04-09-2005, 12:24 PM
ஐரிஷ் குடியரசு இராணுவம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விடுதலைப் புலிகள் விவகாரத்துடன் ஒப்பிடும் சென்னை `இந்து'
குற்ற வன்முறைகளை இலட்சியத்தின் பெயரால் சட்ட பூர்வமாக்குவதனால் அரசியல் போராட்டங்கள் நிகழ்த்தும் ஆயுதக் குழுக்கள் அவற்றை எவ்வித தயக்கமுமின்றி நிகழ்த்துவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.
வட அயர்லாந்து பெல்ஃபாஸ்டில் ஒரு கத்தோலிக்கரான ரொபேட் மக்கார்ட்னேயின் கொலையைத் தொடர்ந்து தற்போது ஐரிஷ் குடியரசு இராணுவம் மாட்டிக் கொண்டுள்ள சிக்கலில் இருந்து கிடைக்கும் உறுதியான செய்தி இதுவாகும். இந்தக் குற்றத்தில் தெரிவிக்கப்படும், அக்குழுவின் தொடர்பிற்காக அதற்கெதிரான பொதுமக்களின் கோபம் விலக மறுக்கிறது. அதற்குப் பதிலாக இந்த கொடூரக் கொலையானது, கொலை மற்றும் `நீதியான' தாக்குதல்களிலிருந்து அச்சுறுத்திப் பணம் பறித்தல் வரை பலதரப்பட்ட ஐ.ஆர்.ஏ.யின் குற்றச் செயல்களினுடைய தங்களின் சொந்த அனுபவங்களுடன் ஏனையவர்களையும் முன்னுக்கு வரத் தூண்டியுள்ளது. அண்மைக்காலம் வரை ஐ.ஆர்.ஏ. அச்சம் கலந்த மரியாதையைப் பெற்றுவந்த இடத்தில் இது முன்னென்றும் இல்லாத நிகழ்வாகும். பொதுமக்களின் பிரதிபலிப்பு அக்குழுவை, தமது ஆட்கள் சிலர் நேரடியாக ஈடுபட்டுள்ளார்கள் என்று ஒத்துக் கொள்ளும் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்குத் தள்ளியது. ஆனால், அதற்குப் பொறுப்பான நபர்களை அதனுடைய வெளிப்படையான இணக்கப்பாட்டு முன்வருகையானது எல்லாவற்றிற்கு மேலாக மக்களை ஆத்திரத்திற்கே உட்படுத்தியது.
ஐ.ஆர்.ஏ. பிரதான சந்தேக நபராக உள்ள கடந்த டிசம்பர் மாதத்தைய கொலை மற்றும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளையானது அக்குழுவின் தீவிர ஆதரவுக் குரல் தருவோரைக் கூட வாயடைக்கச் செய்துள்ளது. ஐக்கிய அயர்லாந்திற்கான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட அது மறுக்கின்றமையும் அதன் ஆயுதங்களைக் களைவதை தடுக்கின்றமையும் வட அயர்லாந்து சமாதான முயற்சிக்கு முக்கிய தடைக்கற்களாக நீடிக்கின்றன.
ஐ.ஆர்.ஏ.யின் அரசியல் பிரிவான சின்ஃபெயின் கொலையிலிருந்து தன்னை தூரவிலக்கியிருக்க முயற்சித்திருந்தது. ஆனால், இரண்டினதும் அடையாளங்கள் ஒன்றுடன் ஒன்று மிகவும் பின்னிப் பிணைந்தவையாகையால் அண்மைய நிகழ்வுகளுக்கான குற்றச்சாட்டிலிருந்து கட்சியானது தப்பிக் கொள்ள முடியாது. சின்ஃபெயினானது தான் நவீன ஜனநாயகக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பேரார்வம் கொண்டுள்ளது. ஆனால், ஐ.ஆர்.ஏ. ஆனது கலைக்கப்படுவதற்கு மற்றும் ஆயுதங்களைக் கைவிடுவதற்கு போதுமான அழுத்தத்தை வழங்குவதில் அது அடைந்துள்ள தோல்வியானது அதை நம்பகத் தன்மையான சக்தியாக அங்கீகரிக்கப்படுவதிலிருந்து தடுக்கின்றது.
ஐரிஷ் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் பரந்த ஐரிஷ் குடியேற்ற சமூகத்தின் ஆதரவின் மீது ஐ.ஆர்.ஏ. நம்பிக்கை கொண்டுள்ள இடமான ஐக்கிய அமெரிக்காவில் சின்ஃபெயின் தலைவர் ஜெரி அடம்ஸிற்கு அளிக்கப்பட்ட உற்சாகமற்ற வரவேற்பானது ஐ.ஆர்.ஏ.யானது சொத்து என்பதை விட சுமையாகவே உள்ளது என்ற யதார்த்தத்தை உணர்த்துவதாக இருந்தது.
ஐரிஷ் கத்தோலிக்க விழாவான புனித. பட்ரிக் நாளுக்கான பாரம்பரிய விருந்துபசாரத்திற்கு வெள்ளை மாளிகை அடம்ஸை அழைக்காமல் அதற்குப் பதிலாக சின்ஃபெயினின் தீவிர ஆதரவாளர்களான கொலை செய்யப்பட்ட செனட்டர் எட்வேட் கென்னடி குடும்பத்தினரை அழைத்ததுடன் அடம்ஸுடனான சந்திப்பையும் நிறுத்தி விட்டது. ஐ.ஆர்.ஏ. பிரித்தானியாவிற்கு எதிரான தனது ஆயுதப் போராட்டத்தில் 1997 இல் ஒரு யுத்த நிறுத்தத்தை பிரகடனப்படுத்தியது மற்றும் ஓராண்டின் பின்னர் வட அயர்லாந்திற்கு அதிகாரத்தைப் பகிர்வதற்கான பெரிய வெள்ளி உடன்பாட்டில் சின்ஃபெயின் கைச்சாத்திட்டது. 2004 டிசம்பரில் சின்ஃபெயினிற்கும் ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கும் ( ஆணிச்œ ஈச்ணணூஞ்ஞு) இடையிலான அதிகாரத்தைப் பகிர்வது குறித்த புதிய முயற்சியானது ஒரு உடன்பாடு எட்டப்படுவதை நெருங்கி வந்தது. ஆனால், அது ஆயுதக்களைவு விடயத்தினால் இது பின்னடைவைக் கண்டது. மக்கார்ட்னேயின் கொலையைத் தொடர்ந்து அத்திலாந்திக்குக்கு அப்பாலிருந்து வரும் ஆக்கபூர்வமான அழுத்தம் இறுதியில் ஆயுதங்களைக் கைவிடுவதற்கு ஐ.ஆர்.ஏ.யைக் கட்டுப்படுத்துமா? இந்தக் கட்டத்தில் எவரும் எந்த விதத்திலான நம்பிக்கையுடனும் இதற்கு பதிலளிக்க முடியாது.
ஐ.ஆர்.ஏ.யின் தற்போதைய தொல்லைகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஒரு பாடம் இருக்கின்றது. பெப்ரவரி 22 யுத்த நிறுத்தத்திலிருந்து பல கொலைகள், பயமுறுத்தல், அச்சுறுத்திப் பணம் பறித்தல் மற்றும் வெளிப்படையான வன்முறைக் கும்பல்தனம் போன்றவற்றை முக்கிய பண்பாக்கிய பயங்கரவாத நடவடிக்கை மூலம் தாங்களே அறிவித்துக் கொண்ட `ஏக பிரதிநிதி'யாக வட, கிழக்கின் பெரும்பகுதியில் தமிழர்கள் மீது இந்த பொல்பொட் அமைப்பு ஆட்சி செலுத்துகின்றது.
வடஅயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ.யின் நிலப்பிரதேசத்தை விட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் விடயங்கள் மிக மோசமாக இருக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மிதவாதிகளின் அடிவருடி நிலை எல்லாவற்றிலும் சிறந்த எடுத்துக்காட்டாகும். மக்கார்ட்னேயின் சகோதரிகள் அளவு வலிமையாக தமிழர்கள் விடுதலைப் புலிகளின் குற்ற வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச ஆதரவைத்தேடும் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவில்லை. ஆனால், வழமையாக இருந்ததை விட அவர்களின் குரல்கள் வலிமையாக உள்ளன. எதிர்காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் கூட நிலைமை மாற்றமடையும்.-இந்து ஆசிரிய தலையங்கம்
Thinakkurl
குற்ற வன்முறைகளை இலட்சியத்தின் பெயரால் சட்ட பூர்வமாக்குவதனால் அரசியல் போராட்டங்கள் நிகழ்த்தும் ஆயுதக் குழுக்கள் அவற்றை எவ்வித தயக்கமுமின்றி நிகழ்த்துவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.
வட அயர்லாந்து பெல்ஃபாஸ்டில் ஒரு கத்தோலிக்கரான ரொபேட் மக்கார்ட்னேயின் கொலையைத் தொடர்ந்து தற்போது ஐரிஷ் குடியரசு இராணுவம் மாட்டிக் கொண்டுள்ள சிக்கலில் இருந்து கிடைக்கும் உறுதியான செய்தி இதுவாகும். இந்தக் குற்றத்தில் தெரிவிக்கப்படும், அக்குழுவின் தொடர்பிற்காக அதற்கெதிரான பொதுமக்களின் கோபம் விலக மறுக்கிறது. அதற்குப் பதிலாக இந்த கொடூரக் கொலையானது, கொலை மற்றும் `நீதியான' தாக்குதல்களிலிருந்து அச்சுறுத்திப் பணம் பறித்தல் வரை பலதரப்பட்ட ஐ.ஆர்.ஏ.யின் குற்றச் செயல்களினுடைய தங்களின் சொந்த அனுபவங்களுடன் ஏனையவர்களையும் முன்னுக்கு வரத் தூண்டியுள்ளது. அண்மைக்காலம் வரை ஐ.ஆர்.ஏ. அச்சம் கலந்த மரியாதையைப் பெற்றுவந்த இடத்தில் இது முன்னென்றும் இல்லாத நிகழ்வாகும். பொதுமக்களின் பிரதிபலிப்பு அக்குழுவை, தமது ஆட்கள் சிலர் நேரடியாக ஈடுபட்டுள்ளார்கள் என்று ஒத்துக் கொள்ளும் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்குத் தள்ளியது. ஆனால், அதற்குப் பொறுப்பான நபர்களை அதனுடைய வெளிப்படையான இணக்கப்பாட்டு முன்வருகையானது எல்லாவற்றிற்கு மேலாக மக்களை ஆத்திரத்திற்கே உட்படுத்தியது.
ஐ.ஆர்.ஏ. பிரதான சந்தேக நபராக உள்ள கடந்த டிசம்பர் மாதத்தைய கொலை மற்றும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளையானது அக்குழுவின் தீவிர ஆதரவுக் குரல் தருவோரைக் கூட வாயடைக்கச் செய்துள்ளது. ஐக்கிய அயர்லாந்திற்கான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட அது மறுக்கின்றமையும் அதன் ஆயுதங்களைக் களைவதை தடுக்கின்றமையும் வட அயர்லாந்து சமாதான முயற்சிக்கு முக்கிய தடைக்கற்களாக நீடிக்கின்றன.
ஐ.ஆர்.ஏ.யின் அரசியல் பிரிவான சின்ஃபெயின் கொலையிலிருந்து தன்னை தூரவிலக்கியிருக்க முயற்சித்திருந்தது. ஆனால், இரண்டினதும் அடையாளங்கள் ஒன்றுடன் ஒன்று மிகவும் பின்னிப் பிணைந்தவையாகையால் அண்மைய நிகழ்வுகளுக்கான குற்றச்சாட்டிலிருந்து கட்சியானது தப்பிக் கொள்ள முடியாது. சின்ஃபெயினானது தான் நவீன ஜனநாயகக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பேரார்வம் கொண்டுள்ளது. ஆனால், ஐ.ஆர்.ஏ. ஆனது கலைக்கப்படுவதற்கு மற்றும் ஆயுதங்களைக் கைவிடுவதற்கு போதுமான அழுத்தத்தை வழங்குவதில் அது அடைந்துள்ள தோல்வியானது அதை நம்பகத் தன்மையான சக்தியாக அங்கீகரிக்கப்படுவதிலிருந்து தடுக்கின்றது.
ஐரிஷ் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் பரந்த ஐரிஷ் குடியேற்ற சமூகத்தின் ஆதரவின் மீது ஐ.ஆர்.ஏ. நம்பிக்கை கொண்டுள்ள இடமான ஐக்கிய அமெரிக்காவில் சின்ஃபெயின் தலைவர் ஜெரி அடம்ஸிற்கு அளிக்கப்பட்ட உற்சாகமற்ற வரவேற்பானது ஐ.ஆர்.ஏ.யானது சொத்து என்பதை விட சுமையாகவே உள்ளது என்ற யதார்த்தத்தை உணர்த்துவதாக இருந்தது.
ஐரிஷ் கத்தோலிக்க விழாவான புனித. பட்ரிக் நாளுக்கான பாரம்பரிய விருந்துபசாரத்திற்கு வெள்ளை மாளிகை அடம்ஸை அழைக்காமல் அதற்குப் பதிலாக சின்ஃபெயினின் தீவிர ஆதரவாளர்களான கொலை செய்யப்பட்ட செனட்டர் எட்வேட் கென்னடி குடும்பத்தினரை அழைத்ததுடன் அடம்ஸுடனான சந்திப்பையும் நிறுத்தி விட்டது. ஐ.ஆர்.ஏ. பிரித்தானியாவிற்கு எதிரான தனது ஆயுதப் போராட்டத்தில் 1997 இல் ஒரு யுத்த நிறுத்தத்தை பிரகடனப்படுத்தியது மற்றும் ஓராண்டின் பின்னர் வட அயர்லாந்திற்கு அதிகாரத்தைப் பகிர்வதற்கான பெரிய வெள்ளி உடன்பாட்டில் சின்ஃபெயின் கைச்சாத்திட்டது. 2004 டிசம்பரில் சின்ஃபெயினிற்கும் ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கும் ( ஆணிச்œ ஈச்ணணூஞ்ஞு) இடையிலான அதிகாரத்தைப் பகிர்வது குறித்த புதிய முயற்சியானது ஒரு உடன்பாடு எட்டப்படுவதை நெருங்கி வந்தது. ஆனால், அது ஆயுதக்களைவு விடயத்தினால் இது பின்னடைவைக் கண்டது. மக்கார்ட்னேயின் கொலையைத் தொடர்ந்து அத்திலாந்திக்குக்கு அப்பாலிருந்து வரும் ஆக்கபூர்வமான அழுத்தம் இறுதியில் ஆயுதங்களைக் கைவிடுவதற்கு ஐ.ஆர்.ஏ.யைக் கட்டுப்படுத்துமா? இந்தக் கட்டத்தில் எவரும் எந்த விதத்திலான நம்பிக்கையுடனும் இதற்கு பதிலளிக்க முடியாது.
ஐ.ஆர்.ஏ.யின் தற்போதைய தொல்லைகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஒரு பாடம் இருக்கின்றது. பெப்ரவரி 22 யுத்த நிறுத்தத்திலிருந்து பல கொலைகள், பயமுறுத்தல், அச்சுறுத்திப் பணம் பறித்தல் மற்றும் வெளிப்படையான வன்முறைக் கும்பல்தனம் போன்றவற்றை முக்கிய பண்பாக்கிய பயங்கரவாத நடவடிக்கை மூலம் தாங்களே அறிவித்துக் கொண்ட `ஏக பிரதிநிதி'யாக வட, கிழக்கின் பெரும்பகுதியில் தமிழர்கள் மீது இந்த பொல்பொட் அமைப்பு ஆட்சி செலுத்துகின்றது.
வடஅயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ.யின் நிலப்பிரதேசத்தை விட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் விடயங்கள் மிக மோசமாக இருக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மிதவாதிகளின் அடிவருடி நிலை எல்லாவற்றிலும் சிறந்த எடுத்துக்காட்டாகும். மக்கார்ட்னேயின் சகோதரிகள் அளவு வலிமையாக தமிழர்கள் விடுதலைப் புலிகளின் குற்ற வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச ஆதரவைத்தேடும் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லவில்லை. ஆனால், வழமையாக இருந்ததை விட அவர்களின் குரல்கள் வலிமையாக உள்ளன. எதிர்காலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் கூட நிலைமை மாற்றமடையும்.-இந்து ஆசிரிய தலையங்கம்
Thinakkurl
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

