04-08-2005, 07:07 PM
தமிழ்படத்துக்கு பிடிச்சிருக்கும் சனி முன்னனி ஹீரோக்களின் துதி தான். பாடல்களின் வார்த்தை ஜாலங்களும், காட்சி அமைப்பில் கதாநாயகன் செய்யும் வண்ண ஜாலங்களும் அடிதட்டு மக்கள் முதல் மேல் தட்டு வர்க்கம் வரை கதாநாயகனுக்கு தட்டு தூக்க வைக்கிறது.கதாநாயகன்களை துதி பாடி வரும் பாடல்களும்,கதாநாயகனுக்கு பில்ட்-அப் கொடுத்து வரும் பாடல்களும் கேட்டு கேட்டு காதுகள் தான் புண்ணாகிப் போகிறது. ஊருக்கு நல்லது செய்யும் பெரியவராக,சேரி மக்களுக்கு நல்லது செய்யும் சேவகனாக..... டேய் டேய் நிப்பாட்டுங்கடா.... திருந்த விடுங்கடா மக்களை.
வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் இந்த கதாநாயகனுக்கு சச்சின் அடிக்கும் செஞ்சுரி கணக்காக ஐஸ் கட்டிகளை பாடல்களில் வைத்து மக்களை நோக்கி விளாசுகிறார்கள். விளாசிக்கிட்டே இருங்க... ஆனால் என் கடன் இந்த மாதிரி பாடல்களை போட்டுத் தாக்குவதே.
கதாநாயகன் துதிக்கு வழிவகுக்கும் 'திருப்பாச்சி'யிலிருந்து இந்தப் பாடலும் என் பதிலடிகளும் கீழே....(இந்த வார பாடல்களை போட்டுத் தாக்கும் கோட்டா இத்துடன் முடிவடைந்தது)
பாடல் வரி நீல கலரிலும், என்னுடைய பதிலடிகள் கருப்பு கலரிலும் இருக்கிறது.
நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தமில்ல
தொப்புள் கொடி உறவா.... இல்ல இல்ல
கட்சிக் கொடி உறவா... இல்ல இல்ல
மேட்டுக் குடி உறவா... இல்ல இல்ல
கள்ளுக் கடை உறவா... இல்லவே இல்ல
<b>ஆக மொத்தம் நீ பொறம்போக்குங்கிறதை சுத்தி வளச்சி சொல்றே...</b>
உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா....
<b>எலேய் எலேய் எலேய்.... நிறுத்து... நிறுத்து மேலே உறவு மற்றும் சொந்தத்தில அர்த்தமில்லைன்னு சொல்லிட்டு இப்ப என்ன பங்காளி ஆகலாமென்று பாக்குறீயா? சொத்துல ஒரு பைசா கிடையாது. ஓடிப்போ....</b>
சாமி வரம் தந்துட்டா கொட்டும் மழை கொட்டும்டா
ஏழை மனம் பொங்கும்டா நான் அய்யனாரு பக்தண்டா
<b>நீ கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு பாட்டை நிப்பாட்டினாலே மழை பெய்ஞ்சிரும். ஏழைங்க உன் படத்துக்கு தெண்டத்துக்கு காசு செலவழிக்கிறத நிப்பாட்டினாலே ஏழை மனம் பொங்கிரும்டா...</b>
மன்னை நம்பி வேரு விண்ணை நம்பி யாரு
என்னை நம்பி கெட்டதில்ல பாரு
அது தான் ரசிக மன்ற தறுதலைகளை பார்க்கிறேனே...
பொறப்பு இறப்பு அவன் கையில
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையில
ஸ்ஸ்... அய்யோ அப்பா... எத்தனை வாட்டி இந்த மாதிரி வரிகளை கேட்கிறது. இத சொல்லி சொல்லியே தமிழ்மக்கள் தலையில மிளகாய் அரைக்கிறீங்களே...
உனக்கொரு பேரு எனக்கொரு பேரு
ஒன்னு சேர்த்து பாரு இந்தியன்னு பேரு
ஆமா உன் பேரு 'இந்தி' அவன் பேரு 'யன்'. ரெண்டு சேர்ந்த இந்தியன்.
அம்மையப்பன் தானடா நம்மையாலும் சாமிடா
கருவரை தோழிடா நம்ம உயிர் நாடிடா
<b>எதுக்கு இப்ப தேவையில்லாம இந்த மாதிரி பில்ட்-அப் எல்லாம்.</b>
கண்ணை பொத்தி வாழு காதை பொத்தி வாழு நம்ம காந்தி மொழி கேளு
<b>அப்படியே மூக்கை பொத்தி வாழு. போய் சேர்ந்திரலாம் சீக்கிரம்.</b>
ஆத்திகம் தான் மூச்சி சத்தியம் தான் பேச்சி ஆசையெல்லாம் போச்சி
நம்ம கூட்ட கொடியேத்து
<b>ஆத்திகம் தான் மூச்சி. ம்ம்ம்... டியர் தி.க பேராண்டீஸ். நோட் த பாயிண்ட்.
சத்தியம் தான் பேச்சி. ம்ம்... நீ மொதல்ல வாயை திறந்து பேசிப் பழகு. அப்புறம் நீ என்ன பேசுறேன்னு கேட்கிறோம்.
என்னது நம்ம கூட்ட கொடியேத்தனுமா? அங்க தொட்டு இங்க தொட்டு கூட்டத்தை சேர்த்து கோட்டையில் முதலமைச்சர் சேர் வேணும். சரி தானே?</b>
பொறப்பு இறப்பு அவன் கையில
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையில
<b>ஆண்டவா....நீ ஏம்பா பொறப்பு இறப்பு டிபார்ட்மெண்ட கையில வச்சிருக்கே. வாழ்க்கை டிபார்ட்மெண்டை நீ வச்சிக்கிட்டு பிறப்பு இறப்பு டிபார்ட்மெண்டை மனுசங்க கையில கொடுத்துருப்பா... இல்லேன்ன இதையே போட்டு பல பாட்டுகளில் உருட்டிக் கொண்டிருப்பார்கள்.</b>
இப்படியே அடுத்தவாரக் கடைசியில் 'சந்திரமுகி' பாடலோடு வருகிறேன்
From
போட்டுத் தாக்கியது!!! அல்வாசிட்டி.விஜய்
நன்றி.............
வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் இந்த கதாநாயகனுக்கு சச்சின் அடிக்கும் செஞ்சுரி கணக்காக ஐஸ் கட்டிகளை பாடல்களில் வைத்து மக்களை நோக்கி விளாசுகிறார்கள். விளாசிக்கிட்டே இருங்க... ஆனால் என் கடன் இந்த மாதிரி பாடல்களை போட்டுத் தாக்குவதே.
கதாநாயகன் துதிக்கு வழிவகுக்கும் 'திருப்பாச்சி'யிலிருந்து இந்தப் பாடலும் என் பதிலடிகளும் கீழே....(இந்த வார பாடல்களை போட்டுத் தாக்கும் கோட்டா இத்துடன் முடிவடைந்தது)
பாடல் வரி நீல கலரிலும், என்னுடைய பதிலடிகள் கருப்பு கலரிலும் இருக்கிறது.
நீ எந்த ஊரு நான் எந்த ஊரு முகவரி தேவையில்ல
நீ என்ன உறவு நான் என்ன உறவு சொந்தத்தில் அர்த்தமில்ல
தொப்புள் கொடி உறவா.... இல்ல இல்ல
கட்சிக் கொடி உறவா... இல்ல இல்ல
மேட்டுக் குடி உறவா... இல்ல இல்ல
கள்ளுக் கடை உறவா... இல்லவே இல்ல
<b>ஆக மொத்தம் நீ பொறம்போக்குங்கிறதை சுத்தி வளச்சி சொல்றே...</b>
உன்னை யாரோ பெத்திருக்க என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா....
<b>எலேய் எலேய் எலேய்.... நிறுத்து... நிறுத்து மேலே உறவு மற்றும் சொந்தத்தில அர்த்தமில்லைன்னு சொல்லிட்டு இப்ப என்ன பங்காளி ஆகலாமென்று பாக்குறீயா? சொத்துல ஒரு பைசா கிடையாது. ஓடிப்போ....</b>
சாமி வரம் தந்துட்டா கொட்டும் மழை கொட்டும்டா
ஏழை மனம் பொங்கும்டா நான் அய்யனாரு பக்தண்டா
<b>நீ கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு பாட்டை நிப்பாட்டினாலே மழை பெய்ஞ்சிரும். ஏழைங்க உன் படத்துக்கு தெண்டத்துக்கு காசு செலவழிக்கிறத நிப்பாட்டினாலே ஏழை மனம் பொங்கிரும்டா...</b>
மன்னை நம்பி வேரு விண்ணை நம்பி யாரு
என்னை நம்பி கெட்டதில்ல பாரு
அது தான் ரசிக மன்ற தறுதலைகளை பார்க்கிறேனே...
பொறப்பு இறப்பு அவன் கையில
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையில
ஸ்ஸ்... அய்யோ அப்பா... எத்தனை வாட்டி இந்த மாதிரி வரிகளை கேட்கிறது. இத சொல்லி சொல்லியே தமிழ்மக்கள் தலையில மிளகாய் அரைக்கிறீங்களே...
உனக்கொரு பேரு எனக்கொரு பேரு
ஒன்னு சேர்த்து பாரு இந்தியன்னு பேரு
ஆமா உன் பேரு 'இந்தி' அவன் பேரு 'யன்'. ரெண்டு சேர்ந்த இந்தியன்.
அம்மையப்பன் தானடா நம்மையாலும் சாமிடா
கருவரை தோழிடா நம்ம உயிர் நாடிடா
<b>எதுக்கு இப்ப தேவையில்லாம இந்த மாதிரி பில்ட்-அப் எல்லாம்.</b>
கண்ணை பொத்தி வாழு காதை பொத்தி வாழு நம்ம காந்தி மொழி கேளு
<b>அப்படியே மூக்கை பொத்தி வாழு. போய் சேர்ந்திரலாம் சீக்கிரம்.</b>
ஆத்திகம் தான் மூச்சி சத்தியம் தான் பேச்சி ஆசையெல்லாம் போச்சி
நம்ம கூட்ட கொடியேத்து
<b>ஆத்திகம் தான் மூச்சி. ம்ம்ம்... டியர் தி.க பேராண்டீஸ். நோட் த பாயிண்ட்.
சத்தியம் தான் பேச்சி. ம்ம்... நீ மொதல்ல வாயை திறந்து பேசிப் பழகு. அப்புறம் நீ என்ன பேசுறேன்னு கேட்கிறோம்.
என்னது நம்ம கூட்ட கொடியேத்தனுமா? அங்க தொட்டு இங்க தொட்டு கூட்டத்தை சேர்த்து கோட்டையில் முதலமைச்சர் சேர் வேணும். சரி தானே?</b>
பொறப்பு இறப்பு அவன் கையில
நாம வாழும் வாழ்க்கை நம்ம கையில
<b>ஆண்டவா....நீ ஏம்பா பொறப்பு இறப்பு டிபார்ட்மெண்ட கையில வச்சிருக்கே. வாழ்க்கை டிபார்ட்மெண்டை நீ வச்சிக்கிட்டு பிறப்பு இறப்பு டிபார்ட்மெண்டை மனுசங்க கையில கொடுத்துருப்பா... இல்லேன்ன இதையே போட்டு பல பாட்டுகளில் உருட்டிக் கொண்டிருப்பார்கள்.</b>
இப்படியே அடுத்தவாரக் கடைசியில் 'சந்திரமுகி' பாடலோடு வருகிறேன்
From
போட்டுத் தாக்கியது!!! அல்வாசிட்டி.விஜய்
நன்றி.............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

