04-17-2005, 01:05 PM
யார் இந்த விஜயன்?
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கருணா `தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் இவர், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.) யுடன் இணைந்து தமிழீழ ஐக்கிய மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார்.
1987 இல் இலங்கை - இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின், புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டது தான் ஈ.என்.டி.எல்.எப்.
இலங்கையில் இந்தியப் படை நிலை கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளுக்கெதிராக ஈ.என்.டி.எல்.எவ். தீவிரமாகச் செயற்பட்டதுடன் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துடன் இவர்களும் தமிழகம் சென்று சேலத்தில் நிலை கொண்டனர்.
கருணாவின் கிளர்ச்சியைத் தொடர்ந்து அவருடன் இணைய ஈ.பி.டீ.பி. முற்பட்ட போதும் கருணாவுடன் ஈ.என்.டி.எல்.எவ்.பை இந்திய புலனாய்வுப் பிரிவான `றோ' வே இணைத்ததாக தமிழர் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டது.
கருணா குழுவும் ஈ.என்.டி.எல்.எவ்.பும் இணைந்த பின், கௌசல்யன் மீதான வெலிக்கந்தை தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பென தமிழ்த் தேசிப் படை (ரி.என்.எவ்.) என்ற அமைப்பு வெளிநாடொன்றிலிருந்து உரிமை கோரியதுடன் தமிழீழ ஐக்கிய மக்கள் முன்னணி அமைப்பின் துணைப் படையே `ரி.என்.எவ்.' எனக் கூறியிருந்தது.
கௌசல்யன் கொலையுடன் விஜயன் என்ற ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினருக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் சொறிவில் தாக்குதலின் விஜயன் கொல்லப்பட்டார்.
புலிகளுக்கெதிரான தாக்குதலை கிழக்கில் தீவிரப்படுத்துவதற்காக விஜயன் விசேடமாக அனுப்பி வைக்கப்பட்டவரெனக் கூறப்படுகிறது. இவரது குடும்பத்தினர் தற்போது சேலத்தில் ஈ.என்.டி.எல்.எப். முகாமிலிருக்கின்றனர்.
விஜயன் இந்திய கடவுச் சீட்டைக் கொண்டவர். இவரது இழப்பு புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் இவருக்குப் பதிலாக ஈ.என்.டி.எல்.எவ்.பைச் சேர்ந்தவர்கள் இங்கு அனுப்பப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது
Thinakkural
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கருணா `தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் இவர், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.) யுடன் இணைந்து தமிழீழ ஐக்கிய மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார்.
1987 இல் இலங்கை - இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின், புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டது தான் ஈ.என்.டி.எல்.எப்.
இலங்கையில் இந்தியப் படை நிலை கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளுக்கெதிராக ஈ.என்.டி.எல்.எவ். தீவிரமாகச் செயற்பட்டதுடன் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துடன் இவர்களும் தமிழகம் சென்று சேலத்தில் நிலை கொண்டனர்.
கருணாவின் கிளர்ச்சியைத் தொடர்ந்து அவருடன் இணைய ஈ.பி.டீ.பி. முற்பட்ட போதும் கருணாவுடன் ஈ.என்.டி.எல்.எவ்.பை இந்திய புலனாய்வுப் பிரிவான `றோ' வே இணைத்ததாக தமிழர் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டது.
கருணா குழுவும் ஈ.என்.டி.எல்.எவ்.பும் இணைந்த பின், கௌசல்யன் மீதான வெலிக்கந்தை தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பென தமிழ்த் தேசிப் படை (ரி.என்.எவ்.) என்ற அமைப்பு வெளிநாடொன்றிலிருந்து உரிமை கோரியதுடன் தமிழீழ ஐக்கிய மக்கள் முன்னணி அமைப்பின் துணைப் படையே `ரி.என்.எவ்.' எனக் கூறியிருந்தது.
கௌசல்யன் கொலையுடன் விஜயன் என்ற ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினருக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் சொறிவில் தாக்குதலின் விஜயன் கொல்லப்பட்டார்.
புலிகளுக்கெதிரான தாக்குதலை கிழக்கில் தீவிரப்படுத்துவதற்காக விஜயன் விசேடமாக அனுப்பி வைக்கப்பட்டவரெனக் கூறப்படுகிறது. இவரது குடும்பத்தினர் தற்போது சேலத்தில் ஈ.என்.டி.எல்.எப். முகாமிலிருக்கின்றனர்.
விஜயன் இந்திய கடவுச் சீட்டைக் கொண்டவர். இவரது இழப்பு புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் இவருக்குப் பதிலாக ஈ.என்.டி.எல்.எவ்.பைச் சேர்ந்தவர்கள் இங்கு அனுப்பப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது
Thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

