04-06-2005, 04:52 PM
புலிகளை ஏற்றுக்கொள்ள முடியாதென நோர்வேக்கு இந்தியா அறிவிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பை அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது எந்தவிதமான உத்தியோகபூர்வ அந்தஸ்தையேனும் கொடுத்து ஆதரிப்பதற்கோ இந்திய அரசு எவ்வகையிலேனும் செயற்படாதென இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நோர்வே நாட்டின் உயர்மட்ட உத்தியோகத்தர்களுக்கு தற்போதுள்ள காங்கிரஸ் ஆட்சியை அமைக்குமுன்னரே தெளிவுபடுத்தி விட்டதாக "ஏஸியன் ட்ரிபியூன்" செய்திப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், பிரதமருமான ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு இந்திய அரசு எந்த வகையிலும் மன்னிப்பு அளிக்கப் போவதில்லையென்றும், அந்தப் படுகொலையை இந்திய ஜனநாயகத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே இந்திய அரசு கருதுவதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நோர்வே அரசின் விஷேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மேற்படி "ஏஸியன் ட்ரிபியூன்" பத்திரிகையுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயங்கள் பத்திரிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஷ்ரீலங்காவின் இனப்பிரச்சினைத் தீர்விற்கான சகல சமாதான நடவடிக்கைகள் பற்றியும் இந்திய அரசுக்கும், ஐக்கிய அமெரிக்க அரசுக்கும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருவதாக சொல்ஹெய்ம் மேற்படி பேச்சுவார்த்தையின் போது கூறினார்.
திவயின 4.4.2005
விடுதலைப் புலிகள் அமைப்பை அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது எந்தவிதமான உத்தியோகபூர்வ அந்தஸ்தையேனும் கொடுத்து ஆதரிப்பதற்கோ இந்திய அரசு எவ்வகையிலேனும் செயற்படாதென இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நோர்வே நாட்டின் உயர்மட்ட உத்தியோகத்தர்களுக்கு தற்போதுள்ள காங்கிரஸ் ஆட்சியை அமைக்குமுன்னரே தெளிவுபடுத்தி விட்டதாக "ஏஸியன் ட்ரிபியூன்" செய்திப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், பிரதமருமான ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு இந்திய அரசு எந்த வகையிலும் மன்னிப்பு அளிக்கப் போவதில்லையென்றும், அந்தப் படுகொலையை இந்திய ஜனநாயகத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே இந்திய அரசு கருதுவதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நோர்வே அரசின் விஷேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மேற்படி "ஏஸியன் ட்ரிபியூன்" பத்திரிகையுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயங்கள் பத்திரிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஷ்ரீலங்காவின் இனப்பிரச்சினைத் தீர்விற்கான சகல சமாதான நடவடிக்கைகள் பற்றியும் இந்திய அரசுக்கும், ஐக்கிய அமெரிக்க அரசுக்கும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருவதாக சொல்ஹெய்ம் மேற்படி பேச்சுவார்த்தையின் போது கூறினார்.
திவயின 4.4.2005
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

