04-09-2005, 03:06 AM
திருகோணமலை கடற்படைப் படகு மீதான தாக்குதலில் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கண்காணிப்புக் குழு அறிவிப்பு
திருகோணமலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கடற்படைப்படகின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான விவகாரத்தில் விடுதலைப் புலிகள் இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தீர்ப்பளித்துள்ளது.
இந்த தாக்குதலின் மூலம், எந்தவொரு தரப்பும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தெளிவாக கூறும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.2 வது சரத்தை புலிகள் மீறியுள்ளதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல ஹெலன் ஓலவ்ஸ்கோப்பியர்.
அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் இந்த சரத்து தடுப்பதுடன், நேரடியாக அல்லது மறைமுகமாக ஆயுத பிரயோகம் செய்யப்படுவதையும் அது தடுக்கின்றது என்றும் ஹெலன் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை கடற்படைப்படகு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலிகளின் பகுதியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் ஒரு கடுமையான சம்பவம் என்று கூறும் அவர், இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் கவனத்துக்கு தாம் எடுத்துச் செல்வோம் என்றும் கூறியுள்ளார்.
கடற்படைப் படகின் மீது உப்பாறு பகுதியில் வைத்து புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இந்த சம்பவத்தின் போது, குறிப்பிட்ட கடற்படைப் படகில் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
BBC Tamil News
திருகோணமலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கடற்படைப்படகின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான விவகாரத்தில் விடுதலைப் புலிகள் இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தீர்ப்பளித்துள்ளது.
இந்த தாக்குதலின் மூலம், எந்தவொரு தரப்பும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தெளிவாக கூறும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.2 வது சரத்தை புலிகள் மீறியுள்ளதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல ஹெலன் ஓலவ்ஸ்கோப்பியர்.
அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் இந்த சரத்து தடுப்பதுடன், நேரடியாக அல்லது மறைமுகமாக ஆயுத பிரயோகம் செய்யப்படுவதையும் அது தடுக்கின்றது என்றும் ஹெலன் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை கடற்படைப்படகு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலிகளின் பகுதியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் ஒரு கடுமையான சம்பவம் என்று கூறும் அவர், இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் கவனத்துக்கு தாம் எடுத்துச் செல்வோம் என்றும் கூறியுள்ளார்.
கடற்படைப் படகின் மீது உப்பாறு பகுதியில் வைத்து புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இந்த சம்பவத்தின் போது, குறிப்பிட்ட கடற்படைப் படகில் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
BBC Tamil News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

