Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் தாக்குதல் நடத்தவில்லை.
#1
விடுதலைப் புலிகள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடாத்தவில்லை-இராணுப் பேச்சாளர்

திருமலையில் விடுதலைப் புலிகள் சிறீலங்கா படையினர் மீது தாக்குதல் நாடதினர் என்ற குற்றச்சாட்டை படையினர் முன்வைத்து போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தனர். இக்குற்றச்சாட்டை நேற்று மாலை படையினர் மீளப்பெற்றுள்ளனர்.விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது சீறீலங்கா இராணுவப் பேச்சாளர் தயாரட்ணநாயக்கா அறிவித்துள்ளார்.திருமலை மாவட்டத்தில் மகிந்தபுரம் பகுதியில் சிறீலங்கா இராணுவம் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோம் நடத்தினார்கள் என்ற குற்றசாட்டை முன்வைத்தே படையினர் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகள் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது துப்பாக்கி வேட்டுகளின் சத்தத்தைக் கேட்ட படையினர் தம்மீது தாக்குதல் நடத்துவதாக தவறுதலாகப் புரிந்து கொண்டே முறைப்பாட்டைச் செய்திருந்தனர்.


நன்றி சங்கதி


.
Reply


Messages In This Thread
புலிகள் தாக்குதல் நடத்தவில்லை. - by thamilvanan - 04-15-2005, 08:31 AM
[No subject] - by eelapirean - 04-15-2005, 05:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)