04-13-2005, 08:58 PM
சங்கரிக்கு எதிராக சுடர்ஒளி சட்ட நடவடிக்கைக்குத் தயார்!
கிளிநொச்சியிலிருந்து தனோஜன்
விடுதலைப்புலிகளின் நிதியில் 'சுடர்ஒளி" பத்திரிகை இயங்குவதாகத் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி பேட்டியளித்திருக்கிறார்.
சங்கரியார் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கும் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுத் தொடர்பாக அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது சுடர்ஒளி பத்திரிகை 'த ஐலண்ட்" ஆங்கில நாளிதழில் ஆனந்தசங்கரி தெரிவித்;திருப்பதாகக் குறிப்பிட்டு அதன் நேற்றைய இதழின் முன்பக்கத்தில் தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதியைத் தாக்குகிறார் சங்கரி என்ற ஒரு தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதில் 'சுடர்ஒளி" தொடர்பாக அவர் கூறியதாவது:-
பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஆர்வமில்லை அவற்றுக்கு முதுகெலும்பு இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் டிரம்பட் (இசைக்கருவியை) அவை ஊதுகின்றன.
தமிழ் இனத்திற்கு அவை எதுவும் செய்வதில்லை என்பது குறித்து நான் ஆதங்கப்படுகிறேன். தமிழ் ஊடகங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அடிமைகளாக இருக்க நான் மட்டும் எனது இனம் குறித்தே சிரத்தையுடையவனாக இருக்கிறேன் என்றார் ஆனந்தசங்கரி.
தன்னைத் துரோகி என்றும் அடிமை என்றும் அழைத்துள்ள 'சுடர்ஒளி" பத்திரிகை பிரபாகரனின் கைக்கூலி ஒருவரால் நடத்தப்படுவது என்றும் அந்தப் பத்திரிகை விடுதலைப்புலிகளின் நிதியில் இயங்குகின்றது என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் கூறினார்.
அப்படி இல்லை என்றால் அதை 'சுடர்ஒளி" நிரூபிக்கட்டும் என்றும் ஆனந்தசங்கரி சவால் விடுத்தார். நான் கூறிய எல்லாவற்றிற்கும் நான் முழுப்பொறுப்பு ஏற்கிறேன் என்று ஆனந்த சங்கரி மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இப்படி அந்தப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படித் தாம் முழுப்பொறுப்பு ஏற்றார் எனத் தெரிவித்து ஆனந்தசங்கரி கூறிய விடையங்கள் தொடர்பாகவே அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 'சுடர்ஒளி" தீர்மானித்திருக்கிறது. உடனடியாக அவருக்கு சட்ட நிபந்தனைக் கடிதம் ஒன்றை அனுப்புவது குறித்து 'சுடர்ஒளி" தனது நிபுணர்களோடு ஆலோசித்து வருகின்றது.
நன்றி: யாழ். உதயன்;
கிளிநொச்சியிலிருந்து தனோஜன்
விடுதலைப்புலிகளின் நிதியில் 'சுடர்ஒளி" பத்திரிகை இயங்குவதாகத் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி பேட்டியளித்திருக்கிறார்.
சங்கரியார் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கும் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுத் தொடர்பாக அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது சுடர்ஒளி பத்திரிகை 'த ஐலண்ட்" ஆங்கில நாளிதழில் ஆனந்தசங்கரி தெரிவித்;திருப்பதாகக் குறிப்பிட்டு அதன் நேற்றைய இதழின் முன்பக்கத்தில் தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதியைத் தாக்குகிறார் சங்கரி என்ற ஒரு தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதில் 'சுடர்ஒளி" தொடர்பாக அவர் கூறியதாவது:-
பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஆர்வமில்லை அவற்றுக்கு முதுகெலும்பு இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் டிரம்பட் (இசைக்கருவியை) அவை ஊதுகின்றன.
தமிழ் இனத்திற்கு அவை எதுவும் செய்வதில்லை என்பது குறித்து நான் ஆதங்கப்படுகிறேன். தமிழ் ஊடகங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அடிமைகளாக இருக்க நான் மட்டும் எனது இனம் குறித்தே சிரத்தையுடையவனாக இருக்கிறேன் என்றார் ஆனந்தசங்கரி.
தன்னைத் துரோகி என்றும் அடிமை என்றும் அழைத்துள்ள 'சுடர்ஒளி" பத்திரிகை பிரபாகரனின் கைக்கூலி ஒருவரால் நடத்தப்படுவது என்றும் அந்தப் பத்திரிகை விடுதலைப்புலிகளின் நிதியில் இயங்குகின்றது என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் கூறினார்.
அப்படி இல்லை என்றால் அதை 'சுடர்ஒளி" நிரூபிக்கட்டும் என்றும் ஆனந்தசங்கரி சவால் விடுத்தார். நான் கூறிய எல்லாவற்றிற்கும் நான் முழுப்பொறுப்பு ஏற்கிறேன் என்று ஆனந்த சங்கரி மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இப்படி அந்தப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படித் தாம் முழுப்பொறுப்பு ஏற்றார் எனத் தெரிவித்து ஆனந்தசங்கரி கூறிய விடையங்கள் தொடர்பாகவே அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 'சுடர்ஒளி" தீர்மானித்திருக்கிறது. உடனடியாக அவருக்கு சட்ட நிபந்தனைக் கடிதம் ஒன்றை அனுப்புவது குறித்து 'சுடர்ஒளி" தனது நிபுணர்களோடு ஆலோசித்து வருகின்றது.
நன்றி: யாழ். உதயன்;
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

