04-16-2005, 11:41 AM
சச்சின் - விமர்சனம்
சமீப காலங்களாகவே சிக்ஸரும், பவுண்டரிகளுமாக அடித்துக் கொண்டிருக்கிற விஜய்க்கு ஏற்ற தலைப்பு. ஒரே கல்லூரியில் படிக்கும் ஜெனிலியாவுக்கும், விஜய்க்கும் காதல். அதை வெளியில் காட்டிக் கொள்ளாத இருவருக்கும் நடக்கிற இனிப்பான ஊடல்தான் கதை. எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று மண்டையை பிய்த்துக் கொள்பவர்கள், அதிகம் சிரமப்பட வேண்டாம். குஷியின் குளோனிங்தான் சச்சின்.
காதல் தேவதையாக வலம் வரும் ஜெனிலியாவை கண்டு மொத்த கல்லூரியும் பித்தம் பிடித்து அலைகிறது. ஆனால் விஜயோ, இதெல்லாம் ஒரு ஃபிகரா என்கிறார் உள்ளுக்குள் பொங்குகிற காதலை அடக்கிக் கொண்டு. இது போதாதா? ஈகோ வெடிக்கிறது. ஒரு கட்டத்தில் காதலை சொல்லும் விஜயிடம், எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்லை என்கிறார் ஜெனிலியா. எண்ணி முப்பது நாளுக்குள் உன்னை தானாக வந்து ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் என்று விஜய் சவால் விட, அந்த முப்பதாவது நாள்...? க்ளைமாக்ஸ்!
வர வர அழகாகிக் கொண்டே போகிறார் விஜய். வந்திட்டேங்ணா... என்று சொல்லிக் கொண்டே ஓடிவரும் அவரின் நக்கலையும், நையாண்டியையும் ரசித்துக் கொண்டேயிருக்கலாம். போதும் போதாததற்கு வடிவேலு காம்பினேஷன் வேறு! அவர் அதட்ட, இவர் பயப்படுவது போல் ஒடுங்க, ரகளையோ ரகளை! வீட்டில் தன்னந்தனியே வசீகரா பாடலுக்கு அரை ஸ்கர்ட்டுடன் ஆட்டம் போடும் ஜெனிலியா, விஜய் பார்த்துவிட்டார் என்று தெரிந்ததும் அவசர அவசரமாக புத்தகம் ஒன்றை எடுத்து மறைக்க வேண்டியதை மறைப்பது ஜாலி. இதை போய் காலேஜ்ல சொன்னே...? என்று தானாக போய் பொறியில் மாட்டுகிறாரே, அது இன்னுமோர் ஜாலி. மறுநாள் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் வசீகரா பாட்டுக்கு விஜய் ஆட, ஜெனிலியா பொருமி நடந்ததை சொல்லி உளறுவதெல்லாம் இளமை திருவிழா.
ஜெனிலியா. பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சி!
பிபாஷா...? பாலிவுட் அழகிற்கு கோலிவுட்டில் வேறு அர்த்தம் போலிருக்கிறது.
இதை முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக்க வேண்டும் என்று முடிவெடுத்த இயக்குனர், லொள்ளுசபா சந்தானத்தை எதற்கு சேர்த்தார் என்பதுதான் புரியவில்லை. அந்த ரீல்களை வடிவேலுவுக்கு தாரை வார்த்திருந்தால், கோடை தாகத்திற்கு குளிர் மோரை வார்த்த புண்ணியம் கிடைத்திருக்கும். இந்த வளவள ஆசாமி டி.வி நேயர்களையே சோதனைக்குள்ளாக்குபவர். சினிமா பிரமோஷன் வேறா?
ஜீவாவின் கேமிராவுக்கு இருமலே வந்திருக்கும். எல்லாக் காட்சிகளிலும் புகை. கேட்டால் ஊட்டியின் மிஸ்ட் என்பார்கள்.
இசை தேவி ஸ்ரீ பிரசாத். பாடல்கள் இனிப்பு என்றால் பின்னணி இசை துவர்ப்பு. பல காட்சிகளில் டயலாக்கை கபளீகரம் செய்துவிடுகிறது பின்னணி சப்தம்.
அந்த சண்டைக்காட்சியும், அதற்கான உழைப்பும் வாவ்...
இப்படத்தின் இயக்குனர் ஜான், உதிரிப்பூக்கள் இயக்கிய மகேந்திரனின் வாரிசு!
சாண் ஏறியிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் முழம் சறுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!
-ஆர்.எஸ்.அந்தணன்/தமிழ் சினிமா
சமீப காலங்களாகவே சிக்ஸரும், பவுண்டரிகளுமாக அடித்துக் கொண்டிருக்கிற விஜய்க்கு ஏற்ற தலைப்பு. ஒரே கல்லூரியில் படிக்கும் ஜெனிலியாவுக்கும், விஜய்க்கும் காதல். அதை வெளியில் காட்டிக் கொள்ளாத இருவருக்கும் நடக்கிற இனிப்பான ஊடல்தான் கதை. எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று மண்டையை பிய்த்துக் கொள்பவர்கள், அதிகம் சிரமப்பட வேண்டாம். குஷியின் குளோனிங்தான் சச்சின்.
காதல் தேவதையாக வலம் வரும் ஜெனிலியாவை கண்டு மொத்த கல்லூரியும் பித்தம் பிடித்து அலைகிறது. ஆனால் விஜயோ, இதெல்லாம் ஒரு ஃபிகரா என்கிறார் உள்ளுக்குள் பொங்குகிற காதலை அடக்கிக் கொண்டு. இது போதாதா? ஈகோ வெடிக்கிறது. ஒரு கட்டத்தில் காதலை சொல்லும் விஜயிடம், எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்லை என்கிறார் ஜெனிலியா. எண்ணி முப்பது நாளுக்குள் உன்னை தானாக வந்து ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் என்று விஜய் சவால் விட, அந்த முப்பதாவது நாள்...? க்ளைமாக்ஸ்!
வர வர அழகாகிக் கொண்டே போகிறார் விஜய். வந்திட்டேங்ணா... என்று சொல்லிக் கொண்டே ஓடிவரும் அவரின் நக்கலையும், நையாண்டியையும் ரசித்துக் கொண்டேயிருக்கலாம். போதும் போதாததற்கு வடிவேலு காம்பினேஷன் வேறு! அவர் அதட்ட, இவர் பயப்படுவது போல் ஒடுங்க, ரகளையோ ரகளை! வீட்டில் தன்னந்தனியே வசீகரா பாடலுக்கு அரை ஸ்கர்ட்டுடன் ஆட்டம் போடும் ஜெனிலியா, விஜய் பார்த்துவிட்டார் என்று தெரிந்ததும் அவசர அவசரமாக புத்தகம் ஒன்றை எடுத்து மறைக்க வேண்டியதை மறைப்பது ஜாலி. இதை போய் காலேஜ்ல சொன்னே...? என்று தானாக போய் பொறியில் மாட்டுகிறாரே, அது இன்னுமோர் ஜாலி. மறுநாள் கல்லூரியில் மாணவிகள் மத்தியில் வசீகரா பாட்டுக்கு விஜய் ஆட, ஜெனிலியா பொருமி நடந்ததை சொல்லி உளறுவதெல்லாம் இளமை திருவிழா.
ஜெனிலியா. பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சி!
பிபாஷா...? பாலிவுட் அழகிற்கு கோலிவுட்டில் வேறு அர்த்தம் போலிருக்கிறது.
இதை முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக்க வேண்டும் என்று முடிவெடுத்த இயக்குனர், லொள்ளுசபா சந்தானத்தை எதற்கு சேர்த்தார் என்பதுதான் புரியவில்லை. அந்த ரீல்களை வடிவேலுவுக்கு தாரை வார்த்திருந்தால், கோடை தாகத்திற்கு குளிர் மோரை வார்த்த புண்ணியம் கிடைத்திருக்கும். இந்த வளவள ஆசாமி டி.வி நேயர்களையே சோதனைக்குள்ளாக்குபவர். சினிமா பிரமோஷன் வேறா?
ஜீவாவின் கேமிராவுக்கு இருமலே வந்திருக்கும். எல்லாக் காட்சிகளிலும் புகை. கேட்டால் ஊட்டியின் மிஸ்ட் என்பார்கள்.
இசை தேவி ஸ்ரீ பிரசாத். பாடல்கள் இனிப்பு என்றால் பின்னணி இசை துவர்ப்பு. பல காட்சிகளில் டயலாக்கை கபளீகரம் செய்துவிடுகிறது பின்னணி சப்தம்.
அந்த சண்டைக்காட்சியும், அதற்கான உழைப்பும் வாவ்...
இப்படத்தின் இயக்குனர் ஜான், உதிரிப்பூக்கள் இயக்கிய மகேந்திரனின் வாரிசு!
சாண் ஏறியிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் முழம் சறுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!
-ஆர்.எஸ்.அந்தணன்/தமிழ் சினிமா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

