04-11-2005, 01:48 AM
போலியோ மருந்து சாப்பிட்ட 4 மாத குழந்தை பரிதாப சாவு தாய்மார்கள் முகாமை விட்டு ஓட்டம் பிடித்தனர்
<img src='http://www.dinakaran.com/daily/2005/Apr/11/others/C139_21md-all.jpg' border='0' alt='user posted image'>
பழநி அருகே பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த 4 மாத குழந்தை சங்கீதாவை படத்தில் காணலாம்.
பழநி, ஏப்.11- பழநியில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த சிறிது நேரத்தில் கைக்குழந்தை பரிதாபமாக இறந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதனால் போலியோ சொட்டு மருந்து கொடுக்க குழந்தைகளுடன் நின்று இருந்த பெற்றோர் அலறி அடித்து ஓடினர்.
போலியோ மருந்து
பழநியை அடுத்த பழைய ஆயக்குடி ஜோதிநகரை சேர்ந்தவர் வாய்க்கால் துரை (வயது 2. இவர் மனைவி நாச்சம் மாள் (வயது 20). இவர்களுக்கு சங்கீதா என்ற பெண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகிறது. இதுதான் முதல் குழந்தை ஆகும். வாய்க்கால் துரை கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறது.
தற்போது இவர்கள் பழநி அடுத்துள்ள பாலசமுத்திரம் பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். நேற்று இந்தியா முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் ஆயக்குடி அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்காக குழந்தை சங்கீதாவை தூக்கிக் கொண்டு வாய்க்கால் துரை வந்திருந்தார்.
பரிதாப சாவு
காலை 8 மணிக்கு முகாம் தொடங்கியது. 10 மணி அளவில் 176-வது குழந்தையாக சங்கீதாவிற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மருந்து கொடுத்த சிறிது நேரத்திலேயே குழந்தை சங்கீதா மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனது. இதனால் அருகில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க காத்திருந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து குழந்தைகளை தூக்கிக்கொண்டு போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை மயங்கி விழுந்து செத்த சம்பவம் பழநி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தை சங்கீதாவை மடியில் போட்டுக் கொண்டு …எங்களின் ஒரே குழந்தையை பறி கொடுத்துவிட்டோமே என்று பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இறந்த குழந்தை சங்கீதாவிற்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து ஒரு முறை கொடுக்கப் பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைக்கு இருதய நோய் இருந்ததாகவும் தெரிகிறது.
ஆறுதல்
இது குறித்து தகவல் அறிந்தவுடன் பழநி ஆர்.டி.ஓ. எஸ். நாராயணமூர்த்தி, தாசில்தார் பாலசுப்பிரமணியம், வருவாய் துறை அலுவலர்கள், மருத்துவ துறை அதிகாரிகள், பழநி முன்னாள் எம்.எல்.ஏ. பழனிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தையை பறிகொடுத்து கதறி அழுத பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் இது குறித்து மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பழனிவேல் கூறியபோது …குழந்தையை பறிகொடுத்த வாய்க்கால் துரை கூலி தொழிலாளி ஆவார். எனவே அவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
<img src='http://www.dinakaran.com/daily/2005/Apr/11/others/C139_21md-all.jpg' border='0' alt='user posted image'>
பழநி அருகே பழைய ஆயக்குடி அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த 4 மாத குழந்தை சங்கீதாவை படத்தில் காணலாம்.
பழநி, ஏப்.11- பழநியில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த சிறிது நேரத்தில் கைக்குழந்தை பரிதாபமாக இறந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதனால் போலியோ சொட்டு மருந்து கொடுக்க குழந்தைகளுடன் நின்று இருந்த பெற்றோர் அலறி அடித்து ஓடினர்.
போலியோ மருந்து
பழநியை அடுத்த பழைய ஆயக்குடி ஜோதிநகரை சேர்ந்தவர் வாய்க்கால் துரை (வயது 2. இவர் மனைவி நாச்சம் மாள் (வயது 20). இவர்களுக்கு சங்கீதா என்ற பெண் குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆகிறது. இதுதான் முதல் குழந்தை ஆகும். வாய்க்கால் துரை கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறது.
தற்போது இவர்கள் பழநி அடுத்துள்ள பாலசமுத்திரம் பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். நேற்று இந்தியா முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் ஆயக்குடி அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதற்காக குழந்தை சங்கீதாவை தூக்கிக் கொண்டு வாய்க்கால் துரை வந்திருந்தார்.
பரிதாப சாவு
காலை 8 மணிக்கு முகாம் தொடங்கியது. 10 மணி அளவில் 176-வது குழந்தையாக சங்கீதாவிற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மருந்து கொடுத்த சிறிது நேரத்திலேயே குழந்தை சங்கீதா மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்து போனது. இதனால் அருகில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க காத்திருந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து குழந்தைகளை தூக்கிக்கொண்டு போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை மயங்கி விழுந்து செத்த சம்பவம் பழநி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தை சங்கீதாவை மடியில் போட்டுக் கொண்டு …எங்களின் ஒரே குழந்தையை பறி கொடுத்துவிட்டோமே என்று பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இறந்த குழந்தை சங்கீதாவிற்கு ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து ஒரு முறை கொடுக்கப் பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தைக்கு இருதய நோய் இருந்ததாகவும் தெரிகிறது.
ஆறுதல்
இது குறித்து தகவல் அறிந்தவுடன் பழநி ஆர்.டி.ஓ. எஸ். நாராயணமூர்த்தி, தாசில்தார் பாலசுப்பிரமணியம், வருவாய் துறை அலுவலர்கள், மருத்துவ துறை அதிகாரிகள், பழநி முன்னாள் எம்.எல்.ஏ. பழனிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். குழந்தையை பறிகொடுத்து கதறி அழுத பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
மேலும் இது குறித்து மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பழனிவேல் கூறியபோது …குழந்தையை பறிகொடுத்த வாய்க்கால் துரை கூலி தொழிலாளி ஆவார். எனவே அவருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

