04-09-2005, 02:50 AM
திருகோணமலை மாவட்டத்திலும் புலிகளின் காவலரண் மீது தாக்குதல்
திருகோணமலை நகரிலிருந்து எண்பது கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் மூதூர் மட்டக்களப்பு பிரதான பாதையில் மூதூரின் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் காவலரண் மீது இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலின் விளைவாக ஒருவர் பலியாகி உள்ளார்.
மற்றும் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்த மற்றும் இறந்தவரின் பெயர் விபரங்கள் இது வரை தெரிவிக்கப்படவில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் அடையாளம் தெரியாதோரால் விடுதலைப் புலிகளின் காவலரண்மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
இதேவேளை மூதூர் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் காவலரணுக்கு 500 மீற்றர் தொலைவிலேயே மஹிந்தபுரம் இராணுவ முகாம் அமைந்துள்ளது.
இந்த இராணுவ முகாமுக்கும் விடுதலைப் புலிகளின் காவலரணுக்கும் இடைப்பட்ட தூரம் சூனியப் பிரதேசமாகும்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் திருகோணமலை மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
போர் நிறுதத கண்காணிப்பு குழு உறுப்பினரான அல்ப் அவர்கள் மூதூர் தெற்குப் பிரதேசத்திற்குச் சென்று இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய போதிலும்கூட இது தொடர்பான தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கபடவில்லை.
இதே வேளை விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன், இராணுவ முகாம்களில் தங்கியிருந்த கருணா குழுவினரே அவர்களின் உதவியுடன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போர்நிறத்த கண்காணிப்பு குழுவினரிடம் தெரிவித்திருக்கின்றார்.
இத்தகைய தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என ஏற்கெனவே கடந்த புதனன்று மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக இராணுவ கட்டளைத் தளபதிக்கு போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய தாக்குதல் சம்பவமானது ஒரு போர்நிறுத்த மீறுலாகும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எழிலன் தெரிவித்திருக்கின்றார்.
இதற்கிடையே கந்தளாய்க்கும் மூதூருக்கும் இடைப்பட்டதான சேருநுவர சிறீ மங்களபுர பகதியில் உள்ள இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இன்று பிற்பகல் இராணுவ சிப்பாய் ஒருவர் இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் கந்தளாய் அரசினர் வைத்திய சாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சிறீமங்கலபுர பகுதியில் பனை ஓலை வெட்டச் சென்ற வேளையிலேயே இவர் முன்னே எதிர்ப்பட்ட நான்கு பேர், இவர் மீது துப்பாக்கப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயங்களுக்கு இலக்கான இந்த சிப்பாயின் பெயர் விபரம் தெரிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக இராணுவத்தினரால் மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
BBC Tamil News
திருகோணமலை நகரிலிருந்து எண்பது கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் மூதூர் மட்டக்களப்பு பிரதான பாதையில் மூதூரின் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் காவலரண் மீது இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலின் விளைவாக ஒருவர் பலியாகி உள்ளார்.
மற்றும் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்த மற்றும் இறந்தவரின் பெயர் விபரங்கள் இது வரை தெரிவிக்கப்படவில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் அடையாளம் தெரியாதோரால் விடுதலைப் புலிகளின் காவலரண்மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.
இதேவேளை மூதூர் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் காவலரணுக்கு 500 மீற்றர் தொலைவிலேயே மஹிந்தபுரம் இராணுவ முகாம் அமைந்துள்ளது.
இந்த இராணுவ முகாமுக்கும் விடுதலைப் புலிகளின் காவலரணுக்கும் இடைப்பட்ட தூரம் சூனியப் பிரதேசமாகும்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் திருகோணமலை மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
போர் நிறுதத கண்காணிப்பு குழு உறுப்பினரான அல்ப் அவர்கள் மூதூர் தெற்குப் பிரதேசத்திற்குச் சென்று இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய போதிலும்கூட இது தொடர்பான தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கபடவில்லை.
இதே வேளை விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன், இராணுவ முகாம்களில் தங்கியிருந்த கருணா குழுவினரே அவர்களின் உதவியுடன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போர்நிறத்த கண்காணிப்பு குழுவினரிடம் தெரிவித்திருக்கின்றார்.
இத்தகைய தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என ஏற்கெனவே கடந்த புதனன்று மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக இராணுவ கட்டளைத் தளபதிக்கு போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய தாக்குதல் சம்பவமானது ஒரு போர்நிறுத்த மீறுலாகும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எழிலன் தெரிவித்திருக்கின்றார்.
இதற்கிடையே கந்தளாய்க்கும் மூதூருக்கும் இடைப்பட்டதான சேருநுவர சிறீ மங்களபுர பகதியில் உள்ள இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இன்று பிற்பகல் இராணுவ சிப்பாய் ஒருவர் இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் கந்தளாய் அரசினர் வைத்திய சாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சிறீமங்கலபுர பகுதியில் பனை ஓலை வெட்டச் சென்ற வேளையிலேயே இவர் முன்னே எதிர்ப்பட்ட நான்கு பேர், இவர் மீது துப்பாக்கப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயங்களுக்கு இலக்கான இந்த சிப்பாயின் பெயர் விபரம் தெரிவிக்கப்படவில்லை.
இது தொடர்பாக இராணுவத்தினரால் மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
BBC Tamil News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

