்தெரியாத கும்பலொன்றினால், நேற்று பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை ஸ்ரீ ஜுவல்ஸ் கார்டன் என்ற நகைக் கடையே இவ்வாறு பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட நகைக் கடையாகும். இக்கொள்ளைச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
மேற்படி நகைக் கடை வழமைபோல் நேற்று திறந்திருந்தபோது கடையில் இரண்டு பேர் கடமையில் இருந்துள்ளனர். பகல் 12 மணியளவில் வானொன்று கடைக்கு அருகில் வந்து நின்றது.
அதிலிருந்து சுமார் 20 வயது மதிக்கத்தக்க யுவதியொருவரும் மேலும் மூன்று இளைஞர்ளும் இறங்கியுள்ளனர். இதில் ஒருவர் வாசலில் நிற்க, மற்றைய இரு இளைஞர்களும் யுவதியுடன் நகைக் கடைக்குள் சென்றுள்ளனர்.
குறிப்பிட்ட யுவதி, தான் நவரத்தினக் கற்கள் பதித்த மோதிரம் வாங்க வந்துள்ளதாக நகைக் கடை ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.
கடை ஊழியர்கள் வந்த மூவரையும் அமரும்படி கூறியுள்ளனர். குறிப்பிட்ட யுவதியும், ஒரு இளைஞரும் மட்டும் ஆசனத்தில் அமர்ந்துள்ளனர்.
ஆனால், மற்றையவர் நின்றுகொண்டிருந்தார். நின்றுகொண்டிருந்தவரை அமரும்படி கடை ஊழியர் கூறியதையடுத்து கடைக்குள் யுவதியுடன் வந்த இரண்டு இளைஞர்களும் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களைக் காட்டி, கடையிலிருந்த நகைகள் அனைத்தையும் ஒன்றாக கட்டும்படி கூறி ஊழியர்களை ஆயுத முனையில் பயமுறுத்தியுள்ளனர்.
அச்சத்திற்குள்ளான ஊழியர்கள் கடையிலிருந்த அனைத்து நகைகளையும் கொண்டுவந்து மேசையில் வைக்க கொள்ளையர்கள் ஊழியர் ஒருவரை பலமாகத் தாக்கிவிட்டு, நகைக் கடையின் கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு, சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான 291 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கைரேகைகளை பதிவு செய்ததோடு, சம்பவம் இடம்பெற்றபோது நகைக் கடையில் இருந்த ஊழியர்களையும் விசாரணைக்குட்படுத்தினார்கள்.
இச்சம்பவத்தில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஊழியர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நகைக் கடையின் முன்பக்க கண்ணாடிகள் நொருக்கப்பட்டிருந்ததுடன், நகைப் பெட்டிகள் அனைத்துமே வெறுமையாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தீப்தி விஜேவிக்ரம கருத்துத் தெரிவிக்கையில்,
""பட்டப்பகலில் இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நாம் துரித விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.
கொள்ளையர்களை நேரில் பார்த்தவர்களை தற்போது கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு அழைத்துச் செல்லவுள்ளோம். அங்கு கொள்ளையர்கள் சிலரின் படங்கள் இருக்கிறன. கொள்ளையர்களை நேரில் பார்த்தவர்கள் அதனை அடையாளம் காட்டுவார்கள் என நம்புகிறோம்'' எனத் தெரிவித்தார். வெள்ளவத்தையில் பட்டப்பகலில் இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தின் காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதைக் காணக்கூடியதாக இருந்தது. இதேவேளை இந்த நகைக் கடை இரண்டு வருடங்களுக்கு முன்னரும் கொள்ளையடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Kesari
35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை
வெள்ளவத்தையிலுள்ள நகைக் கடையொன்று, இனந்தெரியாத கும்பலொன்றினால், நேற்று பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை ஸ்ரீ ஜுவல்ஸ் கார்டன் என்ற நகைக் கடையே இவ்வாறு பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட நகைக் கடையாகும். இக்கொள்ளைச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
மேற்படி நகைக் கடை வழமைபோல் நேற்று திறந்திருந்தபோது கடையில் இரண்டு பேர் கடமையில் இருந்துள்ளனர். பகல் 12 மணியளவில் வானொன்று கடைக்கு அருகில் வந்து நின்றது.
அதிலிருந்து சுமார் 20 வயது மதிக்கத்தக்க யுவதியொருவரும் மேலும் மூன்று இளைஞர்ளும் இறங்கியுள்ளனர். இதில் ஒருவர் வாசலில் நிற்க, மற்றைய இரு இளைஞர்களும் யுவதியுடன் நகைக் கடைக்குள் சென்றுள்ளனர்.
குறிப்பிட்ட யுவதி, தான் நவரத்தினக் கற்கள் பதித்த மோதிரம் வாங்க வந்துள்ளதாக நகைக் கடை ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.
கடை ஊழியர்கள் வந்த மூவரையும் அமரும்படி கூறியுள்ளனர். குறிப்பிட்ட யுவதியும், ஒரு இளைஞரும் மட்டும் ஆசனத்தில் அமர்ந்துள்ளனர்.
ஆனால், மற்றையவர் நின்றுகொண்டிருந்தார். நின்றுகொண்டிருந்தவரை அமரும்படி கடை ஊழியர் கூறியதையடுத்து கடைக்குள் யுவதியுடன் வந்த இரண்டு இளைஞர்களும் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களைக் காட்டி, கடையிலிருந்த நகைகள் அனைத்தையும் ஒன்றாக கட்டும்படி கூறி ஊழியர்களை ஆயுத முனையில் பயமுறுத்தியுள்ளனர்.
அச்சத்திற்குள்ளான ஊழியர்கள் கடையிலிருந்த அனைத்து நகைகளையும் கொண்டுவந்து மேசையில் வைக்க கொள்ளையர்கள் ஊழியர் ஒருவரை பலமாகத் தாக்கிவிட்டு, நகைக் கடையின் கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு, சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான 291 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கைரேகைகளை பதிவு செய்ததோடு, சம்பவம் இடம்பெற்றபோது நகைக் கடையில் இருந்த ஊழியர்களையும் விசாரணைக்குட்படுத்தினார்கள்.
இச்சம்பவத்தில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஊழியர் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நகைக் கடையின் முன்பக்க கண்ணாடிகள் நொருக்கப்பட்டிருந்ததுடன், நகைப் பெட்டிகள் அனைத்துமே வெறுமையாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தீப்தி விஜேவிக்ரம கருத்துத் தெரிவிக்கையில்,
""பட்டப்பகலில் இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நாம் துரித விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.
கொள்ளையர்களை நேரில் பார்த்தவர்களை தற்போது கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு அழைத்துச் செல்லவுள்ளோம். அங்கு கொள்ளையர்கள் சிலரின் படங்கள் இருக்கிறன. கொள்ளையர்களை நேரில் பார்த்தவர்கள் அதனை அடையாளம் காட்டுவார்கள் என நம்புகிறோம்'' எனத் தெரிவித்தார். வெள்ளவத்தையில் பட்டப்பகலில் இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவத்தின் காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதைக் காணக்கூடியதாக இருந்தது. இதேவேளை இந்த நகைக் கடை இரண்டு வருடங்களுக்கு முன்னரும் கொள்ளையடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Kesari
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

